ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 18 09 2017 , 8PM
-
- 0 replies
- 154 views
-
-
பிறந்து ஏழு நாட்களே நிரம்பிய சிசுவொன்று, நாய்க்கு இரையாகி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹபரன – நாமல்புர பிரதேசத்தில் இன்று (17) பதிவானது. ஏழு நாட்களுக்கு முன்னர் பிறந்த கவிஷ்க சந்தருவன் இந்தக் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. தமது ஜீவனோபாயத்திற்காக தினமும் கூலி வேலை செய்யும் சமன்குமார மற்றும் நிரோஷா குமாரி ஆகியோருக்கு பிறந்த கவிஷ்க குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளை. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆறு நாட்கள் வீட்டிலிருந்த குழந்தையின் தந்தை, தேன் எடுப்பதற்காக காட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே வீட்டில் இருந்த மற்றைய இரண்டு பெண் பிள்ளைகளில் ஒரு பிள்ளை தனக்கு பசி என்று கூறி தாயிடம் உணவு கேட்ட போதிலும் அவளுக்கு கொடுக்க இந்த வீட்டில் எதுவும் இருக்கவில்லை. இதனால்…
-
- 2 replies
- 480 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் உரையாடிய ஜேர்மன் சட்டத்தரணி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் ஜேர்மன் மனித உரிமை ஆய்வாளரும் சட்டத்தரணியுமான அன்ரியஷ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டம் 211 நாளாகவும் தொடர்வது குறிப்பிடதக்கது. http://newuthayan.com/story/29793.html
-
- 1 reply
- 420 views
-
-
தலைவர் அஷ்ரப்பின் தேவை இப்போதும் உணரப்படுகின்றது ஹரீஸ் தெரிவிப்பு வடக்கு –- கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வின் போது, தமிழ்த் தலைவர்களால் கூட முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்பின் தேவை தற்போது உணரப்படுகின்றது. இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட் டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அஷ்ரப், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை நிறுவியபோது அவரைப் பலரும் பல்வேறு கோணங்களில் நோக்கினர். சிங்கள பெரும்பான்மை, அஷ்ரப்பை தீவிர போக்குடையவராகப் பார்த்தது. இதனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் இருந்த அரசு அவருடைய…
-
- 0 replies
- 239 views
-
-
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியை புனரமைப்பதில் என்ன சிக்கல்? யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தின் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் திலீபனின் நினைவு தூபியை யாழ் மாநகர சபையிடம் கையளித்தல் தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக மாநகரசபை ஆணையாளர் பதிலளிக்கையில் திலீபனின் நினைவு தூபி அமைந்துள்ள பகுதி நல்லூர் கோவில் உரிமையாளர்களுடையது. கடந்த 1970 ல் இருந்து யாழ் மாநகர சபை குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த குத்தகை கடந்த 1980 ஆண்டுடன் காலாவதி ஆகிவிட்டது. தற்போது அப்பகுதி மூலோபாய நகர மேம்படுத்தலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மேலும் அந்த பகுதியை 20 வ…
-
- 1 reply
- 551 views
-
-
மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம் யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரணையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிந்தார். இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாத நிலையில் இராணுவம் வெளியேறிய பின்னரே அ…
-
- 0 replies
- 332 views
-
-
கொள்கை ரீதியில் செயற்படும் வடக்கு கிழக்கு இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவொரு கொள்கை கோட்பாடுகளிலும் இருந்து மாறவில்லையென வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு சட்ட ரீதியாக பிரிக்கப்பட்டாலும் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Policy-principles-do-not-change--CVK
-
- 0 replies
- 692 views
-
-
அரசியலுக்கு புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியில்லை, சீறும் மாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியையும் வடகிழக்கு இணைப்பையும் கைவிட்டுள்ளதாக இந்த மண்ணுக்கு புதியவர்கள், அரசியலுக்கு புதியவர்கள் விமர்சிக்கிறார்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா விசனம் வெளியிட்டுள்ளார். கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினம் நேற்று மாலை கோப்பாயில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் பல இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ…
-
- 2 replies
- 787 views
-
-
தமிழர்கள் மீண்டும் போராடுவதற்கான தருணம் இதுவல்ல எம்மை நாமே ஆளும் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அரை குறைத் தீர்வை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான கூட்டாட்சித் தீர்வு கிடைக்கும் வரை தமிழர்கள் சளைக்காது போராட முன்வர வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் உத்தேச அரசமைப்ப முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் டம்பெற்றபோது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டி ருந்தார். மேற்படி நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்துகொள்வார்களான சில ஊடகங்க…
-
- 0 replies
- 416 views
-
-
