ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
நினைவுகூரல்… கொழும்பு, அத்துருகிரியவில் 2008ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் “ரகு” என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபனின் 9ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பிரசாந்தன் தலைமையில் இன்று (14) நினைவுகூரப்பட்டது. (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நினைவுகூரல்/46-207140
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனுடனான நேர்காணல் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனுடனான நேர்காணல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும். ஏனெனில் அந்தச் சட்டம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு ஏற்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது’’ என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். ‘சுடர் ஒளி’ பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கேள்வி: சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக முறைப்பா…
-
- 1 reply
- 445 views
-
-
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்? மழைக்கு முளைக்கும் காளான்களாக தேர்தல் வந்ததும் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாக ஆரம்பித்துவிட்டன. அதில் முதலாவதாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் , ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பும் இணைந்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு என்று நேற்று அந்த அமைப்பு விடுத்த அறிக்கையில் மறைமுகமாகத் தெரிவித்திருந்தது. தேர்தல் அரசியல் என்பது சந்தர்ப்பவாதக் கூட்டு என்பது இந்தக் கூட்டணி மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் உள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி,…
-
- 0 replies
- 460 views
-
-
இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணி ஆரம்பம்! மாவீரர் நாளினை முன்னிட்டு இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. மாவீரர் நாளை சிறப்பாக நினைவு கூரும் வகையில் இன்றையதினம் செவ்வாய் கிழமை (14-11-2017) காலை விளையாட்டு கழக உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள், கிராம அமைப்புக்கள் மற்றும் மதகுருமார்கள் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர். எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இல்லாமல் கிராம மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து இந்த சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இரணைப்பாலை கிராமத்தின் 25 ஏக்கர் என்று அழைக்கப்படும் பகுதியில் இறுதி நேரத்தில் வீரகாவியமான பல நூற்றுக்கணக்கான மாவீரர்களின் வித்து…
-
- 0 replies
- 383 views
-
-
கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது. கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன. குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகள் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ள…
-
- 9 replies
- 792 views
-
-
தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயங்க மாட்டோம். – ஈ.பி.ஆர்.எல்.எப். அறிவிப்பு:- புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழரசு கட்சி எடுத்த முடிவுவானது , தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் அரசுக் கட்சி மக்களின் ஆணையை முழுமையாக உதா…
-
- 6 replies
- 702 views
-
-
பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை தெல்லிப்பழையில் ஆரம்பம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நேற்று தெல்லிப் பழை ஆதார மருத்து வமனையில் ஆரம்பமானது. போரால் அவயவங்கள் பாதிக்கப் பட்டு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்யவேண்டிய வட பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு இலவசமாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படு கின்றது. நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை சத்திரசிகிச்சை நடை பெறவுள்ளது. பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரான அமெரிக்கா வைச் சேர்ந்த கலாநிதி திசேரா தலைமையில் 4 வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் கொண்ட 30 பேர் அடங்கிய குழு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றது. ht…
-
- 0 replies
- 214 views
-
-
வாள்வெட்டுக் குழு வீடு புகுந்து தீ வைப்பு- கல்வியங்காட்டில் சம்பவம் வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து பிணையில் வந்திருந்தவரின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு வாள்வெட்டுக் குழு பொருள்களை அடித்துச் சேதப்படுத்தி தீ வைத்துள்ளது. இந்தச் சம்பவம் கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் வீதியிலுள்ள ஒழுங்கையில் நேற்றிரவு இடம்பெற்றது. பல இடங்களில் வாள்வெட்டு நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 பேரில் ஒருவர் பல மாதங்களாக யாழ்ப்பாண நீதிவான் மன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்ன…
