ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
இனவாத முட்டுக்கட்டைகளை தாண்டி அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவோம் : அரசாங்கம் உறுதி;விக்கியின் நிலை கவலையை ஏற்படுத்துகின்றது என்கிறார் ராஜித (ரொபட் அன்டனி) இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு முட்டுக்கட்டை போடும் சிலர் எமது அரசாங்கத்துக்குள்ளேயே உள்ளனர். இந்த முட்டுக்கட்டைகளையும் வடக்கு மற்றும் தெற்கில் முன்னெடுக்கப்படும் இனவாதத்தையும் தாண்டி எமது அரசாங்க காலத்தில் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வை கண்டே தீருவோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வடக்கு மாகாண சபைக்காக ஒதுக்கப்…
-
- 0 replies
- 265 views
-
-
மயிலிட்டியின் பல்வேறு ஆலயங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்டுள்ள ஆலயங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது எமது மண்ணில் தெய்வங்களுக்கே இந்த நிலையா? என எண்ணத் தோன்றியது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் 14ம் ஆண்டு நிறைவு விழாவும், புதிய மேல்மாடிக் கட்டிடத் திறப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை(09) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கின்…
-
- 1 reply
- 424 views
-
-
மட்டக்களப்பில் தமிழர் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட மட்.தளவாய் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்கள், பெற்றோர் இன்று (7) காலை 9.30 மணியில் இருந்து 11 மணிவரை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலைக்கு முன் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்தத்தை ஆரம்பித்து பாடசாலை மைதானம் வரை சென்றனர். குறித்த பாடசாலையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குரிய காணியின் ஒரு பகுதியினை வேற்றினத்தார் அத்துமீறி சுற்றுவேலி அமைத்தமையை கண்டித்து மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஏறாவூர் தளவாய் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத…
-
- 20 replies
- 1.7k views
-
-
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு கடந்த புதன்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு முள்ளிவாய்க்கால் செல்வதற்கு பா.ஜ.கவின் மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது. சிறிலங்காவுக்கு கடந்த புதன்கிழமை தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மறுநாள் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகவும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைத் தனியாகவும் சந்தித்திருந்தார். அத்துடன் நல்லை ஆதீன குருமுதல்வரைiயும் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். பின்னர் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் …
-
- 3 replies
- 432 views
-
-
காவல்துறையின் ஆதரவுடன் மன்னாரில் முஸ்லிம்கள் அட்டகாசம் – பின்னணியில் றிசாட் பதியுதீன்! புனித கப்பலேந்தி மாதா ஆலய எல்லைக்கற்களை உடைக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞரை அமைச்சர் றிசாட் பதியுதீன் காவல் நிலையத்தில் சென்று அழைத்துச் சென்றமை தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த 6ஆம் நாள் மன்னார் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திற்குரிய எல்லைக்கற்கள் நடும் பணி நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் இடம்பெற்றது. அன்றைய தினம் மாலை அப்பிரதேசதில் வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் எல்லையிடப்பட்ட கற்தூண்களை அடித்து நொருக்கினர். பின்னர் 7ஆம் நாள் மதியம் மீண்டும் எல்லையிடப்பட்ட 16…
-
- 6 replies
- 760 views
-
-
மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் காணப்பட்ட 'புனித மிக்கேல் சம்மனசு திருச்சொரூபம்' இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் பங்குத்தந்தை ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் 'புனித மிக்கேல் சம்மனசு திருச் சொரூபம்' காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 7 replies
- 767 views
-
-
தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைந்தால் சிறந்தது என பொது மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்' எனும் தொனிப்பொருளில் கருத்துப் பகிர்வுறவாடல் கலந்துரையாடல் யாழ்.திருமறைக்கலா மன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.07) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்பினர், அரசியல் ஆய்வாளர்கள், மத தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அதன்போது, தமிழ் தலைமைகள் தான் தடுமாறுகின்றார்கள், தமிழ் ம…
-
- 1 reply
- 450 views
-
-
காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம் ஆபத்தானது – கோத்தபாய!! காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலம் முற்றாக மீளப் பெறப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கட்டம்பே ராஜோபரணாம விகாரைக்கு சென்ற அவர் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலத்திலுள்ள விடயங்கள், போரை முடிவுக்கு கொண்டுவர உயிரை துச்சமென மதித்து போராடிய இராணுவத்தினருக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளது. இரண்டரை வருடங்காக ஊழல் ஊழல் என்ற பெயரில், பழிவாங்கல் நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது. …
