ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
யாழ் இந்துவில் குருதிக் கொடை முகாம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கமும் இன்ரறக்ட் கழகமும் இணைந்து நடாத்தும் குருதிக் கொடை முகாம் இன்று பாடசாலை குமரசாமி மண்டபத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு குருதி தானம் செய்தனர். http://uthayandaily.com/story/8272.html
-
- 3 replies
- 415 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (29/06/2017)
-
- 0 replies
- 296 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 29-06-2017
-
- 0 replies
- 168 views
-
-
மாணவர்கள் கொல்லப்படவில்லையென மஹிந்த ராஜபக் ஷவுக்கு கவலையா? (ரொபட் அன்டனி) அமைச்சர் ராஜித கேள்வி; பயங்கரவாதிகள் போன்று செயற்பட்டவர்களுக்கு என்ன செய்வது என்றும் சீற்றம் சுகாதார அமைச்சின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பயங்கரவாத தாக்கு தலின்போது மாணவர்கள் கொல்லப்பட வில்லையென மஹிந்த ராஜபக் ஷ கவலையடைகிறாரா என வின விய அமைச்சர் ராஜித சேனாரட்ண மஹிந்தவின் காலத்தில் ரத்துபஸ்வெலவில் இடம்பெற்ற நிகழ் வுகளை அவர் மறந்து விட்டாரா எனவும் கேள்வி எழுப்பினார். பயங்கரவாதிகள் போன்று நடந்துகொள்கின்றவர்களுக்கு எதிராக நாங்கள் மௌனமாக இருக்க முடியாது. மாவணவர்கள்... …
-
- 0 replies
- 343 views
-
-
பொதுபல சேனா எச்சரிக்கை..! (லியோ நிரோஷ தர்ஷன்) பொதுபல சேனா அமைதியான போக்கையே தற்போது பின்பற்றி வருகின்றது. ஆனால் விசர் நாய்களை கட்டிப்போடா விட்டால் பிரச்சினைகள் மேலோங்கும் என எச்சரித்துள்ள பொதுபல சேனா, சட்டவிரோதமான ஹலால் வரி பணம் முஸ்லிம் அமைப்புகள் ஊடாக ஐஎஸ்ஐஎஸ் போன்ற இஸ்லாம் அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்கின்றமை குறித்து அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொது செயலாளர் டிலந்த விதானகே குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. http://www.virakesari.lk/article/21308
-
- 1 reply
- 853 views
-
-
காயங்களை ஆற்றுவதற்கு நடவடிக்கைகள் அவசியம் (ஆர்.யசி) இணக்கப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் என்கிறார் தென்னாபிரிக்க முன்னாள் பிரதித் தலைமை நீதிபதி தீர்வுக்கான நகர்வுகளில் பல்வேறு தரப்பிலும் முரண்பாடுகள் எழுகின்ற போதிலும் பழைய காயங்களை சுகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. புதிய அரசியலமைப்பில் முரண்படக்கூடிய விடயங்களை விடுத்து இணக்கப்பாடு எட்டக்கூடியவற்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதித் தலைமை நீதிபதி மொசெனேகோ தெரிவித்தார். நல்லிணக்க நகர்வில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களை கொண்டு இலங்கைக்கு உதவ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்…
-
- 0 replies
- 358 views
-
-
தீராத சிக்கலாக தொடரும் விசாரணை வடமாகாண சபை முதலமைச்சர் தனது அமைச்சரவையில் உள்ளவர்களின் ஊழல் விசாரணையை ஆரம்பித்ததால் ஏற்பட்ட சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வரும் போலத் தெரியவில்லை. ஆளுக்கொரு நீதி என்பதாக அவர் நடந்துகொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் இழுபட்டுச் செல்லும் அறிகுறியே தெரிகிறது. வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அவர் புதிய விசாரணைக் குழு ஒன்றை நியமித்திருக்கிறார். இதற்கு முன்னர் நான்கு அமைச்சர்களையும் விசாரிப்பதற்கு அவர் நியமித்த குழுவின் …
-
- 1 reply
- 353 views
-
-
’மீளாய்வு செய்யும் வரையில் பதவிகளை பகிர்ந்தளித்தேன்’ -எஸ்.நிதர்ஷன் “மீளாய்வு செய்யும் வரையில், அமைச்சுகளின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே, அமைச்சுகளை பகிர்ந்து வழங்கியுள்ளேன்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், குறித்த பணிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு, கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும், எதிர்வரும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும், ,இன்று (29) காலை…
-
- 0 replies
- 204 views
-
-
அஸ்கிரிய,மல்வத்த பீடங்கள் தலையிட வேண்டும் அழிவடைந்து செல்லும் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு, அஸ்கிரிய பீடமும், மல்வத்தை பீடமும் தலையிட வேண்டும் என, மதகுருமார்களுக்கான குரல் அமைப்பின் தலைவர் முறுதெட்டுவே ஆனந்த தேரர் இன்று (29) தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அஸ்கிரிய-மல்வத்த-பீடங்கள்-தலையிட-வேண்டும்/175-199637
-
- 0 replies
- 231 views
-
-
