ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143349 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 29 08 2017 , 8PM
-
- 0 replies
- 395 views
-
-
யாழில் உணவகம் ஒன்றில் சாப்பாட்டிற்குள் புழு – தட்டிக்கேட்டவருக்கு தா்ம அடி யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் மதிய சாப்பாட்டிற்குள் புழு இருந்தமையால் அது தொடர்பில் சாப்பிட சென்றவர் விளக்கம் கேட்டதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த உணவகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டுள்ளார…
-
- 17 replies
- 1.8k views
-
-
சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம், மரக்குற்றிகளை கைப்பற்றிய போதிலுமு் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளதாக வவுனியா போதை பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் டி.எம்.எ.அனுர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பூந்தோட்டம் மகாரம்பைக்குளம் பகுதிக்கு சென்றபோது மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் முதிரை மரக்குற்றிகள் ஏற்றிய வாகனத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 199 views
-
-
குளங்களில் மீன்களை அள்ளிச்செல்லும் தென்பகுதி வாசிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் வற்றிய நிலையில் உள்ள குளங்களில் காணப்படும் மீன்களை தென்பகுதியிலிருந்து வருவோர் அத்துமீறி பிடித்துச் செல்கின்றனர் என அப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். மாவட்டங்களில் மழை வீழ்ச்சி குறைவாக காணப்பட்டதால் குளங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளன. கால்நடைகளுக்காக விடப்பட்ட தண்ணீரில் காணப்படும் மீன்களை தென்பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர் பிடித்துச் செல்கின்றனர். இதனால் குளங்களில் மீன்வளம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில குளங்களில் …
-
- 54 replies
- 3.8k views
- 2 followers
-
-
மீண்டும் ஒரு சர்வதேச தினத்தை துயரத்தோடு எதிர்கொள்கின்றோம்: இரா.சம்பந்தன் பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு எதிராகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக் கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளனர் என எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது மற்றுமொரு சர்வதேச தினத்தை மனக் கவலைகளோடும் துயரத்தோடும் நாம் எதிர்கொள்கிறோம். பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு எதிராகக் …
-
- 0 replies
- 299 views
-
-
கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம் Share இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சற்று முன்னர் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படையின் 21ஆவது தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடற்படையின் தற்போது தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/20325.html
-
- 17 replies
- 2k views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 29.08.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 193 views
-
-
20ஆவது திருத்தச்சட்டம் எடுக்கப்பட்டதால் களேபரமானது மேல் மாகாண சபை கூட்டம் ஆளும் தரப்பிடையே மோதல்; செங்கோல் துண்டுகளாக சிதறியது (ஆர்.ராம்) அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அனுமதி அளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற மேல்மாகாண சபையின் விசேட கூட்டத்தொடரில் உறுப்பினர்களுக்கிடையி லான வாதப்பிரதிவாதங்கள் வலுத்த நிலையில் செங்கோலை உறுப்பி னர்கள் எடுத்துச் செல்ல முயலவும் களேபரமான நிலைமை உருவானது. மேல் மாகாண சபையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கும் பிரேரணை 11 மேலதிக வாக்குகளால…
-
- 0 replies
- 292 views
-
-
50 விடுதலைப் புலிகளின் பெயர்களை சர்வதேச பொலிஸார் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் 50 விடுதலைப் புலிகளின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கள வாரப்பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. நோர்வேயில் இருப்பதாக கூறப்படும் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன், ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கர்தியன் மாணிக்கவாசகர், ஐரோப்பாவுக்கான புலிகளின் தலைவர் விநாயகம் என்ற சேதீபன்பிள்ளை விநாயகமூர்த்தி, புலிகளின் கப்பல் பிரிவின் பிரதானி பொன்னையா ஆனந்தராஜன், ஆயுத விநியோகப்பிரிவின் இரண்டாம் நிலை தல…
-
- 0 replies
- 322 views
-
-
சரத் பொன்சேகாவின் வீட்டில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் இலவசமாக வழங்கிய காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுக்கு உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நாராஹென்பிட்டி ஹிங் எல பிரதேசத்தில் அரசாங்கம், சரத் பொன்சேகாவுக்கு இலவசமாக வழங்கிய காணி அமைந்துள்ளது. போர் வெற்றிக்காக அவருக்கு அன்பளிப்பாக இந்த காணியை அரசாங்கம் வழங்கியது. அதேவேளை சரத் பொன்சேகாவின் வீட்டை புகைப்படம் எடுத்த இரண்டு தமிழ் இளைஞர்களை ந…
