ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
வந்துவிட்டது 5ஜி தொழில்நுட்பம்! அறிமுகப்படுத்தியது dialog தெற்காசியாவிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பத்தை டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம், பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தெற்காசியாவில் தொலைத்தொடர்பில் ஆதிக்கத்தை செலுத்திவரும் இலங்கைக்கு மற்றுமொரு புதிய அறிமுகத்தை வழங்கிய பெருமை கிடைத்துள்ளது. கொழும்பிலுள்ள டயலொக் ஐகனிக் கட்டடத்தில், டயலொக்கின் தொழில்நுட்பப் பங்காளர்களான எரிக்ஸன், ஹுவாவி ஆகியவற்றுடன் இணைந்து, இச்சோதனையை, டயலொக் நடத்தியது. இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளரும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்ர ரத்நாயக்க, இல…
-
- 0 replies
- 514 views
-
-
ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதில் உரையாற்றிய கெத்சி சண்முகம், “மிகவும் மோசமான வன்முறை, இழப்பு, அவலங்களுக்கு மத்தியிலும், அன்பு, பராமரிப்பு, நம்பிக்கைக்கான சாத்தியம் இலங்கையில் பெருமளவில் இருக்கின்றது.” என்று மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. …
-
- 1 reply
- 407 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30ஆம் திகதி காணாமல் போனோருக்கான சர்வதேச நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சர்வதேசத்தின் கவனயீர்ப்பினை மேற்கொள்ளவும், காணாமல் போனோரின் உறவுகளுடன் எம் அக்கறையையும், தோழமையையும் வெளிப்படுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையும் இன்றைய தினத்தை நினைவு கூருகின்றனர். இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படையினராலும் அவர்களுடன் செயல்பட்ட ஒட்டுக் குழுக்களினாலும் (para military) காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச மன்னிப்புச் சபை, 1980இலிருந்து சிறிலங்காவில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த ஏறத்தாள 60,000…
-
- 0 replies
- 468 views
-
-
அந்நிய நாட்டின் படைகள் இலங்கையை தளமாக பயன்படுத்த முடியாது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) எந்தவொரு அந்நிய நாட்டின் படைகளும் இலங்கையில் செயற்பட அனுமதி கிடையாது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கை படைகளே முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடும் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமாதானத்தையும் நிலையான அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு பிராந்திய ரீதியிலான கட்டமைப்பு உருவாக்கப்பட இந்து சமுத்திரத்தில் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு உரையாற…
-
- 3 replies
- 519 views
-
-
முஸ்லிம்களுக்கான காணி விவகாரம் கரைதுறைப்பற்று செயலருடன் சீறிச் சினந்த அமைச்சர் ஹக்கீம முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கான காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலருடன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூக் ஹக்கீம் நேற்று சீறிச் சினந்துகொண்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்றுப் பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகமும் புதுக்குடியிருப்பில் குடிதண்ணீர் விநியோகத் தாங்கியும் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் அமைச்சர் ரவூக் ஹக்கீம் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட…
-
- 1 reply
- 304 views
-
-
பலாலி இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர், எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை பறித்த குற்றச்சாட்டில் இந்த இராணுவ அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் உத்தரவிட்டுள்ளார். அமில தனஞ்சய தெய்யன்கெவெல இராணுவ அதிகாரியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தம்புத்தேகம, எப்பவெல சந்தையில் நீண்டகாலமாக சேவை செய்யும் பெண்ணை தேடி செல்லும் சந்தேக நபர், அந்த கடைக்கு சென்று கையடக்க தொலைபேசிகளுக்கு தேவையான மீள்நிறப்பு அட்டைகளை கோரி பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் கடைக்கு வரும் பெண்களின் தங்க சங்கிலிகளை பறிக்கும் பழக்கத்தை கொண…
-
- 0 replies
- 334 views
-
-
ரியர் அத்மிரல் ஜயகொடி ஓய்வு பெறுகிறார் இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நீர் ஆதார உத்தியோகத்தராக 35 வருடங்கள் கடமையாற்றிய ரியர் அத்மிரல் சிசிர ஜயகொடி தனது சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சிசிர ஜயகொடியை கடற்படை தலைமையகத்திலிருந்து கடற்படை வாகனங்களின் ஊர்வலம் மூலம் சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தனர். இப் பிரியாவிடை நிகழ்வில் சிசிர ஜயகொடியின் 55ஆவது பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களும் கடற்படை தளபதி ட்ராவிஸ் சின்னையா மற்றும் மூத்த இளைய கடற்படை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன. 1981ஆம் ஆண்டு ஸ்ரீமன் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2ஆவது நிலை அதிகாரியாக கடற்படையில் சேர்…
