Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசு வசமானது நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாலபே - சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்னாண்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நெவில் பெர்னாண்டோ, மருத்துவமனை, மாலபே, சைட்டம், http://www.virakesari.lk/ar…

  2. அவுஸ்திரேலிய தேசிய இரசாயன நிறுவனததால் கொழும்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரசாயன போட்டிப் பரீட்சை ஒன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இன்று நடத்தப்பட்டுள்ள நிலையில் . இந்த பரீட்சையை நடாத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் முஸ்லிம் மாணவிகளை பர்தாவுடன் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் அதனை அடுத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதன்போது பாடசாலைக்கு வெளியே பர்தாவை கழற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகள் பர்தாவு…

    • 11 replies
    • 1.1k views
  3. கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல் : பிரதமர் ரணில் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் (ஆர்.ராம்) உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தலை கலப்பு முறையில் எதிர்­வரும் நவம்பர் மாதம் இறு­தி­வா­ரத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை 60 சதவீதம் தொகு­தி­வாரி பிர­தி­நிதித்­துவ முறையையும் 40சத­வீதம் விகி­தா­சார பிர­தி­நிதித்­துவ முறையையும் கொண்ட கலப்­பு­மு­றை­யில் நடத்­து­வ­தற்கு அர­சியல் கட்­சி­க­ளி­டையே இணக் கம் ஏற்­பட்­டுள்­ளது. கலப்பு முறை­மையில் நடத்­தப்­படும் இத்­தேர்­தலில் பெண்­க­ளுக்கு 25 சத­வீதம் இட ஒதுக்­கீடு வழங்­கு­வ­தற்கும் ஏக­ம­ன­தான அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டுள்­ள­து. …

  4. லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறையில் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கமைய நேற்று மாலையளவில் அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஹால் தனசிங்க குறிப்பிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம்சுமத்தப்பட்ட லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, நேற்றையதினம் அதிகாலை ஊர்காவற்துறை மேலதிக நீதவான் முன் ஆஜர்படுத்த, லலித்…

  5. சு.க.வின் 18 எம்.பி.க்கள் விலகினாலும் அரசாங்கத்தை அசைக்க முடியாது.! சுதந்­திரக் கட்­சியின் 18 பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்கள் வில­கி­னால் கூட நல்­லாட்சி அர­சாங்கத்தை அசைக்க முடி­யாது. ரணில் விக்­கி­ர­ம­சிங்கவை பிர­தமர் பத­வியிலிருந்து நீக்க நினை த்தால் அது கன­வா­கத்தான் அமையும். நல்­லாட்சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் தொடர்ந்து பய­ணிக்­கலாம். இல்­லையேல் விலகிச் செல்­லலாம் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சூளு­ரைத்­தனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்க் கும் சதித்­திட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நேர­டி­யாக தலை­யிட்­டுள்ளார். ஆகவே …

  6. சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை.! இலங்­கையின் பாது­காப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்­ளிட்ட 7 நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. நாட்டின் தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு குறித்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஊட­க­மொன்று செய்தி வெளியிட்­டுள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, இலங்­கையின் பாது­காப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்­ளிட்ட 7 நாடு­க­ளி­லி­ருந்து வரும் சுற்­றுலாப் பய­ணி­களை தீவி­ர­மாக கண்­கா­ணிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக உள்­ளக அலு­வல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரி­வித்­தி­ருந்தார். இதன்­படி …

  7. “இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை“ இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாவறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது எதிர்ப்புக்கள் போராட்டங்கள் மூலமாகவே தென்னிலங்கை மீனவரின் அட்டூழியங்களை நிறுத்த முடியும். போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது பிரதேசங்களை ப…

  8. டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள் கூட்டு அரசிலிருந்து வெளியேறுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, கட்சிக்குள் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பயணத்துக்கு முன்னதாக, அவசர அவசரமாக நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சரான ஜோன் செனவிரத்தின, எதிர்…

