ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
சூசையின் வீட்டை தமிழ் மக்கள் பார்வையிட முடியாது Share தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிப் படை தளபதி சூசையின் வீடு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் அமைந்துள்ளது. குறித்த வீட்டை தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்புலிப்படை தளபதி சூசையின் வீட்டைப் பார்ப்பதற்கு தென்னிலங்கையில் இருந்து செல்லும் மக்களை அவர்கள் அனுமதிப்பதாகவும், தமிழ் மக்களை புறக்கணிப்பதாகவும் அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் குறித்த நிறுவனத்தின் செயற்பாடு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்க…
-
- 0 replies
- 994 views
-
-
ரவிக்கு எதிராக வாக்களிப்பேன் – மகிந்த ராஜபக்ச அயலுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வேன் என முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹிக்கடுவைப் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவிலாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வாக்களிக்காவிடின் தவறான அர்த்தப்படுத்தல் வெளியிடப்படும் என முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். http://newuthayan.com/story/16850.html
-
- 0 replies
- 426 views
-
-
பளை காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் – வனவள அதிகாரிகள் தெரிவிப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவிலுள்ள காணடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக வகுதி வன வள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தங்களது ஆளுகைக்குள் காணப்படுகின்ற காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனா். வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிப்பொருட்கள் மனிதர்களுக்கும், விலங்களும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே உரிய தரப்பினா் இவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். http://globa…
-
- 0 replies
- 365 views
-
-
கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க ராணுவத்துக்கு ரூ. 48 மில்லியன் நிதி கேப்பாபிலவில் உள்ள மக்களின் காணிகளில் இருந்து வெளியேறுவதற்காக இராணுவத்துக்கு மேலும் 48 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சர் சுவாமி நாதனின் மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பணத்துக்குக் காடு மண்டிய காணியையே இராணுவம் விடுவித்ததாக மக்கள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் மீண்டும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் …
-
- 0 replies
- 228 views
-
-
அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லையாம் – 12 இளைஞர்கள் அதிரடிப்படையால் கைது:- யாழ்.கோண்டாவில் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை எனும் குற்றசாட்டில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்ட போது, விசேட அதிரடிப்படையினரே கைது செய்தமையினால் அவர்களின் அனுமதியின்றி விடுவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்ததாக உறவுகள் தெரிவித…
-
- 0 replies
- 220 views
-
-
யாழ். பல்கலையில் 13ஆவது பன்னாட்டு மாநாடு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13ஆவது பன்னாட்டு மாநாடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. http://newuthayan.com/story/16711.html
-
- 3 replies
- 1k views
-
-
சக்தி டிவி செய்திகள் 05 08 2017 , 8PM
-
- 0 replies
- 363 views
-
-
மூவின மக்களுக்கும் பாகுபாடின்றித் தீர்வு ரணில் நேற்று உறுதி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடையவேண்டும் எனத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவு செய்த தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:என…
-
- 6 replies
- 548 views
-
-
அண்மையில் காத்தான்குடி படுகொலைகள் குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் சமூகவலைத்தளமொன்றில் வெளியிட்ட கருத்துக்கள் மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன, இது குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அய்யூப் அஸ்மின் அவர்களிடம் விளக்கம் கோரியபோது அவர் முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு 1990ம் ஆண்டு காத்தான்குடியிலே மேற்கொள்ளப்பட்டிருந்த பள்ளிவாயல் படுகொலைகள் குறித்து “1990 ஆகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடியிலே பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நாள்” என நான் ஒரு பதிவினையிட்டிருந்தேன். குறித்த பதிவிற்கு முகநூலிலும், ஏனைய இணைய ஊடகங்களிலும் பதில் பதிவுகள், விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனது கருத்…
