ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
சந்திரிக்காவுக்குப் புதிய பதவி சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்காவுக்கு நேற்றிரவு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கட்சியின் பிரதான உறுப்பினர்கள் மற்றும் அரச தலைவர் முன்னிலையில் அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார் எனத் தெரியவருகிறது. http://newuthayan.com/story/36470.html
-
- 0 replies
- 238 views
-
-
உறுதியான நிலைப்பாட்டை மைத்திரிக்கு காண்பிப்போம் இன்றைய முழு அடைப்புப் போராட்டமானது நாளை இங்கு வருகைதரும் அரச தலைவருக்கு நாம் வெளிப்படுத்தும் எமது உறுதியான நிலைப்பாடாகும். தமிழ் மக்கள் ஏகமனதாக அரசுக்கு விடும் எச்சரிக்கையாகும். அரசியல் கைதிகளின் கோரிக்கைகளைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்ற வேண்டும் என்பதுடன் அவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்றைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர் நேற்று வ…
-
- 0 replies
- 324 views
-
-
சவூதி அரேபியாவில் வீடொன்றில் இரண்டு வருடங்கள் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண் ஒருவர் நாடு திரும்பி மீண்டும் சவூதி அரேபியாவில் அதே வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற அப்பெண் 6 மாதங்களின் பின்னர் சடலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மகளின் மரணம் தொடர்பில் உயிரிழந்த பசறையை சேர்ந்த பெண்ணின் தந்தை தெரிவிக்கையில், தனது மகளின் கைவிரல்களை காயமடையும் வகையில் வெட்டி, கைகளை சுட்டுப் பொசுக்கியதான படங்கள் தனது கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பில் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையிட்டதையடுத்து வி…
-
- 0 replies
- 674 views
-
-
கைக்குழந்தைகளுடன் வியாபாரத்திலீடுபட்ட ஐவர் கைது Published by Priyatharshan on 2017-10-12 23:33:04 வவுனியா நகரப்பகுதியில் ஊதுபத்தி பொருட்கள் விற்பனையில் பல மாதங்களாக சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 5 பேரை இன்று இரவு 7 மணியளவில் குடியிருப்பு பூங்கா வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த பல மாதங்களாக புத்தளம் பகுதியிலிருந்து வவுனியா நகரப்பகுதிகளில் ஊதுபத்திகளை வீதியோரங்களில் விற்பனை செய்து வருவதாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களை அவதானிப்பதற்குச் சென்ற வவுனியா உதவிப்பிர…
-
- 0 replies
- 234 views
-
-
சோமாலிய என்றால் கடற்கொள்ளையர்கள் என்பது போல இலங்கையை வங்கி கொள்ளையர்கள் இருக்குமிடமாக முழு உலகமுமே வியந்து பார்க்கும் அளவிற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி புகழ்பெற்றுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச , ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்போது அழைக்கப்படுவார எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , அன்னத்திற்கு புள்ளடியிட்ட அனைத்து மக்களும் இன்று நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் வெட்கித்துள்ள…
-
- 0 replies
- 241 views
-
-
பிரதமரை உடனடியாக பதவி நீக்க ஒன்றிணைந்து போராடுவோம் : திஸ்ஸ விதாரண (லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்காவுடன் ஒருமித்து செயற்படும் பிரதமரின் கொள்கைகள் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகியுள்ளது. எனவே அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை பொது மக்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பில் இன்று வியாழக்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்குலக செல்வந்த நாடுகளின் பொருளாதார கொள்கைகள் தற்போது வீழ்ச்சி அடைந்து வருகின்றது. சீனாவிடமிருந்து அமெரிக்கா சுமார் 3.3 ரில்லியன…
-
- 2 replies
- 388 views
-
-
ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு திடீர் விஜயம் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன் பிரகாரம் நேற்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஐ.நா. குழுவினர் இன்று முல்லைத்…
-
- 3 replies
- 647 views
-
-
நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு, சர்வதேச சமூகத்தினூடாக அரசாங்கத்துடன் பேரம்பேசியிருப்பேன் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்ற விடயத்தை அமைச்சர் மனோ கணேசன் ஆதரிக்கின்றார் என்பதை இப்போதே அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். சுமந்திரனின் இக்கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உண்மையில், நான் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்திருந்தால், பாராளுமன்றத…
-
- 0 replies
- 372 views
-
-
