ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
எந்தவொரு இராணுவ அதிகரியும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு இராணுவத்தில் இருக்கின்ற சில குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறினால், முழு இராணுவ வீரர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்க கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக பீல்ட் மாசல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் எந்தவொரு இராணுவ அதிகாரியும் சர்வதேச யுத்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தான் எதிர்ப்பதாக கூறினார். எனினும் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை அரசியல் நடவடி…
-
- 0 replies
- 222 views
-
-
30 வருட பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது போர் Share ஒரு நீண்டகாலப் போர் எமது மக்களுக்கு 30 வருடப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. எமது போராட்டம் ஒரு தேசியத்துக்கான உரிமைப் போராட்டமாக அமைந்திருந்தாலும் அது பல்வேறு வாழ்வியல் ரீதியான பாதிப்புக்களையே மக்களிடம் விட்டுச் சென்றுள்ளது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர்களுக்கான பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரிக்கு பல் ஊடக ஒளிக் கருவி (மல்டி மீடியா புரொஜெக்டர்)…
-
- 0 replies
- 287 views
-
-
கொழும்பின் ஆதரவுடன் வடக்கில் சுற்றுலா மையங்கள் அமைப்பு Share வடக்கு மாகாணத்தின் சுற்றுலா நடவடிக்கைகள், சுற்று லாத்துறையுடன் சம்பந்தப்படாத பாதுகாப்புத் தரப்புக்கள் மற்றும் வெளியில் இருந்து வந்துள்ள தனியார் எனப் பலரின் கைகளில் இப்போது தவழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் எமது சுற்றுலா வருமானங்கள் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு அல்லது வேறு பிரிவி னருக்கு மேலதிக வருமானமாகப் போய்ச் சேரும் நிலை யே காணப்படுகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். உலக சுற்றுல…
-
- 0 replies
- 263 views
-
-
இளைஞர்களின் வழிதவறலுக்கு புலம்பெயர்ந்தவர்களும் பொறுப்பு Share இன்றைய இளைஞர்கள் வழிதவறிச் செல்வதற்குத் தாயக மண்ணைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்களுக்கும் பொறுப்பு உண்டு. இவ்வாறு சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குநர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார். சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ். மண்ணின் கல்வி மேம்பாட்டுக்காக வெளியுறவுத் தாயக உறவுளுடன் கலந்துரையாடல் கரவெட்டி நெல்லியடியில் இருந்து புலம்பெயர்ந்து பரிஸ் நாட்டில் வாழும் கணேஸ் ராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இதில் …
-
- 0 replies
- 215 views
-
-
ஆக்கிரமிப்பு எல்லாமே வடக்கிலிருந்தே வருவதால் இராணுவத்தை அகற்றாதீர் Share வரலாற்றில் நாட்டுக்கு எதிராக இடம்பெற்றுள்ள ஆக்கிரமிப்புகளில் ஒன்றைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆக்கிரமிப்புக்களும் வடக்கிலிருந்தே இடம்பெற்றுள்ளன. போரின் பின்னரும் வடக்கிலிருந்தே சட்டவிரோதப் பொருள்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. எனவே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக்கூடாது. இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 0 replies
- 245 views
-
-
ரோஹிங்யா மக்களை நாங்கள் தாக்கியதாக நிரூபிக்க முடியுமா? ரோஹிங்யா அகதிகளை நாங்கள் தாக்கவில்லை. முடியுமானால் நாங்கள் அவர்களை தாக்கியதாக அரசாங்கம் நிரூபிக்கட்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். சிங்கள ராவய அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கல்கிஸை பிரதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது. அதன் பிரகாரம் நாங்கள் அங்கு சென்று கல்கிஸை பொலிஸில் இது தொடர்பாக வினவினோம். ஆனால் பொலிஸார் இது த…
-
- 0 replies
- 234 views
-
-
வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.! பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசகரவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் தஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை வெளிப்படாத சந்தேக நபர…
-
- 0 replies
- 167 views
-
-
மத்திய மாகாண நெடுஞ்சாலை அமைத்தலில் பதினொரு பில்லியன் ரூபா மோசடியாம் Share பிணைமுறி மோசடி விவகாரத்திற்கு அடுத்ததாக மத்திய மாகாண நெடுஞ்சாலை அமைத்தல் விவகாரத்திலேயே பெருமளவில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது. பதினொரு பில்லியன் ரூபா மோசடி அதில் இடம்பெற்றுள்ளது என்று மகிந்த அணியைச் சேர்ந்தவரும், முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டின் பொருளாதாரத் துறை தொடர்பில் நம்பகத் தன்மை கட்டியெழுப்பப்பட்டால்தான் வெளிநாட்டு முத லீட்டாளர்கள் முதலீடு செய்ய முற்படுவார்கள். இலங்கையில் அதற்…
