ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
இழுபறிக்குள் இருந்த இடைக்கால அறிக்கை நேற்று முழுமையானது செப். 21 சபைக்கு முன்வைப்பு; ஒக்டோபரில் விவாதம் புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 21ஆம் திகதி காலை, நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாகக் கூடும். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இடைக் கால அறிக்கையை அன்றைய தினம் முன்வைப்பார். இந்த அறிக்கை மீதான விவாதம் ஒக்ரோபர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவின் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற…
-
- 0 replies
- 158 views
-
-
மாத்தளன் மீனவர்களுடைய படகு நேற்றுக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது முல்லைத்தீவு மாத்தளன் மீனவர்களுடைய படகு மாத்தளன் கடற்பரப்பில் சேதப்படுத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்து. தென்னிலங்கை மீனவர்களே படகை மோதி மூழ்கச் செய்தனர் என மாத்தளன் மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. சம்பவத்தை வடக்கு மாணசபை உறுப்பினர் து.ரவிகரன் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மீனவர்களின் படகினை தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே விஷமத்தனமாக மோதித் தள்ளியுள்ளனர். இதனால் படகு கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளத…
-
- 0 replies
- 142 views
-
-
வடமாகாணத்தில் இன்று பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை உயர் அழுத்த, தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வடமாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு, சோளாவத்தை, மண்கும்பான் தேசிய நீர்வழங்கல் வடிகால்சபை, மண்கும்பான் கடற்படை முகாம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் அக்கராயன் குளம், கோவில்குடியிருப்பு, அமைதிபுரம், முறிகண்டி கொமாண்டோ இராணுவ முகாம், அம்பலப்பெருமாள், கோட்டைகட்டி, ஆ…
-
- 0 replies
- 136 views
-
-
குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பு: மனுவுக்குத் திகதி குறிப்பு திருகோணமலை, குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகளுக்கான தினமாக, டிசெம்பர் 13ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (06) நிர்ணயித்தது. படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என்று, சிங்கள ஜூரி சபையால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி அவர்கள் அறுவரையும் அனைத்துக் குற்றங்களில் …
-
- 0 replies
- 223 views
-
-
20ஆவது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு; கூட்டமைப்பு அறிவிப்பு மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வழிசெய்யும் 20ஆவது திருத்தச்சட்ட வரைபிற்கு நிபந்தனையுடனான ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக ஆங்கில இணையத்தளமான டெய்லி எப்.டி (Daily FT) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின், போது குழுநிலை விவாதத்தின் போது 20ஆவது திருத்தச் சட்டவரைவில் மேலும் பல திருத்தங்களை முன்வைப்பதாக அரசாங்கம் இணங்க…
-
- 4 replies
- 564 views
-
-
புதிய அரசமைப்பு தற்போது தேவையில்லை மகிந்த தெரிவிப்பு Share புதிய அரசமைப்பைத் தற்போது உருவாக்க வேண்டிய தேவை இல்லை என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறைமை தமக்கு வேண்டும் என்று சுதந்திர கட்சி கேட்டுள்ளது. அரச தலைவரும் இந்த முறைமையைக் கைவிடப் போவதில்லை என்று கூறி வருகிறார். எவ்வாறாயினும், தேர்தல் கால…
-
- 0 replies
- 459 views
-
-
ரவிராஜ் எம்.பி படுகொலை விவகாரம்: பிரசாத்துக்கு மீண்டும் பிடிவிறாந்து லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (06) உத்தரவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து போது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் எம்.பியின் வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் இரண்டாவது பிரதிவாதியே இவராவார். இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் லலித் ஜயசூரிய முன்னிலையில், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பி…
-
- 0 replies
- 266 views
-
-
-
- 2 replies
- 302 views
-
-
இலங்கையின் உயர் நீதிமன் றம் தமிழர்களின் உள்ளக சுயநிர் ணய உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பரப்புரை செய்து வரும் நிலையில், அவ்வாறு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரை யாளர் கு.குருபரன் அடியோடு மறுத்துள்ளார். மேலும் 13 ஆம் திருத்த சட்டத்தை ஒத்ததாக புதிய அரசியலமைப்பு வரப்போகின்றது எனவும் எதிர்வு கூறியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற பதங்கள் தாங்கி வெளிப்படையாக இனங் காணப்பட வேண்டுமா? என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
-
- 0 replies
- 385 views
-
-
சக்தி டிவி செய்திகள் 06 09 2017 , 8PM
-
- 0 replies
- 294 views
-
-
