ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
வாழைச்சேனை கடதாசி ஆலை 8 மாதங்களுக்குள் இயங்க நடவடிக்கை : இந்திய பொறியியலாளர் குழு வாழைச்சேனை கடதாசி ஆலையின் மீள் புனரமைப்பு செய்யவும் பழுதடைந்து காணப்படும் அதன் இயந்திரங்களை திருத்தம்செய்து தொழிலாளரின் பாவனைக்கு வழங்கவும் இந்திய எஸ்.வி.தொழிற்சாலையின் பொறியியலாளர் குழு சனிக்கிழமையன்று கடதாசி ஆலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இத் தொழிற்சாலையினை எதிர்வரும் 8 மாதங்களுக்குள் திருத்தம் செய்து மீண்டும் இயங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொறியிலாளர் குழு இதன்போது கருத்து தெரிவித்தது. இதனை திருத்தம் செய்வதன் மூலம் சுமார் 100 மெற்றிக் தொன் அளவிலான கடதாசிகளை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும். இதனால் இலங்கை ரூ…
-
- 0 replies
- 378 views
-
-
மகிந்தவுடன் இணைந்து போட்டியிட அரசியல் கட்சிகள் பலத்த போட்டி Share எதிர்வரும் தேர்தர்களில் மகிந்தவும் இணைந்து போட்டியிடுவதற்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மகிந்த அணியுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களைத் தயார் படுத்தி வருகிறார். தேர்தல் அறிவிப்பின் பின்னர் கட்சி விவரத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகிந்தவுடன் கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.…
-
- 0 replies
- 245 views
-
-
சந்தேகநபர்களைத் தாக்குவதற்கு பொலிஸாருக்கு உரிமையில்லை Share குற்றமொன்றில் சந்தேகநபர்களாகக் கைது செய்யப்படுபவர்களைத் தாக்குவதற்கோ, அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ பொலிஸாருக்கு உரிமை இல்லை என்று மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மகிந்த அணியினர் தலைமையில் அம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான கானொளி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொலிஸார் நபர் ஒருவரைத் தாக்குவது தொடர்பான காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே பி…
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கை போரின்போது நடந்தது என்ன? - 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள் (இடமிருந்து) தயா சோமசுந்தரம், ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன், இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து... இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழ…
-
- 2 replies
- 401 views
-
-
முல்லைத்தீவு விவசாயி சாதனை: கழிவுப்பொருட்களில் விவசாய உபகரணங்கள் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி விவசாய உபகரணங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை முல்லைத்தீவு விவசாயி ஒருவர் கண்டுபிடித்து செயற்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பசுபதி ராதாகிருஷ்ணன் எனும் விவசாயியே கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி விவசாய உபகரணங்களைத் தயாரித்துள்ளார். விவசாய செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இவர் பல்வேறு உபகரணங்களைத் தயாரித்துள்ளார். விவசாயத்திற்கு தேவையான பயிர்களுக்கு மண் அணைக்கும் சாதனம், வரம்பு கட்டும் சாதனம், நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் போன்றவ…
-
- 3 replies
- 735 views
-
-
வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்... // பசில் ராஜபக்ஸ http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-6
-
- 0 replies
- 180 views
-
-
அக்கராயன் கரும்புத்தோட்டக் காணியை தாரை வார்த்து விட்டார் முதலமைச்சர் Share அக்கராயன் கரும்புத் தோட்டக்காணியான 210 ஏக்கர் நிலத்தை வடக்கு முதல்வர் முறையற்ற விதத்தில் குத்தகைக்கு விட்டுள்ளார். அதனை அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர் மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கவனவீர்ப்பை மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று முன்தின அமர்வில் கொண்டு வந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அக்கராயன் பகுதி கரும்புத் தோட்டக்காணியை முதல்வர் சண்டியர்களுக்கும், செல்வந்தர்களுக்கு…
-
- 0 replies
- 286 views
-
-
கிராமப்புறப் பாடசாலைகளை மூடுமாறு கோருகிறார் வடக்கு விவசாய அமைச்சர் Share வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை சமச்சீராக நியமிப்பதிலுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் அதிர்ச்சி தரும் யோசனையை முன்வைத்துள்ளார். “வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய கிராமப் புற பாடசாலைகள் அனைத்தையும் மூடிவிட்டு, அந்த பகுதி மாணவர்களை நகரப்புற பாடசாலைகளில் கற்க ஏதுவான வழிகளை மாகாண கல்வி அமைச்சு செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். அவரின் இந்த யோசனையின் அடிப்படையில் வடக்கு மாகாணத்த…
-
- 2 replies
- 354 views
-
-
தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடும் மு.கா. Share எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வெலிகல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கட்சி வேட்பாளர்கள் தெரிவு விரைவில் இடம்பெறும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவும் கட்சி தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். http://newuthayan.com/story/35241.html