-
- 5 replies
- 584 views
-
-
எங்களுக்குப் புத்திமதி சொல்ல நாடாளுமன்றுக்கு அதிகாரமில்லை ரணில் முன்னிலையில் பிக்குகள் தெரிவிப்பு Share பிக்குகளுக்கு அறிவுரை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது. அஸ்கிரிய மற்றும் மல்வத்து உள்ளிட்ட பௌத்த பீடங்களினால் மாத்திரமே பிக்குகளுக்கு அறிவுரை வழங்க முடியும் என்று அலரிமாளிகையில் நடைபெற்ற பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கும் வழிபாட்டின் போது தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பௌத்த பீடங் களை சேர்ந்த பிக்குகள் வலியுறுத்தினர். நாடு முழுவதிலும் உள்ள பிக்…
-
- 1 reply
- 540 views
-
-
சுவிஸ் குமாரை கட்டவிழ்த்து விடுமாறு கூறிய விஜயகலா அவரை சட்டத்தின் பிடியில் கையளிக்காதது ஏன்? வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு நேற்று (27) மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பினை வழங்கிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு முயன்ற மூவர் தொடர்பிலான தகவல்களை வௌிப்படுத்தினர். மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் கொலையின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை தப்ப வைக்க முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பான பல விடயங்கள், இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், நீதிபதி மாணிக்கவாசகர…
-
- 1 reply
- 420 views
-
-
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
சக்தி டிவி செய்திகள் 28-09-2017
-
- 0 replies
- 918 views
-
-
மியன்மார் அகதிகளுக்கு கருணை காட்டுங்கள் Share மியன்மார் அகதிகள் தஞ்சமடையுடன் நோக்குடன் இலங்கைக்கு வருகை தரவில்லை. இந்தியாவுக்குச் சென்ற போது படகு இயந்திரம் செயழிழந்தமையினால் இலங்கைக்கு வந்தனர். பௌத்த நாடு என்ற வகையில் மியன்மார் அகதிகளுக்கு கருணை காட்டுங்கள் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரி யெல்ல கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்ன…
-
- 0 replies
- 294 views
-
-
உத்திகளைக் கையாண்டு உச்ச அதிகாரத்தைப் பெறவேண்டும் Share இந்தச் சந்தர்ப்பத்திலே எமது உத்திகளைக் கையாண்டு பெறக் கூடிய உச்சத்தைப் பெற வேண்டும். நாங்கள் பெறக்கூடிய உச்சம் என்பது எமது இலக்கு அல்ல. ஆனால் இப்போது பெறக்கூடிய உச்சம் எதுவோ அதைப் பெற்றுவிட்டால் அதற்குப் பிறகு ஏற்படுகின்ற நல்லிணக்கத்தின் மூலம் அதற்குக் கூடுதலாக நாங்கள் பெற முடியும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் போரதீவுப் பற்றுப் பிரதே…
-
- 0 replies
- 276 views
-
-
ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். யாருக்கும் அச்சம், தயக்கமின்றி ஆளுமையுடன் எமக்கான நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய அரசியல் தலைமைகளை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஓட்டமாவடி அல் ஹிதாயா மகா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழாவில் நேற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கை…
-
- 0 replies
- 250 views
-
-
இலங்கை: கூச்சல் குழப்பத்துடன் முடிந்த கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் இந்த வாரத்தில் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன் முடிவடைந்தது. நாளை மறுதினம் சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது. Image captionகிழக்கு மாகாண சபை இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்க…
-
- 0 replies
- 306 views
-
-
தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவால் கிளிநொச்சி மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கணணி கற்கைநெறி பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. லண்டன் கற்பக விநாயகர் ஆலய அறக்கட்டளையின்நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இலவச கணணி கற்கைநெறி இடம்பெற்று வந்தது. குறித்த கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் இடம்பெற்றது. விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள்…
-
- 1 reply
- 420 views
-
-
எழும் கேள்விகள் Share புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியானது முதல், அதில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு எதிரான கருத்துக்களே ஆழமாகவும் உறுதியாகவும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பௌத்த சிங்களத் தரப்பிலிருந்தும், தமிழர் தரப்பிலிருந்தும்கூட அந்தக் குரல்களே ஓங்கி ஒலிக்கின்றன. அறிக்கையை ஆதரிப்போரின் கருத்துக்கள் ஒடுங்கிப் போயுள்ளன என்பது தெரிகிறது. இது எதிர்ப் பாளர்களுக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுக்கும்போது அவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண…