20ஐ ஆதரிப்பதா இல்லையா? கூட்டமைப்பு கூடி ஆராய்கிறது “அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாளை மறுதினம் நாடாளுமன்றில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நடைபெறும். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா? என்பது தொடர்பில் இதன்போதே முடிவு எடுக்கப்படும்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “20ஆவது திருத்…
-
- 1 reply
- 203 views
-
-
வடக்கு முஸ்லிம்களின் வீடமைப்பு வசதிகளுக்காக முன்னின்று செயற்படுவேன் - மாவை வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வீடமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க தாம் முன்னின்று செயற்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய சோ.மாவை சேனாதிராஐா தெரிவித்துள்ளார். அதற்காக தற்போதைய காலம் உதயமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னேடுத்துள்ளதாக மாவை சேனாதிராஐா குறிப்பிட்டார். யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் தற்போதைய காலத்தில் வீடமைப்பு வசதிகள் அற்று இருக்கும் முஸ்லிம் மக்கள…
-
- 3 replies
- 508 views
-
-
நல்லெண்ண சமிக்ஞையாகவே இலங்கைக்கு வருகை தந்தேன் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் (ஆர்.ராம்) உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானு வேல் அடிகளார் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களையும், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளுட…
-
- 1 reply
- 336 views
-
-
தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்டமைப்பு தயார் அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தத் தைக் கைவிட்டால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார். ‘‘விரைவில் அந்தத் தேர்தல் நடத்தப்படுவது நல்லது என்றே நினைக்கின்றோம்’’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் குளறுபடிகள், – மோசடிகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆச…
-
- 3 replies
- 383 views
-
-
தமிழ் அரசுக் கட்சி மீது ஈபிஆர்எல்எப் சீற்றம் இடைக்கால அறிக்கையின் இணைப்பில் தமது கட்சியைப் புறம்தள்ளிவிட்டதாம் ‘‘வழிநடத்தல் குழுவின் இடைக்கால வரைவுக்குப் பின்னிணைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டது, தமிழ் அரசுக் கட்சியின் யோசனைதான். அந்தக் கட்சி இப்படிச் செயற்படுவதை நாம் கண்டிக்கின் றோம்’’ இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தெரிவித்துள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் உயர்பீடச் சந்திப்பு வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் அந்தக் கட்சியின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்…
-
- 0 replies
- 323 views
-
-
நாட்டைப் பாதுகாப்பது பிக்குகளின் கடமையா? இது பௌத்த நாடு. பிக்குகள் நாட்டின் காவல் தெய்வங்கள். அமைச்சர்கள் பௌத்தத்தை மதிக்கத் தவறுகின்றார்கள். நாடாளுமன்றம் தற்போது கெட்டவர்களின் கூடார மாக மாறியுள்ளது. இவ்வாறொல்லாம் பேசியிருப்பவர் வேறு யாருமல்லர் இலங்கையின் பெரும் மாகாநாயக்கபீடமான அஸ்கிரிய பீடத்தின் நாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர். நாட்டின் மரியாதைக்குரிய இடமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றம் வளரும் பிள்ளைகளை அழைத்துச் செல்லக்கூடாத இடம் என்று கூறுமளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்றும் கவலைப்பட்டிருக்கிறார் அவர். அண்மையில் இதே மடாதிபதியைச் சந்தித்த பின்…
-
- 0 replies
- 471 views
-
-
கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸாரால் தேடப்பட்ட பிள்ளை ஒன்று தனது சொந்த வீட்டிலேயே நூதனமாக ஒளிந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பே, புளியன்கடவர, வெல்பொதுவெ பிரதேசத்தை சேர்ந்த ஐந்து வயதான இச்சிறுவனை முன்பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக அவரது பெற்றோர் தயார்படுத்தி வைத்துள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் முன்பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாரான போது பிள்ளை காணாமல் போயிருந்தமையால் அவரது பெற்றோர் வீடு முழுவதும் தேடிப்பார்த்துள்ளனர். அதன்போது, வீட்டுக்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்று அவ்வழியாக வேகமாக பயணித்திருந்தமையால் அந்த லொறியில் பிள்ளை…
-
- 1 reply
- 590 views
-
-
அமெரிக்கா பறந்தார் செல்வம் அடைக்கலநாதன்; ஐ.நாவில் சனாதிபதியுடன் கைகோர்ப்பு? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தற்போதைய தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அமெரிக்கா பயணமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவரது இந்த பயணம் தொடர்பான வெளிப்படைத்தன்மை ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லையாயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் பயணம் பல்வேறுபட்ட சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஸ்ரீலங்காவின் சனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக தனியே சென்றுள்ளமை தெரிந்ததே. எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 502 views
-
-
