ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு மஹிந்த அணியும் கட்டுப்பணம் செலுத்தியது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவத்றகாக மகிந்த ராஐபக்ச அணியின் கட்சியான சிறிலங்கா பொதுஐன முன்னணி யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது. தாமரை மொட்டு சின்னத்தில் அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. ஈபிடிபியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களே மகிந்த ஆதரவு இந்தக் கட்சியில் இணைந்து யாழ்ப்பபாண மாவட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர். இதேவேளை, சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக ஈபிடிபி முதன்முதலாக கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்…
-
- 0 replies
- 200 views
-
-
தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? பிரபாகரனின் பெயரை எழுதிய தரம் ஐந்து மாணவன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் ஒன்றில் தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியிருக்கிறார். கிளிநொச்சியில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இவ்வருடம் நடைபெற்ற முதலாம் தவணை குடியியல் பரீட்சையில் ஆரம்ப காலத்தில் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் பௌத்த மதத்திற்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் சிலாபம் அருகே கைது அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரை கடற்படையினர் கைது செய்தனர். நீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன்பிடியில் ஈடுபடுத்தக்கூடிய குறித்த படகு சிலாபம், முத்துபந்த்திய கடற்பகுதியில் சென்றுகொண்டிருக்கையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. கடற்படையினர் தம்மை நோக்கி வருவதைக் கண்ட சிலர் படகில் இருந்து தப்பிச் சென்றனர். படகில் எஞ்சியிருந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர். படகின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். http://www.virakesari.lk/article/27726 கடுங்காற்றில் சிக்கிய படகிலிருந்த 31 பே…
-
- 0 replies
- 214 views
-
-
மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு அரசே அனுமதி வழங்கியது மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு தெரிவித்தாலும்,அவர்களால் இதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நாம் நம்புகிறோம் ஏனெனில் இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு அரசே இடமளித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 'இல்லையென்றால் ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்த…
-
- 0 replies
- 365 views
-
-
சீரற்ற காலநிலையால் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பு சீரற்ற காலநிலையால் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பு நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் அசாதாரண நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. http://newuthayan.com/story/51574.html
-
- 0 replies
- 392 views
-
-
படையினரின் வசமிருந்த யாழ் – வயாவிளான் காணி விடுவிப்பு! யாழ் குடாநாட்டில் இராணுவத்தினாின் பாவனையில் இருந்த பொது மக்களுக்கு சொந்தமான மேலும் ஒரு தொகுதி நிலப்பரப்பு இன்று விடுவிக்கப்பட்டது. வலி வடக்கு வயாவிளான் வடமூலை பகுதியில் இதுவரை காலமும் படையினரின் பாவனையில் இருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டது. வசாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதளை யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தார். இந்த நிகழ்வுக்கு மேலதிக மாவட்ட காணி ஆணையாளர் எஸ்.முரளிதரன் தெல்ல…
-
- 1 reply
- 1k views
-
-
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான வழக்கு மீளப் பெறப்பட்டது உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான எல்லைநிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விலக்கிக்கொள்ள சட்டத்தரணிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமரச உடன்பாட்டுக்கு அமைவாக இந்த மனுவை விலக்கிக்கொள்ள அனுமதியளிக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட நீதிமன்றம் …
-
- 0 replies
- 150 views
-
-
பிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர் (ஆர்.யசி) பிரபாகரனின் போராட்டம் தவறானது அல்ல, எனினும் அவர் போராட்டத்திற்காக தெரிவு செய்த பாதையே தவறானது. எனினும் இன்றைய அரசியல் வாதிகளை விடவும் பிரபாகரன் நேர்மையாக செயற்பட்டார் என பொது பல சேனா பௌத்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் புலிகளை நினைவு கூறுவது ஆச்சரியாமான விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார். பொதுபல சேன பௌத்த அமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/27671
-
- 6 replies
- 1.2k views
-
-