‘சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள் இல்லை’ அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள், தற்போது இங்கு இல்லை என, மட்டக்களப்பு மங்களராய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட் அம்பிட்டியே சுமனரத்ன தேரர், இன்று (29) தெரிவித்தார். மேலும் “நாட்டில், யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க, தமிழ்த் தலைமைகள் முன்வருவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சவால்-விடுக்கும்-தமிழ்த்-தலைமைகள்-இல்லை/175-199638
-
- 0 replies
- 317 views
-
-
முதலமைச்சரையும், ஆளுநரையும் சந்தித்தார் இந்தியத் தூதுவர்! யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியத் தூதுர் தரன்ஜித் சிங் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் மதியம் 11.30 மணியளவில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியத் தூதுர் தரன்ஜித் சிங் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேவைச் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது. http://uthayandaily.com/story/8465.html
-
- 1 reply
- 393 views
-
-
புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர் எஸ்.நிதர்ஷன் வடமாகாண கல்வி மற்றும் பெண்கள் விவகார அமைச்சுகளுக்கான புதிய அமைச்சர்கள்இ இன்றுக் காலை பதவியேற்றுள்ளனர். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். இதற்கமைவாக, வடமாகாண கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் பெண்கள் விவகார அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி…
-
- 2 replies
- 1.5k views
-
-
அமைச்சர்கள் இருவரும் விசாரணைக்கு வராவிட்டால் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் – வடக்கு முதலமைச்சர்! அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகாவிட்டால், அவர்கள் மீதான விசாரணை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது அமைச்சர்கள் இருவர் மீதும் விசாரணை நடாத்தப்படுமெனவும், தேவையேற்பட்டால் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவி…
-
- 1 reply
- 377 views
-
-
வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே வட மாகாண சபையைக் குழப்ப முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையில் இடம்பெறும் விடயங்களுக்கும் தெற்கு அரசியலுக்குமிடையிலான தொடர்பு குறித்து முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். வட மாகாண சபையையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தினைத் திசை திருப்புவதற்கு, அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முனைந்து வருகின்றார்களோ…
-
- 11 replies
- 549 views
-
-
பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – சிறிலங்கா பிரதமர் பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – சிறிலங்கா பிரதமர் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிருப்பதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபை செயலகம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் தொடர்பான மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். “தற்பொழுது நாம் முன்…
-
- 0 replies
- 371 views
-
-
மதுபோதையில் இருந்த 6 சிறைக்காவலர்களே சரமாரியாக தாக்கினர் நீதி மன்றில் கண்ணீர் விட்ட கைதி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் முதலாம் சந்தேக நபரை சகோதர இனத்துவ கைதி ஒருவர் அநாகரீகமான முறையில் நடத்தியதனை அவதானித்த ஐந்தாம் சந்தேக நபர் சிறைக் காவலாளியிடம் முறையிட்டுள்ளார் இவ் வேளை பிரச்னையை சமரசம் செய்துவிட்டு சென்றுள்ளார் பின்னர் இரவு வேளை மதுபோதையில் வந்த ஆறு சிறைக்காவலர்கள் இறுதி யுத்தத்தில் தனது உடலிலும் காலிலும் காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்த ஐந்தாவது சந்தேக நபரின் காலில் இருந்த காயத்தில் சப்பாத்து காலால் மிதித்துக் கொண்டு ச…
-
- 1 reply
- 579 views
-
-
27 ஆண்டுகளின் பின் மயிலிட்டித் துறை திங்களன்று விடுவிப்பு இலங்கையின் மொத்த மீன்பிடியில் மூன்றிலொரு பங்கை தன்னகத்தே கொண்டிருந்த மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனோடு இணைந்த 54.6 ஏக்கர் நிலப்பரப்பு என்பன எதிர்வரும் 3 ஆம் திகதி மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளது. 27 வருட இடப்பெயர்வு வாழ்வின் பின்னர் மயிலிட்டி மக்கள் தமது சொந்த மண்ணை மிதிக்கவுள்ளனர். மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்படுகின்ற தகவல், யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதியால், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு நேற்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி …
-
- 3 replies
- 555 views
-
-
சமரச முயற்சிக்குப் பங்கம் ஏற்படுத்தமாட்டார் விக்கி அமைச்சர்கள் நியமனம் குறித்து மாவை.சேனாதிராசா நம்பிக்கை நாங்கள் மக்கள் முன்னால் பிளவுபட்டு நிற்க முடியாது. அதற்காகவே சமரச முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. சமரச முயற்சிக்குப் பங்கம் ஏற்படாமல் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் நியமனம் மேற்கொண்டமை தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோதே அவர் மேற…
-
- 0 replies
- 339 views
-
-
அமைச்சுப் பதவியை நிராகரித்தார் சிவாஜி - எஸ்.நிதர்ஷன் வட மாகாண அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். மேற்படி விடயம் குறித்து, யாழ். ஊடக அமையத்தில், நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், “கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் என்னை அழைத்து அமைச்சு பொறு ப்புக்களை ஏற்க முடியுமா? என கேட்டிருந்தார். அதன் பின்னரும் கேட்டார். ஆனால் அந்த கோ…
-
- 1 reply
- 334 views
-
-
வடக்கு-–கிழக்கை இணைக்கவே அரசு இனவாத நாடகம் நாமல் எம்.பி. குற்றச்சாட்டு கிழக்கு முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் வேற்றுமையை உருவாக்கி– கிழக்கு முஸ்லிம் களை வடக்கு-–கிழக்கு தமிழர்களுடன் ஒற்றுமைப்படுத்தி வடக்கு-கிழக்கை இணைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கிறது. அதற்காகவே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் தூண்டப்பட்டுள் ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த நாட்டில் பொது பலசேனா தேரர்கள் மாத்திரமன்றி யாராக இருந்தாலும் குற்றம் செய்திருந்தால் கைது செய்ய முடியும்.நாங்கள் இனவாதத்த…
-
- 0 replies
- 410 views
-
-
முல்லைக்கு அமைச்சுக் கொடுங்கள் முதலமைச்சருக்கு அறிவுரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாவிட்டால் விமர்சனங்கள் வரக்கூடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம், ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் க.சிவநேசன் ஆகியோர் சுட்டிக்காட்டினர். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கிய மாகாணசபை உறுப்பினர்கள் மாத்திரம், வடக்கு மாகாண முதலமைச்சரால் நேற்று அழைக்கப்பட்டனர். முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பமாகி இரவு 8 மணி வரையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே, மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த எம்.கே.சிவாஜில…
-
- 0 replies
- 220 views
-
-
முதல்வரின் அமைச்சு மீதும் விசாரணைவேண்டும் தெரிவுக் குழுவைக் கோரும் பிரேரணை சமர்ப்பிப்பு முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள், திணைக்களங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரிவுக் குழுவை அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரும் பிரேரணை அடுத்த அமர்வில் எடுத்துக் கொள்வதற்காகப் பேரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சுக்கள் மீது மாத்திரம் விசாரணை நடத்துவதற்கு 4 பேரைக் கொண்ட விசாரணைக் குழுவை …
-
- 0 replies
- 151 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (28/06/2017)
-
- 0 replies
- 581 views
-
-
காணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு 28 ஆண்டு சிறை: லஞ்சம் பெற்றுக் கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, காணாமல் போனவர் ஒருவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து மூன்றரை லட்சம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிலாபம் காவல் நிலையத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். குறித்த முன்னாள் அதிகாரிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள எட்டு குற்றச்சாட்டுக்களில் நான்கு குற்றச்சாட்டுக்கள் சந்தேக…
-
- 0 replies
- 286 views
-
-
காதலனால் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி பலி : இருவர் கைது, இருவர் வைத்தியசாலையில் - காரணம் வெளியாகியது சந்திவெளியில் கடத்தப்பட்டு விபத்தில் சிக்கி யுவதி மரணித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் நிரோ ஷன் பெர்னாண்டோ தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவமொன்றில் மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியை சேர்ந்த ஸ்ரீதரன் திவ்யசாகரி (வயது 19) எனும் யுவதி தலையில் படுகாயமேற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனும…
-
- 13 replies
- 1.7k views
-