-
- 0 replies
- 210 views
-
-
புதிய அரசமைப்பால் மைத்திரியின் அதிகாரங்கள் குறைக்கப்படா Share புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தாலும், தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்கள் குறைக்கப்படாது என்று அரசமைப்புப் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவராக அவர் பதிவியில் இருப்பார். புதிய அரசமைப்பின் ஊடாக அரச தலைவருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும், மைத்திரியின் அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/35243.html
-
- 0 replies
- 218 views
-
-
விடுதலைப் புலகளின் தலைவர் பிரபாகரனினதும், மாவீரர்களினதும் தியாகம் இடைக்கால அறிக்கை மூலம் குத்திக்குதறப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரனை பயன்படுத்தி சாணக்கியமாகக் காய்களை நகர்த்தி வருவதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுமந்திரன் ஐநா அதிகாரிகளைச் சந்தித்து இடைக்கால அறிக்கையில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், புதிய அரசியலமைப்பு யாப்பின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனவும் விளக்கமளித்து வருகின்றதாகவும் அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை, சுமந்திரன் தேர்தல் பிரச்சா…
-
- 0 replies
- 242 views
-
-
மல்லாவியில் வர்த்தகர் மீது சரமாரியான வாள்வெட்டு மல்லாவியில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த வர்த்த கரை சரமாரியாக வெட் டித்தள்ளியது. காயங்களுக்கு உள்ளான வர்த்தகர் அங்கிருந்து தப்பியோடிப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்ததால் உயிர் தப்பினார். சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி – புவனேஸ்வரன் (வயது – 41) சம்பவத்தில் படுகாயமடைந்தார். அவரைப் பொலிஸார் மல்லாவி மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 6 இழை போடப்பட்டுள்ளது. மேலும் 3 காயங்க…
-
- 0 replies
- 244 views
-
-
புதிய அரசமைப்பு : புலம்பெயர் தமிழர்களுக்கும் விளக்கமளிக்கப்படும் புதிய அரசமைப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் புலம் பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விளக்கமளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் முக்கிய பங்காளியுமான ஜயம்பதி விக்கிரமரட்ண இந்த விளக்கப் பரப்புரைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட் டுள்ளார். லண்டனில் முதலாவது கூட்டம் நடைபெறவுள்ளது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சூழலில் அதன் உள்ளடக்கம் குறித்து உள்நாட்டில் மாத்திரமல்ல பன்னாட்டு ரீதியிலும் …
-
- 0 replies
- 243 views
-
-
சு.கவின் குழப்பத்தைத் தீர்க்க சந்திரிகா களத்தில் Share புதிய அரசமைப்பு உருவாக்கம், நிறைவேற்று அரச தலைவர் முறையை நீக்குவது ஆகிய விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தீர்ப்பதற்காகக் களம் இறங்கியுள்ளார் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க. புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் முதலில் இணக்கம் காணப்பட்ட பல விடயங்களுடன் சுதந்திரக் கட்சி தற்போது முரண்பட்டு நிற்கின்றது. அதேபோன்று நிறைவேற்று அரச தலைவர் முறையை முற்றாக ஒழிப்பதற்கும் அது…
-
- 0 replies
- 305 views
-
-
இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இம்மாத இறுதியில்.! பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இம்மாதம் 30, 31 ஆம் திகதிகளிலும் மற்றும் நவம்பர் முதலாம் திகதியும் நடைபெறும். இந்த விவாதத்துக்காக பாராளுமன்றம் இந் நாட்களில் அரசியலமைப்புச் சபையாக மாறும். விவாதத்தின் பின்னர் அறிக்கை, சட்டவரைவை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வழிகாட்டல் குழு உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25455
-
- 0 replies
- 222 views
-
-
‘தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன’ “பல்வேறு பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விட்டன” எனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், காலியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, ஒல்லாந்தர்களால் பொறிக்கப்பட்டதல்ல எனவும் அது ஒரு சீன மாலுமியால் பொறிக்கப்பட்டதாகும் எனவும் தெரிவித்தார். காலி கல்வெட்டு தொடர்பில் தவறான விடயம் பதியப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் (07) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “காலியில் ஒல்லாந்தர்கள…
-
- 2 replies
- 593 views
-
-
வடக்கு முதலமைச்சரால் மக்களுக்கு நீதி கிட்டவில்லை! – தவநாதன் Share ‘‘வடக்கு மாகாணத்துக்கு முன்னாள் நீதியரசர் முதலமைச்சராக நியமிக்க ப்பட்டார். அவர் தமது பிரச்சினை களுக்கு நீதிவழங்குவார் என தமிழ்மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்குக் கிடைத்ததோ வெறுமனே ஏமாற்றமே’’ – இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றஞ்சாட்டினார். வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு நேற்றையதினம் அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. அமர்வில் அவைத்தலைவரால் அரசியல்கைதிகள் பிரச்சினை தொடர்பான பிரே…
-
- 1 reply
- 464 views
-
-
