ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
சக்தி டிவி செய்திகள் 8PM (08-07-2017)
-
- 0 replies
- 288 views
-
-
பா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய நேர்காணல் இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியூஸ்பெஸ்ட்டுக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கினார். காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/07/107021/
-
- 0 replies
- 254 views
-
-
கஜேந்திரகுமாரின் கருத்துக்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களுக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூறிவருகின்ற சில்லறைத்தனமான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளிடம் நீங்கள் புனர்வாழ்வு பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள…
-
- 3 replies
- 610 views
-
-
வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடை வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது தடையாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், இன்றைய (நேற்று) ஒழுங்குப் பத்திரத்தில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முக்கியமான தனிநபர்…
-
- 4 replies
- 546 views
-
-
வெளியாகியது சிறிதரனின் தொலைபேசி உரையாடல்
-
- 5 replies
- 1.4k views
-
-
கடற்படையின் கெடுபிடியால் பக்தர்களுக்கு அசௌகரியம்! கோப்புப் படம் பாதுகாப்பு அங்கி இல்லாததால் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்றவர்களை கடற்படையினர் தடுத்தனர். அதனால் நீண்ட நேரம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருக்க வேண்டியிருந்தது என்று மக்கள் குற்றஞ்சாட்டினர். கடற்படையின் இந்தக் கெடுபிடியால் தேர் உற்சவ நேரத்துக்கு செல்ல முடியாது மக்கள் மனக்கிலேசமடைந்தனர். வேலணைப் பிரதேச செயலர் உடன் எடுத்த நடவடிக்கையை அடுத்து அவர்கள் கடற்பாதைப் படகின் மூலம் நயினாதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/10286.html
-
- 0 replies
- 255 views
-
-
‘யாப்பில் குறைபாடுகள் இருப்பதாலேயே புதிய யாப்பை கோருகின்றனர்’ தற்போது நடைமுறையிலுள்ள யாப்பில் குறைபாடுகள் உள்ளமையினாலேயே மக்கள் புதியதொரு யாப்பைக் கோரி நிற்பதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அத்துடன், யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதகமான விடயங்கள் உள்ளமையினாலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன என்ற யதார்த்தத்தை நாம் புரிந்தகொள்ள வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார். அதிகாரப் பகிர்வு தொடர்பான தவறான தோற்றப்பாடு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால் நாட்டின் அனைத்து மக்களும் அதில் நன்மையடைவார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்…
-
- 0 replies
- 289 views
-
-
‘பிரச்சினைகள் தீரவில்லை’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் “யுத்தம் நிறைவடைந்தது. ஆனால், பிரச்சினைகள் தீரவில்லை. பயங்கரவாதம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ளது. இனவாதம் இன்னும் அதிகரித்துள்ளது” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும், மன்னாரில் நீர் பிரச்சினை காணப்படுவது போல் யாழ்ப்பாணத்திலும் காணப்படுகின்றது. அங்கு நீரை விநியோகிப்பதற்கான புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் - எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை, நேற்று (07) மாலை திறந்து வைத்து உரையாற்றகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்…
-
- 0 replies
- 236 views
-
-
‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை’ “இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை" என, புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இலங்கை உள்ளாகியுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில குழுக்கள் இப்படியான வதந்திகளை தமது நலனுக்காக பரப்பலாம். எவ்வாறிருப்பினும், அப்படியான ஒரு நிலை ஏற்படுமாயின், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் உள்ளனரெனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்த…
-
- 0 replies
- 216 views
-
-
மஹிந்தவுடன் 8 அமைச்சர்கள் சந்திப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் 8 பேர், நேற்று (07) மாலை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பின்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கிடையேயான திட்டங்கள் பல நிறைவுக்கு வரவுள்ளன. அத்துடன், நல்லாட்சியிலிருந்து வௌியேற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 18 பேர் தயாராக உள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன. இ…
-
- 0 replies
- 218 views
-
-
உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் முதலில், எமது மக்களது உணர்வு ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. அவை தீர்க்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கமானது உணர்வுப்பூர்வமானதாகவும், வலுவுள்ளதாகவும் அமைவதற்கு சாத்தியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வாழ்கின்ற த…
-
- 2 replies
- 368 views
-
-
300 பொருத்து வீடுகளுக்கு பயனாளிகளை தாருங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலருக்கு மீள்குடியேற்ற அமைச்சு கடிதம் 300 பொருத்து வீடுகளுக்குப் பயனாளிகள் பட்டியலைத் தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொருத்து வீட்டு அமைக்கவேண்டாம் என்று வடக்கு மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் விவாதம் கூட நடைபெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொருத்து வீடு அம…
-
- 0 replies
- 837 views
-
-
வடக்கு முதல்வரை சந்தித்தார் தமிழிசை! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடுக் கிளைத் தலைவர் தமிழிசைக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது. தமிழிசை தனிப்பட்ட பயணமாக நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். அவர் இன்று யாழ்ப்பாணம் வந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்களை அவர் இன்று சந்தித்தார். நேற்று தமிழிசையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்தித்திருந்தனர். http://uthayandaily.com/story/9830.html
-
- 2 replies
- 505 views
-
-
எதிர்கட்சி தலைவருக்கு எதிராக களம் இறங்கிய மட்டு. அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களை இடம்மாற்றினார்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரைஇடமாற்றம் செய்ய முற்பட்ட எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இரண்டு பிரதேச செயலாளர்களை மட்டு அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது பல்வேறு பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யவேண்டும் என எழுந்துள்ள மக்களின் அழுத்தத்தை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் உள்நாட்டு அலுவல்க…
-
- 1 reply
- 511 views
-
-
மாநாயக்க தேரர்களை மீறி அரசியலமைப்பை கொண்டுவர ஒருபோதும் இடமளியோம் வீதிக்கு இறங்குவோம்; அத்துரலியே ரத்ன தேரர் கூறுகிறார் (ஆர்.யசி) பெளத்த கொள்கை – கோட்பாடுகளை மீறி புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது. மாநாயக்க தேரர்களின் கருத்துக்களை மீறி புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமா யின் வீதியில் இறங்கி போராடவும் தயாராக உள்ளோம் என்று இலங்கை தேசிய மகா சங்க சபையின் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசியலமைப்பு குறித்த ஆலோசனை குழுவிலும்,வழிநடத்தல் குழுவிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு மாத்திரமே அர…
-
- 0 replies
- 357 views
-
-
சங்கபீட கோரிக்கையை ஏற்று சம்பந்தன் இறங்கி வரவேண்டும் பந்தை எப்படி போடப்போகின்றாரென பார்ப்போம் என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) சங்கபீடங்களுக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு செல்வதில் அர்த்தமில்லை. மாறாக சங்க பீடங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக கூட்டமைப்பு அறிவிக்க வேண்டும். தேர்தல் முறை மாற்றத்தினூடாக அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுக்கலாம் என சங்கபீடங்கள் கூறியுள்ளதால் அதனை பயன்படுத்தி அந்த திருத்தத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கி விட வேண்டும். எனவே தற்போது பந்து சம்பந்தன் கையில் உள்ளது. அவர் எப்படி விளையாடப் போகின்றார் என்பதே இங்கு முக்கியமான…
-
- 0 replies
- 496 views
-
-
புலம்பெயர் அமைப்புக்களினாலேயே தயாரிக்கப்படுகின்றது இறுதி வரைவு வழி நடத்தல் குழுவிலிருந்து விரைவில் விலகுவோம் என்கிறது கூட்டு எதிரணி (ரொபட் அன்டனி) எங்களுடைய எதிர்ப்புக்களுக்கு மத்தி யிலும் அரசாங்கமானது கூட்டமைப்புடன் இணைந்து நாட்டின் ஒற்றையாட்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படும் வகை யில் புதிய அரசியலமைப்பை தயாரித்து வருகின்றமையின் காரணமாக மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். அதனை நாங்கள் வரவேற்பது டன் தேரர்களுக்கு எமது ஆதரவையும் தெரிவிக்கின்றோம் என்று கூட்டு எதிரணியின் தலை வரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 293 views
-
-
கொக்குவில் இந்துவில் கற்றல் புறக்கணிப்பு கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முறையற்ற வகையில் அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைமறுதினம் திங்கட் கிழமை கற்றல் புறக்கணிப்புக்கு பழைய மாணவர் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலைக்கு அதிபர் சேவை தரம் 1இல் உள்ள ப.கணேசனை நியமிக்க ஆவன செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் பழைய மாணவர் சங்கம் கோரியுள்ளது. கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு நேற்றைய தினம் புதிய அதிபர் நியமிக்கப்பட்டதனை பாடசாலையின் பழைய மாணவர்கள் எதிர்ப்பதோடு இதனை ஆட்…
