ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
இராணுவத்தினர் மீது வாள்வெட்டு ; சந்தேகத்தின் பேரில் 6 பேர் பொலிஸாரால் கைது கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஊற்றுப்புலம் கிராமத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே குறித்த வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் காயமடைந்த இருவரில் ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மற்றையவர் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்…
-
- 1 reply
- 446 views
-
-
ஆவா குழு அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை – ஆளுனர் ரெஜினோல்குரே யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழு, அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைகப்பெறுகின்ற இளைஞர்கள் சிலர், இந்திய சினிமாவின் தாக்கத்தால் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் நடத்துகின்ற நிலையில், அதற்கு சமாந்தரமாக இவ்வாறான குழுக்கள் வன்முறைகளிலும் ஈடுகின்றன. அதேநேரம் வெளிநாடுகளில் இயங்கும் சில அம…
-
- 3 replies
- 604 views
-
-
இந்திய மீனவரைக் கட்டுப்படுத்தப் புதிய வழிமுறை – கடற்படை தளபதி இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவித்தார் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா. கண்டி, தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்து கொண்டுவிட்டு ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எல்லைத் தெளிவு இல்லாமலே இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் இலங்கை இந்திய எல்லையை அடையாளப்படுத்தி அதை மீறும்போது எச்சரிக்கைச் சமிக்ஞை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைக்காப் புதிய இயந்திரப் படகுகள் கடற்படையுடன் இண…
-
- 1 reply
- 320 views
-
-
முள்ளிவாய்க்காலில் கரும்புலிகளினதும் கடற்படையினரதும் இரு தொப்பிகள் மீட்பு! இலங்கையின் வடக்கே இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் கரும்புலி அனியினர் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ தொப்பி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்காலின் மேற்கு கடற்கரை பகுதியிலிருந்து இது மீட்கப்பட்டுள்ளதோடு இந்த தொப்பி இருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் இலங்கைக் கடற்படையினரின் தொப்பி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இலங்கையில் இறுதி யுத்தம் மிக உக்கிரமாக நடந்த பகுதியான முள்ளி வாய்க்காலிலிருந்து அவ்வப்போது இருதரப்பு இராணுவ எச்சங்கள் மீட்கப்பட்டுவந்தாலும் தற்பொழுது கரும்புலி அணியினரி…
-
- 0 replies
- 356 views
-
-
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில். இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 25.08.2017..!
-
- 0 replies
- 317 views
-
-
அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றம் : முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம் (ந.ஜெகதீஸ்) அநுராபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட் தந்தை சக்திவேல் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். குறித்த மூன்று அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து இன்றும் 5 ஆவது நாளாக நடைப்பெற்று வந்த நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அநுராதபுரசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளான மதியரசன் சுலக்ஷன், கணேஷன் தர்சன், ஆர். திருவருள் ஆகியோர்…
-
- 0 replies
- 292 views
-
-
இரு காரணங்களுக்காக தாய் தனது கருவை கலைக்க முடியுமாம் !!!!! இலங்கையில் இரு காரணங்களுக்காக தாய் தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க முடியும் என அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாலியல் வன்முறையால் உருவான கரு மற்றும் மரபணு பிறள்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக கொழும்பு சுகாதார கல்விப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது சிறப்பு சமூக வைத்திய நிபுணரான வைத்தியர் கபில ஜயரட்ண தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைத்திய நிபுணர் கருத்து தெரிவிக்கையில், “தாயொருவர் கர்ப்பம் தரித்து 20 வது வாரத்தில் சிசுவின் மரபணு பிறள்வை வைத்தியர்களால் இனங்காண முடியும் பிறப்…
-
- 0 replies
- 432 views
-
-
நாட்டில் பாரிய நெருக்கடி: 13 இலட்சம் பேர் பாதிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் 13 இலட்சத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடிக்குமாயின் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 1 reply
- 230 views
-
-
கடற்படைத் தளபதியிடம் நட்டஈடு கோரும் வசந்த கரனாங்கொட!! Share முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாங்கொட புதிய கடற்படை தளபதியிடம் 500 மில்லியன் நட்டஈட்டை கோரியுள்ளார் என்று கூறப்படுகின்றது. கடந்த 13ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக குறித்த நட்டஈட்டுக்கான கடிதத்தை அனுப்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தா கரனாகொடவின் கீழேயே திருகோணமலை கடற்படை முகாமில் கைதிகளுக்கான மத்தியநிலையம் ஒன்று இயங்கியது என்று புதிய கடற்படைத் தளபதியாக பதவியேற்ற ட்வைஸ் சின்னையா குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய பொய்யான அறிக்கையால் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள…