-
- 0 replies
- 754 views
-
-
ரிசாட் மீதான ஊழல் முறைப்பாடு 30 மாதங்களாக நடவடிக்கை இல்லை அரச தலைவருக்கு முறைப்பாட்டாளர் அறிவிப்பு Share கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முப்பது மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்று முறைப்பாட்டாள ரான ஆர்.எம்.குவை தீர்கான் அரச தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சர் பதியுதீனின் ஊழல் மோசடிகள் பற்றி விசாரித்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டு…
-
- 0 replies
- 388 views
-
-
த.தே.கூட்டமைப்பும், ஜே.வி.பியும் அரசின் கூட்டணிகளாம்! – உதய கம்மன்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் அரசின் கூட்டணிக் கட்சிகள் என்று விமர்சித்துள்ளார் மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில. கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது- மக்கள் விடுதலை முன்னணிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலான அரசியல் கொள்கைகளில் எந்த வேறுபாடுகளும் இல்லை. பச்சை மற்றும் சிவப்பு அப்பிள் பழங்கள் போன்று இந்த இரண்டு கட்சிகளும் வர்ணங்களில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. குணம் மற்றும் மணம் போன்ற சகல விடயங்களிலும் ஒற்றுமை காணப்படுகிறது. ஐக்…
-
- 0 replies
- 237 views
-
-
சு.க உறுப்பினர்கள் மூவர் விலகல் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், அக்கட்டிசியிலிருந்து விலகியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, கட்சியிலிருந்து விலகுவதாக, அந்த மூவரும் தெரிவித்தனர். டப்ளியு. டீ. வீரசிங்ஹ, சந்திரா தெவரபெரும மற்றும் டி.எம் ஜயசேன ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சு-க-உறுப்பினர்கள்-மூவர்-விலகல்/175-204633
-
- 1 reply
- 211 views
-
-
காலி கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழையத் தடை உலகப் பிரசித்தி பெற்ற காலி கோட்டை அமைந்துள்ள பகுதியில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவின்படி, மூன்று மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட வாகனங்களும், ஐந்து தொன்களுக்கு அதிக எடையுள்ள வாகனங்களும் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படவிருக்கிறது. உலகின் புராதனச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட காலி டச்சுக் கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழைய கடந்த 2009ஆம் ஆண்டே வர்த்தமானி மூலம் தடை விதிக்கப்பட்டபோதும், அது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்தக் கோட்டையின் வரவேற்பு வளைவு, கடந்த பெப்ரவரி மாதம் லொறியொன்றினால் ச…
-
- 0 replies
- 274 views
-
-
பிக்குகளின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் ஸ்ரீலங்காவுக்கு அடைக்கலம்கோரி வந்த ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடுகடத்துமாறு கோரி கொழும்பில் பௌத்த கடும்போக்குவாத பிக்குகள் செயற்பட்ட விதத்தை ஸ்ரீலங்க அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பிக்குகளின் இந்த செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கும் அவமானம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. புகலிடம்கோரிவந்த 30 ரோஹிங்கியா முஸ்லிம்க…
-
- 5 replies
- 898 views
-
-
ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடு : பெப்ரல் அமைப்பு (ஆர்.யசி) அதிகார காலம் நிறைவுக்கு வந்த மாகாணசபைகளின் அதிகாரங்களை ஆளுநரின் கீழ் கொண்டுவருவது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடாகும். உடனடியாக தேர்தல்களை நடத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை மற்றும் அதிகாரங்கள் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படுகின்றமை குறித்து பெஃப்ரல் அமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/25038
-
- 0 replies
- 276 views
-
-
ஊடகங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர் : பதுளையில் ஜனாதிபதி ஊடகங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யும்போது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவதூறு செய்கிறார்கள். மீண்டுமொரு போர் ஏற்படாமல், சகவாழ்வுடன் பயணித்தாலேயே நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பதுளைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பதுளை பிரதேச அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், பதுளை மாவட்டத்தில் வாழும்…
-
- 0 replies
- 215 views
-