Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உள்­ளூ­ராட்சி எல்லை நிர்­ணய வர்த்­த­மா­னிக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனுத் தாக்கல் அம்­ப­க­மு­வவை மூன்­றாக பிரித்­தது மத நல்­லி­ணக்­கத்­துக்கும் பாதிப்பு என சுட்­டிக்­காட்டி நட­வ­டிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) உள்­ளூ­ராட்சி சபை­களின் எல்லை நிர்­ணயம் மற்றும் அதன் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து, வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வினால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மா­னியை ரத்து செய்யக் கோரியே இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு, முன்னாள் அம்…

  2. பெப்ரவரி 17 இற்கு முன்னர் தேர்தல் : இரு கட்டங்களாக வேட்பு மனுத் தாக்கல்; 3 இலட்சம் அதிகாரிகள் சேவையில் 350 கோடி ரூபா ஒதுக்கீடு பேரணிகளுக்கு தடை பொலிஸாரின் இடமாற்றத்திற்கு சிக்கல் இல்லை ஒரே தடவையில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல் (ஆர்.யசி ) உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உறுதியான தினம் ஒன்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முற்பட்ட ஒரு தினத்தில் தேர்தலை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். முதலாவது அறிவித்தலின்படி 93 சபை களுக்கு எதிர்வரும் 1…

  3. சர்வதேச சட்டமொன்றின் அடிப்படையில் கிங்தொட்டவில் 22 பேர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச சட்டமொன்றின் அடிப்படையில் கிங்தொட்டவில் அண்மையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு 56ம் இலக்க சர்வதேச சிவில் மற்றும் அரசியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கிங்தொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்படையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இந்த சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கு உயர் நீதிமன்றின் ஊடாகவே பிணை கோரப்பட முடியும் எனவும், உச்சபட்சமா…

  4. யாழ் பண்ணையில் அமைகிறது அரசாங்கத்தின் பாரிய ஓய்வு விடுதி! யாழில் மக்களின் நலன்கருதி பாரிய அரச ஓய்வு விடுதியொன்று அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜி.கே. குணதிலக தெரிவித்துள்ளார். குறித்த விடுதி யாழ்ப்பாணம்-காரைநகர் வீதியில் பண்ணை கடற்கரைப் பகுதியை அண்டி யாழ்.சிறைச்சாலைக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த விடுதி 40 அறைகளைக் கொண்ட சகல நவீன வசதிகளுடன் மக்கள் பயன்படுத்தும் விதமாக அமையவுள்ளதோடு தற்போது முதற்கட்ட கட்டுமானங்கள் குறித்த கடற்கரை பகுதியில் மண் நிரப்பப்பட்டு 60 மில்லியன் ரூபாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …

  5. KP வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய KP-யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். எவ்வாறாயினும், விசாரணை நடத்தும் அளவிற்கு சட்ட அடிப்படை இல்லையெனத் தீர்மானித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது. …

  6. தற்போதுள்ள நிலையை குழப்பாமல் இராஜதந்திரத்துடன் செயற்படவேண்டும் -பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இலங்கையில் இலங்கையில் இரண்டு பெரும் கட்சிகள் ஆட்சியமைத்துள்ள நிலையில் இந்த நிலமையினை குழப்பாமல் நாங்கள் இராஜதந்திரத்தை பயன்படுத்தி வரவிருக்கும் அரசியலமைப்பில் நியாயமான தீர்வொன்றினைப்பெற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.கடந்த காலத்தில் இருந்த அச்ச நிலை நீங்கி இன்று ஓரளவு சமாதான சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழும் நிலையில் இது நீடித்த சமாதானமாக அமையவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மனித நேய கரங்கள் அமைப்பும் கனடாவின் தமிழ் மனித நேய கரங்கள் அமைப்பும் …