-
- 0 replies
- 526 views
-
-
20 க்கு எதிராக மனுத்தாக்கல் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று, நேற்று (28) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), அமைப்பே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது. அதனைச் சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, 20ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதற்கான இயலுமை.…
-
- 0 replies
- 512 views
-
-
என் மகனை தூக்கிலிட்டாலும் பராவாயில்லை : தாயின் உள்ளக்குமுறல் கல்கமுவ அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான மாணவியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஹர்ஷன சமன் குமாரவின் தாயார் தன்னுடைய மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் பரவாயில்லை என கல்கமுவ பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தான் எழுதிய கடிதத்தை கொலை செய்யப்பட்டுள்ள மாணவியின் பூதவுடலுக்கு முன்னால் வாசிக்குமாறு கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார். அக் கடிதத்தில் இத்தகைய குற்றத்தை செய்த குற்றவாளியின் தாயாக இருப்பதால் தான் வெக்கப்படுவதாகவும் அதனால் ஏற்பட்ட மன வேதனையை தன்னால் சொல்ல முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 488 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒன்றிணைய அழைப்பு யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கிடக்கும் அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னோரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதே…
-
- 0 replies
- 211 views
-
-
‘7 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன’ “நீதியமைச்சின் புள்ளிவிவரத் தகவல்களின் பிரகாரம், 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள், தீர்த்துவைக்கப்படாமல், இலங்கையில் உள்ளன” என்று, கொழும்பு பல்கலை க்கழகத்தின் சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையா ளர் பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார். எனினும், தற்போதைய அரசியல் மேடைகளில், விசேட நீதிமன்றம் நிறுவப்பட்டு, கடந்த ஆட்சியின் போது, அரச வளங்களை கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற கருத்துகள் மேலோங்கியுள்ளன. கொழும்பு மேல் நீதிமன்றங்கள் ஒவ்வொன்றில் மட்டும், தீர்த்துவைக்கப்படாமல், ஆகக்குறைந்தது 10 வழக்குகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறான வழக்குகள் சாதாரண வழக்குகளாகும். …
-
- 0 replies
- 323 views
-
-
வடக்கு மாகாண முதல்வரிடம் கொள்கையில்லை: யாழில் கடும் விசனம் பொதுவாக வடக்கு மாகாண சபை வினைத்திறனற்றுச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. எங்களுக்கு அனுபவம் குறைவாகவுள்ள காரணத்தால் திறம்பட இயங்க முடியாதுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சரும் ஒரு தடவை கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசியலாளர்கள், புத்திஜீவிகளால் கடும் விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச மார்க்சியக் குழுவின் ஏற்பாட்டில் "வடக்கு மாகாண சபையும் வரலாற்று அநாமதேயங்களும்" எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள D.M.I தனியார் கல்வி நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த…
-
- 1 reply
- 438 views
-
-
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்.! ‘வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான பூகோள போக்கு’ என்ற கருப்பொருளில் இடம்பெறும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இலங்கை இராணுவத்தினால் பூகோள பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான உரையாடலை ஏற்படுத்துவதற்காக 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு மாநாடு, உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இம்முறையும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் உள்நாட்டு…
-
- 3 replies
- 305 views
-
-
தொடருந்து நசுக்கி 10 மாடுகள் இறப்பு தொடருந்து மோதி நசுக்கியதில் 10 மாடுகள் உடல் சிதறி உயிரிழந்தன. இந்த விபத்தால் தொடருந்தின் பயணமும் சிறிது நேரம் தடைப்பட்டது.இந்தச் சம்பவம் மிருசுவிலுக்கும் பளைக்கும் இடையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. காலபோக பயிர்ச் செய்கை நிறைவடைந்ததால் மாடுகள் மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அவை மேய்ச்சலுக்காகத் தண்டவாளத்தைக் கடந்தபோது தொடருந்து வந்தது. அதன் சத்தத்தைக் கண்டு மாடுகள் மிரண்டு ஓடின. அதற்கிடையில் 10 மாடுகளை தொடருந்து மோதி நசுக்கிக் கொன்றது.விபத்தினால் தொடருந்தில் பெட்டிகளை இணைக்கவெனக் காணப்படும் சங்கிலித் தொடர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் மிருசுவில் தொடருந்து நிலை…