-
- 1 reply
- 329 views
-
-
ஊத்தை பவான் மட்டுமல்ல தூள் பவானும் புளொட்தான்! – கசியும் உள்வீட்டு இரகசியங்கள்!! Share ஊத்தை பவான் மட்டுமல்ல தூள் பவானும் புளொட்டில் இருந்தனர். மூன்றாவதாக வளர்ந்த பவான் என்பவரும் புளொட்டில் இருந்தார். புளொட்டில் இருந்தபோது அவரவர் செய்த வேலைகளுக்கும் குணங்களுக்கும் ஏற்ப பட்டப் பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறு தெரிவித்தனர் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள். பத்திரிகையாளர் சிவராமின் கொலையுடன் தொடர்புபட்டவர் புளொட் அமைப்பில் இருந்த ஊத்தை பவானே என்றும் மாகாண சபை உறுப்பினராக இருக்கும் பவான் எனப்படும் க.சிவநேசன் அல்லர் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
-
- 0 replies
- 620 views
-
-
அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர மஹிந்த சார்பு கூட்டு எதிர்கட்சியினர் கையொப்ப வேட்டையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags http://www.virakesari.lk/article/23545
-
- 3 replies
- 611 views
-
-
எல்லை நிர்ணயத்தில் தமிழர்களுக்கு அநீதி உள்ளூராட்சி திருத்தத்துக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லையாம் ‘‘போர் காரணமாக வெளிநாடு களுக்குச் சென்ற தமிழ் மக்களைக் கருத்தில் எடுக்காது எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது. இவற்றைக் கார ணம் காட்டி தேர்தலை பிற்போட விரும்பவில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகள் தீர்க்கப்படாமல் திருத்தச் சட்டவரைவுக்கு ஆத ரவு வழங்குவது தொடர் பில் தீர்மானிக்கவில்லை’’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுச் சுட்டிக்காட்டி னர். …
-
- 0 replies
- 187 views
-
-
‘விமர்சிப்பது பிடிக்கவில்லை’ சந்துன் ஏ. ஜயசேகர சட்டமா அதிபர் திணைக்களம், எவராலும் விமர்சிக்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்திணைக்களத்தை விமர்சிப்பவர்கள், அவர்களைத் தனியே விட்டு, சுதந்திரமாகவும் அழுத்தங்களின்றியும் அவர்கள் பணியாற்ற வழிசெய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார். எமது சகோதர ஊடகமான டெய்லிமிரருக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள், எந்தவிதக் குறைபாடுகளையும் நான் காணவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்மிக்க அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதி…
-
- 0 replies
- 175 views
-
-
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்கள் பதவியேற்பு நீதி அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரரளவும், புத்தசாசன அமைச்சராக, வலுவான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெபேராவும் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள், ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர். நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்த விஜேதாஸ ராஜபக்ஷ பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திகே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நீதி…
-
- 0 replies
- 224 views
-
-
உணவு ஒறுப்பிலுள் அரசியல் கைதிகள் இருவர் சிறை வைத்தியசாலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப் புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர் சிறைச்சாலையில் மருத் துவமனையில் நேற்றுக் காலை சேர்க்கப்பட்ட னர். மற்றையவர் சிறைச்சாலையில் உள்ள தூக்குத் தண்டனை கைதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வரும் தமக்கு எதிரான வழக்கை வேறு நீதி மன்றுக்கு மாற்ற வேண்டாம் எனக் கோரி, தமிழ் அரசியல் கைதிகள் மூவர் அநுராத புரம் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்…
-
- 0 replies
- 125 views
-
-
தாஜுதீன் கொலை வழக்கு: கைதாவாரா சட்ட வைத்திய அதிகாரி? ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் உடற் கூற்றுச் சோதனையை மேற்கொண்ட முன்னாள் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்ய முடியும் என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க முன்னிலையாகியிருந்தார். அவர் அறிக்கை ஒன்றையும் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசீம் தாஜுதீன் காணமல்போன உடல் பாகங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சமரசேகர குற்றவாளி என அடையாளம்…
-
- 0 replies
- 136 views
-
-
‘என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை’ முகத்திலடித்தாற்போல டெனீஸ் முதலமைச்சருக்கு நேற்றுக் கடிதம் ‘‘என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்க உங்களுக்கு (முத லமைச்சருக்கு) அதிகாரமில்லை. நானே இப்போதும் அமைச்சுப் பதவியில் தொடர்கின்றேன். அதில் தலையீடு செய் வதிலிருந்து விலகியிருங்கள்’’ இவ்வாறு வடக்கு மாகாண போக்குவ ரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளார். அமைச்சரவையில் வெற்றிடம் ஏற்பட வில்லை என்றும் தானே அமைச்சராகத் தொடர்கிறார் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கும், அமைச்சர் பா.டெனீஸ…