  7. வடக்கு மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு தடை­யாகும் நுண்­நிதி நிறு­வ­னங்கள் மரத்தால் விழுந்­த­வனை மாடேறி மிதித்த கதை­யாக யுத்­தத்தின் தாக்கம் மக்­களை விட்டு அகல்­வ­தற்கு முன்­பா­கவே வேறு பல துன்­பி­யல்­க­ளுக்கு வடக்கு மக்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்­றமை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தா­க­வுள்­ளது. அபி­வி­ருத்­திகள் அத­னூ­டான பொரு­ளா­தார பெருக்கம் என்று அரசு மார்­தட்­டிக்­கொண்­டாலும் வடக்கில் உள்ள மக்­களின் மறு­பக்கம் தொடர்பில் சிந்­திப்­ப­தற்கு ஆட்­சிக்கு வந்த அர­சுகள் முயற்­சிக்­க­வில்லை. வெறு­மனே வட பகுதி மக்கள் அபி­வி­ருத்தி விரும்­பி­க­ளா­கவே உள்­ளனர் என்ற தோற்­றப்­பாட்­டையே வெளிக்­கொ­ணர தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்கள் விரும்­பி­யி­ருந்­தனர்.…

  8. உரு­வா­கட்­டும் பெண் தலை­வர்­கள் உள்ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் இந்­தத் தடவை பெண்­க­ளுக்­கான கட்­டாய இட ஒதுக்­கீடு வழங்­கப்­பட்­டுள்­ளது. நல்ல விட­யம். வர­வேற்­கத்­தக்­கது. இலங்­கை­யின் மக்­கள் தொகை­யில் 52 விழுக்­கா­டாக இருக்­கும் பெண்­க­ளின் அர­சி­யல் பங்­க­ளிப்­பும் விழிப்­பு­ணர்­வும் மிகச் சொற்­ப­மா­னவை. அதனை மாற்றி அமைப்­ப­தற்­கான ஒரு சிறு முயற்சி இந்­தத் தேர்­தல் மூலம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஆணா­திக்கச் சமூ­கத்­தில் பல நூற்­றாண்டு கால­மாக அர­சி­யல் பெண்­க­ளுக்கு உரி­ய­தல்ல என்று விதிக்­கப்­பட்ட கால்க்கட்டை மீறி அதற்­குள் வந்து சாதித்­த­வர்­கள் மிகச…

  9. யாழ் – கொழும்பு பேருந்துக்கள் துருவி துருவி சோதனை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.கொழும்பு பேரூந்து சேவையில் ஈடுபடும் பேருந்தொன்றில் கஞ்சா போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்த காவல்துறையினர் வீதி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேரூந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்.வளைவுக்கு அருகில் கொழும்பு நோக்கி பயணிக்கும் சகல பேருந்துக்களையும் காவல்துறையினர்; மறித்து பயணிகளின் பயண பொதிகளை துருவி துருவி சோதனையில் ஈடுபட்டனர் இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தே பய ணித்தனர், …

  10. தேர்தலால் பொறுப்புக்கூற பின்னடிக்கின்றது அரசு! – ஜெகான் பெரேரா தேர்தலால் பொறுப்புக்கூற பின்னடிக்கின்றது அரசு! – ஜெகான் பெரேரா கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதாலும், உள்ளூராட்சித் தேர்தலாலுமே காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தை செயற்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தாமதித்து வருகின்றது என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது…

  11. அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன் யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி …

  12. யாழ்.பொன்னாலையில் ஊடகவியலாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் மீது தாக்குதல் குளோபல் தமிழ் செய்தியாளர் யாழ்.பொன்னாலை பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. ஊடகவியலாளரான பொன்ராசா மற்றும் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் கோமகன் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது , யாழ்.பொன்னாலை பகுதியில் உள்ள வெண்கரம் படிப்பகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விளக்கிட்டை முன…

  13. அடிவருடிகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் சுயேட்சை குழு எனும் போர்வையில் களமிறக்கப்படும் சில கட்சிகளின் அடிவருடிகள், தமிழர்களின் தாய் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான குழுக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மக்களிடம் கேட்டுக் கொண்டார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் கூட்டமொன்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அ…