-
- 3 replies
- 316 views
-
-
டெங்கு நுளம்புகளை வேட்டையாட வருகின்றன "டொக்ஸொரின் கைட்ஸ்" என்ற மிகப்பெரிய நுளம்புகள் நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலைமையில் நாடளாவிய ரீதியில் 80 ஆயிரம் டெங்கு நோயாளர் கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 230 பேர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்கள் நிறைந்து காணப்படுவதுடன் இட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நி…
-
- 3 replies
- 933 views
-
-
புதிய அரசியலமைப்பு விவகாரம் : தெளிவுபடுத்தும் பிரதமர் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பினை தயாரிப்பது தொடர்பிலும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்பிலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அநுராதபுரம் மாவட்டத்தை மையமாக கொண்டு பெளத்த மாநாயக்க தேரர்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் எனினும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை அநூராதபுரம் விஜயம் மேற்கொண்டிருந்தா…
-
- 0 replies
- 375 views
-
-
இரண்டு வாரங்களில், காணி + பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலான இடைக்கால அறிக்கை -ஏ.பி.மதன் புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை, இரண்டு வாரங்களுக்குள் முற்றுப்பெறுமென விடயமறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களில், புதிய அரசமைப்புத் தொடர்பாக ஆராயும் வழிகாட்டல் குழுவின் கலந்துரையாடல்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றன. இந்தக் கலந்துரையாடல்களில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை, நாளை செவ்வாய்க்கிழமை இறுதி வடிவம் பெறச்செய்யத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்துள்ளதாக அறிய முடிகி…
-
- 0 replies
- 312 views
-
-
வழிநடத்தல் குழுவின் நாளைய கூட்டம் இரத்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் கூட்டம் நாளைய தினம் நடைபெற்றவிருந்த நிலையில் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான வழிநடத் தல் குழுவானது இடைக்கால அறிக்கை வரைபை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்துவதற்காக பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நாட்களிலும் தொடர்ச்சியாக வழிநடத்தல் குழுவின் அமர்வுகளை நடத்துவதென கடந்த வாரம் இடம்பெற்ற அமர்வுகளின் போது ஏகோபித்த இணக்கத்திற்கு வரப்பட்டிருந்தது. எனினும் தற்போத…
-
- 0 replies
- 307 views
-
-
பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள்? – கோத்தாவிடம் கடிந்த அனுநாயக்க தேரர் பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேதர் கேள்வி எழுப்பியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று கண்டியில் மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்தார். தம்மைக் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதாக அவர் மகாநாயக்க தேரர்களிடம் முறையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நேற்று மல்வத்த பீ்டத்துக்குச் சென்ற கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்த…
-
- 0 replies
- 315 views
-
-
மகிந்தவுடன் அரசு விளையாடினால் மக்கள் பதிலளிப்பர் மிரட்டுகிறது பொது எதிரணி கூட்டு அரசு மகிந்தவுடன் விளையாட முற்பட் டால் மக்கள் அதற்குத் தகுந்த பதிலளிப்பர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது நாட்டை ஆட்சி செய்த எல்லா அரசுகளும் புலிகளை அழித்து போரை முடித்து வைப்பதற்கு முயற்சி செய்தனர்.எவராலும் முடியவில்லை.ஆனால் 30வருடப் போரை மகிந்த வெறும் மூன்று வருடங்களில் முடித்து வைத்தார். மகிந்தவின் இந்தச் சேவையை முழு நாடு மட்டுமல்ல முழு உலகுமே ஏற்றுக்கொள்கின்றன.ஆனால்,புலம்பெயர் தமிழர்கள் மட்டும்தான் இதை ஏற்கவில்லை.இந்…
-
- 0 replies
- 273 views
-
-
புதிய அரசமைப்பை கொண்டுவருவதற்கே 62 இலட்சம் மக்கள் ஆணை வழங்கினர் புதிய அரசமைப்புத் தொடர்பில் எவரும் கருத்துத் தெரிவிக்கமுடியும். அவ்வாறே மகாநாயக்க தேரர்களும் கருத்துவெளியிட்டுள்ளனர். இது குறித்துப் பரிசீலிக்கவேண்டியது கட்டாயமானதாகும். ஆனால், 62 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்தது புதிய அரசமைப்பொன்றை கொண்டுவருவதற்காகவே. மக்களின் ஆணையின் அடிப்படையில் அரசு செயற்படும் என்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார். …
-
- 0 replies
- 237 views
-
-
முதற் சந்திப்பு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ்க்கும் இடையிலான சந்திப்பு, அண்மையில் நடைபெற்றது. இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ், தனது பதவிக்காலம் முடிந்து செல்ல உள்ளநிலையிலேயே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த ரொபட் நொஷ், அமெரிக்க நாடுகளில் இடம்பெறும் பயிற்சிகளில், எதிர்வரும் காலங்களில் கலந்துகொள்வது தொடர்பாகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும், இராணுவ தளபதிக்குத் தெரிவித்தார். கடந்த தினங்களில் எமது ந…
-
- 0 replies
- 196 views
-
-