தாழமுக்க அனர்த்தம்! சுழல்காற்றினால் உடைமைகள் சேதம்! தாழமுக்கம் காரணமாக தற்போது இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை, நுவரெலிய பகுதியிலும் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. கொழும்பு, தெஹிவளை பகுதியிலும் கடுமையான காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளில் மர முறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கொழும்பில் டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் த…
-
- 4 replies
- 613 views
-
-
அரச பேருந்து ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அதிபர்கள், ஆசிரியர்களும் அரச பேருந்து ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அதிபர்கள், ஆசிரியர்களும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அரச பேருந்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் உள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவேண்டி வரும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர்…
-
- 0 replies
- 791 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக கூட்டனி அமைப்பதில் இழுபறி: பொதுச் சின்னத்திற்கு வர ஈபிஆர்எல்எப் இழுத்தடிப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டனி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுச் சின்னம் ஒன்றுக்கு வர ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்) இழுதடித்து வருவதாகவும் இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்ட சிலர் தெரிவித்துள்ளனர். அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதாவது தமிழரசுக் கட்சி கூட்டில் இருந்து வெளியேறிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் இணைந்து கூட்டு அமைக்கப் போவதாகவும் அடுத்து வரும் தேர்தலை அவ்வாறே எதிர்கொள்ளவுள்ளதாகவும் த…
-
- 0 replies
- 160 views
-
-
அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதே அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/வன்னி/அவசர-சிகிச்சைப்-பிரிவில்-சிவசக்தி-ஆனந்தன்/72-208177
-
- 0 replies
- 245 views
-
-
அரசிலிருந்து வெளியேறினால் விட்டுக்கொடுப்புடன் பேசத்தயார் : கூட்டு எதிரணி அறிவிப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளியேறுவார்களாயின் அவர்களுடன் விட்டுக்கொடுப்புடனான பேச்சுக்களை நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன திட்டவட்டமாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்டு எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் ஊடகவிலாளர்கள் …
-
- 0 replies
- 177 views
-
-
தன்னிச்சையாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்குழு இலங்கை வருகிறது (ரொபட் அன்டனி) தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் மூவர் கொண்ட உறுப்பினர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்பிடும் நோக்கிலேயே இந்த செயற்குழுவின் விஜயம் அமையவுள்ளது. ஜோஸ் அன்டோனியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஐககிய நாடுகளின் இந்த விசேட நிபுணர்கள் பொலிஸ் நிலையங்கள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேற…
-
- 0 replies
- 203 views
-
-
ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம் : லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியின் அலுவலக அறையில் இயங்கிய இரகசிய சிறை சி.ஐ.டி.விசாரணைகளில் தகவல்; விசாரணைக்கான ஆவணங்களை உடன் ஒப்படைக்க கடற்படை தளபதிக்கு உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் விவகாரம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வரும் கடற்படை லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆரச்சியின் உத்தியோகபூர்வ அலுவலக அறையிலேயே ஒரு இரகசிய சிறை இருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்டவர்…
-
- 0 replies
- 292 views
-
-
கோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தான் கைது செய்யப்படுத்துவதை தடை செய்யக்கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். http://www.virakesari.lk/article/27614
-
- 4 replies
- 276 views
-
-
மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள் – மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றி முதலமைச்சர் ஊடகவியலாளர் கேள்வி – முதலமைச்சர் பதில் கேள்வி – நேற்றைய மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன? பதில் – மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று கருதுகின்றேன். நேற்றைய நிகழ்ச்சிகள் துயிலும் இல்லங்களில் மட்டும் நடைபெறவில்லை. கோயில்களில், குடும்ப இல்லங்களில் எல்லாம் தீபச் சுடர் ஏற்றி எமது விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம் தெரிவித்துள்ளார்கள் எம் மக்கள். நல்லாட்சி கொண்டுவந்த அர…
-
- 4 replies
- 643 views
-
-
