Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் சந்திரக் கிரகணம் எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை, இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/இலங்கையில்-சந்திரக்-கிரகணம்/95-201803

  2. ரவி­யால் சபை­யில் இன்று சூடு பறக்­கும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் குறித்து கடும் வாதப்­பி­ர­தி­வா­தங்­கள் நடக்­கும் On 14 mins ago அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தால் அர­சி­யல் களத்­தில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்ள நிலை­யில் இன்று நடை­பெ­றும் நாடா­ளு­மன்ற அமர்­வி­லும் அது குறித்து சூடான வாதப்­பி­ர­தி­வா­தங்­கள் இடம்­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நாடா­ளு­மன்­றம் இன்று பிற்­ப­கல் ஒரு மணிக்­குச் சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மை­யில் கூட­வுள்­ளது. அதற்கு முன்­னர் சபா­நா­ய­கர் தலை­மை­யில் கட்­சித் தலை­வர்­கள் கூ…

  3. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் திருகோணமலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் அரசாங்க மற்றும் ஆளுனர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான Margeret Curren , Chrish Law , Oliver Colvillie ஆகியோர் இந்…

  4. சக்தி டிவி செய்திகள் 07 08 2017 , 8PM

  5. முன்னாள் போராளிகள் வன்முறையிலீடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது : வடக்கு முதல்வர் முன்னாள் போராளிகள் உண்மையாகவே வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது , தெற்கில் இராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டார்கள் இராணுவம் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றில்லை அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் முன்னாள் போராளிகள் தொடர்புபட்டுள்ளனர் என பரவியிருக்கும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மு…

  6. ''அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படைத்தளமாகாது'' (லியோ நிரோஷ தர்ஷன்) சீன கடற்படை வீரர்களையோ, படையினரையோ இலங்கையில் நிறுத்தி வைத்திருக்கவில்லை. புலனாய்வுப் பணிகளும் இல்லை. எனவே இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் கேந்திர அமைவிடத்தை சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் யூ ஷியாங்லிங் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்திக்கு எமது பங்களிப்புகள் தொடர்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பே காரணமாகின்றது. பட்டுப்பாதையின் நலன்களை இலங்கையும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கிய உறுதிமொழிக…

  7. இராணுவத்திலிருந்து ஓடிப்போனவர்கள் குற்றம் புரியவில்லையா? இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதேபோல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், …

  8. ஆவா குழு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஆவா குழு தொடர்பான பிரச்சினை தலைதூக்கிய போது, ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே உள்ளதாகவும், ஆவா குழுவை அவரே உருவாக்கியதாகவும், ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்ததாகவும் அ…

  9. வவுனியா வடக்கு வலயத்தில் அதிபராக கடமையாற்றும் ஒருவர் மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டார். எனினும் அந்த அதிபர் தொடர்பில் இதுவரை கல்வித் திணைக்களமோ, பொலிஸாரோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த அதிபர் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையே அழைத்து வந்து துஸ்பிரயோகம் செய்ததாகவும், இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபருடன் முரண்பட்ட போதும், மாணவியின் எ…

  10. துன்னாலை மக்கள் முதலமைச்சரிடம் மனு! வடமராட்சி துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தி நீதியை நிலைநாட்டித் தர வேண்டும் என்று துன்னாலை பிரதேச மக்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்தனர். இன்று முதலமைச்சரைச் சந்தித்த மக்கள் தமது கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தனர். இது தொடர்பில் வடமராட்சிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/17297.html

  11. வடக்கு, கிழக்கு தமி­ழர்கள் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்­பையே கோரு­கின்­றனர் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் முதல்வர் விக்கி எடுத்­து­ரைப்பு (எம்.நியூட்டன்) வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மட்­டுமே இந்த பூமியின் சொந்­தக்­கா­ரர்கள். அதற்­கான அனைத்து தெளி­வான ஆதா­ரங்­களும் இருந்தும் பல தமிழ் தலை­வர்கள் சிங்­க­ள­வர்­களின் மனது புண்­பட்டு விடுமோ என்ற பயத்தில் இந்த உண்­மையை கூறாமல் விட்­டு­வி­டு­கின்­றனர் என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். மேலும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் பிரித்­தா­னிய அர­சாங்கம் மேற்­பார்வை செய்யும் வி தத்­தையும் பாராட்­டி­ய­தோடு தமிழ் சிங்­கள மக்கள் பற்­றியை அணு­…

