ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களை சந்தித்த பசில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களை சந்தித்துள்ளார். இன்று மாலை முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் அவருக்கு முல்லைத்தீவு மாவட்ட லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் வரவேற் பளித்தனர். தொடர்ந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்ட பசில்ராஜபக்ஸ தொடர்ந்து மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார். http://globaltamilnews.net/archives/43185
-
- 4 replies
- 1.3k views
-
-
புதிய சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியல் சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சட்டமூலம் பற்றி ஜனாதிபதி இன்று குறிப்பிட்டார். இதன்போது, 72ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைத் தன்மையிலும் எதுவித மாற்றமும் புதிய சட்டமூலத்தில் கொண்டுவரப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/25087
-
- 3 replies
- 500 views
-
-
ஞானசாரதேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பொலிஸாரினால் வாபஸ் !! நாட்டில் இனங்களுக்கிடையிலான பதட்டத்தை தூண்டும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்து ஞானசாரதேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பொலிஸாரினால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர் தீவிர முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டமுறைப்பாடுகளின் பிரகாரம் பொலிசாரால் தீவிரமாக தேடப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ஞானசார தேரர் கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி காலை கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். பொலிசார…
-
- 1 reply
- 255 views
-
-
வித்தியா கொலை குற்றவாளிகள் மீது தாக்குதலா? சிறைப் பேச்சாளரின் பதில் இதோ புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 குற்றவாளிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாக தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று ஸ்ரீலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த 7 கைதிகள் உட்பட சிறைச்சாலைகளில் உள்ள அத்தனை கைதிகளுக்குமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தத் திணைக்களம் கூறுகின்றது. யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் கடந்த புதன்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன…
-
- 0 replies
- 365 views
-
-
ஒக்டோபர் 3 இல் ரெலோவை சந்திக்க தமிழரசுக்கட்சி தயார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுள் ஒன்றான ரெலோ அமைப்பின் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் ஒக்டோபர் மூன்றாம் திகதி சந்திப்பொன்றை நடத்துவதற்கு தயார் என இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் ரெலோ அமைப்பின் அரசியல் தலைமைக்குழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தலைமையில் வவுனியாவில் நடைபெற்றிருந்தது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்த முக்கிய விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியிலான …
-
- 0 replies
- 265 views
-
-
சு.கவின் மூத்த தலைகளுடன் மைத்திரி இரகசியச் சந்திப்பு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையே இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நீர்கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுமார் மூன்று மணிநேரத்துக்கும் மேல் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பில் கட்சி உறுப்பினர்களை தனித்தனியே சந்தித்து அரச தலைவர் மைத்திரிபால பேச்சு நடத்தியுள்ளார். கூட்டு அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என்று கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருவதாலும், மேலும் சிலர் மகிந்தவுக்கு சார்பாகச் செயற்பட…
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கை குறித்த சலசலப்புக்களுடன் நிறைவடைந்தது ஜெனிவா கூட்டத் தொடர் இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பான பல்வேறு சர்ச்சையான அறிவிப்புக்கள் சலசலப்பான கூட்டங்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இலங்கை தொடர்பான விவாதங்கள் எதுவும் உத்தியோகபூர்வமான முறையில் இம்முறை கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாவிடினும் உத்தியோகபூர்வமற்ற முறை யில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றதுடன் இலங்கை தொடர்பான 15 க்கும் மேற்பட்ட உபகுழுக் கூட்டங்களும் நடைபெற்றன. முதல்நாள் அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆ…
-
- 0 replies
- 180 views
-
-
5 ஆவது நாளாகவும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ள தங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வேறு நீதிமன்றுக்கு மாற்ற வேண்டாம் எனக்கோரி மூன்று அரசியல் கைதிகள் நேற்று ஐந்தாம் நாளாகவும் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டனர். இதேவேளை அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினால் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செ…
-
- 0 replies
- 369 views
-
-