-
- 0 replies
- 417 views
-
-
கிளிநொச்சியை அழுக்காக்கியுள்ள கழிவு துணிகள் கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழுகின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்பட்டு வருகின்றார். அவர் தான் கொள்வனவு செய்யும் கழிவு துணிகளை தனது காணியில் வெட்ட வெளியில் களஞ்சியப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவு கழிவு துணிகள் இவ்வாறு குப்பை மேடு போன்று காணப்பட்டு வருகிறது. அத்தோடு அண்மையில் பெய…
-
- 0 replies
- 324 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் பேரணியில்.! பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ். தொழில்நுட்ப கல்லூரி, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாணவர்களும் இணைந்துகொண்டனர். பல்கலைக்கழக முன்றலில் இருந்து 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி பலாலி வீதி, நாவலர் வீதி, கோவில் வீதி வழியாக சென்றது. கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வீத…
-
- 0 replies
- 280 views
-
-
பிரதேசவாதத்தினால் தமிழர்கள் தனிநாட்டினை இழந்தது முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்துமா?ஒரு சிறுபான்மை சமூகம் பலமான நிலையில் ஒற்றுமையாக இருந்தால் அது ஆட்சியாளர்களுக்கு தலையிடியை ஏற்படுத்தும். இதனால் சிறுபான்மை சமூகத்தினுள் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பிரதேசவாதத்தினை விதைப்பது ஆட்சியாளர்களின் தந்திரமாகும். தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றியடைந்து வடகிழக்கு மாகானங்களின் பெரும்பான்மையான பிரதேசங்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தபோது, அவர்களை வெற்றிகொள்வதற்காக இலங்கை இராவத்தினர்கள் மட்டுமல்ல, இந்திய இரானுவத்தினர்கள் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்தது.அன்று புலிகள் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியதற்கு அவர்களது இராணுவ ப…
-
- 0 replies
- 377 views
-
-
அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக... கண்டி - கொழும்பு வீதி மாவனெல்லை - கனேதென்ன பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனேதென்ன - கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களே இவை.. http://tamil.adaderana.lk/news.php?nid=2633&mode=head
-
- 0 replies
- 321 views
-
-
மும்பை நோக்கி பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்.! கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து மும்பாய் நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 138 பயணிகளுடன் நேற்று இரவு 11.47 மணியளவில் மும்பை நோக்கி பயணித்த யு.எல் 141 என்ற விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிலிருந்த பயணிகள் வேறு ஒரு விமானம் ஊடாக இன்று அதிகாலை 3.34 மணியளவில் மும்பை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/27012
-
- 0 replies
- 163 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு ஐ.தே.க அழுத்தம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழுத்தம் கொடுக்க உள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது…
-
- 0 replies
- 176 views
-
-
‘நல்லாட்சி வெளிவேடம்’ “நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உதவுவதுபோல் நடிக்கிறது” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில், “இந்த வரவு - செலவுத் திட்டத்தில் சலுகைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்ற போதிலும், அரசம…
-
- 0 replies
- 217 views
-
-
முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம் புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழுதிய "நான் மூச்சயர்ந்த போது" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், தேர்தல் முறை மாற்றம், பு…
-
- 0 replies
- 323 views
-
-
உள்ளூராட்சி தேர்தல் குறித்து அரசியல் குழுவில் தீர்மானம் இடைக்கால அறிக்கை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் கூட்டமைப்பு முடிவு வவுனியா, இடைக்கால அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதுடன், உள்ளூராட்சி தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது பற்றி கட்சி உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை அரசியல் குழுவில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் அந்தக் கட்சியின் முக்கிய தலைவர் இரா.சம்பந்தன் முன்ன…
-
- 0 replies
- 155 views
-
-
தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமையில்லை வடக்கில் வீடுகட்ட முடியாமைக்கு காரணம் இதுவே என்கிறார் நிமல் சிறிபால (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் அரசியல் தலைவர்களுக்கிடை யில் உள்ள ஒற்றுமை யின்மையால் வடக் கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியில் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா கடன்களை செலுத்துவதற்காக மேலும் 195 பில்லியன் ரூபா பெறவேண்டிய நிலைமை ஏற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2018ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 185 views
-
-
இராணுவத்திடம் பொதுமக்களின் 6051 ஏக்கர் காணிகள் எஞ்சியுள்ளன பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் : ஜெனிவாவுக்கு அரசாங்கம் விபர அறிக்கை (ரொபட் அன்டனி) இலங்கை அரசாங்கமானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இதுவரை வடக்கு, கிழக்கில் 24 ஆயிரத்து 336 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன என்று ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு ஐக்கியநாடுகள் சபை அறிவித்திருக்கிறது. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச தரத்…
-
- 0 replies
- 220 views
-
-
எயார் லைன்ஸ் நிறுவனத்திற்காக பெறப்பட்ட 74 கோடி டொலர் கடனை இரண்டு அரச வங்கிகள் செலுத்தவேண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கடந்த காலத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்காக 74 கோடி அமெரிக்க டொலர் கடனாக பெறப்பட்டது. இதற்கான கடன் தொகையை இரு அரச வங்கிகளும் திறைசேரிக்கு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அரச நிறுவனங்கள்,மாகாண சபைகள்,உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு,செயலாற்றுகை என்பவற்றை மதிப்பீடு செய்து விருது வழ…
-
- 0 replies
- 210 views
-
-
அரசியல் அமைப்பு நிர்ணய சபையை உடனடியாக கலையுங்கள் சபாநாயகர் கருவுக்கு முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ கடிதம் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) அரசியலமைப்பு சபையின் உருவாக்கமானது செல்லுபடியற்றதாகும். வழிநடத்தல் குழுவின் அறிக்கைகள், உபகுழுவின் அறிக்கைகள் என்பன அரசியலமைப்புக்கு முரணா னவையாகும். ஆகவே அவையும் செல்லுபடியற்றவையென சபாநாயகர் கரு ஜெயசூரிய பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அவசர கோரிக்கையொன்றை முன்வைத்து முன்னாள் நீதியமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்றத்த…
-
- 0 replies
- 164 views
-
-
30 வருட யுத்தம்; இரு தரப்புக்கும் 62 ஆயிரம் பில். நஷ்டம் முப்பது வருட யுத்தம் காரணமாக 62 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். அரசாங்கத்துக்கு 31 ஆயிரம் பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கும் அதேநேரம், புலிகளுக்கும் அதற்கு சமமானளவு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தத் தகவலை வழங்கினார். சுதந்த…
-
- 3 replies
- 428 views
-
-
யாழில் வேள்விக்குத் தடை; தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு! ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த யாழ் மேல் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, குறித்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனு மற்றும் அறிவிப்பை சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார். 'யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்ற…
-
- 1 reply
- 465 views
-
-
மாவீரர் நாளை அரசியல் சுயலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது ! தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில் மாவீரர் நாளை தமிழ் அரசியல் வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது என தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான மு.மனோகரன் (காக்கா அண்ணன்) கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.. மேலும் அவர் கூறுகையில், எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உண…
-
- 1 reply
- 356 views
-
-
ஏ எம் எம் முஸம்மில் – (BA Hons) முஸ்லிம்களின் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளால் உருவாக்கப் பட்ட நல்லாட்சி அரசின் பிரதமரை இயக்கும் தீர்மான சக்தியாக இயங்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களின் முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாடு அவர் கைப்பட எழுதிய “ அல் ஜிஹாத் அல் கைதா” எனும் நூலிலிருந்து. பக்கம் 263, . முஸ்லிம்கள் இலங்கையை அந்நியவர்களுக்கு காட்டிக் கொடுத்தர்வர்கள் சிங்கள மன்னர்களுக்கு எதிராக அந்நியவர்களுடன் சேர்ந்து போர் தொடுத்தவர்கள்…….! இலங்கையை போர்த்துக் கேயர் ஆட்சி செய்த காலத்தில் போர்த்துக்கலுக்கும்மு ஸ்லிம்களுக்கு மிடையில் 1517ம் ஆண்டில் சண்டை மூண்டது. இந்த சண்டையை சமாதானம் செய்ய சென்றவர் அப்போதைய கோட்டை மன்னனான தர்ம பராக்கிரமபாஹு வாகும். பிறகு கோட்டை மன்னன் தர்ம பர…
-
- 1 reply
- 652 views
-