  12. பிர­பல அமைச்­சரின் செயலர் உள்­ளிட்ட நால்வர் போதைப்பொரு­ளுடன் கைது விசேட அதி­ர­டிப்­படை நட­வ­டிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டின் பல பகு­தி­க­ளிலும் போதைப் பொரு­ளுடன் கூடிய ' பீச் பார்ட்டி' எனப்­படும் கடற்கரை களி­யாட்­டங்­களை ஏற்­பாடு செய்­வ­தாக கூறப்­படும் திட்­ட­மிட்ட கும்பல் ஒன்­றினை பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் கல்­கி­ஸையில் வைத்து கைது செய்­துள்­ளனர். சொகுசு ஜீப் வண்­டி­யொன்றில் போதைப் பொரு­ளுடன் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது விசேட அதி­ரடிப் படை­யினர் இவர்­ களைக் கைது செய்­துள்­ள­துடன், அந்த நால்­வரில் பிர­பல அமைச்சர் ஒரு­வரின் பிரத்­தி­யேக செயலர் ஒரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தாக பொலிஸ் விசேட அதி­ரடிப் படை…

    • 3 replies
    • 557 views
  13. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 07-08-2017 IBC

  14. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேசிய மாநாடு நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் மாநாடு இடம்பெற்றது. நிகழ்வில் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட.மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் சிறீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/17294.html

  15. முட்­டிக்­கொண்ட மாவை – சுரேஸ் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற சந்­திப்­பில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வும், ஈ.பி.ஆர்.எல். தலை­வர் சுரேஸ் பிரே­ம­ச்சந்­தி­ர­னும் கடும் வாய்த்­தர்க்­கத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி, புளொட், ரெலோ, ஈபி­ஆர்­எல்­எவ் ஆகி­ய­வற்­றின் தலை­வர்­கள் மற்­றும் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடை­யே­யான சந்­திப்பு முத­ல­மைச்­ச­ரின் இல்­லத்­தில…

  16. இங்கு வார்த்­தை­க­ளில் மட்­டும்­தான் நல்­லி­ணக்­கம்; செய­லில் ஏது­மில்லை நல்­லி­ணக்­கம் வார்த்­தை­க­ளில் மட்­டுமே உள்­ளது. செய­லில் எது­வும் இல்லை. நல்­லி­ணக்­கம் இத­யத்­தி­லி­ருந்து வர­வேண்­டும். இப்­போ­தும் தமி­ழர்­க­ளின் உரி­மைக் கோரிக்­கை­க­ளைப் பயங்­க­ர­வா­தம் என்ற பெய­ரால் நசுக்­கவே பார்க்­கின்­ற­னர். நாம் சிங்­க­ள­வர்­க­ளுக்கோ பௌத்­தர்­க­ளுக்கோ எதி­ரா­ன­வர்­கள் அல்­லர். ஆனால் சிங்­கள மக்­களே இல்­லாத இடங்­க­ளி­ல் விகா­ரை­கள் அமைக்­கப்­ப­டு­வ­தை­யும், இனப்­ப­ரம்­பலை மாற்­றி­ய­மைக்­கும் வகை­யில் சிங்­க­ள­வர்­கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தை­யும் நிச்­ச­யம் எதிர்க்­கின்­றோம். இவ்­வாறு நேற்­றுப் பொரிந்து தள்­ளி­னர் வடக்…

  17. கிளிநொச்சியில் தற்போது மழை – மகிழ்ச்சியில் மக்கள்!! Share கிளிநொச்சியில் தற்போது மழை பெய்கின்றது. கடும் வறட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் இந்தக் காலநிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடும் வெப்பமான காலநிலை தொடர்ச்சியாக நிலவியதால் குடி தண்ணீருக்கும், விவசாய தேவைகளுக்கும நீர் இன்றி மக்கள் பெரும் இக்கட்டான நிலையில் இருந்தனர். http://newuthayan.com/story/17156.html

  18. கிளிநொச்சியில் கடும் வரட்சியால் பயன்தரும் மரங்களும் அழியும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் பல பயன்தரு மரங்களும் கருகி அழிந்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்து வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் ஆரோகனநாதனின் காணியிலுள்ள நூற்றுக்கணக்கான காய்க்கும் எலுமிச்சை மரங்கள் நீரின்றி கருகி அழிவடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக எலுமிச்சை மரங்களுக்கான நீர்ப்பாசனம் இன்மையால் அனைத்து…

  19. ‘தலை நிமிர்ந்து வாழ வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் "நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். இவற்றை நாம் அடைவதற்கு நாம் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டுமென்றும் சம்மந்தன் குறிப்பிட்டார். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து…