ஆரம்பப் புள்ளியே இடைக்கால அறிக்கை முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கத்தயார் சந்தர்ப்பத்தை குழப்பக்கூடாது என்கிறார் மாவை (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது தேசிய இனப்பிரச்சினைக்கான இறுதி தீர்வல்ல. எமது அடிப்படைக் கோட் பாடுகளுடன் இணக்கம் காண்பதற்கு மேலும் பல கட்டப்பேச்சுக்களை நடத்தவேண்டி யுள் ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலை வரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். இணைந்த வடக்கு,கிழக்கில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலேயே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு அமையவேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர் முஸ்லிம்களுக்…
-
- 0 replies
- 297 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு அகவை அறுபத்தெட்டு இலங்கை இராணுவம் அதன் 68வது ஆண்டு நிறைவை எதிர்வரும் பத்தாம் திகதி கொண்டாடவிருக்கிறது. இதை முன்னிட்டு சமய நிகழ்வுகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாகவும் இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன் துவக்க நிகழ்வாக, கண்டி தலதா மாளிகையில் விசேட புத்த பூஜை ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது, மகா சங்க சபையைச் சேர்ந்த அறுபத்தெட்டு பிக்குகளுக்கு தர்மம் வழங்கும் நிகழ்வும் கொடி ஆசீர்வதிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இராணுவம் சார்பில் தலதா மாளிகைக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க உட்பட இராண…
-
- 0 replies
- 273 views
-
-
அடிப்படைவாத நிலைப்பாட்டுடன் விக்னேஸ்வரன் கூறும் வகையில் வடக்கில் ராணுவத்தை அகற்றமுடியாது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக எந்தவித கருத்தை வௌியிட்டாலும் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு மற்றும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருவதாகவும் விக்னேஸ்வரன் கூறும் வகையில் செயற்பட முடியாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பியகம பிரதேசத்தில் உள்ள வாய்க்கால் புனரமைப்பு செயற்றிட்டத்தை இன்று (29) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். அங்கு தொடர்ந…
-
- 0 replies
- 232 views
-
-
குற்றவியல் நீதிமன்றுக்கு நான் செல்லமாட்டேன் : சரத் பொன்சேகா Published by Priyatharshan on 2017-09-30 09:51:33 யுத்தக் குற்ற விசாரணைகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றில் நிற்க நான் ஒருபோதும் தயாரில்லை. சர்வதேசத்திற்கு பதில் கூற விரும்பவுமில்லை, எனது கட்டளைக்கேற்ப யுத்தம் செய்த எவரையும் தண்டிக்க இடமளிக்க மாட்டேன் என பீல்ட்மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இராணுவத்தில் உள்ள பிரதான நிலை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கிரிபத்கொடை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்க…
-
- 0 replies
- 311 views
-
-
இலங்கை மிகவும் நெருக்கடியானதும் முக்கியமானதுமான தருணத்தை கடந்து செல்கின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறைமை உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மிகவும் நெருக்கடியானதும் முக்கியமானதுமான தருணத்தை கடந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார். கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகள் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு சவால் மிக்க காலங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப ரீதியான துறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் 21…
-
- 0 replies
- 150 views
-
-
யாழில் அரசியல் சந்திப்புக்களை மேற்கொள்ளும் மகிந்த அணியினர் Share யாழ்ப்பாணத்தில் அரசியல் ரீதியான சந்திப்புக்களை இன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இச் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன. இன்றும், நாளையும் அவர் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜனயின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதுடன், நல்லை ஆதீனம் உட்பட இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களைய…
-
- 0 replies
- 170 views
-
-
ஒற்றுமை இழந்து அவலப்படுகின்றனர் ஈழத்தமிழர்கள் Share ஈழத் தமிழர்களின் இன்றைய பரிதாபகரமான நிலைக்கு அவர் களது ஒற்றுமையீனமே முக் கிய காரணமெனக் கூற முடியும். ஈழத் தமிழர்கள் அரசியலில் மட்டுமல்லாது வேறெந்தவொரு விடயத்திலும் ஒற்றுமையாகச் செயற்பட்டதாக வரலாறு கிடையாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது முதுமொழி. நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியல்ரீதியில் ஒன்றுபட்டுத் தமது உரிமைகளுக்காகப் போராடியிருந்தால் , அவற்றை இலகுவாக ஈட்டியிருக்க முடியும். ஆனால் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வதிலேயே இவர்களின் காலம் கழிந்…
-
- 0 replies
- 219 views
-
-
தேரர்கள் பயப்படத் தேவையில்லை – அரச தலைவர் Share தேரர்கள் பயப்படும்படியான எதுவித மாற்றமும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை இந்த விடயத்தில் அரசு கவனமாக செயற்படுகிறது – இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பிக்குகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அரச தலைவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டவரைபில் பௌத்த சமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும், நாட்டைப் பிளவுபடுத்தம் வகையிலான விதந்துரைகள் இடம்பெற்றிருப்பதாகவும் சில பௌத்த தேரர்கள் இடத்துக்க…
-
- 0 replies
- 184 views
-
-