முஸ்லிம்களை அவமானப்படுத்துகிறார் சம்பந்தன்- முபாறக் Share இணைந்த வடக்கு -– கிழக்கு மாகாணத்தில் படித்த முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று ஆர். சம்பந்தன் சொல்வது கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்தும் செயலாகும். இவ்வாறு உலமா கட்சித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டு எந்தக் காலமும் முஸ்லிம் முதலமைச்சரைத் தமிழ் மக்கள் நியமிப்பார்களா? இல்லையே. குறிப்பிட்ட சில வரு…
-
- 1 reply
- 721 views
-
-
இந்த நாட்டில் சிங்கள, தமிழ் வாத பிரச்சினை என்பது உலகம் அழியும் வரையுள்ள பிரச்சினை என்றுதான் சொல்ல வேண்டும் வடகிழக்கை இணைத்து என்னதான் அதிகாரம் கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது.. காரணம் அவர்களுக்கு இந்த நாடுவேண்டும்.. தமிழர்த்தாயகமாக தனிநாடு வேண்டும் என்பதே தமிழர்களின் இறுதி இலக்காகும். மொழியாலும் மதத்தாலும் பலகோடி தமிழர்கள் உலக நாடுகளில் வாழும் எந்த நாடும் அவர்களுக்கு உரித்தானதல்ல…அவர்களும் அந்தநாட்டுகளில் வாழும் மக்களே தவிர அவர்களுக்கான சொந்த நாடுகள் அல்ல அதனால்தான் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்ற போதும் கூட அவர்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை.. தமிழர்களின் சாத்வீக போராட்டத்தில் தொடங்கி ஆயுதப்போராட்டம் வரை முஸ்லிம்களை மொழியால் தமிழர்கள் என்று ஏற்றவர்கள் பிற்பா…
-
- 1 reply
- 544 views
-
-
சிறப்புத் தேவையுடையோரை நெகிழவைத்த பரோபகாரி Share கொளுத்தும் வெயிலில் தாகத்துடன் ஊர்வலம் சென்ற சிறப்புத் தேவையுடையவர்களின் தாகம் தீர்ப்பதற்காக பரோபகாரி ஒருவர் தனது சொந்தப்பணம் 4000 ரூபாவை செலவு செய்துள்ளார். இச்சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணம் நகரத்தில் இடம்பெற்றது. பன்னாட்டு சிறப்புத் தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலய முன்றிலிலிருந்து ஊர்வலம் ஆரம்பமானது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் யாழ்.மருத்துவமனை சாலை ஊடாக முற்ற வெளியை சென்றடைந்தனர். அனைத்து மாவட்டங்க…
-
- 0 replies
- 408 views
-
-
சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும் Share ‘‘சிங்களத்தில் ஏக்கியவையும் தமிழில் ஒருமித்த நாட்டையும் ஏற்று ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வந்துள்ளமை மிகப்பெரிய திருப்பு முனையாகும். தமது அரசியல் தீர்வுப்பயணத்தில் கடும் வடுக்களையும் இழப்புக்களையும் சந்தித்த மக்கள் இந்தளவு தூரம் இறங்கி வந்துள்ளமை மிகப்பெரியதொரு நிலமையாகும். தமிழ் மக்கள் இதனைவிட கீழே இறங்கி வருவார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது ஆரோக்கியமாகாது’’. இவ்…
-
- 0 replies
- 379 views
-
-
சிறுபான்மையின மக்கள் இணைந்து போராடுவதற்கான காலம் கனியுமா? Share இலங்கையின் சிறுபான்மையின மக்கள் தமக்குள் ஒற்றுமையைப் பேணாது வெவ்வேறான பாதைகளில் பயணிப்பதால் இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுபறியாகிச் செல்கிறது. சிறுபான்மையின மக்கள் எனக் குறிப்பிடும்போது அதில் நாட்டில் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள், இந்தியாவிலிருந்து வந்து குடியமர்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். பூர்வீகத் தமிழர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பரந்து வாழ்கின்றனர்.வடக்கு மாக…
-
- 0 replies
- 290 views
-
-
பிரான்ஸ் எயார்பஸ் உடனான ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் கொள்வனவு ஒப்பந்தம் இரத்தாகாதது ஏன்? A 350 – 900 ரகத்தைச் சேர்ந்த நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை இதுவரை இரத்து செய்யப்படவில்லை என தகவல் வௌியாகியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்காலத்தில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார். A 350 – 900 ரகத்தைச் சேர்ந்த எட்டு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த அரசாங்கம், 2013 ஆம் ஆண்டு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதுடன், அவற்றி…
-
- 0 replies
- 289 views
-
-
நுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள் பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை நுண் கடனிலிருந்து எங்கள் பெண்களை காப்பாற்றுங்கள் என கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பு மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளனா். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வந்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் இன்று கிளிநொச்சியில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் பிரதேச சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய போதே பெண்கள் அமைப்பினர் இக் கோரிக்கையை விடுத்துள்ளனர். நுண் கடன் நிறுவனங்கள்…
-
- 0 replies
- 211 views
-
-
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பிணை இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் இரு பிள்ளைகள் உட்பட கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று சனிக்கிழமை மாலை உத்தரவிட்டார். வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணமாகி இந்தியாவிற்கு சென்றிருந்தார். கடவுச்சீட்டை இந்தியாவில் தொலைத்த காரணத்தினால் விமானம் மூலம் வருகைதர முடியாமல் …
-
- 0 replies
- 291 views
-