ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
பல கோடி ரூபா செலவில் கட்டப்பட்டு பாழடைந்து காணப்படும் காங்கேசன்துறை மாளிகை காங்கேசன்துறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மாளிகையை வட மாகாண மக்களின் தேவைகளுக்காக வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகள் பலனளிக்கவில்லை. அந்த மாளிகை வளாகம் பாழடைந்து காணப்படுவதை இன்றும் அவதானிக்க முடிகிறது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் சுமார் 100 ஏக்கரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வாசஸ்தலம் 20 அறைகள், இரண்டு நீச்சல் தடாகங்கள், ஓய்வறைகள் மற்றும் கேட்போர் கூடம் என்பவற்றைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வாசஸ்தலத்தின் நிர்மாணப்பணிகள் 2012 ஆம் ஆண்டில் கடற்படையினரால் ஆரம்பிக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ். கன்னியர் மடம் வீதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் கைது! யாழ். கன்னியர் மடம் வீதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் நேற்று இருவ யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கன்னியர் மட வீதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் வாள்கள் பொல்லுகளுடன் இளைஞர் குழுவினர் நின்றுள்ளனர். அவ்வீதியால் சென்ற பொலிஸார் இதனை அவதானித்ததுடன் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது அவர்கள் வாள்களுடன் இருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் வைத்திருந்த வாள்களை கைப்பற்றியதுடன் குறித்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/4-young-people-arrested-o…
-
- 1 reply
- 200 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை இனிமேலும் சோதிக்கலாமா? FacebookTwitterPinterestEmailGmailViber தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியொருவர் 18 ஆண்டுகளின் பின்னர் கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மனிதனது வாழ்க்கையில் 18 ஆண்டுகள் என்பது நீண்டதொரு பகுதியா கும். அதிலும் நிரபராதியான ஒருவர் இவ்வ ளவு காலத்தைச் சிறையில் கழிப்பதென்பது மிகக் கொடுமையானது. தீர்வில்லாமல் தொடர்கிறது கைதிகளின் விவகாரம் பொதுவாகத் தமிழர்கள் என்றாலே தீண்டத் தகாதவர்கள், வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணம் பெரும்பான்மை இனத்தவரின் மனங்களில் உருவாகி…
-
- 0 replies
- 268 views
-
-
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு புதிய பிரதேச சபைகள்; அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் மனோ நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக நான்கு பிரதேச சபைகளை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா இத்திட்டத்தை முன்மொழிந்திருந்தார். நோர்வுட், மஸ்கெலியா, அக்கரப்பத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேசங்களுக்கே உள்ளூராட்சி தேர்தல் அதிகார சபையின் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக மேற்படி புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படவுள்ளன. நுவரெலியாவில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவை ஆகிய இரண்டு பிரதேச சபைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள், சுமார் இரண்டு இலட்சத்து 10 ஆயிரம் பே…
-
- 0 replies
- 314 views
-
-
இழுத்தடித்தால் மீண்டும் பொறியில் சிக்க நேரிடும்! – இலங்கைக்கு மேற்குலக இராஜதந்திரிகள் எச்சரிக்கை UN Logo புதிய அரசமைப்பை உருவாக்குவதிலும், தேர்தலை நடத்துவதிலும் இலங்கை அரசு தொடர்ந்தும் உறுதியற்ற போக்கைக் கடைப்பிடித்து இழுத்தடிப்புச் செய்தால், சர்வதேசத்தின் பொறிக்குள் மீண்டும் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று, கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள், வெளிவிவகார அமைச்சுக்கு இராஜதந்திர மட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச களத்தில் நல்லாட்சி அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்த இராஜதந்திரிகளே இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பதானது, அரசின் கொள்கை வகுப்பாளர்களையும், ஆலோசகர்கள…
-
- 0 replies
- 390 views
-
-
நாடாளுமன்றில் சூடான விவாதம் அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றத்தில் இன்று (30) ஆரம்பமானது. ‘காணி உரிமை இல்லை’ “நாட்டில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு, தற்போதே தீர்வு காணபோகின்றீர்களா, அல்லது உங்களுடைய குழந்தைகளுக்கும் விட்டுச்செல்ல போகின்றீர்களா?”எனக் கேள்வியெழுப்பிய சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, வடக்கு, கிழக்குக்குக் காணியுரிமை வழங்கப்படாது என்றார். விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றம் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையில் அரசமைப்புகள் கொண்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொடர்கிறது யாழ் - பல்கலைக் கழக சமூகத்தின் நிர்வாக முடக்கல் போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. கொட்டும் மழைக்கு மத்தியில் மாணவர்களும், பல்கலைக்கழக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைச்சாலையில் பல வருடங்களாக எந்த விதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாய பூர்வமான கோரிக்கைகளை செவிசாய்த்து உடன் தீர்வு காணப்…