  14. கரைவலையில் கடல் பாம்புகள் / விலாங்கு மீன்கள் அகப்படும் அசாதாரண நிகழ்வு பாரிய அனர்த்தத்தின் முன் உணர்வா? எச்சரிக்கை!!! Dr முரளி வல்லிபுரநாதன்.. கடந்த 2 தினங்களாக மட்டக்களப்பு மீனவர்களினால் அவதானிக்கப்படும் கரைவலையில் பெருமளவு கடல் பாம்புகள் / விலாங்கு மீன்கள் அகப்படும் அசாதாரண நிகழ்வானது மேலதிக கவனத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்படவேண்டும். கடல் வளத்துறை அதிகாரிகளின் கருத்துப்போல் இந்த அசாதாரண நிகழ்வு கடலின் உப்புச் செறிவில் ஏற்படும் மாற்றம் மற்றும் நீரோட்டத் திசை மாற்றம் காரணமாக ஏற்படுமாயின் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளூர் மீனவர்களின் கருத்துப்படி 2004 சுனாமி ஆழிப்பேரலை தாக்குதல…

  15. இலங்கையின் கடற்பரப்பு விஸ்தரிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பு பாரியளவில் விஸ்தரிக்கப்பட உள்ளது. இலங்கையின் கடற் பரப்பினை விஸ்தரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு இணங்கியுள்ளது. நாட்டின் நிலப்பின் 26 மடங்காக இலங்கையின் கடல் பரப்பினை விஸ்தரிப்பதற்கு இணங்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை மற்றுட் கடற்றொழில்வள அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இது தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/52950

  16. யாழ்.அராலி பகுதியில் 50 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத வீதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.அராலி பகுதியில் வீதியோன்று கடந்த 50 ஆண்டு காலமாக திருத்தப்படாமல் மிக மோசமாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அராலி மத்தியில் உள்ள குமுக்கன் வீதி இவ்வாறான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில் , குறித்த வீதியால் பயணம் செய்யும் பலரும் இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம் , மழை காலத்தில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் குறித்த வீதியால் பயணம் செய்யமுடியாத நிலைமைகள் ஏற்படுகின்றன. இதனால் பாடசாலை மாணவர்கள் வேலைக்கு செல்வோர…

  17. மறுஅறிவித்தல் வரை எவரும் கடலுக்குச் செல்லவேண்டாம் ! மறுஅறிவித்தல் வரை எவரும் கடலுக்குச் செல்லவேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நாளை 5 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் எவரும் கடலுக்குச்செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, வங்காள விரிகுடா, மற்றும் நாட்டைச் அண்டியு்ள கடல் பகுதிகளில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். பொத்துவிலிலிருந்து காங்கேசன்துறை வரை திருகோணமலை ஊடான கடற்பரப்பில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.…

  18. தேவ­நம்­பிய தீசன் தமிழ் மன்­னனா? தேவ­நம்­பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருந்த நிலையில், தீசன் என்­பது சிங்­கள அர­சரின் பெயர் என்றும், இலங்­கையின் மூலப் பெயர் சிங்­கலே என்றும் ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்­துள்ளார். ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கே சரத் வீர­கே­சர மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது கேள்வி: தேவ­நம்­பிய தீசன் உண்­மையில் ஒரு தமிழ் மன்னன் என அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கூறி­யுள்ளார். இது தொடர்­பான தங்­க­ளது கருத்து என்ன? பதில்: தேவ­நம்­…

    • 2 replies
    • 725 views
  19. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும் – சந்திகுமார் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும் அதற்கான அனைத்து பணிகளும் நிறைவுற்றன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம்(02) கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எங்களுடைய அமைப்பு வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தன…

  20. ஐ.நா. குழு; யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிலமைகளை ஆராயும்! ஐ.நா. குழு; யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிலமைகளை ஆராயும்! நியா­ய­மற்ற தடுப்­புக் காவல் தொடர்­பான ஐ.நாவின் பணிக்­குழு இன்று இலங்கை வரு­கின்­றது. அந்­தக் குழு யாழ்ப்­பா­ணச் சிறைச்­சா­லைக்­குச் சென்று நில­மை­களை அவ­தா­னிக்­க­வுள்­ளது. இந்­தக் குழு எதிர்­வ­ரும் 15ஆம் திக­தி­வரை இலங்­கை­யில் தங்­கி­யி­ருக்­கும். அது­வரை பல இடங்­க­ளுக்­குச் சென்று நிலை­மை­களை அவ­தா­னிக்­க­வுள்­ளது. இலங்­கைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள சட்­ட­வ…