கிழக்கு மாகாண சபையின், பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும். இதேவேளை சப்ரகமுவ மாகாண சபையின் பதவிக்காலம், செப்டெம்பர் 26ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.tamilmirror.lk/செய்திகள்/கிழக்கின்-பதவிக்காலம்-இன்று-நள்ளிரவுடன்-நிறைவு/175-204728
-
- 0 replies
- 311 views
-
-
உச்ச நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்த சரத் என் சில்வா உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். http://www.virakesari.lk/article/25031
-
- 1 reply
- 331 views
-
-
மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா முகாமை அண்டியுள்ள பகுதிகளில் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக காலி நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மியன்மாரில் இருந்து கடல்மார்க்கமாக வந்த 30 மியன்மார் அகதிகள் நீதிமன்ற உத்தரவின் படி தெஹிவளைபகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தங்கவைக்கபட்டடிருந்த மியன்மார் அகதிகளின் வீட்டின் முன்னாள் கடந்த 26 ஆம் திகதி பிக்குகள் அடங்கிய குழுவினர் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, குறித்த 30 மியன்மார் அகதிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி பூஸா தடுப்பு முகாம…
-
- 0 replies
- 266 views
-
-
துயிலுமில்லங்களை பூங்காக்களாக மாற்ற வடமாகாணசபையில் எதிர்ப்பு! துயிலுமில்லங்களை விவசாயப் பூங்காக்களாக மாற்றவேண்டுமென யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்த கருத்துக்கு வடமாகாண சபையில் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 106ஆவது அமர்வு நேற்று நடைபெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள துயிலுமில்லங்களை ஏன் விவசாயப் பூங்காக்களாக மாற்றவேண்டுமெனவும், இலங்கைச் சட்டத்தின்படி கல்லறை அமைப்பதற்கு அனுமதியுள்ளபடியால், வடமாகாணத்திலுள்ள துயிலுமில்லங்களை புனரமைத்து துயிலுமில்லங்களாகப் பேணவேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர்களா…
-
- 1 reply
- 414 views
-
-
யாழில் பூரண ஹர்த்தால்; தீவக மக்களும் பெண்கள் அமைப்புக்களும் அழைப்பு! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீவக மக்களும் யாழ்ப்பாணம் பெண்கள் அமைப்புகளும் இணைந்தே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளனர். இது தொடர்பான சுவரொட்டிகள் சம்மந்தப்பட்டோரால் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் திருநெல்வேலிப் பகுதி அகிய இடங்களில் ஒட்டப்பட்டுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ”குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளாவர், இவர்களும் தண்டிக்கப்படவேண்டும், வித்தியாவுக்கு முழுமையான நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்க…
-
- 5 replies
- 698 views
-
-
ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பாக ‘ஜனாதிபதி அப்பா’ என்ற தலைப்பில் அவரது மகள் சத்துரிகா சிறிசேன எழுதிய நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்றது. ### “அப்பாவை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று துலாஞ்சலி அடிக்கடி எனக்குக் கூறுவார்.” துலாஞ்சலி பிரேமதாசவின் ஆலோசனையின் படி சத்துரிகா சிறிசேன தனது ‘ஜனாதிபதி அப்பா’வைப் பாதுகாத்தார், பாதுகாத்தும் வருகிறார். ராஜபக்ஷவின் தசாப்தத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள், காணாமலாக்கப்படல், கோடிக்கணக்கில் ஊழல் மோசடி இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்குவதாக சத்தியப்பிரமாணம் செய்தே சத்துரிகா சிறிசேனவின் ‘ஜனாதிபதி அப்பா’ ஜனாதிபதியாகப் பதவியேற்றா…
-
- 2 replies
- 658 views
-
-
இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுணடிச்சாலையை இன்று மாலை 29 திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். உலக நாடுகளிலே வாழும் நமது சமூகம் அட்டுழியங்களாலும் கொடுரங்களாலும் வதைக்கப்டுகின்றனர். மியன்மாரில் தாய்மார்க்ள், சிறுவர்கள,; பா…
-
- 3 replies
- 435 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இருந்த இடம் பிக்குளால் முற்றுகை : பொலிஸார் வரவழைப்பு ; தெஹிவளையில் பதற்றம் ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளை பகுதியில் குடியமர்ந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரும் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளைப் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் குடியமர்த்தப்பட்ட வீட்டினை, பௌத்த பிக்குகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொலிஸாரால் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த அகதிகளை தாம் கைதுசெய்யவில்லையெனவும் அவர்களை ஆர்ப்பாட்டக்கார்களிடமிருந்து பாதுகாக்கும் நோக…
-
- 4 replies
- 623 views
-
-
முகில்களால் விழுங்கப்பட்ட ஸ்ரீலங்காவின் அதிசயம்; வியந்துபோன மக்கள்! ஸ்ரீலங்காவில் ஆசியாவின் ஆச்சரியமென நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் முகில்களால் மறைந்து போயுள்ள காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசப்படும் விடயங்களாகிவிட்டன. நாட்டின் பல பாகங்களிலும் நிலவிவரும் சீரற்ற கால நிலையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த தாமரைக் கோபுரத்தை முகில்கள் விழுங்கிவிட்டனவோ எனும் அளவுக்கு பிரமிப்பாக இருந்ததாக இது குறித்து பதிவினை மேற்கொண்ட நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோபுரத்திலிருந்து சிவனொளிபாத மலையை கூட பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து மலையளவு உயரத்தில் காணப்படும் இந்த கோபுரத்…
-
- 1 reply
- 550 views
-