-
- 2 replies
- 526 views
-
-
நந்திக்கடலின் வலதுபுறமாக மாத்திரம் 11 பாரிய இராணுவமுகாங்கள்! – குளோபல் தமிழ் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்றது. வற்றாப்பளையிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் நந்திக்கடலை அண்டிய பகுதியில் மாத்திரம் 11 இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவுப் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பகுதியை விடுவிக்குமாறு கோரி 156 நாட்கள் கடந்த நிலையில் மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். தமது நிலப் பகுதியை விடுவிக்கும்வரையில் போராட்டம் தொடரும் என்றும் கேப்பாப…
-
- 0 replies
- 442 views
-
-
அதிகாரிகள் மீது தாக்குதல் – மரம் அரிந்தோரை பிடிக்க முற்பட்டபோது சம்பவம்!! சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களைக் கைது செய்யச் சென்ற வனவள அலுவலர் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாதவர்கள், ஏனைய அலுவலர்களையும் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் களப் பயணம் மேற்கொண்ட வனவள திணைக்கள பகுதி வன அதிகாரி மற்றும் அலுவலர்கள் சென்ற போது மரம் அரியும் இயந்திரத்தின் ஒலி காட்டுப் பகுதியில் கேட்டதைத் தொடர்ந்து வனவள அலுவலர்கள் காட்டுக்குள் சென்றனர். ஜந்து மேற்பட்டவா்கள் மூன்…
-
- 2 replies
- 423 views
-
-
நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும் – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் நலனை கருத்திற் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாற்பது ஆண்டு கால பாராளுமன்ற வாழ்க்கையை முன்னிட்டு இன்று, பாராளுமன்றில் விசேட அமர்வுகள் நடத்தப்பட்டன. இந்த அமர்வுகளில் பங்கேற்ற போது இணைந்து செயற்பட வேண்டியதன் …
-
- 3 replies
- 337 views
-
-
பொலிஸாரை தாக்கியோரை புலிகள் என்று கூற முடியாது இப்படிச் சொல்கிறார் இராணுவத் தளபதி “யாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு நான் விரும்புவதில்லை. கடும் போக்குவாத குழு அல்லது இளைஞர் குழு தங்களது சமூகத் தேவைக்காக சில பிழைகளைச் செய்வதற்கு உந்தப்படலாம். அதன் அர்த்தம் விடுதலைப் புலிகள் எனப்படாது” இவ்வாறு இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார். பௌத்த மதத் தலைவர்களான மல்வத்துப் பீடம் மற்றும் அஸ்கிரிப்பீட மகாநாயகர்களை சந்திப்பதற்காக இரா…
-
- 1 reply
- 372 views
-
-
கொழும்பு வரும் சீனாவின் மிதக்கும் வைத்தியசாலை சீனக் கடற்படையின் மிக நவீன வைத்தியசாலைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை இலங்கைக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி, இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய வைத்தியசாலைக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/16628.html
-
- 0 replies
- 292 views
-
-
புரிந்துணர்வு உடன்படிக்கை தற்போது பொருத்தமாக இருக்கும்: சம்பந்தனுக்கு மாவை கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பான உடன்படிக்கையில் தமிழரசுக் கட்சி கைச்சாத்திட முன்வந்த சந்தர்ப்பத்தில், கூட்டுக்கட்சிகள் அதனை தாமதப்படுத்தியதால், அந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வரவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை பொருத்தமானதாக இருக்கும் என தாம் நம்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிய …
-
- 1 reply
- 537 views
-
-
யாழ். நிலவரம் குறித்து மைத்திரியுடன் பேச்சு விரைவில் நடத்தும் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தின் தற்போதைய குளறுபடிச் சூழல் குறித்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர – அவசிய பேச்சு நடத்தவுள்ளது. இதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு கூட்டமைப்பு கேட்டுள்ளது. எதிர்வரும் திங்கட் கிழமைக்குப் பின்னர் ஓரிரு தினங்களுக்குள் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு மாத காலத்தினுள் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸார் சுட்டு ஒருவர் இறந்தார். அதேபோன்று ஒருவர் சுட்டு பொலிஸ…
-
- 1 reply
- 239 views
-
-
