ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
நல்லூர் திருவிழா முடிய வாள்வெட்டுக்குழுக்கள் மீது வேட்டை திருவிழா ஆரம்பம்! நல்லூர் திருவிழா நிறைவடைந்த பின்னர் வாள்வெட்டு குழுக்கள் மீதான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசந்துறையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் ஊடகவியலர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கில் உள்ள வாள் வெட்டுக்குழுக்கள் எங்களுக்கு பெரிய சவாலான விடயமல்ல என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நல்லூர் திருவிழா பாதுகாப்பு கடமையில் சு…
-
- 1 reply
- 339 views
-
-
கொக்கட்டிச்சோலையில் புனரமைக்கப்பட்ட நினைவுத்தூபி மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு சந்தியில் உள்ள நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு நேற்று (21) மாலை திறந்துவைக்கப்பட்டது. 1987 ஆம் மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரின் படை நடவடிக்கையின் போது படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் நினைவாக இந்த நினைவுத்தூபி 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்மாணிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு படுவான்கரை நோக்கிய படை நடவடிக்கையின் போது படையினரால் குறித்த நினைவுத் தூபி சேதமாக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை காலம் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்படாத நிலையிலேயே இருந்து வந்தது. யுத்தம…
-
- 0 replies
- 296 views
-
-
6 மாதங்களில் முழு அமைச்சரவையும் இராஜினாமாவா.? நல்லாட்சி அரசாங்கத்தின் தேவைகளுக்கு ஏற்றவகையில் செயற்படாத அரச அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே நாட்டின் பொதுச் சேவை ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்றுமுன்தினம் குருநாகல் பண்டுவஸ்நுவரவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது கல்வித்துறையில் உரிய முன்னேற்றத்தைக் காணமுடியாதுள்ளது. பல்க…
-
- 0 replies
- 372 views
-
-
உயர்தர இரசாயனவியல் வினாத்தாள் விவகாரம் ஆசிரியரின் தந்தையும் சகோதரரும் கைது (எம்.எப்.எம்.பஸீர்) இந்த வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை இரசாயனவியல் விஞ்ஞான பாட வினா பத்திரத்தின் பகுதி இரண்டில் கேட்கப்பட்டிருந்த வினாக்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை கம்பஹா மகளிர் பாடசாலை ஒன்றின் முன்பாக விநியோகித்ததாக கூறப்படும் இருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபருக்கு நேற்று முன் தினம் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்த கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் முதித புசல்லவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழான உதவி பொலிஸ் அத்தியட்சர…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையின் கடனை நானே செலுத்துவேன் – கோடிஸ்வரன் ஒருவர் அறிவிப்பு Share இலங்கையின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் செலுத்துவேன் என எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் கோடீஸ்வரர் ஒருவர் தெரிவித்துள்ளார். வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Toyota, Honda, Volvo, BMW, Aston Martin, Opel, போன்ற பல வாகனங்களின் சென்சார் உற்பத்தி செய்கின்ற இலங்கை தொழிற்சாலையின் உரிமையாளரான ரொஹான் பல்லேவத்த என்பவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரசதலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற தான் விரும…
-
- 0 replies
- 404 views
-
-
சுகாதார அமைச்சர் இன்றியே வடக்கு அமைச்சரவை இன்று வடக்கு மாகாண சபையின் இன்றைய அமைச் சரவைக் கூட்டத்துக்கு ப.சத்தியலிங்கத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. புதிய சுகா தார அமைச்சர் பதவியேற்கவும் இல்லை, ப.சத்தியலிங்கத்தின் பதவி விலகல் கடிதம் ஆளு நருக்கு கொடுக்கப்படவுமில்லை. இதேவேளை, அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அமைச்சரவையிலிருந்து நேற்றைய தினம் நீக்குவதாக ஆளுநருக்கு அறிவித்துள்ளபோதும், டெனீஸ்வரனுக்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று அமைச்சர் டெனீஸ்…
-
- 0 replies
- 514 views
-
-
27ஆண்டுகளாக கிட்டாத நீதி ; இனி அரசை நம்பிப் பயனில்லை கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இலங்கை நீதிப் பொறிமுறை ஊடாக 27 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் கிடைக்க வில்லை. நாம் பன்னாட்டு நீதிப்பொறி முறையே அவசியம் என்று வேண்டுகின்றோம். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் கைதின்பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்…
-
- 0 replies
- 323 views
-
-
தாய்வீடு திரும்பத் தயாராகின்றார் திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீளவும் வருமாறு அதன் பொதுச் செயலர் என்னை அழைத்துள்ளார். பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ‘தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து நான் ஆராய்ந்து வருகின்றேன். முக்கிய தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியான பின்னர் எனது அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பமாகும்’ என்று குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலராகப் பதவிவகித்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த அரச தலைவர் தேர்தலின்போது ஐக்…