-
- 0 replies
- 274 views
-
-
சுஷ்மா சுவராஜ் தரப்பை சந்திக்கும் தீவிர முயற்சியில் மஹிந்த தரப்பு (ரொபட் அன்டனி) இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள் வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினரை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ தரப்பினர் கடும் முயற்சிகளை மேற் கொண்டுவருவதாகவும் எனினும் இந்திய தரப்பிலிருந்து இதற்கு இதுவரை பச்சைக்கொடி காட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக இந்தியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு ஆர்வத்துடனேயே இருக்கிறது. அதனடிப்பட…
-
- 1 reply
- 184 views
-
-
20 ஆவது திருத்தச் சட்ட விவகாரம் ஐ.தே.க., சு.க.விற்கிடையில் வலுவடையும் முரண்பாடுகள் (ரொபட் அன்டனி) மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் ஆளும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டிருக்கின்றது. தற்போதைய நிலைமையில் தென்மாகாணசபை, மற்றும் ஊவா மாகாணசபையில் தோற்கடிக்கப்பட்டுள்ள இந்த 20 ஆவது திருத்த சட்டமூலமானது ஏனைய மாகாணசபைகளிலும் தோற்கடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 20 ஆவது திருத்த சட்டத்தை சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்க்கின்ற …
-
- 0 replies
- 272 views
-
-
இரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன் கிளிநொச்சி – இரணைத்தீவு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பூநகரி- நாச்சிக்குடா கடற்படை முகாமில் இன்று இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு கடற்படையினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும், இரணைத்தீவில் வசித்து வந்த 198 குடும்பங்களின் காணியை அளவிடும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பாதுகாப்பு …
-
- 1 reply
- 441 views
-
-
முதலாவது பெண் நீதி அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.! Weiterempfehlen இலங்கை வரலாற்றின் முதலாவது பெண் நீதி அமைச்சராக சட்டத்தரணி தலதா அதுகோரல இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வு இன்று காலை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/23824
-
- 3 replies
- 605 views
-
-
பொன்சேகா சின்னையா சேனநாயக்க மீதே முதலில் யுத்தக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும் வலியுறுத்துகின்றது பொது எதிரணி (க.கமலநாதன்) முன்னாள் இராணுவத் தளபதியான ஜகத் ஜயசூரிய மீது யுத்தக் குற்றம் சுமத்துவதாயின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படை தளபதி டிரவிஸ் சின்னையா, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க உள்ளிட்டோர் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று பொது எதிரணியின் இராணுவத்தினருக்கான அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார். பத்தரமுல்லை நெலும் மாவத்தை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 298 views
-
-
தனித்து ஆட்சியமைக்கும் திட்டத்துடன் அடுத்த தேர்தலில் மைத்திரிபால தரப்பு களமிறங்கும் விஜேதாச ராஜபக்ச ஐ.தே.கட்சியின் உறுப்பினர். அவர் தொடர்பில் முடிவெடுக் கும் உரிமை ஐ.தே.கட்சிக்கே உண்டு. விஜேதாச ராஜபக்ச தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரச தலைவரும் கடும் முயற்சி எடுத்தார்’’ எனத் தெரிவித்துள்ளார் அமைச்சரும் ஐ.ம.சு. கூட்டமைப்பின் செயலாளருமான மகிந்த அமரவீர. சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி கீழே தரப்படுகின்றது. கேள்வி:சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எந்தக் கட்டத்தில் உள்ளன? பதில்:இரண்டு முதன்மை கட்சிகள் …
-
- 0 replies
- 282 views
-
-
மஹிந்தவுக்கு இன்றும் பலர் அஞ்சுகின்றனர்.! மஹிந்த ராஜபக் ஷவை கண்டு இன் றும் பலர் அஞ்சுகின் றனர். பல ஊடகங்கள் இன்றும் மஹிந்த ராஜபக் ஷ மீதான அச்சத்திலேயே செய்திகளை நிராகரித்து வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாம் ஒருபோதும் மஹிந்த தரப்பை கண்டுஅஞ்சவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் இந்த நாட்டில் பாரிய அச்சுறுத்தல்கள் இருந்தன. ஊடகங்கள…
-
- 0 replies
- 172 views
-
-
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரி மீனவ கிராமமொன்றை உருவாக்கல், மஞ்சந்தொடுவாயில் மீன்பிடி படகுகளை திருத்தும் நிலையமொன்றை அமைத்தல், பூநொச்சிமுனையில் மீன்பிடி திணைக்களத்தின் உப அலுவலகமொன்றினை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களை ஆராய்ந்து சாத்தியவள அறிக்கை தயார் செய்வதற்காக கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் உயர்மட்டக்குழு கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் மட்டக்களப்பு…
-
- 0 replies
- 150 views
-
-
