ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
வடக்கு மீன்பிடி அமைச்சர் 5 அம்சக் கோரிக்கை முன்வைப்பு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வட மாகாண மீன்பிடி விவகார அமைச்சர் கந்தையா சிவநேசன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தின் பிரதிகளை, வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும், திருகோணமலை, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்க சமாஜம் ஆகியனவற்றுக்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “20.09.2017 அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன், வடமாகாண மீன்பிடித்துறை …
-
- 0 replies
- 402 views
-
-
ஒரே மேசையில் தமிழர்களுடன் பேச இறுதிச் சந்தர்ப்பம் தீர்வை அடிப்படைவாதிகள் குழப்பினால் முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே பிரச்சினையத் தீர்க்க முடியும். இதற்காக எடுக்கும் முயற்சிகளை அடிப்படைவாதிகள் யாராவது குழப்பினால் அதற்கான முழு பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தமிழ் மக்களை நசுக்கிவைக்க முற்பட்டால் அதற்க…
-
- 3 replies
- 769 views
-
-
யாழ்ப்பாணக் கிணற்றில் ஒரு தொகை வெடிகுண்டுகள்… யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வெடிக்குண்டுகள், 60 கைக்குண்டுகள், 06 மோட்டார் குண்டுகள் இவற்றில் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் சிறப்பு அதிரடிபடையினரால் மீட்கப்பட்ட வெடிகுண்டுகள் அரியாலைப்பகுதியில் பாதுகாப்பாக வெடிக்கவைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/archives/46933
-
- 0 replies
- 449 views
-
-
வடமாகாண தொண்டராசிரியர்கள் போராட்டத்தில்.! வடமாகாண தொண்டராசிரியர்கள் சிலர் இன்றைய தினம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேர்முகத் தேர்வின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 182 பேருடைய பெயர்கள் வெளியிடப்பட்டும் இதுவரை ஆசியரியர் நியமனங்கள் வழங்கப்படாததை அடுத்தே அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தினர். மாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று. அதில் 182 பேர் ஆசியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுடைய பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இப் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டு 3 மாதங்கள் ஆகின்ற போதும்…
-
- 0 replies
- 328 views
-
-
வட்டுவாகல் கடற்படைமுகாம் வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.! முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை உள்ளடக்கி மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்படை வலயத்துக்குட்பட்ட கோத்தபாய கடற்படை கப்பல் என்னும் கடற்படை தளத்துக்கு இன்றையதினம் நிரந்தரமாக காணி சுவீகரிப்பு பணிகள் நடைபெறவிருந்த நிலையில், குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் கடற்படை முகாம் அமைக்க நிரந்தரமாக காணி சுவீகரிப்பு அளவீடுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கடந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கப்பட இருப்பதாக அறிவித்தல் வ…
-
- 0 replies
- 347 views
-
-
மோசமான கட்டத்தில் குடாநாட்டின் பாதுகாப்பு குடாநாட்டின் பாதுகாப்பு மோசமான கட்டத்தை எட்டியுள்ளதை அரியாலை கிழக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். குடாநாட்டில் துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதை மேற்படி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. குடாநாட்டு மக்களுக்கு துப்பாக்கிகள் புதிதானவையல்ல. நீண்ட காலமாக இடம்பெற்ற போர் காரணமாகத் துப்பாக்கிகள் மட்டுமல்லாது ஏனைய போராயுதங்களும் இவர்கள…
-
- 4 replies
- 837 views
-
-
வழக்ைக மாற்றும் வரை போராட்டம் தொடரும் என கைதிகள் அறிவிப்பு சிவாஜிலிங்கம், உறவினர்கள் நேற்று நேரில் சந்திப்பு அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் மூன்று அரசியல் கைதிகளை வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு நேற்றுப் புதன்கிழமை (25) காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளது. இந்தக் குழுவில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் உண்ணாவிரதமிருந்து வரும் திருவர…
-
- 0 replies
- 334 views
-
-
கொழும்பு துறைமுக நகரில் இந்தியாவுக்கும் இடமுண்டு.! இலங்கையின் ஒரு தனி அலகாகவே கொழும்பு சர்வதேச நிதி நகர் (போர்ட் சிட்டி) அமைக்கப்பட்டு வருகின்றது. 2040 ஆம் ஆண்டில் இது பூரணத்து வமடையும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் நிதி நகரில் இடம் உண்டு என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு சர்வதேச நிதி நகரின் எல்லை நிரைப்பு பணிகளின் 50 வீதம் நிறைவுபெற்றுள்ளது, எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மண் நிரைப்பு பணிகள் முடிவு பெரும் என அரசாங்கம் கூறியுள்ளது. மேல்மாகாண மற்றும் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று நிதி நகரை பார்வையிட சென்றதுடன் ஊடக சந்திப்பொன்றையும…
-
- 1 reply
- 367 views
-
-
புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் படகுடன் இன்று சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் இன்று படகுடன் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மீன்துறை அலுவலக அனுமதியுடன் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 160 விசைப் படகுகளில் சுமார் 700…
-
- 0 replies
- 289 views
-
-
இரும்புச் சங்கிலியில் பிணைத்து கட்டிலுடன் கட்டப்பட்ட கைதிகள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் உணவு ஒறுப்புக் கைதிகளின் கரங்கள் இரும்புச் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சியைப் பார்த்து நாம் மிகவும் கவலையடைந்தோம். இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர். அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ம.சுலக்ஷன், இ.திருவருள், க.தர்சன் மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், தமது வழக்கை வவுனியாவுக்கு மாற்றுமாறு கோரி கடந்த மாதம் 25ஆம் திகதியிலிருந்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர்…
-
- 0 replies
- 287 views
-
-
யாழில் 03 பேர் எச்.ஐ.வி யால் உயிரிழப்பு; மேலும் முவருக்கு எச்.ஐ.வி தொற்று வடமாகாணத்தில் நடப்பாண்டில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 6 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்தார். 1987ம் ஆண்டில் இருந்து அண்ணளவாக 80 பேருக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட எச்.ஐ.வி சிகிச்சை பிரிவில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 39 பேர் வரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய 30…
-
- 0 replies
- 368 views
-
-
தலைமறைவாகியோரில் 1,131 இராணுவத்தினர் மீண்டும் இணைந்தனர் இராணுவத்திலிருந்து தப்பியோடி, தலைமறைவாகியிருப்போரில், 1,131 பேர், கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் பணியில் இணைந்துகொண்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன, நேற்று (25) தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (25) நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த 23ஆம் திகதி பொதுமன்னி…
-
- 0 replies
- 272 views
-
-
மணியந்தோட்டம் விவகாரம்; யாழுக்கு விரைகிறது கொழும்புக் குழு யாழ்ப்பாண மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியில் இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளனர். இந்த குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மணியந் தோட்டம், உதயபுரம் பகுதியில், அடையாளம் தெரியாத சிலர், கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த இளைஞர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டைமேற்…
-
- 0 replies
- 265 views
-
-
9 போர்க் கப்பல்கள் 10க்கு முன் வருகின்றன இலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் 9 போர்க் கப்பல்கள் வருகைதரவுள்ளனவெனத் தகவல் கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக பங்களாதேஷ் நாட்டுக்குச் சொந்தமான Somudra Avijan என்ற போர்க் கப்பல், கொழும்புத் துறைமுகத்தை நேற்று (25) வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, தென்கொரியா, பங்களாதேஷ், இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போர்க் கப்பல்கள், இலங்கைக்கு வருகைதரவுள்ளனவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தென்கொரிய போர்க் கப்பல்கள் இரண்டு, கொழும்புத் துறைமுகத்தை இன்று (26) வந்தடையவுள்ளன. அவற்றைத் தவிர, இந்திய போர…
-
- 0 replies
- 135 views
-
-
முஸ்லிம் கூட்டமைப்பு விரைவில் அறிவிப்பு முஸ்லிம் கட்சிகளை இணைத்து அமைக்கப்படவுள்ள முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புக் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்தவாரம் வெளியிடவுள்ளதாகச் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலர் எம்.ரி.ஹஸனலி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் அமைப்பு ரீதியிலான வேலைத் திட்டங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. தற்போது அது குறித்த எழுத்தாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனை இவ்வாரமளவில் நிறைவு செ…
-
- 4 replies
- 539 views
-
-
அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ஐ.நா.நிபுணரின் பரிந்துரைகள் (ரொபட் அன்டனி) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் முன்வைத்துள்ள பரிந்துரைகள், மற்றும் யோசனைகள் இலங்கைக்கு பாரிய அச்சுறுத் தல்களை வழங்குவதாக அமைந்திருக்கின்றன என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம் இந்த விடயத்தில் பலவீனமாக செயற்படுவதாக நாங்கள் கருதுகின்றோம். இந்த விடயங்களை சரியான முறையில் எதிர்கொண்டு அவற்றை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது எனவும் …
-
- 1 reply
- 433 views
-
-
புதிய கடற்படை தளபதி நியமனம் கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவின் பதவிகாலத்தை நீடிப்பதற்கு, ஜனாதிபதி முடிவெடுக்காமையை அடுத்தே, புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-கடற்படை-தளபதி-நியமனம்/175-206098
-
- 2 replies
- 371 views
-
-
