ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143344 topics in this forum
-
உச்ச நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்த சரத் என் சில்வா உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். http://www.virakesari.lk/article/25031
-
- 1 reply
- 332 views
-
-
மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா முகாமை அண்டியுள்ள பகுதிகளில் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக காலி நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மியன்மாரில் இருந்து கடல்மார்க்கமாக வந்த 30 மியன்மார் அகதிகள் நீதிமன்ற உத்தரவின் படி தெஹிவளைபகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தங்கவைக்கபட்டடிருந்த மியன்மார் அகதிகளின் வீட்டின் முன்னாள் கடந்த 26 ஆம் திகதி பிக்குகள் அடங்கிய குழுவினர் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, குறித்த 30 மியன்மார் அகதிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி பூஸா தடுப்பு முகாம…
-
- 0 replies
- 267 views
-
-
துயிலுமில்லங்களை பூங்காக்களாக மாற்ற வடமாகாணசபையில் எதிர்ப்பு! துயிலுமில்லங்களை விவசாயப் பூங்காக்களாக மாற்றவேண்டுமென யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்த கருத்துக்கு வடமாகாண சபையில் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 106ஆவது அமர்வு நேற்று நடைபெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள துயிலுமில்லங்களை ஏன் விவசாயப் பூங்காக்களாக மாற்றவேண்டுமெனவும், இலங்கைச் சட்டத்தின்படி கல்லறை அமைப்பதற்கு அனுமதியுள்ளபடியால், வடமாகாணத்திலுள்ள துயிலுமில்லங்களை புனரமைத்து துயிலுமில்லங்களாகப் பேணவேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர்களா…
-
- 1 reply
- 415 views
-
-
யாழில் பூரண ஹர்த்தால்; தீவக மக்களும் பெண்கள் அமைப்புக்களும் அழைப்பு! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீவக மக்களும் யாழ்ப்பாணம் பெண்கள் அமைப்புகளும் இணைந்தே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளனர். இது தொடர்பான சுவரொட்டிகள் சம்மந்தப்பட்டோரால் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் திருநெல்வேலிப் பகுதி அகிய இடங்களில் ஒட்டப்பட்டுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ”குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளாவர், இவர்களும் தண்டிக்கப்படவேண்டும், வித்தியாவுக்கு முழுமையான நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்க…
-
- 5 replies
- 699 views
-
-
ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பாக ‘ஜனாதிபதி அப்பா’ என்ற தலைப்பில் அவரது மகள் சத்துரிகா சிறிசேன எழுதிய நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்றது. ### “அப்பாவை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று துலாஞ்சலி அடிக்கடி எனக்குக் கூறுவார்.” துலாஞ்சலி பிரேமதாசவின் ஆலோசனையின் படி சத்துரிகா சிறிசேன தனது ‘ஜனாதிபதி அப்பா’வைப் பாதுகாத்தார், பாதுகாத்தும் வருகிறார். ராஜபக்ஷவின் தசாப்தத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள், காணாமலாக்கப்படல், கோடிக்கணக்கில் ஊழல் மோசடி இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்குவதாக சத்தியப்பிரமாணம் செய்தே சத்துரிகா சிறிசேனவின் ‘ஜனாதிபதி அப்பா’ ஜனாதிபதியாகப் பதவியேற்றா…
-
- 2 replies
- 659 views
-
-
இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுணடிச்சாலையை இன்று மாலை 29 திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். உலக நாடுகளிலே வாழும் நமது சமூகம் அட்டுழியங்களாலும் கொடுரங்களாலும் வதைக்கப்டுகின்றனர். மியன்மாரில் தாய்மார்க்ள், சிறுவர்கள,; பா…
-
- 3 replies
- 436 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இருந்த இடம் பிக்குளால் முற்றுகை : பொலிஸார் வரவழைப்பு ; தெஹிவளையில் பதற்றம் ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளை பகுதியில் குடியமர்ந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரும் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளைப் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் குடியமர்த்தப்பட்ட வீட்டினை, பௌத்த பிக்குகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொலிஸாரால் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த அகதிகளை தாம் கைதுசெய்யவில்லையெனவும் அவர்களை ஆர்ப்பாட்டக்கார்களிடமிருந்து பாதுகாக்கும் நோக…