    • 3 replies
    • 354 views
  9. ‘போரின் அழிவுகள், அவலங்களைப் பொருட்படுத்தாமல் கல்வியிலும் விளையாட்டிலும் முன்னிலை அடையவும்’ – வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு (யாழ்ப்பாணத்திலிருந்து நெவில் அன்தனி) போரின் அழி­வு­க­ளையும் அவ­லங்­க­ளையும் பொருட்­ப­டுத்­தாமல் எதிர்­கா­லத்தில் கல்­வி­யிலும் விளை­யாட்­டுத்­து­றை­யிலும் முன்­ன­ணியில் உள்ள மாகா­ண­மாக வடக்கு மாகாணம் திக­ழ­வேண்டும் என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி. வி. விக்­னேஸ்­வரன் கூறினார். கல்வி அமைச்சு, அமைச்சின் விளை­யாட்­டுத்­துறைப் பிரிவு ஆகி­யன நெஸ்ட்லே லங்கா நிறு­வ­னத்­துடன் இணைந்து நடத்­திய அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவின் ஓர் அம்­ச­மான நெஸ்­டமோல்ட் அரை மரதன் ஓட்டப் போட்­டியில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு …

  10. சந்திரிகாவும் களத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்தச் சந்திப்பின்போது, அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை, அரசாங்கத்துக்குள்ளே வைத்துகொள்ளும் முயற்சியில், ஈடுபடுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. …

  11. புதிய கூட்டாட்சிக்கு முயற்சி இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப் -படுத்துக்கின்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், அரசாங்கத்திலிருந்து விலகினால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களே, மேற்கண்ட முயற்சியில் களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. புதிய கூட்டாட்சிக்காக, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ம…

  12. ‘காணாமற்போன சட்டமூலத்தை திருத்தத்துடன் சமர்ப்பிக்க முஸ்தீபு’ பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட சகலரையும் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும், நிர்வகித்தலும்) பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலத்தை, திருத்தத்துடன் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கடந்த …

  13. காடுகளை அழித்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத்துக்கு எதிராக முல்லைத்தீவில் இன்று மாபெரும் பேரணி ! முல்லைத்தீவு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக்காடழித்து குடியமர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில் மாபெரும் போராட்டமொன்று நடாத்தப்படவுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கும் குறித்த பேரணி காடழிப்பு நிகழ்த்தபடவிருக்கும் கூளாமுறிப்பு பிரதேசம் வரை சென்று நி…

    • 17 replies
    • 606 views
  14. ‘கூட்டாட்சியை நீடிப்பதற்கு பரஸ்பர முயற்சி’ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டாட்சியைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு பல்முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகி, தனியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு, அரசாங்கத்திலிருக்கின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே, இந்தப் பரஸ்பர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்திலிருந்து வெளியேறு…

  15. நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறுவது உறுதி எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என, இன்று (16) மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹகீம், மனோ கணேசன், ரிஷாட் பதியூதின், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அநுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதன்போது, உள்ளூராட்சி தேர்தல் சட்டம…

  16. சக்தி டிவி செய்திகள் 8PM (16-07-2017)

  17. பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க காணாமற்போயுள்ளார் அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, பதவிக்காலத்தின் பின்னர் காணாமற்போயுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, ஏப்ரல் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவிருந்தார். பதவிக்காலம் நிறைவு பெற்றதன் பின்னர், பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க ஒரு மாத வெளிநாட்டு விடுமுறை பெற்றிருந்ததுடன், அவர் மீண்டும் மே …

  18. வட மாகாணத்தில் பாரிய சூழல் பிரச்சினையை உருவாக்கி வரும் சட்டவிரோத மணல் அகழ்வு சட்டவிரோத மணல் அகழ்வு, தற்போது வடமாகாணத்தில் பாரிய சூழல் பிரச்சினையை உருவாக்கி வருகின்றது. வடமாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கட்டுமானப்பணிகளுக்கான மணலுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணமாக குறைந்த விலையில் மணலை பெற்ற மக்கள், தற்போது பல மடங்கு விலைக்கு மணலை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 17,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு டிப்பர் மணலை தற்போது 38,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மன்ன…

