ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
பிரபாகரனை மீட்க முயற்சிக்கவில்லை – ரொபர்ட் ஓ பிளக் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்க முயற்சிக்கவில்லை என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். பிரபாகரனை மீட்பதற்கு முயற்சித்ததாக செய்யப்படும் பிரச்சாரங்கள் வெறும் கற்பனையே என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அமெரிக்க தாக்கி அழித்தது என்ற தகவல் பொய்யானது எனவும், எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நிலைகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை இலங்கைக் கடற்படையினருக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள…
-
- 5 replies
- 567 views
-
-
சம்பந்தரின் கிளிநொச்சி விஜயம் சொல்லும் செய்தி http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-14#page-4
-
- 2 replies
- 435 views
-
-
விக்கி மறுப்பாரானால் இன்னொரு தலைமை அது காலத்தின் தேவை என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன் தற்போதைய சூழலில் சரியான பாதையில் செல்வதற்கான தலைமையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிராகரிப்பாராக இருந்தால், இன்னுமொரு தலைமை அல்லது கூட்டுத்தலைமைகள் உருவாகக் கூடும். மாற்றுத் தலைமை காலத்தினுடைய தேவை. தலைமை என்பது ஒருவரை நம்பி இருப்பது அல்ல. மாற்றுத் தலைமையை வழங்கக் கூடியவர்கள் – அந்தச் சக்தி உள்ளவர்கள் மக்களை அரவணைத்து, அவர்களின் பிரச்சினைகளைக் கையாளக்கூடியவர்கள் தலைமைத்துவத்துக்கு வர முடியும். இவை மக்களின் கையில் இருக்கக்கூடிய விடயம். தனிநபர…
-
- 3 replies
- 461 views
-
-
இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது, கூழாமுறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு காணி வழங்கல் தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து இடை நடுவில் சபையை விட்டு வெளியேறினார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளியேறினார். http://uthayandaily.com/story/10734.html
-
- 25 replies
- 2.2k views
-
-
சிங்கள மக்களுக்குக் கல் வீடு தமிழர்களுக்குப் பொருத்து வீடு வவுனியா மாவட்டத்தில் இந்த நிலை வவுனியா மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களுக்கு 800 கல் வீடுகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு ஆயிரத்து 800 பொருத்து வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குற்றஞ் சாட்டப்பட்டது. வவுனியா மாவட்டத்தின் பொஸ்வேவாப் பகுதியில் உள்ள சிங்கள மக்களுக்கு 800 கல் வீடுகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் அமைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் 5.5 லட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் 2013ஆம் ஆண்டின் இறுதியில் வந்து குடியேற…
-
- 0 replies
- 342 views
-
-
மீள்சுழற்சியின் பின் எஞ்சும் குப்பைகள் கீரிமலை பள்ளத்தினுள் கொட்டப்படும் இதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்து யாழ்ப்பாணத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை, மீள் சுழற்சிக்கு உட்படுத்திய பின்னரும் எஞ்சும் இறுதிக் கழிவுகளை கீரிமலையில் உள்ள பெரும் பள்ளங்களில் கொட்டி நிரவும் திட்டத்துக்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு அரசின் சுற்றாடல் அதிகார சபை – வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் – வலி.வடக்குப் பிரதேச சபைச் செயலாளர் என்ற மூன்று தரப்புக்களுக்கு இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரிய எக்சிம் வங்கியின் நிதி உ…
-
- 0 replies
- 568 views
-
-
யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரியின் 110 வது ஆண்டு விழா யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை நாளை வியாழக்கிழமை கொண்டாடவுள்ளது. 1907 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மிசனினால் , ஆண் பிள்ளைகளுக்கான ஆங்கிலப்பாடசாலையாக யா/ புனித ஹென்றியரசர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரியின் 110 வது ஆண்டு நிறைவு விழா நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் அருட்பணி ஜோ.அ. யேசுதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது. இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பித்துப் புனித ஹென்றியரசர் திருச்சொரூப ஆசீர்வாத்துடன் விழா நிறைவடையவுள்ளது. http://globa…
-
- 2 replies
- 389 views
-
-
நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவை! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதியில் உள்ள தொடருந்துக் கடவையில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை சமிச்ஞைகளும் இயங்காதுள்ளன. முன்னெச்சரிக்கை ஒலி, சமிச்கை விளக்குகள் என்பன இயங்காதுள்ளதால் நடேஸ்வர கல்லூரி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளை இராணுவத்தினர் விடுவிக்காமல் வைத்துள்ள போதும் பாடசாலையைச் சூழவுள்ள உள்ள மக்கள் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வு நடைபெறுகின்றது. அந்தப் பகுதி மக்…