-
- 1 reply
- 369 views
-
-
பள்ளிவாசல் முன் பொலிசார் குவிப்பு ; வவுனியாவில் பதற்றம் வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றநிலைமை நிலவிவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று இடம்பெறவிருந்த வேளையிலேயே திடீரென பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எனினும் இளைஞர்களினால் மேற்கொள்ளப்படவிருந்த குறித்த ஆர்ப்பாட்டம் போராட்டம் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 609 views
-
-
யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்தில் இருந்து 1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்ட நினைவுநாள் அனுஷ்டிப்பை இன்று(30) காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஸ்டித்தனர். இதன் போது அப்பகுதியில் ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள் ஒக்டோபர் 30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும், தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது வாழ்ந்துவருகின்றனர் . …
-
- 7 replies
- 649 views
-
-
கொழும்பு அரசுடன் இணைந்த பயணம் FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண சபை கொழும்பு அரசுடன் இணைந்து செயற்படாவிட்டால் எமது பிரதேசங்களில் பெரும் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது. அதனால் நான் அவர்களுடன் இணைந்து செயற்படுவது என்று தீர்மானித்துள்ளேன். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன். வடக்கு மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- வடக்கு மாகாண சபைக்குக் கடந்த காலங்களில் பெரும் திட்டங்கள் …
-
- 1 reply
- 387 views
-
-
'' மாவையை முதலமைச்சராக்கும் அரசின் நிகழ்சி நிரலில் த.தே.கூ.வின் முகமூடி அணிந்தோர் '' வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொள்கையில் உறுதியாக இருப்பதனால் அவரை அரசியல் அரங்கில் ஒதுக்குவதற்காகவே கொள்கையில்லாது அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட கூடிய மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்குவதற்காக தமிழ்த் தேசிய முகமூடி அணிந்தவர்கள் இப்போதே பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொள…
-
- 0 replies
- 511 views
-
-
அவுஸ்திரேலிய பிரதமர் வருகிறார் அவுஸ்திரேலிய பிரமர் மெல்கம் ட்ரன்புல், எதிர்வரும் 2ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று, கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவுஸ்திரேலிய-பிரதமர்-வருகிறார்/175-206322
-
- 1 reply
- 326 views
-
-
இறைமையின் அடிப்படையில் தமிழர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவேண்டும் அரசியலமைப்பு சபையில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் சுமந்திரன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சமஷ்டி அரசுக் கோரிக்கையானது நாட்டினை பிரிக்கும் விடயம் அல்ல. தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதால் நாட்டை பிரிக்கப்போகின்றார்கள் என்பது தவறானது. சமஷ்டி அரசு தொடர்பிலான விடயத்தினை பெரும்பான்மையினரே அறிமுகப்படுத்தினார்கள். ஒருமித்த நாடாக இருப்பதற்கு சமஷ்டி அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழர்கள் இரண்ட…
-
- 0 replies
- 287 views
-
-
புதிய அரசியலமைப்பு பணிகளை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் வழி நடத்தல் குழுவிலிருந்து விலகவேண்டியேற்படும் என்கிறார் தினேஷ் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ஐக்கிய தேசியக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அறிக்கையாகும். இது பக்கச்சார்பானது. எமது யோசனைகளை தொடர்ந்து வழிநடத்தல் குழு நிராகரிக்குமாயின் நாம் அதிலிருந்து விலக வேண்டி ஏற்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு தலை வர் தினேஷ் குணவர்த்தன சபையில் தெரிவித்தார். அத்துடன் வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் சுதந்திரக் கட்சியினதும் கூட்டு …
-
- 0 replies
- 313 views
-
-
தமிழர்கள் விடயத்தில் தவறிழைத்துள்ளோம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீர்வைக்காணவேண்டும் என்கிறார் கிரியெல்ல (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு அவர்களின் அனைத்து விடயங்களிலும் இரு பிரதான கட்சிகளுமே தவறிழைத்துள்ளன. தனிச்சிங்களத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தமிழீழம் வரை சென்றது என்று சபை முதல்வரும், நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார். நீண்டகால தேசிய பிரச்சினையை தீர்த்துக்கொள்ள சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. காலம் தாழ்ந்திருந்தாலும் இப்போதாவது தேசிய பிரச்…
-
- 0 replies
- 392 views
-
-
அநாமதேய சுவரொட்டிகளினால் செங்கலடி நகரில் பதற்றம் விசம சக்திகளின் செயற்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை (செங்கலடி நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் முஸ்லிம் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என சுவரொட்டி கள் அடையாளம் தெரியாத நபர்களினால் ஒட்டப்பட்டிருந்தமையினால் நேற்று திங்கட்கிழமை காலை செங்கலடி நகரிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. செங்கலடி நகரில் வழமைக்கு மாறாக பெருமளவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் முஸ்லிம் விய…
