ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி மைத்திரி அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்கை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் சட்ட மா அதிபரூடாக நீதிமன்றில் விடயங்களை முன்வைக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. இதன்போது மூன்று அரசியல் கைதிகளின் வழக…
-
- 0 replies
- 250 views
-
-
கனகராயன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்துவின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேலவின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்றினை கனகராயன்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது, குறித்த வாகனத்திலிருந்து 9 கிலோ 732 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பய…
-
- 1 reply
- 372 views
-
-
தேரர்களை சிலர் தவறாக வழி நடத்தல் மகாநாயக்க தேரர்களையும்- பௌத்த பீடங்களையும் ஒரு குழு தவறாக வழிநடத்துகின்றது, புதிய அரசமைப்புத் தொடர்பில் அவர்களுக்குத் தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று நேற்றுத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. நாங்கள் அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டுக்கு அமைய பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வைக் காண்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய தீபாவளி தின நிகழ்வு அரச தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அரச தலை…
-
- 5 replies
- 587 views
-
-
உங்களுக்கு வாக்களித்த எமக்கு விடிவை பெற்றுத் தாருங்கள் : அரசியல் கைதிகளின் தாய்மார் ஜனாதிபதியிடம் உருக்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் உங்களுக்குத்தான் வாக்களித்தோம். சிறையில் உள்ள எமது பிள்ளைகள் உங்களுக்கு வாக்களிக்குமாறே எமக்கு கூறியிருந்தனர். அவ்வாறு உங்களை ஆதரித்த எமது பிள்ளைகளுக்கு நீங்கள் விடிவைத் தரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் தாய்மார் கண்ணீர் மல்க கோரியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வடமாகாண சபை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் அநுராதபுரம் சிறை…
-
- 0 replies
- 218 views
-
-
புதுக்குடியிருப்பில் வாள்வெட்டு ; ஒருவர் படுகாயம் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பாண்டியன் வீதி பகுதியில் நேற்று இரவு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு குறித்த பாண்டியன் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலை நடத்தியவர்கள் உடனடியாகவே அந்த பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். காயமடைந்தவரின் தலைப்பகுதி…
-
- 0 replies
- 259 views
-
-
சவுதி அரசால் அமைக்கப்பட்ட வீடுகள் விரைவில் கையளிப்பு அக்கரைப்பற்று பிரதேச செயலர் தகுதியானவர்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு சவுதி அரசின் நிதியுதவியில் அம்பாறை மற்றும் நுரைச்சோலைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் விரைவில் கையளிக்கப்படும் இவ்வாறு அக்கரைப்பற்று பிரதேச செயலர் ஏ.எம்.அப்துல் லத்திப் நேற்றுத் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பில் நேற்று அவரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது, வீடுகளைப் பெறத் தகுதியானவர்களை இனம்காணும் நோக்கில் மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் தலைமையில் உரிய அதிகாரிகளைக் கொண்டு நேர்முகப் பரீட்சைகள…
-
- 0 replies
- 175 views
-
-
அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் சிறந்த தீர்வு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதியை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே எம். கே சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை (14) ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் …
-
- 2 replies
- 405 views
-
-
ஒன்பது மாதங்களில் செல்பீ காரணமாக 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் ஒன்பது மாதங்களில் செல்பீ காரணமாக 24 பேர் புகையிரதங்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புகையிரத பாதைகளில் செல்பீ எடுத்தபோதே இவ்வாறு குறித்த 24 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆண்டு தோறும் புகையிரத பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 2016ம் ஆண்டில் புகையிரத பாதைகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 180 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுடன் 256 பேர் விபத்துக்களினால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 295 views
-
-
மது போதையில் இளைஞர் குழு அட்டகாசம் : வவுனியா பண்டாரிகுளத்தில் சம்பவம்! வவுனியா பண்ணாரிகுளம் பகுதியில் மது போதையில் வந்த இளைஞர் குழுவொன்று கடையை உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளது. இன்று(19) இரவு 7மணியளவில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட இளைஞர் குழுவே தேனீர் கடை அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து பெயரொன்றை கூறி அழைத்தவாறு கடையை தாக்கியுள்ளனர். [IMG2 கடையில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளின் இலக்கதகடு மறைக்கப்பட்டிருந்ததை அவதானித்த நிலையில் தம்மை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமையால் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. எனினும் கடையின் முன்புறம் இருந்த மோட்டார் சைக்கிள் தாக்க…