-
- 0 replies
- 221 views
-
-
வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்தில் முடிவுக்கு வராத குழப்பம் வடக்கு மாகாண அமைச் சரவைக் குழப்பங்கள் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பது உறுதியாகி யுள்ளது. புதிய அமைச்சர வையில் உள்ள இருவரின் பதவிகள் அந்தரத்தி லேயே தொங்கிக் கொண் டிருக்கின்றன. சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜி.குணசீலனுக்கு எதிராக ஒழுக் காற்று நடவடிக்கை எடுக் கப்படும் என்று ரெலோ வின் செயலாளர் ந.சிறி காந்தா அறிவித்துள்ளார். ‘‘டெனீஸ்வரனுக்கு ஒரு நீதி குணசீலனுக்கு ஒரு நீதியாக இருக்க முடி யாது’’ என்று அவர் குறிப் பிட்டுள்ளார். இரு வாரங் களுக்குள் தமது அமைப் புக் கூடி இது தொடர்பில் முடிவெடுக்கும் என்றார் அவர். …
-
- 0 replies
- 167 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பைத்தியம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே கட்சியின் தலைமை பதவியை ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தார். தற்போது தான் பதவியை வழங்கவில்லை என்கிறார். எனவே அவருக்கு பைத்தியம் என்றே கூறவேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். வெள்ளவத்தையிலுள்ள கண் வைத்தியசாலை ஒன்றினை மேற்பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்த லின் பின்னர் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவின் வீட்டில் சுதந்திரக் கட்சி முக்கியஸ் தர்களின் சந்திப்பொன்று இட…
-
- 0 replies
- 209 views
-
-
சரணடைந்த புலிகளை இராணுவம் ஏன் கொன்றது? சொல்கெய்மின் சந்தேகம்! (காணொளி) நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதானியுமான எரிக் சொல்கெய்ம் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் இறுதிப் போர் தொடர்பாகவும் தற்பொழுது சில முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து தனது அனுபவங்களை அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். சமாதான காலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீலங்காவின் சனாதிபதியாக இருந்த சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப…
-
- 5 replies
- 566 views
-
-
அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்திற்கு வடமாகாண சபை ஆதரவளிக்காது என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண சபை வளாகத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு திருத்தமானது நாடாளுமன்றத்துடன் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது என முதல்வர் விளக்கினார். இந்நிலையில், அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் ஊவா …
-
- 0 replies
- 304 views
-
-
யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பிரான்ஸ் சென்றிருந்தார். 2014ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்காக அவர் தனது உறவுக்கார பெண்ணான டேசி பொரஸ்ட் என்பவரையும் அந்த விஜயத்தில் இணைத்து கொண்டிருந்தார். அந்த விஜயத்திற்காக 2,508,0681.49 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது. அந்த பணத்தில் 153,608 ரூபாய் மது அருந்துவதற்கு மாத்திரம் செலவிடப்பட்டுள்ளதாக விலை பட்டியல் ஒன்று தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஷிரந்தி ராஜபக்சவினால் மே மாதம் 22ஆம் திகதி 45,864 ரூபாய் மதுப…
-
- 3 replies
- 480 views
-
-
குணசீலன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை? – குழப்பத்தில் வடக்கு அரசியல்!! வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது கட்சியைச் சேர்ந்த பா.டெனீஸ்வரனைப் பதவி நீக்கி, கட்சியைச் சேர்ந்த விந்தன் கனகரத்தினத்தை நியமிக்க வேண்டும் என்று ரெலோ கட்சி வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையை நிராகரித்த வடக்கு முதலமைச்சர் ரெலோ கட்சியைச் சேர்ந்த ஞா.குணசீலனை வடக்கு சுகாதார அமைச்சராக நியமித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சைத் தன் வசம் எடுத்துக் கொண்டார். சுகாதார அமைச்சராகச் செயற்…
-
- 6 replies
- 849 views
-
-
-
- 0 replies
- 337 views
-
-
முறிப்புக் குளத்தையண்டிய ஊற்றுப்புலம் எனும்காட்டுப் பகுதியில் 2015ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மீது வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து வனத்தை அழிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது. இதனையடுத்து மக்களின் வீடுகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து அச்ச நிலையில் வாழ்கின்றனர். சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, யுத்தம் காரணமாக 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த காணிகளற்ற 36 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் பதிவுகளை மேற்கொண்டனர். இதற்கமைவாக, குறித்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் முறிப்புக் குளத்தையண்டிய ஊற்று…
-
- 0 replies
- 264 views
-