Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசும் நடராஜா “வடக்கு - கிழக்கு வாழ் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவே கட்சித் தலைவர்களுடன் பேசி வருகின்றோம்” என வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் ஒன்றிய இணைப்பாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான எம்.பி.நடராஜா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், வாழ்வாதாரம், கல்வி என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிரச்சினைளுக்கும் தீர்வு கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையும், அவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்…

  2. புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்து ரணிலும் சம்பந்தனும் ஒரே நாளில் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்து ஒற்றையாட்சிதான் என்கிறார் அவர்; அப்படி இல்லை என்கிறார் இவர் Share புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி என்ற விட­யம் தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் நேற்று ஒன்­றுக்கு ஒன்று முர­ணான கருத்தை வெளி­யிட்­டுள்­ள­னர். “புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் சிங்­கள மற்­றும் தமிழ் பதங்­கள் ஒற்­றை­யாட்சி என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. இதில் எந்த ம…

  3. அறிக்கை­யில் ஒற்றையாட்சிபலப்படுத்தப்பட்டுள்ளது ஜயம்பதி எம்.பி. இப்படி விளக்­கம் Share இடைக்­கால அறிக்­கை­யின் பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில் இலங்கை பிள­வு­ப­டா­த­ தும் பிரிக்க முடி­யா­தது­மான நாடாகக் காணப்­ப­டு­கின்­றது. ஒற்­றை­யாட்சிக் கட்­ட­மைப்­பும் முன் பி­ருந்­த­தை­விட பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கூட்­டாட்சி (சமஷ்டி) என்ற அம்­சமே இடைக்­கால அறிக்­கை­யில் எங்­கும் இல்லை. மாகா­ணங்­கள் பிரிந்து செல்­லலைத் தடுத்­தல், மாகா­ணங்­க­ளில் குழப்­பம் ஏற்­ப­டும்­போது அரச தலை­வர் நேர­டி­யா­கத் தலை­யி­டு­தல் என்று பல்­வேறு விட­யங்­கள் தற்­போ­துள்ள அர­ச­மைப்­பை­விட …

  4. “எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும்” “நாம் இன்றைக்கு சர்வதேச நாடுகளிடம் அரசியல் தீர்வு திட்டங்களில் ஏமாறுகின்ற போது அல்லது ஏமாற்றமடைகின்ற போது சர்வதேச நாடுகளிடமும் ஐ.நா சபையிடம் நியாயம் கேட்பதற்கான வலிமையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?” என பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண…

  5. கொக்குவில் பகுதியில் ஆவா குழு மீண்டும் அட்டூழியம்:பதற்றத்தில் மக்கள்! கொக்குவில் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தின் மீது சற்று முன் ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரண்டுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆவா குழுவினர் குறித்த விற்பனை நிலையத்தை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். அங்கு தொலைபேசிகள் சில திருட்டு போயுள்ளதாகவும் தெரியவருகிறது. பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அப்பகுதிக்கு பொலிஸார் தற்போது விரைந்துள்ளனர். இதன்காரணமாக அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. https://news.ibctamil.com/ta/internal-affairs/shop-was-hit-by-the…

  6. ஒற்றையாட்சிக்கு பாதிப்பு வராது அதற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு : பிரதமர் ரணில் (ஆர்.யசி) உரு­வாக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இலங்­கையின் ஒற்­றை­யாட்­சிக்கு எந்த விதத்­திலும் பாதிப்பு ஏற்படாது. அதற்கு ஏற்ற வகை­யி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கா­ரங்­களை வழங்குவதற்கு நாம் தயா­ராக உள்ளோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். கடந்த 20 ஆண்­டு­களில் அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள் நாட்டை சரி­யாக வழி­ந­டத்த தவ­றிய நிலையில் மீண்டும் அவர்­க­ளுக்கு அதி­கா­ரத்தை கொடுக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார். அனு­ரா­த­பு­ரத்தில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்…

