ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
“தயார் நிலையில் 89 இராணுவக் குழுக்கள்; தேவைப்பட்டால் களமிறங்கும்” - இலங்கை இராணுவம் மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டால், இராணுவ வீரர்களின் உதவியுடன் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கத் தயார் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். அவ்வாறு உதவி கோரப்படும் பட்சத்தில் அனுப்புவதற்காக இராணுவ வீரர்கள் அடங்கிய 89 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், எந்த வித இடையூறு ஏற்பட்டாலும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 350 views
-
-
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மஹிந்த விஜயம் சீனாவில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பத்றாகக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளார். இதன்பிரகாரம், அவர் எதிர்வரும் 21ஆம் திகதி முதல், 23ஆம் திகதி வரை, சீனாவில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சீன விஜயம் முடிவடைந்த பின்னர், அவர், இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெறும் பௌத்த நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே, அவர…
-
- 0 replies
- 169 views
-
-
அண்மைய நாட்களில் வடக்கில் சில வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த சம்பவங்களுக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் கதைகள் உருவாக்கப்பட்டன. யாழ் பொலிஸ்தரப்பு குறித்த சம்பவங்கள், முன்னாள் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்படுவதாக குற்றம் சுமத்தினர். வரலாறு முழுவதும் வன்முறைகளும் ஆயுதங்களும் தமிழர் தலையில் திணிக்கப்படுவதுபோலவே இந்தக் கட்டுக்கதைகளும் தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்டன. தமிழ் மக்களின் தாயகத்திற்காக, அந்தக் தாயகத்தை ஆளும் சுய உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போரிட்டவர்கள் விடுதலைப் புலிப் போராளிகள். 2009 மே மாதத்துடன் தமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக விடுதலைப் புலிகள் இயக்கம்…
-
- 0 replies
- 346 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு மாகாணசபைகள் தொடர்பில் கொண்டு வரப்படும் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணசபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில் மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வடக்கு முதலமைச்சர் தலைமையிலான அணி அதனை எதிர்த்து வருகின்றது. தென்பகுதியில் உள்ள சில மாகாண சபைகளும் அதனை எதிர்த்து வருகின்றன. இந்தநிலையில், …
-
- 2 replies
- 599 views
-
-
கூட்டு அரசை நீடிப்பதா ? – மைத்திரி – ரணில் சந்திப்பு விரைவில் இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையிலான கூட்டு அரசு ஒப்பந்தம் எதிர்வரும் டிசெம்பரில் முடிவடைவதால் அதை நீடிப்பது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணில் விக்கி ரமசிங்கவும் விரைவில் சந்தித்துப் பேசுவர் என்று பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டின் முக்கிய பிரச்சினை கள் பலவற்றுக்குத் தீர்வைக் காணும் பொருட்டு இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து வரலாற்றில் முதல் தடவையாகக் கூட்டு அரசு ஒன்றை அமைத்தது. இதன் காரணமாகப் பல பிரச்சினைகள் தீர்க்கப…
-
- 0 replies
- 247 views
-
-
பொன்சேகாவின் உருவப் பொம்மை எரிப்பு அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா ஆகியோர், பௌத்த மதகுருமாருக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால், ஆர்பாட்டமொன்று, இன்று (16) மேற்கொள்ளப்பட்டது. பௌத்த மதகுருமாரும் பொதுமக்களும் இணைந்து இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். சரத் பொன்சேகாவினது உருவப் பொம்மையும் இதன்போது எரிக்கப்பட்டது. http://www.tamilmirror.lk/திருகோணமலை/பொன்சேகாவின்-உருவப்-பொம்மை-எரிப்பு/75-203878
-
- 0 replies
- 493 views
-
-
கூட்டு எதிரணிக்குள் ஓரம்கட்டப்படுகின்றாரா தினேஸ்? தற்போது கூட்டு எதிரணிக்குள்ளும் நெருக்கடிகள் உருவாகத் தொடங்கியிருக் கின்றன. இந்த நிலைமையை ஐ.தே.க.வும் சுதந் திரக் கட்சியும் எவ் வாறு தமக்கு சாத கமாக பயன்படுத்தப் போகின்றன என்பது குறித்தும் மஹிந்த ராஜ பக் ஷ எவ்வாறு இதனை சமாளிக்கப் போகின்றார் என்பதுமே தற் போது அரசியல் சூழலில் காணப் படும் பரபரப்பான கேள்வியாகும். நாட்டின் அரசியல் சூழலானது பாரிய பரப்புக்குள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளது எனக் கூறலாம். அந்தளவுக்கு அரசியல் நகர்வுகள் பரபரப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சி பக்கத்திலும் அரசியல் சூ…
-
- 0 replies
- 432 views
-
-
பொருத்து வீட்டை எதிர்த்து அடுத்த வாரம் மீள வழக்கு கூட்டமைப்பு உறுதி பொருத்து வீடுகளை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி மீளவும் அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘பொருத்து வீடு வடக்கு – கிழக்கு காலநிலைக்குப் பொருத்தமில்லை. 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்கு கேள்வி – கோரல் நடத்தியதன் அடிப்படையிலேயே 6 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது பிழையான நடவடிக்கை’ என்று மனுவில் குறிப்பிட்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி…
-
- 0 replies
- 207 views
-
-
