ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
இலங்கை நீதித்துறையில் கடும் பாதுகாப்புக்கு உரியவராக நீதிபதி இளஞ்செழியன் இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தியி…
-
- 0 replies
- 444 views
-
-
இன்றைய கூட்டத்தில் தெளிவான தீர்மானங்களை எதிர்பார்க்கின்றோம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அரசியலமைப்பு தயாரிக்கும் பிரதான வழிநடத்தல் குழு என்பன தொடர்பில் தெளிவான தீர்மானங்களை எதிர்பார்க்கிறோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். பிரதான வழிநடத்தல் குழுவுக்கு சில கட்சிகள் தமது யோசனைகளை இதுவரை முன்வைக்காமல் இருக்கின்றமை தொடர்பாக எமக்கு பாரிய சந்தேகம் எழுகிறது. எனவே இவை தொடர்பில் நாம் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பி எமது சந்தேகங்களை நிவர்த…
-
- 0 replies
- 227 views
-
-
ஜோதிடம் பார்த்த 19 இந்தியர்கள் உட்பட 27 பேர் கைது : காரணம் இதுவா.? குடிவரவு குடியகல்வு சட்ட விதி முறைகளை மீறிய 27 இந்தியர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உளவு மற்றும் விசாரணை பிரிவினரால் இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 27 பேரில் விஞ்ஞானமாணி பட்டதாரி ஒருவரும் உள்ளடங்குவதாக அறிய முடிகின்றது. குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஜோதிடம் பார்ப்பவர்களாகவும் 8 பேர் வர்த்தக நடவடிக்கைகளில் அல்லது வர்த்தக நிலையங்களில் சேவையாற்றியோரும் அடங்…
-
- 0 replies
- 556 views
-
-
கல் வீடுகளுக்கு விண்ணப்பியுங்கள் பொருத்து வீட்டுக்கு கொடுத்த விண் ணப்பங்களை மீளப்பெற்று, கல் வீட் டுக்கு மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 50 ஆயிரம் கல் வீடுகள் அமைக்குப் பணி விரைவாக நடைபெற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது. தேசிய ஒன்றிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக வடக்கு – கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது…
-
- 0 replies
- 415 views
-
-
கூட்டமைப்பு – மைத்திரி இன்று கொழும்பில் பேச்சு அரசமைப்புத் தாமதம் பற்றி ஆராயப்படும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை தொடர்பில் அரச தலை வர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பேசவுள்ளது. இதற்காக நேரம் ஒதுக் கித் தருமாறு கேட் டுப் பல நாள்களாகிவிட்டபோதும்இ அரச தலைவரைச் சந்திக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூட்டமைப் பின் நிலைப்பாட்டை அதன் தலை வர் இரா. சம்பந்தன் இறுக் கமாக இடித்துரைப்பார் என்று தெரி கிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளினதும் முக்கிய பிரதிநிதி…
-
- 0 replies
- 347 views
-
-
யுத்தத்தின் பின்னர், கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை – பிரதமர் ஏறாவூர் நகர சபையின் புதிய கட்டடம் இன்று பிரதமர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க… யுத்தத்தின் பின்னர், கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. அதனால், இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக எமது துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட திட்டங்களை முன்வைத்துள்ளோம். இதற்காக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து…
-
- 2 replies
- 328 views
-
-
பருத்தித்துறை கலவர சம்பவம்: பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் -செல்வநாயகம் கபிலன் துன்னாலை சம்பவத்தில், பொலிஸ் திணைக்களத்துக்கு 2 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான பீ.ஆர்.சமன்ஜெயலத் தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணற்காடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த வாகனத்தின் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். “இதனையடுத்து, பிரத…
-
- 0 replies
- 356 views
-
-
சக்தி டிவி செய்திகள் 20 08 2017 , 8PM
-
- 0 replies
- 306 views
-
-
எதுவும் மாறிவிடாது! இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பும் நல்லிணக்க முயற்சிகளும் அறுந்து நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், கடற்படைத் தளபதியாகத் தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி வந்திருக்கிறது. ரியர் அட்மிரல் ராவிஸ் சின்னையாவுக்கு அந்தப் பதவியை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார். 47 வருடங்களின் பின்னர், அதாவது போர் தொடங்கி முடிவதற்கு 17 வருடங்களுக்கு முன்பிருந்து, தமிழர் ஒருவர் இலங்கையின் கடற்படைக்குத் தளபதியாகியிருக்கிறார் என்கிற தகவல்கள் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டிருக்கி…
-
