ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
வடமத்திய மாகாணத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு Share வடமத்திய மாகாணத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. வடமத்திய மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது. 33 உறுப்பினர்களைக் கொண்ட வடமத்திய மாகாண சபையில் 21 உறுப்பினர்களைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருந்தது. இதில் ஐக்கிய தேசிய கட்சி 11 உறுப்புரிமைகளையும், ஜேவிபி 1 உறுப்புரிமையையும் பெற்றிருந்தது. கிழக்கு மாகாணத்தின் பதவிக்காலம் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://newu…
-
- 0 replies
- 131 views
-
-
நாட்டின் மிகப்பெரிய இலஞ்சம்! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுங்கத்துறை அதிகாரிகள் நால்வர் மீது, மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்ப்பட்டுள்ளன. சுங்கத் துறையின் உதவி கண்காணிப்பாளர் உபாலி குணரத்ன பெரேரா, சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் வசந்த விமலவீர, உபாலி விக்கிரமசிங்க, சுதீர ஜினதாஸ ஆகியோர் மீதே குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபைக்காகத் தருவிக்கப்பட்ட 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான உதிரிப் பாகங்களுக்கான வரியை விதிக்காமல் இருப்பதற்காக, 2015ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி, 125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக இவர்கள் மீது பதினான்கு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 196 views
-
-
காரைநகரில் கடற்படையினரின் படகு மோதி மீனவர் உயிரிழப்பு காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 42 வயது மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/33615.html
-
- 0 replies
- 169 views
-
-
“பிக்குகள் பிற சமயத் தலைவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்” ஒருசில புத்த பிக்குகளின் ஒழுங்கீனமற்ற, முறையற்ற நடவடிக்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த பௌத்த சமூகத்துக்குமே இழுக்கு ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் கடல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கல்கிஸையில் ரோஹிங்யா அகதிகளை பிக்குகளும் மற்றும் சிலரும் சேர்ந்து பயமுறுத்தியதுடன் அங்கிருந்து துரத்தியடித்தமை குறித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இதுபோன்ற மதவாதம் பிடித்த சிலரின் நடவடிக்கைகளால், பிக்குகளின் மீதான மதிப்பை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். நம் நாட்டின் ஏனைய சமயத் தலைவர்களை உதாரணமாகக் கொண்டு பௌத்த பிக்குகள் தமக்கும், தமது சம…
-
- 0 replies
- 145 views
-
-
மாணவி வித்யாவின் கொலையும் அதற்கான நீதியும்.
-
- 0 replies
- 169 views
-
-
சர்வதேச குழந்தைகள், சர்வதேச முதியோர் தினங்களை முன்னிட்டு ஜனாதிபதி சிறப்புச் செய்தி சகலவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை எல்லா வகையிலும் பெற்றுத் தருவதைத் தமது அரசாங்கம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அழகு, தூய்மை, குற்றமற்ற தன்மை என்பவற்றின் அடையாளமாகவே குழந்தைகள் விளங்குகின்றனர். நாடு, சமயம், இனம், மொழி போன்ற எல்லைகளைத் தாண்டி, இவ்வுலகின் குழந்தைகள் அனைவருமே எதிர்காலத்தைக் கட்டியெழுப்பப் போகிறவர்கள். அவர்களுக்கு உரித்த…
-
- 0 replies
- 199 views
-
-
தேரர்களை அரசியல் தலைவர்களே தீர்வுக்கு வழிப்படுத்தவேண்டும் Share அரசியல் தீர்வுக்கு தமிழர் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்களும் தென்னிலங்கை இனவாதிகளுமே தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களை தெற்கு அரசியல் தலைவர்களே வழிப்படுத்த வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் உங்களின் பொறுப்பு” இவ்வாறு பசில் ராஜபக்சவிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எடுத்துரைத்தார். இரண்டு நாள் பய…
-
- 0 replies
- 158 views
-
-
புதிய அரசமைப்பு கூட்டாட்சித் தீர்வையே வலியுறுத்துகிறது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமரபுர பௌத்த பீடம் அறிவிப்பு Share புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையைத் தற்போதுள்ள வடிவத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பௌத்த மக்களின் நம்பிக்கைக்குரிய பௌத்த பீடங்களுள் ஒன்றான அமரபுர பௌத்த பீடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமரபுர மகாபீடத்தின் தலைவர் கொடுகொட தம்மவன்ன தேரர் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட…
-
- 0 replies
- 180 views
-
-