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக கொண்டாட்ட நிகழ்வுகளும் குளோபல் தமிழச் செய்தியாளர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களுக்கு மிக அருகில் கொண்டாட்ட நிகழ்வுகளும் இன்றைய தினம் யாழில்.ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் , நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. அதேநேரம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல்கலைகழக வளாகத்தினுள் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலீபனின் நினைவு நாளை மாணவர்கள் அனுஸ்டிக்கும் போது , சர்வதேச…
-
- 3 replies
- 848 views
-
-
பொருத்து வீடுகள் அமைக்கும் பணி வடக்கில் டிசெம்பருக்குள் ஆரம்பம் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிப்பு “வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடு வேண்டும் என ஆயிரக் கணக்கான குடும்பங்கள் விண்ணப்பித் துள்ளன. அவர்களுக்கான வீடுகளை அமைக்கும் பணிகள் இந்த வருடத்துக்குள் ஆரம்பிக்கப்படும். அதற்கு எந்தத் தடைகள் வந்தாலும் எதிர்கொள்வதற்குத் தயார்”இவ்வாறு கொழும்பு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடு வழங்குமாறு கோரி ஆயிரக் கணக்கான குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. அந்த விண்ணப்பங்களின் அடிப்படைய…
-
- 0 replies
- 211 views
-
-
பிக்குகள் யாரென்று காட்டவேண்டிவரும் ரஞ்சனுக்கு எச்சரிக்கை விடுக்கிறது சிங்கள ராவய தேவையற்ற முறையில் மூக்கை நுழைத்து நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளை நிந்தனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாம் எச்சரிக்கின்றோம். இவ்வாறு சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தொடர்ந்தும் பிக்குகளை நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றார். பிக்குகள் விடயத்தில் தேவையற்று மூக்கை நுழைக்க வேண்டாம். அதையும் மீறிச் செயற்பட்டால் பிக்குகள் யார் என்பதைக் காட்ட வேண்டி வரும் – என்றார். இதேவேளை முன்னாள் அமைச்சர் மேர்வின…
-
- 1 reply
- 374 views
-
-
"எமக்கு கிடைத்திருக்கும் இறுதி" ரணில் ஜனநாயகத்தை பாதுகாத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இது எமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். இதனை பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன் அனைவரும் இலங்கையர் என்ற சிந்தனையை ஏற்படுத்தவே ஸாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், எமக்கு சுதந்திரம் கிடைத்த காலத…
-
- 2 replies
- 408 views
-
-
பொருத்து வீட்டை விரும்பாதவா்கள் கல்வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் யாழ் மாவட்டத்தில் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கல்வீடு தேவை என கோரும் இடத்து கல்வீடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் இன்னும் 25 ஆயிரம் வீடுகளுக்கான தேவை உள்ளது. இந்த வருடம் 1100 வீடுகள் கட்டப்படுகிறது. அடுத்த வருடத்துக்கு மீள்குடியேற்ற அமைச்சாரக மேலும் 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில், அண்மையில் பலர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் சிலர் கல் வீடு …
-
- 0 replies
- 277 views
-
-
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுவதே தீர்வுக்கு வழி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவிப்பு (ஆர்.யசி) நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாதை யில் சர்வதேச அழுத்தங்களை விடுத்து சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுவதே தீர்வினைப்பெறும் ஒரே வழிமுறையாகும். நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியல் அமைப்பின் மூலமாக தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். நாட்டை பிளவுபடுத்தவோ அல்லது சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்தவோ அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். இலங்கையின் தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் சர்வதேச அழுத்தம் வழங்கப்பட வேண்டும…
-
- 0 replies
- 292 views
-
-
ஆளும் தரப்பு எம்.பிக்களை தேர்தலுக்கு தயாராகுமாறு பணிப்பு தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது கூட்டு அரசின் தலைமைப்பீடம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் உயர் நீதிமன்றின் விளக்கம் சாதகமாக வராத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக் கலாம் என்று உயர்மட்டத்தினர் சுட்டிக்காட்டியதை யடுத்தே அரச தலைமைப்பீடம் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது. 20ஆவது திருத்தச் சட்டவரைவைக் கைவிடவேண்டிய நிலை ஏற்படுமென சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரச தலைம…
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கையில் மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் அமெரிக்க செனட் சபை வலியுறுத்தல் இலங்கை உள்ளிட்ட நாடுகளில், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நிதியுதவியை 92 வீதத்தினால் குறைக் கும், டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டத்தை நிராகரித்து, அமெரிக்க செனட் சபையின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான உப குழு கடந்தவாரம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “பல நாடுகளில், மரபணுச் சோதனைகள் மூலம், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத…
-
- 0 replies
- 241 views
-
-