-
- 0 replies
- 561 views
-
-
10 ஆண்டுகளாகத் தடுப்பிலிருந்த அரசியல் கைதி நேற்று விடுவிப்பு 10 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் நேற்று விடுவிக்கப்பட் டார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயராம் இராமநாதன் 2007ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கொழும்புலிருந்து கட்டுநாயக்கா செல்லும் தொடருந்துப் பாதையை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியமை இராணுவத்தின் உயர் அதிகாரியின் நடவடிக்கைகளை வேவு பார…
-
- 0 replies
- 383 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிற்கு, பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் இராணுவத் ஜெனரல் தளபதி தயா ரட்நாயக்கவை பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமேந்து உற்பத்திசாலையில் 600 தொன் எடையுடைய இயந்திர சாதனங்களை அறுத்து பழைய இரும்பிற்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ராட்நாயக்கவை தவிர மேலும் மூன்று முன்னாள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்…
-
- 1 reply
- 302 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டம் சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதென சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது. பிரபலமான மடுத் தேவலாயம் மற்றும் வில்பத்து சரணாலயம் போன்ற மக்களைக் கவரும் பல இடங்களை மன்னார்மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாவட்டமாக, மன்னாரை மாற்றும வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடற்கரையுடன் இணைந்த 300 ஏக்கர் பகுதி அடையாளம் காணப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன எனவும் அச்செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thuliyam.com/?p=72949
-
- 0 replies
- 650 views
-
-
மயிலிட்டித் துறைமுகம் விடுவிப்பு என்பது ஒரு அரசியல் நாடகம் எனவும், அடுத்த தேர்தலின்போது மயிலிட்டி மக்கள் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் மயிலிட்டி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலிட்டித்துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துறைமுகம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது, மக்களின் குடியிருப்புப் பகுதி விடுவிக்கப்படவில்லை. அப்படியாயின் நாம் எப்படித் தொழில் செய்வது எனவும் அம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்? அத்துடன், விடுவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் இராணுவம் கம்பிக்கட்டை போட்டி வேலி அடைப்பதாகவும், மயிலிட்டிச் சந்தியையும், துறைமுகத்தையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் எந்தவொரு மக்களின் வீடுகளும் உள்ளடக்கப்படவில்லையெனவும் அவர்கள் கவ…
-
- 0 replies
- 251 views
-
-
''தமிழ், சிங்கள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மொழி மூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்" தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியும் சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் போதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வினை காண முடியும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தை சகவாழ்வினதும் நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிட வேண்டும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த கொண்டு வந்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/2…
-
- 0 replies
- 277 views
-
-
கோட்டாபய விரைவில் கைது? மகாநாயக்கர்களிடம் சரணடைந்த ராஜபக்ச ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே இன்று தெரிவித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க யுத்தத்தை வழிநடத்திய ஒரே காரணத்திற்காக தன்னை கைது செய்ய தற்போதைய அரசாங்கம் சர்வதேசம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் காலை அவசரமாக சிங்கள …
-
- 2 replies
- 589 views
-
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த குற்றத்துக்காக என்னை கைதுசெய்வதற்கென அரசாங்கத்தினால் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இன்னும் ஒருமாத காலத்தில் நான் கைது செய்யப்படுவேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பேன் என மக்கள் எதிர்பார்க்கும் காரணத்தினால் தான் இவர்கள் என்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று வெ ள்ளிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக் ஷ பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்…
-
- 0 replies
- 244 views
-