இந்துப் பிட்டி மயானத்தில் சடலம் எரிக்க இடைக்காலத்தடை புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி இந்துப்பட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்தது. சமூக நீதியின் அடிப்படையில் இந்த மயானத்திற்கு அண்மையில் வாழும் மக்களின் வாழ்வுரிமையை அடிப்படையாகக் கொண்டு இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் கட்டளையில் சுட்டிக்காட்டினார். இந்த மயானம் தொடர்பில் வடக்குமாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சர் உட்பட உள்ளுராட்சிக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் ஆராய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை மேற்க…
-
- 0 replies
- 376 views
-
-
குடாநாட்டில் ஒருதொகுதி காணிகளை டிசெம்பருக்குள் விடுவிக்க இணக்கம் பலாலியில் நேற்று நடந்த சந்திப்பில் முடிவு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு தொகுதிக் காணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்புத் தரப்பினர், மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன், கரவெட்டி, பருத்தித்துறை, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர்கள் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரை பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்றுக் காலை 10.30 மணியிலிருந்து 12.30 மணி வரை சந்தித்துக் கலந்துரையாடினர். க…
-
- 0 replies
- 224 views
-
-
ஒன்பது மாகாண சபைகளையும் ஒக். 2 கலைத்துவிட யோசனை மைத்திரி, ரணிலிடம் கபே முன்வைப்பு முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் இணக்கப்பாட்டுடன் நாட்டின் 9 மாகாண சபைகளையுமே எதிர்வரும் ஒக்ரோபர் 2ஆம் திகதி கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள் ளது கபே அமைப்பு. சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கமையவே அரச தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோரிடம் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று கபே (நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்…
-
- 0 replies
- 244 views
-
-
மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதில் அரசுக்குக் குழப்பம் கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசு குழப்ப நிலைக்குள் உள்ளதாக அறியமுடிகின்றது. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களை முன்வைப்பது சாத்தியமாகாது என சட்டமா அதிபரும் சட்ட வல்லுநர்களும் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். உயர் நீதிமன்றின் வியாக்கியானத்துக்கு அமைவாகவே இந்த ஆலோசனையை அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 20ஆவது திருத்தச் சட்டவரைவைக் கைவிடும் முடிவில் அரசு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இனிவரும் தேர்தல்கள் அனைத்தும் கலப்பு முறையிலேய…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழ்மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் தெளிவாக உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகம் ஒன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தனது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கும்போது, 2009ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரியபோது அத்தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதாக பெரும்பான்மையாக முடிவெடுக்கப்பட்டது. இதன்பின்னர், சட்டத்தரணி கனகேஸ்வரனின் வீட்டு நூலகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் (கூ…
-
- 1 reply
- 392 views
-
-
யாழ். சிறைச்சாலைக்குள்ளிருக்கும் கைதிக்கு கஞ்சாவை வழங்க முயற்சி 10 நாள்களில் 3ஆவது சம்பவம் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியுடன் கஞ்சா போதைப் பொருள் மறைத்து வைத்துக் கடத்தும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் இடம்பெற்ற 3ஆவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது என்று சிறைச்சாலைத் தரப்பினர் தெரிவித்தனர். சிறையிலுள்ள குறிக்கப்பட்ட பெயரையுடைய கைதி ஒருவருக்கு வழங்குமாறு கூறி சிறைச்சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்ற இருவர் உணவுப் பொதியை அந்த வீட்டுக்காரரிடம் வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதில் சந்தேகம் கொண்ட அந்த வீட்டுக்காரர் உணவுப் பொதியைச் சி…
-
- 0 replies
- 170 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சரால் பல சலுகைகள் வழங்கப்பட்டே கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 20ஆவது திருத்தச்சட்டம் கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்ன 20ஆவது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் அதன் பின்னர் பரிசீலித்தே ஆதரிப்பதாக நிராகரிப்பதா என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், குறித்த திருத்தம் வெளிவராத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தாம் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தன. …
-
- 0 replies
- 376 views
-
-
கிளிநொச்சியில் வாள்வெட்டு : 4 பேர் வைத்தியசாலையில் கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டு தாக்குதல் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் மதுபோதையில் நின்ற நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர். எனினும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர…
-
- 6 replies
- 519 views
-