  7. அர­ச­மைப்பு இடைக்­கால அறிக்கை தமி­ழர்­க­ளை திருப்­திப்­ப­டுத்­துமா? கடந்த பல தசாப்த கால­மாக தமிழ்­மக்­கள் சிங்­கள இனத்­தி­டம் இழந்த தமது தன்­னாட்சி உரிமை, அர­சி­யல் உரிமை, ஏனைய மொழி, நில, சமய உரி­மை­க­ளுக்­காக அகிம்சை வழி­யி­ல் போராடி னர். கடந்த முப்­பது வருட கால­மாக, ஆயுத ரீதி­யான போராட்­டத்­தி­லும் ஈடு­பட்ட தமி­ழி­னம், பன்­னாட்டுச் சூழ்ச்­சி­கள், துரோ­கங்­க­ளால் பல வழி­க­ளில் ஏமாற்­றப்­பட்டு தமது போராட்­டங்­களில் தோல்­வி ­ய­டைந்து, சிங்­கள இன­வெறி அர­சு­க­ளின் பார­பட்­ச­மான திட்­ட­மிட்ட செயற்­பா­டு­க­ளால் திக்­கு­முக்­காடி, தடு­மாறி விரக்­தி­யு­டன் வாழ நேர்ந்­துள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு கிடைக்­கும், நிம்­ம­தி­யாக, கூடி­ய­பட…

  8. மூன்று நாட்­க­ளுக்குள் இரண்டு பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் இரு வேறு பகு­தி­களில் கடந்த மூன்று நாட்­க­ளுக்குள் இரு பள்­ளி­வா­சல்கள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கல்­வீச்சு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. வாரி­ய­பொல பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட மினு­வங்­கெட்ட மற்றும் மீப்பே பொலிஸ் பிரி­வு­களில் உள்ள பள்­ளி­வா­சல்கள் மீதே இந்த தாக்கு­தல்கள் நடாத்­தப்பட்­டுள்­ளன. மினு­வங்­கெட்ட பள்­ளி­வாசல் மீது இரு பெற்றோல் குண்­டுகள் வீசி தக­குதல் நடாத்­தப்பட்­டுள்ள போதும், அக்­குண்­டுகள் வெடிக்­கா­ததன் காரணமாக பாரி­ய சேதம் தவிர்க்­கப்பட்­டுள்­ளது. இந்த நிலையில் குறித்த இரு பெற்றோல் குண்­டு­க­ளையும் மீட்­டுள்ள …

  9. 2 தேரர்களுக்கு அழைப்பு நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் பேரில், வாக்குமூலம் அளிப்பதற்காக, தேரர்கள் இருவருக்கு, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. அக்மீமன தயாரத்ன மற்றும் அருமேபொல ரத்னசார ஆகிய இருவரையுமே, இன்று (02) காலைவேளையில், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில், பெண்ணொருவர் உட்பட, அறுவர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களில் நால்வர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுக…

  10. ஜேர்மனி, பின்லாந்து செல்கிறார் பிரதமர்.! பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்­த­வாரம், இரண்டு ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். ஜேர்­மனி, பின்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்கே அவர் பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். 9 நாட்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த நாடு­களில் தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிர­த­ம­ருடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சமும், ஜேர்­மனி, பின்­லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். http://www.virakesari.lk/article/25198

  11. ரோஹிங்யா அகதிகள் விவகாரம் : மனித நேயமற்ற செயற்பாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.! ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் விவ­கா­ரத்தில், மனித நேய­மின்றி நடந்­து­கொண்டோருக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்தார். கல்­கிசை பகு­தியில் கடந்த செப்ெ­டம்பர் 26 ஆம் திகதி பிக்­கு­களின் தலை­மையில், ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட அத்துமீறல்கள் தொடர்பில் கருத்து வெளி­யிடும்போதே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர இதனைத் தெரி­வித்தார். குறித்த சம்­ப­வத்தை வன்­மை­யாக கண்­டித்த பொலிஸ் மா அதிபர், தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­க­ளுக்­காக செயற்­பட்டு மனித நேய­மற்ற நட­வ­டிக…