பன்னாட்டுப் போர்க்குற்ற அச்சுறுத்தல் நீங்கவில்லை பதறுகிறார் முன்னாள் தளபதி பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையிலிருந்து படையினரைக் காப்பாற்றியுள்ளோம், மின்சாரக் கதிரையிலிருந்து எல்லோரையும் காப்பாற்றியுள்ளோம் என்று ஆட்சியாளர்கள் கூறினாலும், பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை. இந்த அச்சுறுத்தல் எதிர்காலத்தில் இருக்காது என்ற உத்தரவாதத்தை ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்து அரசு பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்தார். பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராக இரு…
-
- 0 replies
- 190 views
-
-
விடுதலை புலிகள் மீதான தடை நீக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் மாத்திரம் தான் மேற்கொண்டுள்ளது. இலங்கை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இந்திய விமான நிலையம் ஒன்றில் வைத்து இன்றைய தினம்(31) பத்திரிகையாளர்களிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இன்னும் ஆட்கடத்தல், துஸ்பிரயோகம், கொலை என்பன தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு 10 பேர் என்ற அடிப்படையில் இராணுவ வீரர்கள் உள்ளனர். எப்படி சுதந்திரமாக வாழ முடியும்? வாழ்விடங்கள் எல்லாம் இராணுவ முகாம்களாக மாறியுள்ளது. எதற்காக போராட்டம் தொடங்கியதோ அந்த நோக்கம் இன்று வரையு…
-
- 0 replies
- 247 views
-
-
இன்று ஆரம்பித்துள்ள இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு இன்று மாலை சிறிலங்கா பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரிமாளிகையில் ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இன்று தனி விமானத்தில் கொழும்பை வந்தடைந்தார். இதனையடுத்து இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கினை சிறிலங்காப் பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். இந்தக் கருத்தரங்கில் சுஸ்மா ஸ்வராஜ், சிற…
-
- 5 replies
- 453 views
-
-
அஸ்கிரிய மகாநாயக்க தேரர் குழுவின் ஏற்பாட்டில் சர்வமதக் கூட்டம் யாழ்ப்பாணம் வந்துள்ள அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் குழு ஏற்பாடு செய்த சர்வமதக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, மாவட்டச் செயலர், சர்மவத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/24211.html
-
- 3 replies
- 330 views
-
-
பிரேசில் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது அந்த நாட்டில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டமைக்கான காரணம் குறித்து, தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றத்தை சுமத்தி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அவர் நாட்டிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் தமது பதவிக்காலம் முடிந்தே நாடு திரும்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்ததது. இந்த நிலையில் வாஷிங்டன் போஸ்டின் கேட் குரோனின் ஃபாமன் என்ற செய்தியாளர், இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ளார். இதன்படி, சர்வதேச குற்றவியல் நீ…
-
- 2 replies
- 494 views
-
-
வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தன, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொல…
-
- 5 replies
- 1.6k views
-
-
அமெரிக்க .உயர் மட்ட பிரதிநிதி நாளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அலிஸ் வெல்ஸ் நேற்றையதினம் இலங்கைக்கு வந்துள்ளார். மாநாட்டில் மட்டுமல்லாது பல்வேறு சந்திப்புகளிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். அந்த வகையில் காணாமல்போனோர்கள் தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தையும் பார்வையிட்டார். இந்நலையில், இலங்கைக்கு விஜ…
-
- 2 replies
- 419 views
-
-
இலங்கை அரசின் உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தினில் நடக்கவுள்ளது. இலங்கை அரசு தன் ஏவலாளிகள் ஊடாக திணிக்க முயலும் , ஒற்றையாட்சி முறைமையின் கீழான , வடக்கு கிழக்கு இணைப்பு அற்ற , ஒற்றையாட்சியின் கீழான பௌத்ததுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் மக்கள் பேரவை நடத்தும் பகிரங்க உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்திற்கு அனைத்து மக்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.யாழ்.மாவட்ட நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 05ம் திகதி செவ்வாய்கிழமையன்று காலை 9 மணிக்குநடக்க இருக்கின்றது. http://thuliyam.com/?p=77412
-
- 1 reply
- 419 views
-
-
பத்திரிகைகளின் கண்ணோட்டம் 31-08-2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 245 views
-
-
கூட்டமைப்புடன் சேர்ந்து தேர்தலில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் மன்னாரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் (நமது நிருபர்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இப்படியான நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களின் முயற்சிகளை முறியடித்து, அடுத்துவரும் உள்ளூராட்சி தேர்தலில் புதியதொரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மன்னார், சிலாவத்துறையிலுள்ள அரிப்பு பிரதேசத்தில் 700 குடும்பங்கள் பயன்ப…
-
- 0 replies
- 294 views
-