ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. கடந்த பத்தாண்டு காலமாக முஸ்லிம்களால் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் மீதும் பழங்குடி மக்கள் மீதும் திட்டமிட்ட வகைய…
-
- 6 replies
- 630 views
-
-
யாழில் இளைஞர் இருவர் கைது; கைபேசியில் வாள்களின் படங்கள்? (கோப்புப்படம்) யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் இளைஞர்கள் இருவர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர்களின் கைபேசிகளில் வாள்களி்ன் ஒளிப்படங்கள் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அதனடிப்படையிலேயே சந்தேகத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் நாளைய தினம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்த பொலிஸார், கொக்குவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 22 வயதையுடை ராஜ்குமார் மற்றும் ஜசிந்தன் ஆகிய இருவருமே கைது செய்யப்…
-
- 0 replies
- 380 views
-
-
யாழ்ப்பாணம் வாள்வெட்டு: பதினொருபேர் சந்தேகத்தின்பேரில் கைது! யாழ்ப்பாணத்தில் அண்மைய சில நாட்களாக இடம்பெற்றுவந்த வாள் வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் மேலும் பதினொருபேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாரின் சோதனை நடவடிக்கைகளில் மேற்படி பதினொரு சந்தேக நபர்கள் நேற்றிரவு யாழ்நகரில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் முற்றபடுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வாள் வெட்டுக்கள் இடம்பெற்ற இடங்களை வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ இன்று நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளையும் அவர் பார்வையிட்டார். அத்துடன் வாள்வெட்டுக்களி…
-
- 1 reply
- 650 views
-
-
குடாநாட்டு மக்களை அரசு பாதுகாப்பது எப்போது? குடாநாட்டில் அடாவடிக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் தலையெடுத்துக் காணப்படுகின்றது. வாள்வெட்டுக் குழுக்களை முற்றாக ஒழித்து விட்டதாகப் பொலிஸார் கூறியதைப் பொய்ப்பிக்கும் வகையில் அந்தக் குழுக்களது அத்துமீறிய செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றன. கொக்குவில், மானிப்பாய், அரியாலை என வெவ்வேறு இடங்களில் இந்தக் குழுக்கள் வாளால் வெட்டியும், வீடுகளுக்குள் புகுந்து உடமைகளுக்குச் சேதம் விளைவித்தும், மற்றும் வாகனங்களுக்குச் சேதம் விளைவித்தும் அடாவடித்தனம் புரிந்துள்ளன. இதனால் மக்கள் அமைதியை இழந்து அச்…
-
- 0 replies
- 295 views
-
-
பின்னணிகள் ஆராயப்படவேண்டும் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்படவில்லை. சந்தேகநபர்களில் ஒருவரைத் தனக்கு நன்கு தெரியும் என்றும், அவரை மீண்டும் கண்டால் அடையாளம் காட்ட முடியும் என்றும் ஆரம்பத்தில் திடமாகக் கூறிய சாட்சி, கடைசியில் சந்தேகநபர்களை அடையாளம் காட்டாமல் விட்டதன் பின்னணி அதிர்ச்சி யையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பொல…
-
- 0 replies
- 348 views
-
-
தடையின்றி தொடரும் கூட்டமைப்பின் பயணம்! வடக்கு– கிழக்கில் அண்மைய நாள்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. முதலில் ஈ.பி. ஆர். எல். எவ் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றது. தனி வழியில் செல்லப்போவதாகவும் அந்தக் கட்சி அறிவித்தது. பின்னர் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அரசியல் கலப்பில்லாத பொது அணியொன்று களம் இறங்குமென்ற அறிவிப்பு வௌியானது. தற்போது பொது அமைப்புக்களின் ஆதரவுடன் அரசியல் கட்சிகள் சில ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளிவரும் அறிவிப்புக்கள் மக்களைக் குழப்பி வருகின்றன. …
-
- 1 reply
- 410 views
-
-
முன்னார் அரசதலைவர் பிறந்ததினம் இன்று முன்னாள் அரசதலைவர் மஹிந்த ராஜபக்ச தனது 72ஆவது பிறந்த நாளை குடும்பத்தாருடன் இணைந்து தனது அலுவலகத்தில் இன்று கொண்டாடினார். குடும்பத்தாருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளதுடன், திஸ்ஸமகாரம பகுதியில் மஹிந்தவின் சகோதரர்கள் மக்களுக்கு பாற்சோறு பகிர்ந்தளித்தனர். இந்த நிகழ்வில் மஹிந்த குடும்பத்தார் உட்பட திஸ்ஸராம பகுதி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/48244.html
-
- 0 replies
- 348 views
-
-
வித்தியா வழக்கு விவகாரம் இராஜாங்க அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிறுமியை மிருகத்தனமாகக் கொலை செய்த சுவிஸ் குமாரை விடுவித்த குற்றச்சாட் டில் பொலிஸ் அதிகாரியை சிறையில் அடைத்துள்ளீர்கள். அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு, சுவிஸ்குமாரை விடுவிக்கச் சொல்லி உத்தரவிட்ட இராஜாங்க அமைச்சர் சபையில் இப்போதும் இருக்கின்றார். இவ்வாறு மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெர…