நாடு பிரிபடக்கூடாதுஅதிகாரம் பகிரலாம் நாட்டைப் பிரிக்காமல் வடக்கு -– கிழக்குக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் யோசனையை மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் எதிர்க்காது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்ததாவது: எமது நாடாளுமன்றத்துக்கு வயது 70. இந்த 70 வருடங்களில் நாம் மூன்று அரசமைப்பைக் கண்டுவிட்டோம். இந்த அரசமைப்புக்கள் எவற்றாலும் நாட்டின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க முடிய வில்லை. இந்த நிலையில்தான் நான்காவது அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. நாடாளும…
-
- 1 reply
- 486 views
-
-
ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரும் அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வார் சுமந்திரன், ஜயம்பதியுடன் 20ஆம் திகதி பேச்சு புதிய அரசமைப்பு முயற்சி தொடர்பாக, இலங்கை வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிறிப்பும் ஆராயவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் முக்கிய சந்திப்பை அவர் நடத்த வுள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சும ந் திரன் ஆகியோரிடம் இடைக்கால அறிக்…
-
- 0 replies
- 310 views
-
-
'உயிரைவிட எமது உரிமையே மேலானது' ஐ.நா. விசேட பிரதிநிகளிடம் தெரிவித்த கேப்பாபுலவு மக்கள் எமது உயிரைவிட நாம் எமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரிமையே எமக்கு மேலானது என திடீர் பயணமாக இன்றையதினம் கேப்பாபுலவுக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிகளிடம் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை,நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை ஊக்குவிப்பதற்கான தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று 219 ஆவது நாளாக கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவத்தலைமையக வாயிலில் தமது சொந்த நிலங்களை கேட்டு போராடிவரும் மக்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.…
-
- 1 reply
- 490 views
-
-
வடக்கில் வெள்ளியன்று ஹர்த்தால் - எஸ். நிதர்ஷன் அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியற் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோரி, வடக்கெங்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசியற் கட்சிகள், பொது அமைப்புகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ளன. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடகில்-வெள்ளியன்று-ஹர்த்தால்/71-205279
-
- 6 replies
- 586 views
-
-
அமெரிக்க அதிகாரி இலங்கைக்கு புத்திமதி சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவ்வாறு அமெரிக்கக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரியான றியர் அட்மிரல் டொனால்ட் டி கப்ரியேல்சன் தெரிவித்தார். இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தைப் பற்றி அமெரிக்கா கவலை கொண்டுள்ளதா என்று இலங்கை வந்துள்ள றியர் அட்மிரல் மொனால்ட் டி கப்ரியேல்சனிடம் கொழும்பு ஆங்கில ஊடகம் கேள்வி எழுப்பியிருந்தது. சில விடயங்களில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாததால், சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சீனா தற்போது நன்மைகளைப் பெற்…
-
- 0 replies
- 481 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் மீதான பற்று தொடர்பில் தினேஷிற்கு சந்தேகம் (லியோ நிரோஷ தர்ஷன்) அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி பண்டிகை கொடுப்பனவை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை . இதுவா ? நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான பற்று என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்து சர்வதேசத்தின் சாபத்திற்கு ஆழாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரெல்லையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்…
-
- 0 replies
- 291 views
-
-
என்னாள் எவ்வாறு முடியுமென ஜனாதிபதி கேள்வி (லியோ நிரோஷ தர்ஷன்) ஜே . ஆர் . ஜயவர்தனவினால் செய்ய முடியாதததை என்னாள் எவ்வாறு செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பு குறித்து முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பாதாக உறுதியளித்துள்ளார். கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்விற்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பிற்கான முன்னெடுப்புகள் பிரிவினைவாத்தை நோக்கியே உள்…
-
- 0 replies
- 364 views
-
-
அரசாங்கத்தின் சகபாடியே தமிழ் தேசிய கூட்டமைப்பு : பீரிஸ் (லியோ நிரோஷ தர்ஷன்) ஒழுக்கமான எதிர்கட்சியாக இருந்து நாட்டிற்கு சேவை செய்வதை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிக்கும் சகபாடியாக செயற்படுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரெள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கும் வகைய…