குண்டு துளைக்காத ஜீப் வண்டி: கருணாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக குண்டு துளைக்காத ஜீப் வண்டி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது. 10 கோடி ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத ஜீப் வண்டி ஒன்றை பாராளுன்ற உறுப்பினர் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததன் பின்னரும் பயன்படுத்தியதாகத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக வழக்கு தாக்கல செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங…
-
- 0 replies
- 388 views
-
-
சர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம் இந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலாம் இடத்தை பெற்றுள்ளாா். கடந்த யூலை மாதம் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த ஆற்றுகையாளராக தெரிவு செய்யப்பட்ட மலையாளபுரம் இலங்கரட்ணம் சஜித் என்ற இளைஞரே இந்தியா சிதம்பரத்தில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளாா். 22 தொடக்கம் 28 வயது பிரிவுப் போட்டியில் இந்தியா உட்பட பல நாட்டுப் போட்டியாளர்களுடன் போட்டியிட்டே சஜித் முதலாம் இடத்தை பெற்றுள்ளா…
-
- 1 reply
- 347 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ வீரர்களை ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது: இராணுவப் பேச்சாளர் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து இராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது என இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன குறிப்பிட்டார். வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் கூறினார். 45 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட யாழ். கோட்டைக்கு இராணுவத்தினர் சென்றால், அவர்கள் தங்கியுள்ள தமிழ் மக்களின் காணிகளை திருப்பிக்கொடுக்க முடியும் என ரெஜினோல்ட் குரே கூறியிருந்தார். யாழ். கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்…
-
- 0 replies
- 402 views
-
-
இன்னும் 20 வருடங்களில் வடக்கின் நிலை இது தான்! விக்னேஸ்வரன் எச்சரிக்கை! மற்றவர்கள் முகத்தைச் சுழிப்பார்கள் என்பதற்காக நாம் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்தால் இன்னும் இருபது வருடங்களில் வடக்கில் எல்லா இடங்களும் சிங்கள மயமாகி விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் இன்று காலை 09 மணி முதல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியலமைப்பு விடயத்தில் பெரும்பான்மையினர் முகத்தைச் சுழிப்பார்கள் என்பதற்காக எமது தேவைகளையும், உரிம…
-
- 0 replies
- 567 views
-
-
மோசமானதொரு கட்டத்தில் இந்து சமுத்திரத்தின் முத்து தென்னிலங்கையின் அரசியல் நிலவரங் களைப் பார்க்கும்போது நாடு மோசமானதொரு கட்டத்தை எட்டியுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. மகிந்த தரப்பினர் மீதான குற்ற விசாரணைகள் ஒருபுறம் ஆமை வேகத்தில் இடம்பெறுகின்றன. அதேவேளை அமைச்சர்களின் பதவி விலகல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்தவுக்கு ஆதரவான நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாட் டைக் கொண்டுள்ளமை அரச தலைவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் இவர் தமது கட்சியிலுள்ள அதிòòருப்தியாளர்கள…
-
- 0 replies
- 300 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பு – சொல்ல வேண்டியதை பொன்சேகா சொல்கிறார் இராணுவச் சீருடை அணிந்த காரணத்துக்காக எவருடைய குற்றங்களையும் மறைக்க முடியாது என்று நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்த மாதிரி பளிச்செனச் சொல்லியிருக்கிறார் பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா. போர்க்குற்றங்களுக்காக இராணுவத் தளபதி மீதோ, தளபதிகள் மீதோ, எந்தவொரு படையினரின் மீதோ கைவைக்க வெளிநாட்டு அமைப்புகளை அனுமதிக்கப்போவதில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு மாநாட்டில் அவர் இதனை உரத்துச் சொன்னார். மைத்திரியின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதத்தில…
-
- 0 replies
- 372 views
-
-
வவுனியா நகரசபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளிக்க முயற்சி வவுனியா நகரசபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து வவுனியா சந்தைச்சுற்றுவட்ட வீதியில் இன்று மதியம் 12.00மணியளவில் வர்த்தர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார். வவுனியா சந்தைச்சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் அத்துமீறிப் பாதையில் விற்பனை பொருட்களை விற்பனை செய்வதையடுத்து வவுனியா நகரசபையினர் அத்துமீறி வீதியில் வைத்திருத்த பொருட்களை அகற்றுமாறு வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்தப் பாதையில் மதுபானசாலைக்கு அருகே அமைந்துள்ள மரக்கறி வியாபாரம் செய்யும் வர்த்தகர் ஒருவர் அகற்ற முடியாது என மறுப்பு தெரிவித்து அத்…
-
- 0 replies
- 317 views
-
-