-
- 1 reply
- 244 views
-
-
புதியதேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் ஆவேசம் சிறுபான்மை சமூகங்களான மலையக முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப்பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (08ஆம்திகதி) பாராளுமன்றத்தில் தெரி வித்தார். வடக்கும்,…
-
- 1 reply
- 162 views
-
-
வேடம் கலைந்தது 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மூன்றரை மாதங்கள் கடந்து முடிந்திருந்தன. அதே ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இரகசியமாக ஒரு கூட்டம் நடந்தது. மாலை மங்கும் வேளையில் ஆரம்பமான அந்தக் கூட்டம் இரவு வரையில் நீடித்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூட்டம் முடிந்து ஒவ்வொருவராக வெளியே வந்ததும், ஊடகங்கள் அவர்களை மொய்க்க ஆரம்பித்தன. விபசார வழக்கில் கைதாகுபவர்கள் எப்படித் தங்களது முகங்களை மறைத்துக்கொண்டு ஊடகங்களிடமிருந்து ஒளிந்து ஓடி ஓட்டம்ப…
-
- 7 replies
- 858 views
-
-
வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி நோர்வே அரசாங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடிக்கான மூலோபாய மையமாக மாற்றுவதற்கும் உடனடி இடையீட்டின் ஊடாக வள்ளங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள…
-
- 4 replies
- 466 views
-
-
கேரள கஞ்சாவுடன் பெண் கைது வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9.30மணியளவில் 2 கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தில் 2 கிலோ 32கிராம் கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.…
-
- 0 replies
- 250 views
-
-
அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும்:- அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல் குரே தெரிவித்துள்ளார். புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் புதிய நூலக கட்டிடடத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தும்போது கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதிய பாதையில் பயணிக்க வேண்டும். தன்னை கொல்லவந்த நபருக்கே மேன்மை தங்கிய ஜனாதிபதி மைதிரிபாலசிற…
-
- 0 replies
- 227 views
-
-
வடக்கு கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்றுவதை எதிர்த்துள்ளார் : மஹிந்த சமரசிங்க வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அத்துடன் அம்மாகாணத்தின் முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் தொடர்ந்து மக்களை கொதிப்படையச் செய்யும் வகையில் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். இந் நிலையில் எப்படி நாம் ஜனாதிபதியினதும் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பது என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத…
-
- 2 replies
- 553 views
-
-
யாழ் சட்டம் ஓழுங்கு மீறல் தொடர்பில் விசேட அவதானம் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கேசரிக்கு விசேட செவ்வி நேர்காணல்: எம்.எம்.மின்ஹாஜ் ஆவாகுழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனினும் சட்டம் ஒழுங்கு விடயத்தில் யாழ்ப்பாண த்தை முன்னேற்ற வேண்டியுள்ளது. இளைஞர்கள் தமது தைரியத்தை காண்பிப்பதற்காக சில செயற்பாடுகளை முன்னெடுத்தனர். எனினும் அது எமக்கு தொந்தரவாக மாற்றம் கண்டது. எனினும் தற்போது பிரச்சினைகள் குறைவாக உள்ளன. எனினும் யாழ்ப்பாணம் தொடர்பில் அதிக அவ தானம் தேவையாகும் என சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கேசரிக்கு வழங்கிய செவ்வியில் …
-
- 0 replies
- 298 views
-
-
எம்மை திருடர்கள் எனக்கூறிக்கொண்டு அரசில் இருப்பவர்களே திருடுகின்றனர் ; மஹிந்த எங்களை திருடர்கள் என தெரிவித்துக்கொண்டு அரசாங்கத்தில் இருப்பவர்களே திருடுகின்றனர். அத்துடன் பிணைமுறி தொடர்பில் பாராளுமன்றத்தின் நம்பிக்கைக்கு துராேகம் செய்துள்ளனர் என முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வரின் ஞாபகார்த்த நிகழ்வு நேற்று கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மத்திய வங்கி பிணைமுறி மோசடியா…
-
- 1 reply
- 191 views
-
-
வவுனியாவில் 10கிலோ கேரளா கஞ்சா அதிரடியாக மீட்பு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தில் கேரளா கஞ்சா 10கிலோ, 23 கிராமினை வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற குழுவினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் கொடிகாமத்தை சேர்ந்த 33 வயதுடைய வேலுப்பிள்ளை மாலதீபன் எனவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/27201