யாழ். முஸ்லிம்களுக்கு ‘வீட்டுக்கு வீடு’ வழங்கத் தீர்மானம் மீளக்குடியேறுகின்ற அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும், அவர்கள் வேறு எவ்விதமான அரச உதவிகளையும் பெற்றிருக்காத சந்தர்ப்பத்தில் “வீட்டுக்கு வீடு” என்ற ஒழுங்கில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படல் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (27) இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பின்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, வீட்டுத்திட்டங்களை வழங்குகின்ற குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை மற்றும் அவர்களது பொருளாதார நிலைகளைக் கருத்தில் எடுத்து…
-
- 4 replies
- 612 views
-
-
சிவசக்தி ஆனந்தன் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாததைக் கண்டித்து வவுனியாவில் சுவரொட்டிகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சுவரொட்டிகளைக் காண முடிந்தது “அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை நாம் ஏற்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை பாராளுமன்றத்தில் உரையாற்ற தடுத்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளு…
-
- 0 replies
- 561 views
-
-
மஹிந்த, மைத்திரியின் பாராட்டைப் பெற்ற பிரித்தானியர் யுத்தத்தில் எட்டாயிரம் பேர் மாத்திரமே கொல்லப்பட்டதாக நெய்ஸ்பி கூறியுள்ளமைக்கு நன்றியுணர்வை வெளிக்காட்டும் வகையில் அவருக்கு பாராட்டுத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், மஹிந்த ஆதரவு எதிர்கட்சியும் தமது நன்றியை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நெய்ஸ்பி, ஏழு தொடக்கம் எட்டாயிரம் பொதுமக்களே இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களை கொலை செய்யும் நோக்கம் ஸ்ரீலங்கா அரசா…
-
- 0 replies
- 276 views
-
-
சாள்ஸ் நிர்மலநாதனுக்கும், ரிஷாட் பதியூதீனுக்கும் இடையே மோதல் சதொச தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெறுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சுகாதாரம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதனிடையே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இவ்விருவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடைபெறுகின்றது. https://news.ibctamil.com/ta/internal-affairs/charles-MP-debate-with-rishad
-
- 0 replies
- 275 views
-
-
பதுங்கியிருந்த வாள்வெட்டுக் குழு அதிரடி கைது கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்தது. யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டனா் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவரே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர். …
-
- 4 replies
- 627 views
-
-
காலணிக்கு அளவாக காலைவெட்டும் பழக்கம் பாடசாலைகளில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து வைப்பதற்குப் பதில் விரல் அடையாளத்தைப் பதிவு செய்யும் இயந்திரங்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கொழும்பு அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த முறைமை செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து வடக்கு மாகாணத்தில் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. பாடசாலை தொடங்கும் நேரமான 7.30 மணிக்கு சரி யாக அங்கு நிற்க முடியாத நிலை பல பாடசாலைகளில் நிலவு கின்றது என்பதே அந்தப் பிரச்சினை. அதிலும் குறிப்பாகப் போதியளவு போக்குவரத்து வசதிகள் இல…
-
- 0 replies
- 338 views
-
-
யார்தான் அந்தத் திருடர்? அதிகாரத்தில் இருக்கும் அரசொன்று, பொறுமை காக்க இயலாத அளவுக்கு ஒழுங்குமுறையற்ற ஊழல், அடக்குமுறைச் செயற்பாடுகளில் ஈடுபடுமானால், நாட்டு மக்கள் தமது வாழ்க்கையையே பணயம் வைத்தாவது, குறித்த அந்த அரசைப் பதவியினின்றும் அகற்றிவிடுகிறார்கள். அதன்பின்னர் தம்மால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய ஆட்சித் தரப்பினரூடாக முன்னைய அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அவர்களை உரிய வகையில் தண்டிக்கும் வரை நாட்டு மக்கள் பொறுமை காத்து புதிய அரசின் செயற்பாடுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன…
-
- 0 replies
- 376 views
-
-
மெழுகுவர்த்தி வைத்து பரீட்சை எழுதிய மாணவர்கள் ; மட்டுவில் சம்பவம் பாடசாலை வகுப்பறைகளில் இருள் சூழ்ந்துள்ளதால் பரீட்சையெழுதும் மாணவர்கள் மெழுகுவர்த்தியை வைத்து பரீட்சையெழுதிய சம்பம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப்பரீட்சை நடைபெற்று வருகின்றது. காலைநேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வகுப்பறைகள் இருளடைந்து காட்சியளிக்கின்றன. பல பாடசாலைகளில் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே பரீட்சை எழுதிவருகின்றமையை அவதானிக்க முடிந்தது. மட்டக்களப்பு, குருமண்வெளி சிவசக்தி வித்தியாலய மாணவர்கள் …
-
- 3 replies
- 412 views
-