-
- 4 replies
- 624 views
-
-
முகில்களால் விழுங்கப்பட்ட ஸ்ரீலங்காவின் அதிசயம்; வியந்துபோன மக்கள்! ஸ்ரீலங்காவில் ஆசியாவின் ஆச்சரியமென நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் முகில்களால் மறைந்து போயுள்ள காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசப்படும் விடயங்களாகிவிட்டன. நாட்டின் பல பாகங்களிலும் நிலவிவரும் சீரற்ற கால நிலையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த தாமரைக் கோபுரத்தை முகில்கள் விழுங்கிவிட்டனவோ எனும் அளவுக்கு பிரமிப்பாக இருந்ததாக இது குறித்து பதிவினை மேற்கொண்ட நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோபுரத்திலிருந்து சிவனொளிபாத மலையை கூட பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து மலையளவு உயரத்தில் காணப்படும் இந்த கோபுரத்…
-
- 1 reply
- 551 views
-
-
தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச முயற்சி தமிழ் மக்களின் ஆதரைவப் பெறும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சில முக்கிய தமிழ் பிரமுகர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையாடுகின்றார். அதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாலையும் முக்கியமான தமிழ் பிரமுகர் ஒருவரை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையடினார் என தமிழ் கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெறும் நோக…
-
- 1 reply
- 301 views
-
-
சக்தி டிவி செய்திகள் 29 09 2017 , 8PM
-
- 0 replies
- 202 views
-
-
இலங்கை அகதிகளும் புலம்பெயர்ந்தனர் Share கடந்த காலங்களில் இலங்கையிலிருந்து 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதைத் தெரிந்து கொள்ளாத பௌத்தவாதிகளே ரோஹிங்ய அகதிகளுக்கு எதிராகக் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அகதிகளைப் பௌத்த பிக்குகள் தாக்கியிருந்தால் அவர்களைக் கைது …
-
- 0 replies
- 401 views
-
-
தமிழ் அரசியற் கைதி ஒருவரின் உடல் நிலை மோசம்; வைத்தியசாலையில் அனுமதி! அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரில் ஒருவர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆண்டு கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோருக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து வவுனியா நீதிமன்றில் வழக்கு நடைபெற்றது. இந்த வருடம்…
-
- 0 replies
- 306 views
-
-
ஆமை வேகத்தில் இலங்கை சாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம் Share ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில விடயங்களில் மெதுவான முன்னேற்றங் களே இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. தனது வாக்குறுதிகளை நிறைவேற் றும் ஆற்றல் இலங்கை அரசுக்கு இருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுடன் நடந்த சந்திப்பின் போது, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ்ரோஸ் ஸ்ரைலியனிடெஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 309 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 37 பெண்கள் உட்பட 1167 கைதிகளில் 826 பேர் மேன்முறையீடு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 1167 கைதிகளில் 826 பேர் தமக்கெதிரான மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 37 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மரண தண்டனை கைதிகள் அனைவரும் வெலிக்கடை, மஹர, பல்லேகலை, அநுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://metronews.lk/?p=14538
-
- 0 replies
- 443 views
-
-
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப பீடம் திறப்பு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப பீடத்தினை இன்று (29) கல்வி இராஜாங்க அமைச்சல் வே.ராதாகிருஸ்ணன் திறந்து வைத்துள்ளார். தேசிய பாடசாலையான கிளிநொச்சி மத்திய மாகா வித்தியாலயத்தில் மத்திய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் பாடசாலை அதிபர் இரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (அத தெரண நிருபர்) http://tamil.adaderana.lk/news.php?nid=95938
-
- 0 replies
- 356 views
-
-
ஜனாதிபதியின் மன்னார் விஜயம் ரத்து: சிவகரன் காரணமா? மன்னார் - மாந்தை - திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை இன்று திறந்துவைப்பதற்காக மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த ஜனாதிபதியின் நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பாக பல்வேறு நபர்களினால் அதிருப்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. மன்னார் - மாந்தை - திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியாருக்கு சொந்தமான காணியை அபகரித்து பௌத்த விகாரை அமைப்பது நல்லாட்சியா என மன்னார் …