- 0 replies
- 491 views
-
-
மத்தள விமான நிலைய விவகாரம் : இந்திய கூட்டு முயற்சி யோசனை திட்டத்தில் இலங்கை அதிருப்தி லியோ நிரோஷ தர்ஷன் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவிற்கு இணையாக மத்தள விமான நிலையத்தில் வலுவாக கால் பதித்திட வேண்டும் என்ற எதிர்பார்ப் புடன் இந்தியா முன்வைத்த கூட்டு முயற்சி அபிவிருத்தித்திட்டம் தொடர் பான இந்திய யோசனைத் திட்டத் தில் தேசிய அரசாங்கம் அதிருப்தியு டன் உள்ளது. இந்நிலையில் இந் திய யோசனைத் திட்டத்தில் திருத்தங்க ளைக் கொண்டு வர இலங்கை தீர்மா னித்துள்ளது. இதனடிப்படையில் 40 ஆண்டுகால குத்தகைக் காலம் மற்றும் 70 வீத பங்கிற்கான இந்தியாவின் கோரிக்கையை 40 வீதத்திற்கு குறைத்தல் உள்ளிட்ட வர்த்தக நட…
-
- 2 replies
- 391 views
-
-
மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் ரணில் அமைச்சர் மனோ கணேசன் புகழாரம் (ஆர்.யசி) சிங்கள பெளத்த பெரும்பான்மையினர் மட்டுமல்லாது தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமைகளைப் பெற்று வாழவேண்டும் என நினைக்கும் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவேயாவார். புதிய அரசியலமைப்பின் மூலமாக சகல இன ஒற்றுமையையும் உறுதிப்படுத்த அவர் முயற்சிக்கின்றார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். புலிகளிடம் ஒப்பந்தத்தை எழுதிக் கொடுத்திருந்தால் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி ஆகியிருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரம…
-
- 7 replies
- 645 views
-
-
சவால் மிக்கதாகும் ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் சிறப்புக் குழு விரைவில் அமெரிக்கா செல்லும் லியோ நிரோஷ தர்ஷன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது மீளாய்வு கூட் டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன எதிர்வரும் 10 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற் றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலர் இந்த விஜயத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இரண்டு வருடகால அவகாசத்தின் அடிப்படையில் இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர் பில் மீளாய்வு கூட்டத்தொடரி…
-
- 0 replies
- 320 views
-
-
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துகையில் அரசை கவிழ்க்க எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள் அவர்களுக்கே சனி பிடித்த அரசு என்கின்றார் ராஜித ஜெ.ராஜன் சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவரும்போது இந்த அரசாங்கத்தை நெருங்கவோ அல்லது கவிழ்க்கவோ எவரும் எஞ்சப்போவதில்லை என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்தார். குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாலும், இலஞ்ச ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலும் அடிக்கடி ஆஜராகிக்கொண்டிருப்பவர்களுக்கே இது சனி பிடித்த அர சாங்கம். மாறாக நாட்டு மக்களுக்கல்ல எனவும் அவர் தெரிவித…
-
- 0 replies
- 204 views
-
-
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் கைது இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 777 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி எனவும் ஏனையவர்கள் சாதாரண சிப்பாய்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஒரே நாளில் அதிகளவானோர் கைது செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும் எனவும் இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித…
-
- 1 reply
- 450 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-20#page-8
-
- 0 replies
- 279 views
-
-
வடக்கு முதல்வருக்கே முடியவில்லை: அமைச்சர் ரமேஸ்வரன் சாடல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுக் கொடுக்க வடக்கு முதலமைச்சரால் கூட முடியாமல் போய்விட்டது என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய மாகாணத்தில் எந்த வித போராட்டங்களுமின்றி 742 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா - கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இடம்பெற்ற இந்து விழி கணித பாட பயிற்சிக் கையேடு வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் எம்.ரமேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். 2000த்திற்கும் அதிகமான பட்டதாரிகள…
-
- 0 replies
- 301 views
-
-
காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார் எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை, இன்று (20) திறந்து வைத்தார். மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக இருந்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின், சிறப்பு அதிதிகளாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்…