  12. ‘வாக்குமூலமளிப்பதற்கு கொழும்புக்கு வர முடியாது’ கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, தன்னை விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதும், கொழும்புக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் மன்னார் வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு, நேற்று முன்தினம் (30) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், “கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு, இன்று 2 ஆம் திகதி திங்கட…

  13. கிழக்கின் ஆட்சி ஆளுநரிடம்; பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி -எம்.எஸ்.எம்.நூர்தீன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் சனிக்கிழமை(30) நள்ளிரவு 12மணியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த பொகொல்லாகமவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைவதையிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், பட்டாசுகளை கொளுத்தி தமது மகிழ்ச்சியை சிலர் தெரிவித்தனர். காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்ளுக்கு, எதிராகவே இவ்வாறு பட்டாசுகளை கொளுத்துவதாகவும்…

  14. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோவுடன் சிங்களர்கள் தகராறு! ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் சிங்களவர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை பேசினார். முதல் உரையில், "இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012-ம் ஆண்டிலிருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை. தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத கால…

  15. எடுத்த எடுப்பிலேயே எல்லாம் கிடைக்காது படிப்படியாகத்தான் முன்னேறவேண்டும் Share வானூர்தி உரு­வாக்­கப்­பட்டபோது தற்­போது இருக்­கின்ற வானூர்­தி­யாக உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. காலம் செல்­லச் செல்ல பல தொழில்­நுட்­பங்­கள் மூலம் அவை மெரு­கூட்­டப்­பட்டு தற்­போது ஜெட் விமா­னங்­கள் என்ற வரை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதே­போன்­று­தான் எந்­த­வொரு அர­ச­மைப்­பும் ஆக்­கப்­ப­டும் போது அது முழு­மை­யா­ன­தாக ஆக்­கப்­ப­டு­வ­தில்லை. 1977ஆம் ஆண்டு அர­ச­மைப்­புக் கூட தற்­போது வரை­யில் 19 திருத்­தங்­கள் வந்­தி­ருக்­கின்­றன. இந்­திய அர­ச­மைப்­புச் சட…

  16. தென்மராட்சித் தேங்காய்க்கு வெளிநாடுகளில் கிராக்கி Share தென்­ம­ராட்சி பிர­தேச தேங்­காய்­க­ளுக்கு வெளி­நா­டு­க­ளில் மவுசு ஏற்­பட்­டுள்­ளது. தின­மும் 5 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட தேங்­காய்­கள் சாவ­கச்­சேரி மற்­றும் கொடி­கா­மம் சந்­தை­க­ளி­லி­ருந்து வாக­னங்­க­ளில் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. இத­னால் உற்­பத்­தி­யா­ளர்­கள் இலா­ப­ம­டை­கின்­ற­னர். ஆனால் உள்ளூர் மக்­கள் சந்­தை­க­ளில் அதி­க­ரித்த விலைக்கு தேங்­காய்­களை கொள்­வ­னவு செய்­ய­வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: சந்­தை­க­ளில் ஒ…

  17. காவி உடைக் கும்பலே மகிந்த அணிக்குத் துணை நீதி அமைச்சரின் குற்றச்சாட்டு Share மகிந்த அணியினர் நாளுக்கு நாள் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த அமைப்புக்காகப் பணியாற்றக் காவியுடை தரித்த கும்பல் உள்ளது. இதுதான் பிரச்சி னைக்குக் காரணமாக உள்ளது. இவ்வாறு நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: யார் என்ன சொன்னாலும் ரோஹிங்ய மக்களையும் நாம் மனிதர்களாகவே பார்க்க வேண்டும். ஏதிலிகள் என்பதற்காக அவர்களை எமக்கு கடலில் வீசிவிட முடியாது. பன்னாட்டு ரீதியில் எமது நாடு உடன்பட்ட சில நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப நாம் செயற்பட வேண்…