-
- 2 replies
- 365 views
-
-
பொறுப்புக்கூறல் தாமதமானால் பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கி எழுவார்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் காணப்படாவிடின் மக்கள் பொறுமை இழக்கும் அபாயநிலை காணப்படுவதாக ஸ்ரீலங்காவிற்கான தென் ஆபிரிக்கத் தூதுவர் ரொபினா பி.மாா்க்ஸ் எச்சரித்துள்ளார். கடும்போக்காளர்கள் சமூகத்தில் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா கடந்துவந்த பாதைக்கு மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார். கொழும்பில் வைத்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கேள்வி – 2015ல் ஜெனிவாவில் அறிக்கையொன்றை விடுத்த அரசாங்கம் உண்மையைக் கண்டறிவதற்காக தெ…
-
- 0 replies
- 262 views
-
-
சக்தி டிவி செய்திகள் 28 08 2017 , 8PM
-
- 0 replies
- 393 views
-
-
மக்களே அவதானம் ! இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது (ந.ஜெகதீஸ்) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்ச வெப்பநிலையை கொடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் வடக்கில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது, அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது. இதனால் நேரடியான வெப்பநிலை இலங்கைக்கு கிடைக்கப்பெறும். அதனடிப்படையில் இன்று நாவலடி, சாலை, பெரிய பரந்தன் ஆகிய இடங்களில் நண்பகல் 12.12 ற்கு சூரியன் உச்ச வெப்பநிலையை வ…
-
- 1 reply
- 341 views
-
-
''வாள்வெட்டுச் சம்பவங்களுக்காக நேரடியாகத் தலையிட்டேன்'' வடக்கில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகவும் அதற்காக நேரடியாக தலையிட்டதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று (27) தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது வருட நிறைவை முன்னிட்டு பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, வடக்கில் அண்மைக்காலமாக சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. அடிக்கடி வாள்வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றன. இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான் நேரடியாக தலைய…
-
- 2 replies
- 336 views
-
-
கண்ணிவெடிகளைப் புதைத்து கிளிநொச்சி மக்களை இலக்கு வைப்பது யார்? கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலைப் பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடு மீண்டும் முன்னெடுக்கப்படுதன் காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரியவரவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதனால் மக்கள் அவயவங்களை இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே அரசாங்க அதிபர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். https:…
-
- 0 replies
- 404 views
-
-
சாவுத்தண்டனைக்கு எதிராக அரசதலைவரைச் சந்திக்க அனுமதிக்க கோரி உணவுதவிர்ப்புப் போராட்டம் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட சாவுத்தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக அரசதலைவரைச் சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் என தெரிவித்து இன்று காலை 11.00 மணிக்கு குறித்த மரணதண்டனை கைதிகளின் குடும்பத்தினர் வவுனியா புளியங்குளத்தில் உணவுதவிர்ப்புப்போராட்டம் ஒன்றை முன்னேடுத்தனர். 2006 ஆம் ஆண்டு வவுனியா சுந்தரபுரத்தில் கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் சாவுத் தண்டணை தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளபோதும் தங்களுக்கு சரியான முடி…
-
- 0 replies
- 323 views
-
-
என் கணவன் மீது வெறும் பதவிக்காக குற்றத்தை சுமத்தாதீர்! தமது பதவியைத் தக்க வைப்பதற்காக வும் புதிதாகப் பதவியைப் பெறுவதற் காகவும் எனது கணவன் மீது பொய்க் குற்றச்சாட்டுச் சுமத்த வேண்டாம் என்று தார்மீகக் கோபத்துடன் சீறிச் சினந்தார் புளொட் அமைப்பிலிருந்து உயிரிழந்த ஊத்தை பவான் என அழைக் கப்படும் கந்தையா செல்வராசாவின் மனைவி செ.யோகராணி. ‘‘எனது கணவர் புளொட்டில் இருந்த காலத்தில் எவரையும் கொலை செய்யவில்லை. அது எனக்கு நன்கு தெரியும். தமது பதவியைத் தக்கவைக்கவும் புதிதாகப் பதவியைப் பெற்றுக்கொள்ளவும் சிலர் குழப்பமான – உண்மைக்குப் புறம்பான கதைகளை எனது கணவர் இறந்த நிலையில் கூறுவதை ந…
-
- 2 replies
- 608 views
-
-
நாரம்மல–பொல்கஹயாய பள்ளிவாசல் மீது அதிகாலை வேளையில் கல்வீச்சு தாக்குதல் (எம்.எப்.எம்.பஸீர்) நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல் கஹயாய பகுதியில் உள்ள மஸ்ஜித் அந் –நூர் ஜும்ஆ பள்ளிவாசல் மீது குழுவொன்றினால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடன் நடவடிக்கை எடுத்து ஐந்து பேரை இதுவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். ஒரே வாரத்துக்குள் அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகும் மூன்றாவது பள்ளிவாசல் இதுவெனவும்…
-
- 0 replies
- 525 views
-