‘வடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை வாக்குப் பலத்தால் தகர்க்க முடியும்’ -எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா வாக்குப் பலத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஆளுநர்களின் அதிகாரங்களைத் தகர்த்தெறிய முடியும் என, சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸால் காஸீம் தெரிவித்தார். இலங்கையிலுள்ள மாகாணசபைகளில் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் அதிகாரங்கள் மாத்திரம், ஆளுநர்களின் கைகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால், ஏனைய மாகாணங்களில் எந்த முதலமைச்சரும் எந்த ஆளுநரையும் கணக்கில் கொள்வதில்லை எனவும் அவர் கூறினார். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சனிக்கிழமை (8) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மே…
-
- 0 replies
- 202 views
-
-
‘தமிழரசுக் கட்சியை புனரமைக்க மாவைக்கு உரிமை இல்லை’ “தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்வதற்கான உரிமை மாவை சேனாதிராஜாவுக்கு இல்லை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், நேற்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை கூறியிருந்தேன். பல சந்தர்ப்பங்களில் அவரை ஆதரித்தே பேசி வந்துள்ளேன். ஒ…
-
- 0 replies
- 305 views
-
-
‘தனி நாட்டு கோரிக்கைக்கு தூபமிடுகிறார் சி.வி’ “வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமல் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம்” என, லங்கா சமஜவாய கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். யாழ். ஊடக அமயத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவேண்டும். பொருளாதார அழிவு ஏற்பட காரணம் மக்கள் மீதான போரே ஆகும். தமிழ் மக்களின் பிரச்சினை உட்பட அனைத்து…
-
- 0 replies
- 241 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைமை பற்றி சிங்கள மக்கள் மத்தியில் சாதகமான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள், இயற்கையை மிகவும் மதித்தவர்கள் என்பது பலரும் அறிந்ததே, அவ்வாறான தோற்றப்பாடு சிங்கள மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் சுமார் 1,50,000 ஆண்டு பழைமை வாய்ந்த அங்போபுர சுமேரியன் கல்லறை, புதையல் திருடர்களினால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த கல்லறையை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அந்தப் பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த கல்லறை பகுதியை விடுதலைப் புலிகளே அழிக்கவில்லை. ஆனால் தற்போது திருடர்களால் அழிக்கப்பட…
-
- 1 reply
- 552 views
-
-
தேவாலயக் காணி எல்லைத் தூண்களை நொறுக்கி சிலர் அடாவடி! பொலிஸார் பாராமுகம் எனக் குற்றச்சாட்டு மன்னார் பெரிய கரிசல் கிராமத்தில் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் நடப்பட்ட எல்லைத் தூண்கள் அடித்து உடைக்கப்பட்டன. அத்துடன் மனுதாரர் தரப்பின் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டதால் அங்கிருந்த உடமைகள் எரிந்து நாசமாகின என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்கள் கடந்த வியாழக்கிழமையும் நேற்றுமுன்தினமும் இடம்பெற்றுள்ளன. சந்தேக நபர்களைப் பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடர்பில் மேல…
-
- 21 replies
- 1.2k views
-
-
‘மகா சங்கத்தினருடன் இப்போதைக்கு பேச்சில்லை’ புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னரே, பௌத்த மகாசங்கத்தினரைச் சந்தித்து, விளக்கமளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தேசித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். “புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவரும் முன்னர், மகா சங்கத்தினரைச் சந்திப்பதில் அர்த்தமில்லை. ஆகையால், இடைக்கால அறிக்கை வெளிவந்ததும், அதிலுள்ள சரத்துகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் மகா சங்கத்தினரைச் சந்திக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்திருக்கிறது” என, அவர் மேலும் தெரிவித்தார் http://www.tamilmirror.lk/செய்திக…
-
- 0 replies
- 517 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (09-07-2017)
-
- 0 replies
- 277 views
-
-
தமிழிசையிடம் மகஜர் கையளித்த காணாமல் போனோரது உறவுகள் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனோரது உறவினர்கள் கையளித்த மகஜரை பெற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்த தமிழிசை நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த விஜயம் நேற்று இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று கொழும்பு திரும்பும் வழியில் கிளிநொச்சி கந்தசாமி கோயிலுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனோரது உறவினர்களை வீதியில் நின்று தமிழிசை பார்வையி…
-
- 2 replies
- 266 views
-
-
நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் சம்பந்தனே முடிவெடுப்பார்! கட்சியைப் பிழையாக வழிநடத்துகிறீர்கள், மக்களை பிழையாக வழிநடத்துகிறீர்கள் என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டினோம். நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் சம்பந்தனே முடிவெடுப்பார் எனக் கூறுவார். இவ்வாறான தலைமையின் கீழ் 16 வருடங்கள் 4 சுவருக்குள் பல விடயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். எமது இனம் என்னவானாலும் பரவாயில்லை. எமது கட்சியை எப்படி பலப்படுத்துவது என்ற பச்சைச் சுயநலத்தில் தமிழரசு கட்சியும்இ சம்பந்தனும் செயற்படுகின்றார்கள். கீழ்த்தரமான சர்வாதிகாரத்தின் கீழ் இன்றைக்கு 16 வருடங்கள் இருக்கின்றோம். காலத்தின் தேவை கருதி எமக்கான மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 429 views
-