-
- 0 replies
- 430 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவுக்கே இந்த நிலை? தேர்தல் ஆணைக்குழுவின் உறுப் பினரான என்னையே பொலிஸார் மிக மோசமாக நடத்தும்போது சாதாரண தமிழ் மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். பொலிஸார் தெற்கில் பொதுமக் களை கெளரவமாக நடத்துகின்ற அதேவேளை வடக்கில் அவர்கள் வேறுவிதமாகச் செயற்படுகின்ற னர். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத் துள்ள கடிதத்தில், தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர் ரட்ணஜீ வன் கூல் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 16ஆம் திகதி எனது வீட்டுக்கு வந்த பொலிஸார் என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற பிடி ஆணையைக் காட்ட…
-
- 0 replies
- 652 views
-
-
ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை உள்ளூராட்சித் தேர்தல்களை தொகுதி ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இத்திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலப்பு முறையில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது, மேலும் உள்ளூராட்சி சபைகளில் தேர்தல்களின் வேட்பாளர் பட்டிய…
-
- 0 replies
- 209 views
-
-
அரசுக்கு தலையிடி கொடுக்கும் விஜயதாசவின் கதை முடியுமா.? நாளை தீர்க்கமான முடிவு நல்லாட்சி அரசாங்கத்துக்கு தலையிடியைக் கொடுத்து வந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். நாளை திங்கட்கிழமை அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தமது அரசியல் வாழ்க்கை குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதேவேளை நாளை திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையில் ஆளும் கட்சி எம்.பிக்களின் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திலும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறித்து ஆராயப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக ஆராய நி…
-
- 0 replies
- 357 views
-
-
அமைச்சுப் பதவியை ஏற்க ஜி.ரி.லிங்கநாதன் விருப்பம் தனது முடிவை முதல்வருக்கு அறிவித்தார் வடக்கு மாகாண சபை யின் வவுனியா மாவட்ட ஆளும் கட்சி உறுப்பி ன ரான ஜி.ரி.லிங்கநாதன்இ அமைச்சுப் பதவி வழங் கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதற்குத் தயா ராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் அவரை அமைச்சராக நியமிப் பதற்கு அவ ரது கட்சியான புளொட்டினுள் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் மாற்றியமைக்கப்படும்போதுஇ அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜி.ரி.லிங்கநாதனிடம்இ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார…
-
- 0 replies
- 354 views
-
-
இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ், சிறிலங்காவுக்கான நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது. தென்பிராந்திய தலைமையக நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் வி.கே.சிங், லெப். ஜெனரல் ஹரிசின் இராணுவ செயலர் கேணல் கேளசல் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையிலான பயிற்சி ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்து இந்தப் பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. சிறிலங்கா இரா…
-
- 2 replies
- 538 views
-
-
பிக் பொஸ்ஸாக மாறிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழ் அதிகாரிகளுக்கு எதிராகவும் அடாவடித்தனம் புரிந்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தற்போது தமிழ் மக்களுக்காக குரல் எழுப்புவதாக தன்னை காட்டிக் கொள்ள முற்படுவதாக கிழக்கு மாக…
-
- 2 replies
- 529 views
-
-
சக்தி டிவி செய்திகள் 19 08 2017 , 8PM
-
- 0 replies
- 348 views
-
-
கணக்குப்பிள்ளை பேசக்கூடாது கணக்குத்தான் பேசவேண்டும் வடக்கு மாகாண சபை கடந்த 4 ஆண்டுகளில் என்ன செய்தது? இந்தக் கேள்வி வடக்கு வாழ் மக்கள் அனைவரினதும் மனங்களிலும் இருப்பதுதான். 300க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியதைவிட உருப்படியாக வேறு என்ன செய்தார்கள் என்கிற கேள்வி பொதுவாக மக்களிடம் இருக்கவே செய்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கிறவர்களிடம் மட்டுமில்லை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்க்கிறவர்களிடம் மட்டுமில்லை, கூட்டமைப்பை மிகக் கடுமையாக ஆதரிப்பவர்களிடமும் இந்த விமர்சனம் இருக்கிறது. மாகாண சபைகள் அதிகாரமற்ற சபைகள் என்பதும் மக்கள…
-
- 0 replies
- 331 views
-