  21. அ.இ.த.கா சைக்கிளில் தனித்து ஏறியது -எஸ்.நிதர்ஷன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது அமைப்புகளுடன் இணைந்து வடக்கு, கிழக்கு முழுவதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் தம்மோடு இணைந்துசெயற்படுவர்களையும் இணைத்துக்கொண்டுசெயற்படவுள்ளதாகவும் அக் கட்சியானது அறிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பொது எதிரணியொன்றுகளமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினரும் தமிழ் தேசிய மக்கள்முன்னனியினரும் தமிழ் மக்கள் பேரவையுடைய ஆதரவுடன்இணைந்து செயற்பட போவதாக அறிவித்திருந்தனர். இந்…

  22. 2020 இல் நாட்டின் தலைவராக யார் வரவேண்டும் ; மவ்பிம வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இதோ .. 2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் ஜனாதிபதியாக நாட்டை நேசிக்கின்ற, படித்த, ஏகாதிபத்திய இராணுவ பாணி ஆட்சி அமைப்பை கொண்டதலைவரே பொருத்தமானவர்என்று கொழும்பு பல்கலைக்கழக ஊடகப் பிரிவு நடத்திய ஆய்விக்தெரியவந்துள்ளதாக “மவ்பிம நாழிதழ்” தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளின் படி 2020ஆம் ஆண்டில் இலங்கையின்தலைவராக கோட்டாபய ராஜபக்‌ஷ வருவதற்கு 38.18 % பேர்களின் விருப்பைப்பெற்றுள்ளார் அடுத்த இடம் 28.64 % விருப்பு சஜித் பிரேமதாசாவுக்குகிடைத்துள்ளது. எதிர் கட்சி தலைவராக அனுர குமார திசாநாயக்க அதிக பேர்களின்விரு…

  23. அறுபது : நாற்பது அறுபது : நாற்பது உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தவி­சா­ளர் பதவி பெறும் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சிக்கு அந்­தச் சபை­யில் 60 வீத­மான வேட்­பா­ளர்­களை நிய­மிப்­பது என்­றும் ஏனைய இரு கட்­சி­க­ளும் எஞ்­சிய 40 வீதத்­தைப் பங்­கி­டு­வ­தும் என்­றும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது. இது தொடர்­பான ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டு­வ­து என்­றும் மூன்று கட்­சி­க­ளும் உடன்­பட்­டன.தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் நேற்று கூடின. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில் அது தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­டின. அதில் 60:40 என்ற…

  24. தமிழரசு கட்சி கங்கணம் -எஸ்.நிதர்ஷன் “மிக பிழையான அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையை, மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியின் ஊடாக காட்டுவதற்கு தமிழரசு கட்சி முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். “எனவே, அதனை மறுதலிப்பதற்கு பலமான ஒரு எதிரணி நிச்சயமாக வேண்டும். அதனடிப்படையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியிருந்தோம். ஆனால் தற்போது சில பிரச்சினைகள் எழுந்திருக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார். “அந்தப் பிரச்சினை கொள்கை ரீதியான பிரச்சினை அல்ல. தமிழர் விடுதலை கூட்டணிய…

  25. ‘கன்னித் தேர்தலை தனித்தே எதிர்கொள்வோம்’ ‘எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுயேட்சையாகவே எதிர்கொள்ளவுள்ளோம்’ என, கருணா அம்மான் என்று அழைக்கப்படும்இ முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, சிறுபான்மைக் கட்சிகள் சில போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே, தமிழ்மிரருக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், ‘தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளோம். எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை நாங்கள் எடுக்கவில்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.