-
- 0 replies
- 158 views
-
-
ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இலங்கை வருகை ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அரச குடும்பத்து அங்கத்தவராவார். அரபு இராஜ்ஜியத்தின் அமைச்சர் தலைமையில் 30 பேர் கொண்ட தூதுக்குழுவினர் விசேட விமானத்தின் மூலம் இலங்கை வந்துள்ளனர். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி, வெளிவிவ…
-
- 0 replies
- 336 views
-
-
மாவா போதைப்பொருள் களஞ்சியசாலை சுற்றிவளைப்பு ; 100 கிலோ மாவா மீட்பு மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த நிலையில் பெருந்தொகையான மாவா எனப்படும் போதைப்பொருளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நிலையமொன்று கொட்டகலையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை அதிரடிபடையினரும் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுறிவளைப்பின் போது மாவா போதைப்பொருள் உட்பட இனிப்பு பானங்கள் புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைத…
-
- 0 replies
- 221 views
-
-
அரசியல் தீர்வை வழங்காவிடின் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை சரத் கோங்காகே கேசரிக்கு நாளிதழுக்கு விசேட செவ்வி நேர்காணல்: ரொபட் அன்டனி இவ்வார எமது நேர்காணல் பகுதியில் நடிகர் விஜயகுமாரதுங்கவுடன் இணைந்து இலங்கை மக்கள் கட்சியை ஆரம்பித்த மூத்த அரசியல்வாதியும் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரத்தினால் அரசியல் பாதை திசைதிருப்பப்பட்டு தற்போது ஜனாதிபதியின் ஆலோசகர் மட்டத்திலிருக்கின்றவருமான சரத் கோங்காகேவை சந்தித்தோம். இடைநடுவில் சில காலம் சிரேஷ்ட இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ள சரத் கோங்காகே தனது அரசியலின் ஆரம்ப மட்டத்திலிருந்தே தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு மற…
-
- 0 replies
- 393 views
-
-
கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிக்க கட்சிகள் இணக்கம் தமிழ் மக்களுக்கென ஒரு சபை; தமிழ்,முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்தில் முடிவு (நமது நிருபர்) கல்முனை மாநகர சபையினை நான்கு பிரதேச சபைகளாக பிரித்து அதில் ஒன்றினை தமிழ் மக்களுக்கான அல காக உருவாக்க தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களி டையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இவ்வாறு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களது பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை மாகாண சபைகள் உள்ளூராட்…
-
- 1 reply
- 272 views
-
-
சம்பந்தனின் கோரிக்கையை மஹிந்த ஏற்கவேண்டும் புதிய அரசியலமைப்பினை முன்னெடுத்து செல்வதற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் நேரடியாக நேற்று சபையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் வலியுறுத்தினார். எனவே, இதுதான் இறுதி சந்தர்ப்பமாகும். ஆகையால் கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ் மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஆணைக்குழுக்கள், திணைக்களங்கள் ஆகிய…
-
- 0 replies
- 254 views
-
-
மர நடுகை மாதம் ஆரம்பம் – நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கண்காட்சி ஆரம்பம் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. http://newuthayan.com/story/48016.html
-
- 0 replies
- 223 views
-
-
பொலிஸார் மீதான தாக்குதல் – சந்தேகநபர்கள் 14 பேருக்கு பிணை! பொலிஸாரைத் துரத்தித் துரத்தி வாளால் வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேகநபர்களுக்கும் யாழ். நீதிவான் மன்று நேற்று முன்தினம் பிணை வழங்கியது. சந்தேகநபர்களின் பெற்றோர்களையும், வழக்கறிஞர்களையும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு மத்தியில் இந்தச் சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 271 views
-
-
சித்திரவதை குறித்த விசாரணை விபரத்தை வெளியிட வேண்டும் : ஜஸ்மின்சூக்கா படைவழங்கும் நாடுகள் போலித்தனமான விசாரணைகள் மேற்கொள்வதனை அனு மதிப்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை கையிலெடுக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்த அண்மைய 50 சம்பவங்களின் விசாரணை முடிவுகள் பற்றியும் முழுமையான விபரங்களை வெளியிடுமாறு இலங்கைக்கு சவால் விடுக்கப்படவேண்டும் எனவும் அவர…
-
- 0 replies
- 117 views
-