தமிழர்கள் ஏற்காத தீர்வை கூட்டமைப்பு ஆதரிக்காது Share “தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன” இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லிசுவாம்பிள்ளை ஆண்டகையிடம் ஆணித்தரமாகத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுவதோடு அரசியல் …
-
- 0 replies
- 237 views
-
-
மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா தோட்டாக்களுடன் கைது மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவை தோட்டாக்களுடன் கைது செய்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்த மேலதிக விபரங்கள் விரைவில்! http://www.virakesari.lk/article/25152
-
- 0 replies
- 196 views
-
-
100 வயதைக் கடந்த 258 பேர் இலங்கையில் இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகளில் 100 வயதைக்கடந்த 258 பேர் வாழ்வதாக சிரேஷ்ட பிரஜைகள் செயலகப் பணிப்பாளர் சுவித்த சிங்கபுலி தெரிவிக்கின்றார். இந்த நிலை நாட்டின் சுகாதார துறையின் தன்மையை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் வேகமாக வயதானவர்கள் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. 2040 ஆம் ஆண்டளவில் வயதானவர்களின் எண்ணிக்கை சனத்தொகையில் ஐந்தில் ஒரு வீதமாக அதிகரிக்குமெனவும் அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25157
-
- 0 replies
- 143 views
-
-
“ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டாமென இரண்டரை மணிநேரம் மஹிந்தவுக்கு விளக்கினேன்” ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றால் தோல்வியடைவோம் என மஹிந்த ராஜபக் ஷ வுக்கு இரண்டு மணிநேரம் விளக்கிக்கூறினேன். பின்னர் தனது தவறை என்னி டம் ஒப்புக்கொண்டார் என இலங்கை கம்யூனி ஸ்ட் கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியு குணசேகர தெரிவித்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பம் முதல் போராடியது இலங்கை கம் யூனிஸ்ட் கட்சியாகும் என்றும் தெரிவித் தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 ஆவது தேசிய சம்மேளனம் நேற்று நாரஹேன்பிட்டி ஷாலிகா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதான உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரி…
-
- 1 reply
- 456 views
-
-
மன்னார் ஆயர், காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்தார் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், மன்னாரில் காணாமல்போனோரின் உறவினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25148
-
- 4 replies
- 479 views
-
-
சக்தி டிவி செய்திகள் 30 09 2017 , 8PM
-
- 0 replies
- 249 views
-
-
இனவாதிகளின் பின்னணி யார்? மியன்மாரில் இருந்து உயிர் தப்பி வெளியேறிய முஸ்லிம் அகதிகளை, – ரொஹிங்யர்களை – அண்மையில் பிக்குகளுடன் சேர்ந்து சிலர் தாக்க முற்பட்ட சம்பவத்தை உதயன் கடுமையாகக் கண்டிக்கிறது. முன்னாள் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச உட்படப் பல அரசியல் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இதுபோன்ற சம்பவங்களைக் கடந்த காலங்களில் அதிகளவில் எதிர்கொண்டவர்களான தமிழர்களின் தலைவர்கள், சம்பவத்தை உடனடியாகக் கண்டித்திருக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஒரே ஆறுதலாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபை அமர்வில் இந்த விடயத்தை எ…
-
- 0 replies
- 361 views
-
-
இராயப்பு யோசப் ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்த சம்பந்தன் ஐயா மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான இராயப்பு யோசப் ஆண்டகை கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் ஓய்வுநிலையில் இருந்து வருகின்றார். இன்று பிற்பகல் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.vir…
-
- 0 replies
- 472 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.…
-
- 0 replies
- 295 views
-
-
ஏழு படகுகளை மீட்டுச் செல்லும் தமிழக மீனவர்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவென வந்திருக்கும் மீட்புக் குழுவினர், விடுவிக்கப்பட்ட படகுகளில் ஏழு படகுகளை மீட்டுள்ளனர். அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்களைக் கைது செய்த கடற்படையினர், அவர்களது படகுகளையும் கைப்பற்றியிருந்தனர். முன்னதாக, படகுகளை ஆய்வு செய்திருந்த தமிழக மீனவர் குழுவினர், அவற்றுள் 38 படகுகளை மட்டும் மீட்க முடிவு செய்திருந்தனர். அதன்படி, அண்மையில் இலங்கை வந்திருக்கும் மீட்புக் குழுவினர், ஏழு படகுகளை மட்டும் மீட்டெடுத்து காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து நாளை காலை சுமார் ஆறு மணியளவில் ஏழு படகுகளையும் இரா…
-
- 2 replies
- 377 views
-
-