-
- 0 replies
- 229 views
-
-
வருகிறது எழுதாரகை ஊர்காவற்துறை, எழுவைதீவு, அனலைதீவு மக்களின் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள எழுதாரகை படகின் வெள்ளோட்டம் இன்றும் நாளையும், கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெறவுள்ளது. இதன் பின்னர், எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் படகு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 134 மில்லியன் ரூபா செலவில் எழுதாரகை படகு டொக்கியாட் நிறுவனத்தினால் கட்டப்பட்டு வருகின்றது. 40 ஆசனங்களைக் கொண்ட இந்தப் படகில் சுமார் 100 பேர் பயணிக்க முடியும். அத்துடன் 3 தொன் பொருள்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல முடியும். எழுவைதீவு கடற்கரைப் பகுதிக்கு சாதாரணமாக பெரிய படகுகள் கொண்டு செல்ல …
-
- 0 replies
- 442 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (14-07-2017)
-
- 0 replies
- 165 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 14-07-2017
-
- 0 replies
- 135 views
-
-
சித்திரவதை தொடர்பான புதிய அறிக்கையால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் (லியோ நிரோஷ தர்ஷன் ) நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தும் இலங்கையில் தொடர்ந்தும் தடுப்பில் உள்ளவர்கள் மீது சித்திரவதையும் பாலியல் வன்முறையும் இடம்பெறுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற சட்ட விரோத தடுப்புகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களின் அடிப்படையிலான அறிக்கையினை சர்வதேச உண்மை மற்றும் நீதிகள் குறித்த திட்டம் வெளியிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு படைகளின் சித்திரவதைகள் 2016/17 என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள குறித்த புதிய அறிக்கையானது 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளது. சர்…
-
- 1 reply
- 281 views
-
-
முன்னாள் எதிர்கட்சி தலைவரும் மூத்த தமிழ் அரசியல் தலைவருமான அமரர் அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் 28 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது. முன்னாள் எதிர்கட்சி தலைவரும் மூத்த தமிழ் அரசியல் தலைவருமான அமரர் அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் 28 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இந்த நினைவு தினம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமரர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் கடந்த 1989 ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 239 views
-
-
டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் விக்னேஷ்வரனுக்கு கடிதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவித்து வட மாகாண ஆளுநரிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்ட கடிதத்தில் வேறு சில உறுப்பினர்களோடு சேர்ந்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் பா.டெனிஸ்வரன் கையெழுத்திட்டமைக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும் மாறாகவும் பா.டெனிஸ்வரன் செயற…
-
- 0 replies
- 238 views
-
-
பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் கடந்த சில தினங்களாக ஓர் ஸ்தம்பித நிலை ஏற்பட்டிருப்பதைக் கருத்திற்கொண்டு, மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காமல், அரசியலமைப்பு சபை நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்தும் எண்ணத்துடன், ஓர் அரசியல் மூலோபாயத்தை வகுக்க வேண்டிய த…
-
- 0 replies
- 207 views
-
-
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு – 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவின் முத்தையன்கட்டுக் குளம் உட்பட காட்டாற்று வெள்ளம் நந்திக் கடல் ஊடாகவே பெருங்கடலைக் கலக்கின்றது. கடந்த முப்பது ஆண்டுகளாக போர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அரண்கள் மற்றும் நீரோட்டத்தினால கொண்டு வரப்பட்ட மண் அனைத்தும் நந்திக் கடலை நிர…
-
- 0 replies
- 223 views
-
-
போராளிகளை நினைவு கூறுவது சட்டத்திற்கு முரணானதல்ல – முல்லைத்தீவு நீதவானின் கட்டளையை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல். கடந்த 17மே 2017 அன்று வண பிதா. எழில் ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் இடம்பெறவிருந்த நினைவு நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் அனுமதித்து முல்லைத்தீவு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார். இறந்தவர்களின் பெயர்களை சிறிய கற்களின் மீது பொறித்து அவற்றை ஓர் இடத்தில் ஒருங்கு சேர்த்து அதை ஒரு நினைவிடமாக ஆக்கும் முயற்சிக்கு எதிராகவே அத்தடை வழங்கப்பட்டிருந்தது. அக்கற்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களின் பெயர…
-
- 0 replies
- 216 views
-
-
நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் முறைகள்பற்றி ஆராய ஐங்கரநேசன் தலைமையில் விசேட குழு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். நெடுந்தீவில் அண்மையில் வரட்சி காரணமாகக் குதிரைகள் இறந்துள்ளன என்ற செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்தே முதலமைச்சரால் இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், வை.தவநாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், நெ…
-
- 0 replies
- 209 views
-
-
தலதா மாளிகைக்கு பொலித்தீன், பிளாஸ்டிக் கொண்டுசெல்லத் தடை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு, இன்று முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகள் அற்ற வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 'பசுமை புண்ணிய பூமி' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/மலையகம்/தலதா-மாளிகைக்கு-பொலித்தீன்-பிளாஸ்டிக்-கொண்டுசெல்லத்-தடை/76-200609
-
- 0 replies
- 125 views
-
-
மனைவியைக் கொலை செய்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டார் கனடாவின் கியூபெக் மாநிலத்திலுள்ள மொன்றியல் நகரத்திலுள்ள குடியிருப்பில் வைத்து, தனது மனைவியைக் மனைவியை கொலை செய்த இலங்கையரொருவர், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தை, வியாழக்கிழமை நள்ளிரவு வந்தடைந்த அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர் என, விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தனது 21 வயது மனைவியான அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டில், கனடாவில் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் (31 வது) கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கழுத்தில் 20 முறை குத்தப்…
-
- 41 replies
- 2.8k views
-
-
சத்திரச் சந்திக்கு அருகில் நவீன அங்காடித் தொகுதி ரூ.1000 மில்லியன் ஒதுக்கீட்டில் அமைப்பதற்கு நேற்று அனுமதி கொழும்பு அரசின் பாதீட்டில் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபா நிதியில், யாழ்ப்பாணம் சத்திரச் சந்திக்கு அண்மையில் நவீன அடுக்குமாடி அங்காடித் தொகுதி அமைக்கப்படவுள்ளது. செம்மணியில் அமைப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தபோதும், தற்போது சந்திரச் சந்திக்குத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு அரசின் 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், …
-
- 11 replies
- 593 views
-
-
அபேராம விகாரையை பயன்படுத்த இடைக்காலத் தடை நாரஹேன்பிட்டி, அபேராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அபேராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதால், அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அபேராம-விகாரையை-பயன்படுத்த-இடைக்காலத்-தடை/175-200602
-
- 0 replies
- 199 views
-
-
’கேவலமான அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்’ எனது வவுனியா வருகைக்கு பயந்து, பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். காட்டுத்தர்பார் அரசியல் நடத்தினால்தான் தனக்கு அங்கிகாரம் கிடைக்குமென நம்பிக்கொண்டிருப்பவர்களின் பித்தலாட்டங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்பள்ளிக்குளம், கோவில்குளம் தமிழ் மகா வித்தியாலயம், மடுன்கந்தை சிங்கள மகா வித்தியாலயம், வவுனியா கல்வியியல் கல்லூரி, பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் சாலம்பைக்குளம் போன்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை…
-
- 1 reply
- 496 views
-
-
இனவாதத்தை சகிக்கமாட்டேன் மனித உரிமை விடயத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்படவேண்டும் என்கிறார் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் வலுவான தொடர்பினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது தொடர்பில் புதிய இராணுவ தளபதியுடன் பேசினேன். வடக்கு, கிழக்கு மக்களுடன் தொடர்பை வலுவாக்க அவர்கள் தயாராக உள்ளனர். இதன் காரணமாகவே மயிலிட்டி துறைமுகத்தை எம்மால் விடுவிக்க முடிந்தது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் அண்மைக்காலமாக நாட்டில் இனவாதம் செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்றன. நாம்…
-
- 0 replies
- 257 views
-
-
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி மைத்திரி மலரஞ்சலி பங்களாதேஷிற்கு பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பங்களாதேஷ் தேசிய வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களை கௌரவிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த இராணுவ நினைவுத்தூபி, தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சவார் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விஜயம் செய்த ஜனாதிபதியை, பங்களாதேஷ் இராணுவ நலன்புரி விடயங்கள் தொடர்பான அமைச்சர், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அ…
-
- 0 replies
- 416 views
-