-
- 0 replies
- 321 views
-
-
ஜனாதிபதி, பிரதமர் கலந்துகொண்டிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேறிய மனோ நேற்றிரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் இடைநடுவில் வெளியேறினார். இதுபற்றி இரவு தன் முகநூலில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும்போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது எ…
-
- 0 replies
- 220 views
-
-
இலங்கை வருகிறார் சுஷ்மா சுவராஜ் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வரவுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ்பாபு மற்றும் வெளிவுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இலங்கை விஜயத்தில் இடம்பெறவுள்ளனர். இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாக உள்ளது . இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான குழு இலங்கை வருகின்றது. இந்த விஜயத்தின்…
-
- 0 replies
- 181 views
-
-
தீ பற்றி எரியும் குப்பை மேடு : மட்டக்களப்பில் பதற்றம் மட்டக்களப்பு திருப்பெரும் துறை குப்பை மேட்டில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. தீ பரவலை கண்ட மக்கள் பொலிசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவலை வழங்கியத்தை அடுத்து தீயை அணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த தீ பரவல் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் இந்தக் குப்பைமேட்டில் ஏற்கனவே ஒரு தடவை தீவிபத்து ஏற்பட்டு பூரணமாக அணைக்க இருவாரம் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/23413
-
- 0 replies
- 165 views
-
-
படைத்தளபதிகளுடன் இன்று பாராளுமன்றில் சந்திக்கின்றேன்.! வடக்கு, கிழக்கில் படைத்தரப்புக்கள் நிலைகொண்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது குறித்து தீர்க்கமான முடிவொன்று எட்டப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின் ஈற்றில் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சில நிமிடங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பிரத்தியேகமாக உரையாடியுள்ளனர். …
-
- 0 replies
- 226 views
-
-
செப்டெம்பர் முதல் வார இறுதிக்குள் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வரைவு எதிர்வரும் செப்டெம்பர் முதல்வார இறுதிக்குள் வெளியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய அரசியலமைப்புக்கான இறுதி செய்யப்பட்ட முன்மொழிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமையன்று வழிநடத்தல் குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும் புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்த குழுவினர் புதிய அரசியலமைப்பு குறித்த உரிய தெளிவுப…
-
- 0 replies
- 207 views
-
-
வவுனியாவில் வாள்வீச்சு ; குடும்பஸ்தர் படுகாயம் வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் நேற்றிரவு வாள்களுடன் வந்த குழுவொன்று வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 11மணியளவில் குருமன்காடு காளிகோவில் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் முற்றாக சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவரை கண்மூடித்தனமாக வாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். …
-
- 0 replies
- 136 views
-
-
தற்போதும் சுதந்திரக் கட்சியின் தலைவர் நானே – மகிந்த கூறுகின்றார் தற்போதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவர் தானே என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. பத்திரமுல்லையில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய உள்நாட்டு இறைவரிச் சட்ட வரைபு ஐ.தே.கட்சியின் கொள்கையுடன் இணக்கமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு இணக்கமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://newuthayan.com/story/21569.html
-
- 1 reply
- 212 views
-
-
ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும். – ஐரோப்பிய ஒன்றிம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிற்றர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டள்ளது. நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தியே அந்த நீதி கிடைக்க வேண்டும் . அதில் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதே சமூகமோ பாதிக்கப்பட்டவர்களோ வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்ட…
-
- 2 replies
- 533 views
-
-
அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள் -நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய ஒருவரை, பணத்தைக் கட்ட தகுதியில்லை என்றால், பிச்சை எடுத்துக் கட்டுமாறு, உரத்த குரலில் தெரிவித்துள்ளார். இது மாத்திரமன்றி பல கிராமங்களில் அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் ம…
-