இராணுவம் குற்றமிழைத்தது! ஆனால் சர்வதேச விசாரணை வேண்டாம்! கூறுகிறார் பொன்சேகா! யுத்த குற்றம் இழைத்த படைவீரர்களை தண்டிப்பதற்கு சர்வதேச நீதிமன்றின் உதவி அவசியமில்லை என பீல்ட் மார்ஸல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகள் அவசியமற்றது எனவும் உள்நாட்டு நீதிமன்ற விசாரணைகளின் மூலம் குற்றம் இழைத்த படைவீரர்களை தண்டிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக விசாரணை நடத்தி உரிய தண்டனைகள் விதிக்கப்பட வேண்டுமென பீல்ட் மார்ஸ https://news.ibctamil.com/ta/internal-affairs/No-international-inquiry-in-srilanka
-
- 3 replies
- 350 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம் 06.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 184 views
-
-
கிளிநொச்சி மாணவன் சிங்கப்பூர் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு வடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட கனிஷ்ட பிரிவுக்கான மாகாண மட்ட கணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி வலய அணி முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற மேற்படி போட்டியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு கல்வி வலய அணிகள் பங்கு கொண்டன. இப்போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான யாழ்ப்பாண வலய அணியினை வீழ்த்தி கிளிநொச்சி வலய அணி சம்பியனானது. அத்துடன் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண அணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 6 இல் கல்வி கற்கும் தெ.தி…
-
- 0 replies
- 349 views
-
-
இலவச விமான பயண சீட்டுக்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழங்குகிறதா?! எச்சரிக்கை கடந்த சில தினங்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலவச பயண சீட்டுக்களை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இது போலி பிரச்சாரம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் எந்தவொரு பயணியும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என அறிக்கையின் ஊடாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டுள்ளது. அண்மைக்காலமாக சமூக வலைத்தள apps ஊடாக பகிரப்படும் தகவல் ஒன்று தொடர்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலில் ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இலவசமாக விமான டிக்கட்கள் இரண்டு வழங்கப்படுவதாகவும், அதற்காக வழங்கப்பட்டுள்…
-
- 3 replies
- 515 views
-
-
இராணுவத்துக்காக யாழ்ப்பாணக் கோட்டை மீது கண் வைத்துள்ள ஆளுநர்; காரணம்? நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணக் கோட்டைக்கு மாற்றுவது சரியான தேர்வாக அமையும் என்றும் அப்பொழுதுதான் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள விகாராதிபதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இங்கு மேலும் குறிப்பிட்ட அவர், ”யாழ்ப்பாணத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயம் தற்போது இராணுவ முகாமாக உள்ளது. அதனை விடுவித்…
-
- 2 replies
- 1.4k views
-
-
பெண்வேடமிட்டு சென்ற இளைஞன் நள்ளிரவில் படுகொலை - தம்புள்ளையில் சம்பவம் தம்புள்ளை நகரத்தில் பெண் வேடமிட்டு சென்ற ஆணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை நகரத்தில் அமைந்துள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தம்புள்ளை களுன்தேவ வல்கம வௌ பிரதேசத்தை சேர்ந்த சனத் குமார என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த குறித்த இளைஞன் இரவு நேரங்களில் பெண் ஆடையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிவதாகவும் தெரிவிக்கும் பொலிசார் பலத்த தாக்குதலின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பெண் …
-
- 1 reply
- 536 views
-
-
எமது மக்களுக்கான தீர்வு வடிவத்தை சம்பந்தன் ஆளும் தரப்புக்கோ சர்வதேசத்திற்கோ வழங்கவில்லை அரசாங்கத்துடன் ஏன் பேச்சு நடத்தவில்லை? கேள்வி எழுப்புகின்றார் சுரேஷ் (ஆர்.ராம், எம்.நியூட்டன்) எமது மக்களின் இறையாண்மையின் அடிப் படையில் உள்ளக சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் எமக்கு போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது ஆளும் தரப்பினரிடத்தில் நேரடி யாக முன்வைத்தாரா? என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் க…
-
- 0 replies
- 332 views
-
-
அமெரிக்கா தமிழ் மக்களை வைத்து கபட நாடகமாடுவதாக லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சாட்டியுள்ளதுடன், நல்லாட்சியில் அமெரிக்கா தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்ததாவெனவும் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில்; நாடு தற்போது அபாயகரமான நிலைமைக்குள் தள்ளப்பட்டு வருகின்றது. திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க இராணுவத்தின் பாவனைக்கு வழங்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்யவுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 7ஆவது யுத்தக் கப்பல் திருமலைக்கு விரைவில் வரவுள்ளது. அம்பாந்தோட்டையை சீனாவக்கு வழங்கியுள்ள நிலையில், இந்தியாவுடனும் அரசாங்கம் நாட்டின் வளங்களை வழங்க ஒப்பந்தம் செய்யவுள்ளது. இவ்வாறான …
-
- 1 reply
- 475 views
-