சொந்தக் கட்சியில் சூடு வாங்கிய விமல் வீரவன்ச பாராளுமன்றில் குண்டு வீசப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தே அன்றி, கட்சியின் கருத்து அல்ல என, தேசிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச எழுதிய ‘யத்மின் பெந்தி அக்ஷர’ என்ற புத்தக வெளியீடு கடந்த 22ஆம் திகதி நடைபெற்றது. அதன்போது பேசிய அவர், புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத அங்கத்தவர்கள் இருக்கும் பாராளுமன்றில் குண்டு வீச வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்திருந்த பியசிறி விஜேநாயக்க, மேற்படி கருத்து விமல் வீரவன்சவின் தனிப்பட்ட கருத்தே என்றும், அவர் (…
-
- 0 replies
- 319 views
-
-
முல்லைத்தீவில் உறவினர்களைச் சந்தித்தனர் சுவிஸ் மாணவர்கள் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சுவிஸ் நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று சந்தித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக அவர்கள் வருகை தந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. போரின் பின்னர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலவரம் மற்றும் விவரங்களை அவர்கள் கேட்டறித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/40558.html
-
- 0 replies
- 431 views
-
-
நாட்டினை துண்டாட அரசியல் அமைப்பினை கோரவில்லை.! (ஆர்.யசி) நாட்டின் தேவை கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியுமே புதிய அரசியல் அமைப்பின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. நாட்டினை துண்டாட எவரும் புதிய அரசியல் அமைப்பினை கேட்கவில்லை என ஜே.வி.பி தெரிவித்தது. 13 ஆம் திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலே நாட்டில் பிரிவினைவாதம் பலமடைந்துவிடும். அவ்வாறான நிலையில் நாட்டினை துண்டாடும் அரசியல் அமைப்பு வருமாயின் ஜே.வி.பி யே முதலில் எதிர்க்கும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரி…
-
- 0 replies
- 400 views
-
-
மா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு ஞானம் பெற்றவர் யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் மிருக பலியிடல் வழிபாட்டு முறையான வேள்விக்கு தடை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு ஞானம் பெற்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்விகளின் போதும் ஏனைய பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக தடை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியமை தொடர்பிலேயே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 553 views
-
-
சிறுபான்மை இனத்தவர் இந்த நாட்டினை ஆள்வதில் பிரச்சினை இல்லை : சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் அவர்கள் வாக்குப்பலத்தால் ஆட்சிக்கு வர வேண்டும் என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியலாம் எனவும் . ஆனால் நாட்டை பிரிக்க அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்ட அவர் யாராக இருந்தாலும் வாக்குப்பலத்தின் மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவியேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் தமிழ் தலைவர் ஒருவரோ அல்லது முஸ்லிம் த…
-
- 0 replies
- 436 views
-
-
திருகோணமலைப் பாடசாலையொன்றில் கேரள கஞ்சாவுடன் மாணவர் சிலர் கைது திருகோணமலை – உப்புவெளி பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் சிலர் கேரள கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைத்தினத்தில் நின்ற மூன்று மாணவர்களிடருந்து 1800 மில்லி கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் 16 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் காவல’;துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/archives/46833
-
- 0 replies
- 132 views
-
-
பலத்த காற்று… மட்டக்களப்பில் நேற்று வீசிய பலத்த காற்றாலும் கடும் மழையாலும் வீடுகள் உடமைகள் சேதமடைந்துள்ளதுடன், போக்குவரத்து, மின், தொலைபேசி இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரின் புளியந்தீவு மத்தி கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட சின்னலெவ்வை வீதியில் இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வேம்பு மரம் முறிந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டின் கூரை சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த தொலைக்காட்சிப்பெட்டி, இலத்திரணியல் பொருட்கள் மற்றும் வீதியில் தொலைபேசி வயர்கள், மின்சாரசபையின் இணைப்புக்களுக்கு சேதத்துக்குள்ளாகின. மரம் விழுந்துள்ளதால் வீதியில் போக்குவரத்து செய்ய முடியாமல் உள்ளது. ம…
-
- 0 replies
- 284 views
-
-
முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம் : தவராசா வடமாகாணசபையின் அமைச்சர் சபை மாற்றப்பட்டதன் பின்னரும் மாற்றங்கள் எதனையும் காண இயலவில்லை,முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம். உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை உருவத்தில் மட்டுமே மாற்றம் என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்… "வடமாகாணசபையின் பழைய அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட…
-
- 3 replies
- 599 views
-