-
- 0 replies
- 349 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கையில்.! ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட், உல்ரிகோ முலர் மற்றும் வஜிட் கான் ஆகியோர் அடங்கிய குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர். ஐரோப்பா வழங்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு ஏற்ப இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அதன் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆராயும் முகமாகவே அந்த குழு இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும், நாளைய தினம் வட மாகாணத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் பிரதிநிதிகள் சபாநாயக…
-
- 0 replies
- 288 views
-
-
இந்தியாவுடன் பேச்சுவாரத்தை குறித்து மனம் திறந்தார் ரணில்.! (ஆர்.யசி) திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் எந்தவித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை. எண்ணெய்க் குதங்கள் குறித்து மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வங்காளவிரிகுடா நாடுகள் வளர்ச்சிகானாது திருகோணமலை வளர்ச்சியடையாது, எனினும் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் திருகோணமலை துறைமுகம் குறித்து ஆலோசித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது திருகோணமலை துறைமுக திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் க…
-
- 2 replies
- 372 views
-
-
யாழ். பண்ணைக் கடலுக்குள் கலக்கும் மலக் கழிவு !! யாழ். பண்ணைக் கடலுக்குள் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமின் கழிவுகள் நேரடியாகவே தனியான குழாய் வழியாகப் செலுத்தப்படுவது தொடர்பில் எவருமே கண்டுகொள்ளவில்லையென அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அதிரடிப்படை முகாமின் கழிவுகள் அதன் அருகே உள்ள ஒரு வெற்று நிலப்பரப்புக்குள் தொட்டியினூடாக விடப்பட்டு நேரடியாகவே தனியான குழாய் வழியாகப் பண்ணைக் கடலுக்குள் செலுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் இரகசியமான முறையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 497 views
-
-
1990 ஒக்டோபர் 30…. இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாள். 27 வருடங்கள் நிறைவடைந்தாயிற்று. புத்தளம் தொடக்கம் புல்மோட்டைவரை அனுராதபுரம் தொடக்கம் திஹாரி வரை அவர்களது அகதி வாசம் வீசிய காலங்கள் கனதியானவை. உடுத்த உடுப்போடு மாத்திரம் வந்திருந்தார்கள். கொஞ்சம் வசதி வாயப்புகளோடு வாழ்ந்தவர்கள் கொழும்பிலிருந்த தங்கள் உறவினர்களிடம் வந்து தஞ்சமடைந்தார்கள். தொழில்வான்மை கொண்ட ஒருவனை வெறுங்கையோடு ஒரு சந்தைக்குள் கொண்டு போய் விட்டாலும் அவன் பிழைத்துக்கொள்வான். அந்த நியதிக்கு அமைவாக தலைநகரப்பகுதிகளை வந்து சேர்ந்த வட பகுதி முஸ்லிம் ஏதிலிகள் சிலர் மெது மெதுவாக தங்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் முயற்சிகளை தொடங்கினர். அவர்களில் பலர் மீண்டும் தமது தாயகம் மீண்டு குடிய…
-
- 2 replies
- 625 views
-
-
கருணா அம்மான் விடுதலை.! வாகன முறைகேடு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அதிசொகுசு வாகனமொன்றை மீளகையளிக்காமல் தொடர்ந்து பயன்படுத்திவந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த வருடம் கருணா அம்மான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…
-
- 3 replies
- 533 views
-
-
மூடப்பட்டது பாராளுமன்ற வீதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்தி வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி தியத உயன சுற்றுவட்டம் வரையான பகுதி மூடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/26443
-
- 1 reply
- 217 views
-
-
சக்தி டிவி செய்திகள் 30-10-2017
-
- 0 replies
- 639 views
-
-
யாழ். கண் சிகிச்சை விவகாரம்: பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் பார்வையிழப்பு சத்திர சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்ட ஐவருக்கு கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான்கு பேர் குணமானபோதும், ஒருவர் முழுவதும் பார்வையிழந்தார். கண் புரை பாதிக்கப்பட்ட பத்துப் பேர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்துகொண்டனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர்களில் ஒன்பது பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஐந்து பேர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கண் மருத்துவ நிபுணரால் மீள கண் சத்திர சிகிச்சை ச…
-
- 1 reply
- 637 views
-
-
டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் : 6 பேருக்கு கடூழியச்சிறை Weiterempfehlen ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதில் குற்றவாளிகளாகக் கண்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. களுத்துறை சிறைச்சாலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி, அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், குறித்த வழங்கு இ…
-
- 2 replies
- 461 views
-