அரசியலில் களமிறங்குகிறார் மைத்திரியின் மகள் சத்துரிகா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகா சிறிசேன தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் அவை முடிவடைந்த பின்னர் தான் அரசியலில் களமிறங்குவதற்கான காரணத்தை விளக்கும் வகையில் சிறப்பு அறிவிப்பொன்றை விடுக்க வுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தகவல் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சிபெற்ற அவர் தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலை யிலேயே , அவற்றைவிடுத்து முழுநேர அரசியலில் இறங்…
-
- 2 replies
- 539 views
-
-
எமது பாதை மாறாது யுத்தக்குற்றம் இடம்பெறவே இல்லை என்கிறார் அமைச்சர் சம்பிக்க (ஆர்.யசி) சர்வதேச அழுத்தங்களின் காரணமாக தேசிய கொள்கைகளையும் இலங் கையின் பாதையையும் திசைதிருப்ப அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது. இலங்கையின் உள்ளக விவகாரங்களை நாமே தீர்ப்போம். அதற்கான மாற்றமே இந்த நல்லாட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய ஒற்றுமையை குழப்பவே சர்வதேச அமைப்புகள் தொடர்ந்தும் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட …
-
- 0 replies
- 374 views
-
-
அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக மஹிந்த தோல்வியடைவதை பார்க்க அப்பா விரும்பவில்லை அவருக்காக பாடுபட்டார்; இருவருக்குமிடையிலான நட்புறவு குலைவதற்கு பஷில் ராஜபக் ஷவே காரணமானார் 'ஜனாதிபதி அப்பா' நூலில் சத்துரிகா சிறிசேன ஆதங்கம் (எம்.எம்.மின்ஹாஜ்) மஹிந்த ராஜபக் ஷவிற்கும் அப்பா வுக்கும் இடையிலான நட்புறவை முறியடிக்கும் வகையில் பஷில் ராஜபக் ஷவே செயற் பட்டார். அவர் தேசிய அமைப்பாளராக பதவி ஏற்ற பின்னர் இது மேலும் உக்கிர மடைந்தது. கட்சியின் உரிமையாளர் போல் எனது அப்பாவை கட்சிக்கு தேவை யற்றவராகவே காண்பிக்க முயற்சித்தார். அப்பாவின் மீதான பஷில் ராஜபக் ஷ வின் ஒடுக்குமுறை செயற்பாட்டில் தலை யிட்டு அதனை தீர்க்க மஹிந்த ராஜபக் ஷ முன்வரவில்ல…
-
- 0 replies
- 581 views
-
-
முதல் தடவையாக ட்ரம்பை சந்திக்கும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள் ளும் நோக்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் கனடாவின் பிரதமர் டுருடூ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களுடனான சந்திப்புக்கள் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லையாயினும் சந்திப்பு…
-
- 0 replies
- 293 views
-
-
சிறையிலுள்ள லலித் வீரதுங்கவிற்காக வீதியில் இறங்கியுள்ள பௌத்த துறவிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க, சில் துணி விவகாரத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலை தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட ஆகிய இருவரினதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு உச்ச நீதிமன்றம் இருவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையை வழங்கியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் பணத்தை சில் துணி கொள்வனவிற்காக பயன்படுத்திய மோசடி வழக்கு கொழும்ப…
-
- 2 replies
- 419 views
-
-
தனது இனத்தின் விடிவிற்காக தன்னை மெழுகாய் உருக்கி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவுதினம் அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், இதற்கு எதிர்ப் பக்கத்தில் நிதி நிறுவனமொன்று இந்நிகழ்வைக் குழப்பும் வகையில் பெரும் சத்தத்தில் ஒலிபெருக்கியில் பாடலை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. இந்நிதி நிறுவனத்தின் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர் என்பதுடன், இந்நிதி நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்த…
-
- 2 replies
- 576 views
-
-
பிக்குகள் நிந்திக்கப்படுகிறார்கள்; அரசு வேடிக்கை பார்க்கின்றது அஸ்கிரிய பீடம் கடும் கண்டனம் அரசில் உள்ள பல்வேறு அமைச்சர்கள் பிக்குகளைக் கடுமையாக விமர்சித்து நிந்தனை செய்வதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார். இதனைக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அண்மைக் காலமாக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிக்கு களையும், மதத் தலைவர்களையும் மதிப்பிறக்கம் செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டும், விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர். இது கண்டனத்திற்குரிய செயற்பாடாகும். இவ்…
-
- 2 replies
- 492 views
-
-
நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன் லலித் வீரதுங்க திட்டவட்டம் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனையை அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் நீக்குமாறு ஒருபோதும் கேட்கப் போவதில்லை என்று முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். கடந்த அரச தலைவர் தேர்தல் காலத்தில், வாக்காளர்களின் ஆதரவை மகிந்த ராஜபக்சவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களுக்கு இலவசமாக வெள்ளைத்துணியை விநியோகித்த விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட லலித் வீரதுங்கவை, மகிந்த அணி உறுப்பினர்கள் சந்தித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சந்திப்பின…
-
- 0 replies
- 445 views
-
-
சரத் பொன்சேகா கைதுசெய்யப்படுவாரா ? ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறியுள்ளது மாத்திரமன்றி அவை தொடர்பில் சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள…
-
- 0 replies
- 386 views
-