    • 1 reply
    • 298 views
  18. வடக்கில் பெருகி வரும் நுண் கடன் திட்டங்களால் பாதிப்புறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் inShare நுண் கடன் திட்டத்தினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்போது அதிகளவில் வட மாகாணத்தினைத் தளமாகக்கொண்டு, பல நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு கடன் வழங்கி வருகின்றனர். இலங்கையில் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட யுத்தத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. யுத்தத்தின் பின்னர் வட மாகாணத்தில் சுமார் 45 ஆயிரம…

  19. வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த நாட்டின் முக்கியமான தீர்ப்பாகும் – ஜனாதிபதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நகர அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட மகாவலி வீட்டுத்திட்டத்தில் வாழும் சிறுவர்களின் பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன. http://newsfirst.lk/tamil/2017/10/வித்தியா-கொலை-குற்றவாளிக/

  20. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கைத் தலைவராகக் கொண்டு, ‘ஷிபா பவுண்டேசன்’ எனும் அரச சார்பற்ற புதிய நிறுவனமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண வைபவம், காத்தான்குடியில் நேற்று இரவு (27) நடைபெற்றது. மக்களுக்கு மனிதாபிமான முறையில் பணியாற்றுவதற்காகவும், வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் போன்ற உதவிகளை வழங்குவதற்காகவும் இந்த ‘ஷிபா பவுண்டேசன்’ நிறுவனம் ஆரம்பிக்கப்பட் http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஷிபா-பவுண்டேசன்-புதிய-நிறுவனம்-உதயம்/73-204670

  21. சக்தி டிவி செய்திகள் 8PM (01-10-2017)

  22. 210 ஏக்­கர் கரும்­புத் தோட்­டக்­கா­ணியை தன­வந்­தர்­க­ளுக்கு வழங்க முயற்­சி Share முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கும், நில­மற்ற விவ­சா­யி­க­ளுக்­கும் வழங்­கப்­ப­டும் என எதிர்­பார்க்­கப்­பட்ட அக்­க­ரா­யன் கரும்­புத்­தோட்­டக் காணியை இப்­போது வெளி­யாள்­க­ளுக்கு வழங்க முயற்­சிப்­ப­ தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தை ­யும் மீறி இந்த நட­வடிக்­கை­கள் முன்னெடுக்­கப்பட்டு வரு­கின்­றன என உள்ளூர் விவ­சாய அமைப்­புக்­கள் சுட்­டிக்­காட்­டி­ யுள்­ளன. இந்த நட­வ­டிக்­கைக்கு வடக்கு மாகா­ண­ச­பை­யும் ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தா­…

  23. யாழில் காணி அற்றவர்களிற்குக் காணிகள் வழங்கும் திட்டம் !! யாழ்ப்பாணத்தில் தற்போது வரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், மேலதிகமாக 15 பேருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உறுதியும் விரைவில் வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அதேநேரம், மேலும் 43 பேருக்கான காணிகள் மதிப்பீட்டில் உள்ளது. அவை கிடைக்கப் பெற்றதும் உடனடியாக உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறே, மேலும் 32 காணிகள் நில அளவீட்டில் உள்ளது. இவையும் அடுத…

  24. கல்லடிப் பாலத்தில் பாரிய விபத்து : விபத்தில் சிக்கியவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெறுள்ள நிலையில், விபத்தில் சிக்கியவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன், கார் மற்றும் மோட்டர் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த பாரிய விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் எங்கு சென்றுள்ளார் என்று தெரியாத நிலையில் பொலிஸார் தேடுதலை நடத்தி வருகின்றனர் …

  25. ‘மேலும் பலர் கைது செய்யப்படுவர்’ கல்கிஸையில் றோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் கலகம் விளைவித்த சம்பவம் தொடர்பில், மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளனரென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுள் 6 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்கிஸையில் இடம்பெற்ற குறித்த சம்பவமானது, முழுக்க முழுக்க சட்டவிரோதமானது எனவும், இந்தச் சம்பவம், தனிப்பட்ட தேவைகளுக்காகவே நடத்தப்பட்டது எனவும், பொலிஸ்மா அதிபர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.