-
- 1 reply
- 563 views
-
-
தனக்குள் இருக்கும் பேயையே மைத்திரி குறிப்பிட்டாராம்!- மகிந்த கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பேசிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தனக்குள் இருக்கும் பேயைக் குறிப்பிட்டாரே தவிர, தன்னைப் பேய் என்று குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. ‘‘மாவ யக்கா அவுசன்னேப்பா’ என்ற சிங்கள வசனமானது கோபத்தின் வெளிப்பாடாகும். எனக்குள் இருக்கும் பேயை வெளியே கொண்டு வரவேண்டாம் என்பதே அதன் அர்த்தமாகும். யாழ்ப்பாணத்தில் வைத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் இதைத்தான் சொல்லியிருந்தார். அவர் என்னைக் கு…
-
- 2 replies
- 547 views
-
-
சுவிஸில் சுட்டுகொல்லப்பட்ட கரனின் குடும்பம் சுவிஸ் பயணம் சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் நேற்றிரவு 9 மணியளவில் சுவிற்சர்லாந்துக்கு நோக்கிப் பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர்கள் பயணமாகியுள்ளதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இன்றையதினம் வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுகநோ, ரிசிநோ பகுதியில் சுட்டுகொல்லபட்ட கரனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் அதில் பங்குகொள்வார்கள் என தெரி…
-
- 0 replies
- 499 views
-
-
மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை இலங்கையில் மூன்று பிரதான மொழிகள் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக விளங்கும் அதேவேளையில், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களால் பிரதானமாகப் பேசப்பட்டு வரும் மொழியாக தமிழ் இருந்து வருகின்றது. இலங்கை குடியேற்ற நாடாக இருந்த காலகட்டங்களில் ஆங்கிலம…
-
- 0 replies
- 304 views
-
-
2 கோடி ரூபா நகை கடத்தலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி கைது இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வர முற்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவர் இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். ஜெத்தாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பணிபுரிந்த ஐம்பது வயதுடைய இவர், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்தார். எனினும், வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனைகளின்போது இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத் துறையினர் அவரை முழுமையாகப் பரிசோதனை செய்தனர். அப்போது, இவரது உடலிலும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அங்கியிலும், காலில் அணிந்திருந்த விசேட பட்டியிலுமாக மொத்தமாகச் சுமார் ஐந்தரைக் கிலோ தங்க நகைகளை இவர் மறைத்து வ…
-
- 1 reply
- 235 views
-
-
நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். எவ்வாறாயினும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்திருந்தது. எவ்வாறாயினும் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாகவும், எனினும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்ப…
-
- 3 replies
- 618 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க கடிதம்- தவறான வழிகாட்டலின் தீரமானம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களே வணக்கம்- உங்கள் போராட்டங்களுக்கு முதலில் மதிப்பளிக்கின்றோம். கடந்த வருடம் 20-10-2016 அன்று பொலிஸாரால் உங்கள் சக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாளை வெள்ளிக்கிழமை ஒரு வருடம். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? சரி- விடயத்திற்கு வருவோம். முன்னொரு காலத்தில் சரியான நெறிப்படுத்தல், வழிகாட்டல் போன்ற பண்புகளுடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நகர்வுகளை முன்நகர்த்திச் சென்ற பல்கலைக்கழக மாணவ சமூகம், இன்று தடம்மாறி நிற்பது ஏனோ? இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவுடன் 1920இல் ஆரம்பித்த இன முரண்பாட்டை 1970 களுக்கு பின்னரான காலத்தில் அ…
-
- 0 replies
- 803 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (19-10-2017)
-
- 0 replies
- 739 views
-
-
புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமொன்றோ அவசியம் கிடையாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களை தவறாக வழிநடத்துவது யார் எனவும் கேள்வி எழுப்பினார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை ஊடக கல்லூரி உட்பட மூன்று நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது. இந…
-
- 2 replies
- 379 views
-
-
கட்டாரிலுள்ள பாடசாலையில் தூதுவர் லியனகேவின் தலையீடு - நிர்மலா கன்னங்கர கட்டாருக்கான இலங்கைத் தூதுவர், டோகாவிலுள்ள தனியார் இலங்கைப் பாடசாலையொன்றுக்குத் துன்புறுத்தல்களை வழங்க, தனது இராஜதந்திர அதிகாரங்களைப் பயன்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினை, அங்கு வாழும் இலங்கையரிடையே விசனத்தைத் தோற்றுவித்தது. தூதுவர் A.S.P. லியனகே, சட்டத்துக்குப் புறம்பான வகையிலும் நீதியற்ற வகையிலும், ஸ்டஃபோர்ட் இலங்கைப் பாடசாலையின் விவகாரங்களில், அண்மையில் தலையிட்டாரென விமர்சிக்கப்படுகின்றார். இவர், பாடசாலையின் வங்கிக் கணக்கை முடக்கியதோடு, பாடசாலை முகாமைத்துவத்துக்கு எதிராக, கட்டார் கல்வியமைச்சில் முறைப்பாடுகளை…