பொலிஸார் மீது வாள்வெட்டு: மற்றொரு சந்தேகநபர் கைது கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொக்குவில் அம்பாள் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 30 ஆம்திகதி கோப்பாய் பொலிஸார் மீது கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/16589.html
-
- 0 replies
- 350 views
-
-
ரவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு? வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தனது பதவையை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள ஊடகமொன்று, இன்று (05) வௌியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (03) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது, அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் சிக்கலானதாகும். எனவே, இதற்கு சிறந்த தீர்வு பதவியை இராஜினாமா …
-
- 0 replies
- 181 views
-
-
எவருமே கைவிட்ட நிலையில் தெய்வத்திடம் கதறியழுத உறவுகள் ; தெய்வத்தின் பதில் தான் என்ன ? காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் இறுதியில் வற்றாப்பளை கண்ணகி அம்மனிடம் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, பொங்கி படையலிட்டு, தேங்காய் உடைத்து, கதறியழுது வேண்டினர். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 150 ஆவது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து 150 நாட்களாக வீதியில் தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தபோதிலும் இதுவரை எந்தவித பதில்களும் க…
-
- 0 replies
- 301 views
-
-
தீயது செய்வோரை அறிவுரைகளால் திருத்த முயலுங்கள் தீய செயல்கள், போதைப்பொருள் பாவனை, களவுகள் என்பவற்றில் ஈடுபடக்கூடிய மிகக் குறுகிய தொகுதியினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அறிவுரை கூறி திருத்த முயலுங்கள். அதுமுடியாவிட்டால் சட்டரீதியாகவாவது அவர்களைத் திருத்தி அவா்களையும் இந்தச் சமுதாய நீரோட்டத்தில் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். காக்கைதீவு பொதுச் சந்தைக் கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே …
-
- 0 replies
- 340 views
-
-
பிரதமரை வாழ்த்திய எதிரணியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற வாழ்க்கைக்கு அகவை 40 என்பதால், அவரை வாழ்த்தும் விசேட நிகழ்வு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் சில உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில், இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகைத் தந்திருந்த போது, எதிரணியின் உறுப்பினர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரதமரை வாழ்த்தும் முகமாக, சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்டிருந்ததாக தெரியவருகி…
-
- 2 replies
- 437 views
-
-
தமிழரசு கட்சியை தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. – ஸ்ரீகாந்தா கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து, ஏனைய மூன்று கட்சிகளும் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு தனி அணியாக செயற்படுவது என்பது எம்மால் ஏற்கப்படமுடியாத நிலைமையாகும். தமிழ் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய மூன்று அங்கத…
-
- 0 replies
- 270 views
-
-
சக்தி டிவி செய்திகள் 04 08 2017 , 8PM
-
- 0 replies
- 344 views
-
-
நன்றி கெட்ட முதலமைச்சர் ; சாடுகிறார் சிறிநேசன் கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்இ தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைக்காது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்தமை பிணக்க அரசியலை செய்வது போன்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞனமுத்து ஸ்ரீநேசன் தெவித்தார். எந்தவொரு இனமாக இருந்தாலும் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய முதலமைச்சரே தங்களுக்கு தேவையென அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரச தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் …
-
- 0 replies
- 423 views
-
-
நல்லூர் முத்து உள்ளிட்ட இருவர் கைது 'விக்டரை' கைது செய்ய 6 குழுக்கள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்கள் எனக் கருதப்படும் நல்லூர் முத்து உள்ளிட்ட இருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே மது உள்ளிட்ட இருவரைக் கைது செய்து 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ள நிலையிலேயே நேற்று யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்புக் குழு இவ்விரு சந்தேக நபர்களையும் கைது செய்தது. பொலிஸார் மீதான தாக்குதல் குற…
-
- 2 replies
- 542 views
-