- 6 replies
- 721 views
-
-
கிளிநொச்சி குளக்கட்டுகளை ஆக்கிரமிக்கும் ஆலயங்கள் விவசாயிகள் குற்றச்சாட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல குளங்களின் அருகே உள்ள ஆலயங்களுக்கான அபிவிருத்திக்காக அண்மை நாள்களில் குளங்கள் மற்றும் குளக்கட்டு களை ஆக்கிரமிப்பதனால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைவதாக மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் விவசாயிகளினால் சுட்டிக்காட்ட ப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் விவசாயம் பாதிப்படைவதோடு நீரேந்துப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஆலயங்களின் இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.…
-
- 0 replies
- 228 views
-
-
காணாமல்போனவர் நடமாடும் சேவையின் மூலம் மீட்பு களுத்துறையில் 42 வருடங்களுக்கு முன் காணாமல்போனவர் பொலிஸ் நடமாடும் சேவையின் மூலம் தர்மபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் பொதுமக்கள் சேவை கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது இது ஒரு மாதம் தொடர்சியாக இடம்பெற்று வரும் நிலையில் தர்மபுரத்தில் வசித்து வருகின்ற (பெரேரா வயது– 68) என்பவர் நடமாடும் சேவையில் பயன்பெற சென்ற சமயம் அவர் தமது சொந்த இடம் களுத்துறை என தெரி வித்துள்ளார். அதனை அடுத்து எவ்வாறு அங்கி ருந்து வந்தீர்கள் என விசாரிக்கப்பட்டபோதுதான் 42 வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்ததாகவும் தமிழர்களுடன் தாம் வசித்து வருவதாகவும் …
-
- 0 replies
- 289 views
-
-
வட-கிழக்கு பெண்களே வறுமை காரணமாக, பணிப்பெண்களாக வெளிநாடு செல்கின்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசசெயலகத்தின் நடமாடும் சேவை இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் வெளிநாட்டிற்கு பணியாளர்களாக செல்லும் 1400 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும், இவர்களில் 900 பேர் பெண்களாக காணப்படுவதாக அமைச்சர் தலதா அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார். http://thuliyam.com/?p=76800
-
- 0 replies
- 432 views
-
-
கடும் இழுபறிக்குப் பிறகு விந்தனே ரெலோவின் தெரிவு Share ரெலோ சார்பில் வடக்கு மாகாண அமைச்சரவைக்கு க.விந்தனின் பெயரை அந்தக் கட்சி ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. இந்த நிலை யில் கட்சியின் நேற்றைய உயர்மட்டக் கூட் டத்தில் அவரைத் தெரிவு செய்ததற்கு எதிரப்பு வெளியிடப்பட்டது. எனினும் கடும் இழுபறிக் குப் பின்னர் விந்தனே தமது கட்சியின் தெரிவு என ரெலோவின் உயர்பீடம் இணக்கத்துக்கு வந்தது. வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோ சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில்…
-
- 1 reply
- 506 views
-
-
இனக் கலவரத்தை தொடர்ந்து 1984ம் ஆண்டு பண்டைய தமிழ் கிராமமான தென்னமரவாடி அழிக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் முற்றுமுழுதாக இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. பல தசாப்தங்களாக இடப்பெயர்ந்திருந்த இக் கிராமத்தவர் தமது பூர்விக நிலங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு 2010 ஆண்டுதான் அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வந்த சில குடும்பங்களும், தென்னமரவாடி பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்த காரணத்தால், அங்கு மீளக் குடியேறுவதிலும், அதனை மீளக் கட்டுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். “பல தசாப்தகால இடம்பெயர்வின்பின் மீளக் குடியேறி, தம் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப இக் குடும்பத்தினர் பெரும் ஆர்வம் காட்டினாலும், பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.” என்றார் தென்னமரவாடி கிரா…
-
- 3 replies
- 1.3k views
-
-
சக்தி டிவி செய்திகள் 21 08 2017 , 8PM
-
- 0 replies
- 409 views
-
-
அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்புத் தொடர்கின்றது! அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் மேற்கொண்டு வரும் உணவு ஒறுப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக நடத்த வேண்டும் என்றும், தமது வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக் கூடாது என்று தெரிவித்தும் அரசியல் கைதிகள் நேற்று உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்றும் அவர்களது பேராட்டம் தொடர்கின்றது. அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்து உணவைத் தவிர்த்தால் அவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக…
-
- 0 replies
- 295 views
-
-
பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்டவரே தமிழர்களின் தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலின் கீழ் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பலர் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான தகுதியுடையவர்கள் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். இதனால் தமிழர்களை வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் இடம்பெற வாய்ப்பு இல்லை எ…
-
- 0 replies
- 312 views
-