    • 6 replies
    • 854 views
  20. பிரதேச வாதம் மதவாதம் பேசும் நேரம் இதுவல்ல ‘அண்­மைக்­கா­ல­மாக சில ஊட­கங்­க­ளி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் வரு­கின்ற செய்­தி­கள் கொடிய போரால் நொந்து போன மலை­யக உற­வு­க­ளின் மனதை மேலும் நோக­டிப்­ப­தாக அமைந்­துள்­ளன. பிர­தேச வாதம், மத­வா­தம் பேசும் நேரம் இது­வல்ல. ஏற்­க­னவே அர­சி­யல் ரீதி­யாக முரண்­பட்ட சமூ­க­மா­கக் காணப்­ப­டும் தமிழ் பேசும் மக்­கள் இவ்­வா­றான குறு­கிய வட்­டத்துக்குள் பிரிந்து சென்­றால் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வு­நோக்­கிய பய­ணத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­வி­டும்’’ என வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ப.சத்­தி­யலிங் கம் ­ தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: உல­கின் ஏனைய நாடு­க­ளு­டன் ஒப்­ப…

    • 2 replies
    • 342 views
  21. வடக்கு மாகாண அமைச்சு பத­வி­களை தூக்கி எறிந்­தது தமிழ் அர­சுக் கட்சி வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமிழ் அர­சுக் கட்­சி­யைப் பழி­வாங்­கும் வகை­யில் செயற்­ப­டு­கி­றார் என்­ப­த­னால் புதிய அமைச்­சர்­கள் நிய­ம­னம் செய்­யப்­ப­டும்­போது அதில் எந்­தப் பத­வி­யை­யும் பெறு­வ­தில்லை என்று முடிவு செய்­தி­ருக்­கி­றது தமிழ் அர­சுக் கட்சி. அந்­தக் கட்­சி­யின் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் நேற்று யாழ். நக­ரில்­கூடி இந்த முடிவை எடுத்­த­னர். சுமார் ஒன்­றரை மணி நேர விவா­தத்துக்குப் பின்­னர் இந்த முடிவு எட்­டப்­பட்­டது. தற்­போ­தைய அமைச்­ச­ர­வை­யில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­ச­ரான ப.சத்­தி­ய­லிங்­கம் பத­வி­யி­லி­ருந்…

  22. அல்வாயில் திடீர்ச் சுற்றிவளைப்பு – 18 பேர் கைது!! வடமராட்சி – அல்வாய் வடக்குப் பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புச் சோதனையில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகின்றது. நேற்று மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டி, கார், மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கைது தடுத்து வைக்கப்பட்டனர். அதேவேளை, துன்னாலைப் பகுதியில் இன்று கா…

  23. ஐ.நா.வின் இரண்டு நிபு­ணர்கள் விரைவில் இலங்கை வருகை இலங்­கையின் மனித உரிமை நிலை­மை கள் குறித்து மதிப்­பி­டு­வ­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு ஐக்­கிய நாடுகளின் இரண்டு விசேட நிபு­ணர்கள் இலங்கை வர­வுள்­ளனர். அத்­துடன் பல­வந்­த­மாக தடுத்­து­வைத்தல் தொடர்­பான செயற்­ கு­ழுவும் இவ்­வ­ருடம் இலங்­கைக்கு விஜ யம் செய்­ய­வுள்­ளது. சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தற்கும் பாது­காப்­ப­தற்­கு­மான விசேட அறிக்­கை­யாளர் மற்றும் உண்மை, நீதி நட்­ட­ஈடு, மீள்­நி­க­ழாமை தொடர்­பான விசேட நிபுணர் ஆகியோர் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­துடன் மனித உரிமை நிலை­மை­களை மதிப்­பீடு செய்­ய­வுள்…

  24. இலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்ஸன்:- சீனாவுடான தமிழர் அரசியல் என்பது பலவீனமான அல்லது அது பற்றி சிந்திக்க மறுத்த நிலைமையின் ஆபத்துக்கள் இப்போது உணரப்படுகின்றன. இந்தியாவையும் மேற்குலகநாடுகளையும் மாத்திரம் நம்பியிருந்த தமிழர் இராஜதந்திரத்தின் தோல்வி என்றும் கூறலாம். அ.நிக்ஸன் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் சீனாவுடன் செய்யப்பட்ட பின்னர் எழுந்துள்ள விமர்சனங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பற்றியதாகவும். சீனாவுக்கு கையளிக்கப்பட்ட பின்னர் துறைமுகத்தில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதன் படி இலங்கைக்கும் கிடைக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 70வீதம் 30 வீதம் எ…

  25. குத்தகைக்கு மத்தளை விமான நிலையம் மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசு என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். மத்தளை விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 40 லட்சம் ரூபாய். அதற்கான செலவு 250 லட்சம் ரூபா. ஒரு நாளைக்கு 3 விமானங்களே பறக்கின்றன. ஒரு மாதத்துக்கு கடன் செலுத்துவதற்கு மாத்திரம் 3 ஆயிரம் லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. வருடத்துக்கு 360 கோடி ரூபா வீதம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.