ஆவா குழுவின் ஆயுத பூஜை… யாழில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் நேற்றையதினம் ஆயுத பூஜை செய்துள்ளனர். நவராத்திரி விரத ஆயுத பூஜை வழிபாட்டில் நேற்றைய தினம் இந்து மக்கள் ஈடுபட்டனர். அதன் போது, இந்துக்கள் மரபுப்படி தமது தொழில் உபகரணங்கள் , கல்வி உபகரணங்களுக்கு அன்றைய தினம் பூஜை வைத்து வழிபாடு செய்வார்கள் . அவ்வாறு நேற்றைய தினமும் இந்துக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல யாழில் பல குற்றசெயலில் ஈடுபட்டு வரும் ஆவா குழு என பெயர் சூட்டப்பட்ட குழு ஆயுத பூஜையில் ஈடுபட்டுள்ளது. அக் குழுவினர் தமது வாள்கள் , கைக்கோடாரிகள் போன்றவற்றுக்கு பூஜை செய்து அதனை புகைப்படம் எடுத்து தமது முகநூல்களில் பதிவேற்றம் செய்துள்ளனர…
-
- 2 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் இரவு நேரத்தில் ஒளிராத வீதி விளக்குகள் பகல் நேரத்தில் ஒளிர்கின்றன வவுனியா நகரத்தில் இரவு வேளைகளில் ஒளிராத சில வீதி விளக்குகள் பகல் வேளைகளில் ஒளிர்வதாகவும், சில வீதி விளக்குகள் அணைக்கப்படாமல் தொடர்ந்து 24 மணிநேரமும் ஒளிர்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபை வவுனியா பிராந்திய காரியாலய மின் பொறியியலாளரிடம் எமது இணையதள நிரூபர் தொடர்பு கொண்டு வினாவிய போது வீதி மின் விளக்குகளை பகல் வேளைகளில் அணைப்பது வவுனியா நகரசபையினரே இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையினரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/25134
-
- 0 replies
- 330 views
-
-
புதுடெல்லிக்கு மாகாண சபை உறுப்பினர்கள் - எஸ்.நிதர்ஷன் வட மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர், இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அடுத்த மாதம் எட்டாம் திகதி செல்லவுள்ளனர் என வட மாகாண அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 106ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் இன்று (28) இடம்பெற்றது. அமர்வின் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதுடெல்யில், அடுத்த மாதம் எட்டாம் திகதி இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றுக்காகவே, மாகாண சபை உறுப்பினர்களான, த. குருகுலராஜா, திருமதி அனந்தி சசிதரன், பா. டெனிஸ்வரன், ப. சத்தியலிங்கம், சி. தவராஜா, அ. பரஞ்சோதி, இ. ஆனோல்ட், க. சிவநேசன், சுப்ரமணியம் பசு…
-
- 3 replies
- 614 views
-
-
சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்ற சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்ற 'பிக் மீ' என்கின்ற நிறுவனம், மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு பெரும் த…
-
- 0 replies
- 362 views
-
-
65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடி மாற்றம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அறுபத்தைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பொலிஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான தேவையை அடுத்தே இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த இடமாற்றத்துக்கான உத்தரவு கண்டி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த ஏக்கநாயக்கவுக்கும், சம்பந்தப்பட்ட ஒத்தியோகத்தர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த உத்தியோகத்தர்கள் அனைவரும் கண்டி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். http://ww…
-
- 0 replies
- 370 views
-
-
முஸ்லிம் முதலமைச்சரை அகற்றுவதில் சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து வெட்கப் படுகின்றேன் : நசீர் அஹமட் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் இல்லாமல் போய்விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து அல்லது நபர்களைப் பார்த்து நான் வெட்கப் படுகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஏறாவூர் புன்னக்குடா விதீயில் நேற்று இடம்பெற்ற முதலமைச்சரின் பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கிட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதரா பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இரவு பகலாக சமூகத்துக்ககாக உழைத்துக்…
-
- 0 replies
- 330 views
-
-
அமெரிக்க வீசா மூன்று முறை நிராகரிக்கப்பட்டது; வாய்திறந்தார் பொன்சேகா அமெரிக்காவுக்குச் செல்வதற்கு வீசா கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் தனக்கு மூன்று முறை வீசா நிராகரிக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் மூன்று முறை அமெரிக்காவுக்கான வீசா தனக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கமைய தனது புதல்வியின் பட்டமளிப்பு விழாவிற்கு செல்வதற்காக அமெரிக்கத் தூதரகத்தில் வீசா விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 398 views
- 1 follower
-