-
- 0 replies
- 426 views
-
-
முழு அடைப்பு அரசுக்கு ஓர் எச்சரிக்கை மணியே…. கூட்டாட்சி அரசு தமிழ் மக்களது ஆதரவை இழந்து விடக்கூடியதொரு சூழ்நிலை உருவாகி வருகின்றது. அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசு காட்டி வருகின்ற அலட்சியப்போக்கி னால் தமிழா்கள் எந்த அளவுக்கு ஆத்திரம் கொண்டுள்ளனா் என்பதை கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் தெளிவாக எடுத்துக்காட்டி விட்டது. யாழ்ப்பாணத்தி்ல் கடந்த 14ஆம் திகதி அரச தலைவா் பங்கேற்ற நிகழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவரும்,கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் புறக்கணித்தமை மக்களின் உணா்வ…
-
- 0 replies
- 313 views
-
-
கிளிநொச்சியிலும் மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு : வடக்கில் ஏற்கனவே மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவை காவும் புதிய வகை நுளம்பு வகை கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. என கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம. ஜெயராசா தெரிவித்துள்ளாா்.கடந்த 16 ஆம் திகதி கிளிநொச்சி திருநகர் வடக்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் இவ் வகை புதிய நுளம்பு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பூச்சியல் ஆய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வு நடவடிக்கையின் போதே இவ் வகை புதிய மலேரியா காவி நுளம்பு கண்டுப்பிடிக்கப்பட்…
-
- 0 replies
- 290 views
-
-
படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 17ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (19) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை 4 மணியளவில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணி யாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்றஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மா…
-
- 0 replies
- 485 views
-
-
புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை: பௌத்த பீடாதிபதிகள் கருத்து தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த தலைமைப் பீடங்கள் தெரிவித்துள்ளன. பௌத்த சமயத்தின் முக்கிய பிரிவுகளான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை என்பவற்றின் பீடாதிபதிகளே மேற்படி கருத்து வெளியிட்டுள்ளனர். புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (18) புனித தலதா மாளிகையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த பிரமுகர்கள் - முக்கியமாக சட்டத் துறை சார் வல்லுனர்கள் - இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். கலந்துரையாடலின் முடிவில், தற்போது நாடு இருக்கும் சூழலில் புதிய அரசியலமைப்புக்கான தேவை எதுவும் இல்லை என்…
-
- 6 replies
- 829 views
-
-
500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி ஞானசார தேரர் மீது அமைச்சர் ரிஷாத் தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் சீ.டி ஆகியவற்றை ஏற்கனவே அமைச்சர் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த நிலையில். இது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் அவரது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து விட்டு குறித்த தினம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ள போது, அந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் தரப்பு சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்த அதேவேளை ஞானசார தேரருக்கு அழைப்பாணை அனுப்பாமல், மனுதாரர் ஆகிய அமைச்சர் ரிஷ…
-
- 0 replies
- 519 views
-
-
கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே அமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறிச்சென்று தனித்துவமாக செயற்பட முனைவார்களானால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று (18) மட்டக்களப்பு கண்ணகியம்மன் ஆலய வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். வடகிழக்கு தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே உள்ளது. …
-
- 4 replies
- 534 views
-
-
பிக்குகள் படையுடன் களமிறங்கும் மகிந்த புதிய அரசமைப்புக்கு எதிரான பரப்புரையை நேரில் களமிறங்கி வழிநடத்துவதற்குத் தீர்மானித்துள்ள முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இதற்காக முன்னணி பௌத்த பிக்குகளைக் கொண்ட பேரவையையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்குரிய பேச்சுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், பேரவைக்கான அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என்று அறியமுடிகின்றது. இதனாலேயே, புதிய அரசமைப்புக்கான வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையை நிராகரித்து அவர் கடந்த 16 ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்திருந்தார். …
-
- 3 replies
- 520 views
-