-
- 0 replies
- 302 views
-
-
யாழில் இடம்பெறும் ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்க கோரிக்கை: பொது அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்குமாறு பொது அமைப்புகளும,அரசியல் கட்சிகளும் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து போராடி வருகின்ற நிலையில், அவர்களது நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தாது, எதிர்வரும் (14.10.2017) சனிக்கிழமை அன்று, ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். இது தமிழ் மக்களுக…
-
- 0 replies
- 445 views
-
-
யாரையும் பழிவாங்கோம்;கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிடுவோம்-பெசில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வடக்கில் செயற்படுகின்ற ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடமாகாணத்திலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமைதாங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மேற்கொள்ளவுள்ள புதிய உத்திகள் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண…
-
- 0 replies
- 366 views
-
-
காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தனர். ஐக்கிய நாடுகள் சபை குழுவினரிடம் நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு…
-
- 1 reply
- 240 views
-
-
யாழில் நாளை சுனாமி ஒத்திகை யாழ். மாவட்டத்தில் நாளை (13) சுனாமி ஒத்திகையொன்று நடத்தப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண கரையேரப் பகுதிகள் உள்ளிட்டதாக அனைத்து இடங்களிலும் மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் வகையில், இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பீலி தமிழ் மிரருக்குத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழில்-நாளை-சுனாமி-ஒத்திகை/71-205466
-
- 0 replies
- 162 views
-
-
தன்மீதான தாக்குதல் தொடர்பில் யோகேஸ்வரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரைத் தாக்க முனைந்தபோது தடுக்க முனைந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். தன்மீது தாக்குதல் நடத்த உதவி ஆணையாளர் முயற்சிகளை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 161 views
-
-
மற்றுமொரு புதிய கட்சி ஆரம்பம்! தமது புதிய அரசியல் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் மைத்ரி குணரத்ன புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12) நடைபெற்றது. அதில் பேசியபோதே மைத்ரி இத்தகவலை வெளியிட்டார். “எங்கள் புதிய கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும். இதற்கான ஆரம்ப வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். இப்போது, கட்சிக்கான தொண்டர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. “ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது கட்சிய…
-
- 0 replies
- 267 views
-
-
யாழ்.பல்கலையில் திறந்த கலந்துரையாடல் புதிய அரசியல் யாப்பின் இடைக்கால வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் – கைலாசபதி கலையரங்கில் காலை நடைபெறவுள்ளது. கலந்துரையாடலை யாழ்ப்பாணம் கல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Interim-Plan-Constitution-Open-Discussion-Jaffna
-
- 5 replies
- 978 views
-
-
தமிழகத்திலிருந்து 55 பேர் நாடு திரும்பினர் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குச் சென்ற 55 பேர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கான இலவச வானூர்திச் சிட்டைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதுவராலயம் வழங்கியுள்ளது. அதேவேளை நாடு திரும்பியுள்ள 12 குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/
-
- 3 replies
- 404 views
-
-
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாறும்- விக்னேஸ்வரனை சந்திக்கவும் ஏற்பாடு தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதால், தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற்றமடைய வேண்டும் என சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள் கடும் அழுத்தம் கொடுப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். அவசர அவசரமாக அரசியல் கட்சியாக மாற்றமடைந்து, வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் தமிழர்களின் தற்போதை அவல நிலை குறித்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தி, தேசிய இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என ஆர்வலர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையின் யாழ், மன்னார் மறை மாவட்டங்களின் அருட்தந்தையர்கள் சிலர…
-
- 1 reply
- 582 views
-