  19. டெனீஸ்வரனையும் பதவி விலக்குகிறார் முதலமைச்சர் விக்கி வடக்கு மாகா­ணப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரனை, தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் (ரெலோ) கோரிக்­கைக்கு அமை­யப் பதவி நீக்­கம் செய்­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோ­ரைப் பதவி நீக்­கி­ய­தால் தோன்­றிய சர்ச்சை அடங்­கு­வ­தற்கு முன்­னரே, இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 13ஆம் திகதி, தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் செய­லா­ளர் ந.சிறீ­காந்­தா­வால் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­குக் கடி­தம் ஒன்று அனுப்­ப…

  20. பணத்திற்காக ஆட்களை கடத்திய இரண்டு குழுக்களை இயக்கினார் கடற்படை கப்டன் தசநாயக்க – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பேச்சாளார் ருவான் குணசேகர, வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவமானது பணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளார் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில வைக்கப்ப…

  21. மக்களின் கேள்வி! புதிய அர­ச­மைப்பு ஒன்றின் உரு­வாக்­கம் பற்­றித் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன் நீண்ட காலத்­தின் பின்­னர் வாய் திறந்­தி­ருக்­கி­றார். கிளி­நொச்சி நக­ருக்கு அண்­மை­யில் வருகை தந்­தி­ரு­ந்தார் அவர். அங்கு தனது கட்சி உறுப்­பி­னர்­கள், ஆத­ர­வா­ளர்­கள் இடையே பேசி­னார். அங்­கேயே புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் குறித்­தும் விளக்­க­ம­ளித்­தார். புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் விட­யத்­தில் கூட்­ட­மைப்பு விட்­டுக்­கொ­டுக்­கி­றது, தேர்­தல் அறிக்­கை­யில் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறாக அர­சோடு சேர்ந்து சோரம் போகி­றது என்ற கடும் விமர்­ச­னங்­க­ளைக் கூட்­ட­மைப்பு எதிர்­கொண்டு வரும்…

  22. ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு – கிளிநொச்சியில் சம்மந்தன்:- ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் முழுமையான உரை வருமாறு இன்றைய நிலைமை ஒரு மிகவும் சிக்கலான நிலைமை இந்த நிலையி…

  23. வ‌ட‌ மாகாண‌த்திலிருந்து ப‌ய‌ங்க‌ர‌வாத‌ புலிக‌ளினால் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளை மீள‌ குடியேற்ற‌ எடுக்க‌ப்ப‌ட்டு வ‌ரும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை சில‌ இன‌வாத‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளும் இன‌வாத‌ த‌மிழ் அமைப்புக்க‌ளும் எதிர்ப்ப‌தை உல‌மா க‌ட்சி க‌ண்டிப்ப‌துட‌ன் இத்த‌கைய‌ இன‌வாத‌ எதிர்ப்புக‌ளுக்கெதிராக‌ முஸ்லிம் இளைஞ‌ர் அமைப்புக்க‌ளும் அமைதிப்பேர‌ணிக‌ளை ந‌ட‌த்த‌ வேண்டும் என‌வும் உல‌மா க‌ட்சி வேண்டிக்கொள்கிற‌து. விடுத‌லைப்புலிக‌ள் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளிட‌மிருந்த‌ அனைத்து சொத்துக்க‌ளையும் கொள்ளைய‌டித்த‌ பின்ன‌ர் ப‌லாத்கார‌மாக‌ வெளியேற்றியிருந்த‌ன‌ர். அம்ம‌க்க‌ளின் காணி உறுதி ப‌த்திர‌ங்க‌ளைக்கூட‌ ப‌றிமுத‌ல் செய்திருந்த‌ன‌ர். இவ்வாறு வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் பிரார்த்த‌…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.