-
- 0 replies
- 384 views
-
-
ஆயுத களஞ்சியம் அறிவுக் களஞ்சியமாறிய அதிசயம் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தவர்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லும் தொழில்நுட்ப பீடமும் இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றிய அவர், 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடத்தில் பாதுகாப்பு தரப்பினரின் ஒரு ஆயுத களஞ்…
-
- 0 replies
- 400 views
-
-
-
- 1 reply
- 542 views
-
-
மஹிந்தவிற்கு சார்பாக தொடுத்த வழக்கு தள்ளுபடி.! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்ககோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிட்டவரே கட்சியின் தலைவராக இருக்க முடியும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ நகரசபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இருவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25079
-
- 0 replies
- 272 views
-
-
பௌத்தர்களா நாங்கள்? பிக்குகளின் செயற்பாடு குறித்து அமைச்சரின் சந்தேகம் புகலிடம் தேடி ஸ்ரீலங்காவுக்குவந்த ரோஹிங்கியா முஸ்லிம்களை கடும்போக்குவாத பிக்குகள் விரட்டியடிக்க முயற்சித்த செயற்பாட்டினால் தாங்களும் சிங்கள பௌத்தர்களா என்று ஒருதடவை சிந்திக்கத் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார். கடும்போக்குவாத பௌத்த பிக்குகளின் இவ்வாறான செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மக்களுக்கே பேரவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு கல்கிஸை பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் 30 பேரை நாடு கடத்தும்படி தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பௌத்…
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கை குறித்த உபகுழு கூட்டத்தில் பெரும் களேபரம் ரத் வீரசேகரவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உப குழு கூட்டமொன்றில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டிருக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உப குழு கூட்டத்தில் பெரும் களேபரமான நிலைமை ஏற்பட்டதுடன் இரண்டு தரப்பினரும் கடும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது…
-
- 0 replies
- 250 views
-
-
மேலும் 5 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில்.! வடமத்திய மாகாண சபையின் அநுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 5 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர். வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/25075
-
- 0 replies
- 192 views
-
-
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப ஏற்றப்பட்ட அணையாத விளக்கு அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையினூடாக ஏற்றப்பட்டிருக்கும் விளக்கை அணைய விடாமல் மேலும் பல விளக்குகளை ஏற்றுவதற்கான முயற்சிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியிருக்கின்றார். வருடத்திற்கு ஒரு தடவை தீபாவளி தினத்தன்று ஏற்றப்படும் தீப ஒளி போன்று நாடு முழுவதிலும் அணையாத விளக்குகளை பிரகாசிக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார். கொழும்பு மாநகர சபையினூடா…
-
- 0 replies
- 326 views
-
-
95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மலையத்தில் உள்ள பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்த கைச்சாத்திடல் நேற்று கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றதாக ராஜாங்க கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இந்த ஓப்பந்தம் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித்சந்துக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்திய…
-
- 0 replies
- 327 views
-
-
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் மீதான அத்துமீறல்: குற்றத்தடுப்பு பிரிவிடம் விசாரணை கையளிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீர வெளியிட்டு அறிவித்துள்ளார். இந் நிலையில் நேற்று முதல் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் , மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் தொடர்…
-
- 0 replies
- 292 views
-