ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
135.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றிவளைப்பின் போது 135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், அதன் பெறுமதி 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/21206
-
- 0 replies
- 244 views
-
-
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 பேரைக் கடற்படையினர் நேற்றுக் (24) கைது செய்துள்ளனர். இவர்களில் எட்டுபேர், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 2 டோலர் இயந்திரங்களுடன், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று சட்டவிரோதமான, மீன்பிடியில் ஈடுபட்ட, 6 இந்திய மீனவர்கள், நேற்று மாலை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னாருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-மீனவர்கள்-14-பேர்-கைது/175-199253
-
- 0 replies
- 236 views
-
-
2 அமைச்சர்களை விசாரிக்க புதுக் குழு நியமித்தார் விக்கி தலைவராக மீண்டும் தியாகேந்திரன் வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் மீது மட்டும் விசாரணை நடத்துவதற்கென முன்னர் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழுவைப் போன்ற நான்கு பேரை உள்ளடக்கியதான புதிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள தாகத் தெரியவருகின்றது. இந்த விசாரணைக் குழுவுக்கும், கடந்த விசாரணைக் குழு வுக்குத் தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தியா கேந்திரனே தலை வராக நியமிக்கப்பட் டுள்ளார் எனவும் அறிய முடிகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை செய்து தனக்கு அறிக்கை யிடுவதற்கு, முதல மைச்சர் சி.வி.விக் …
-
- 0 replies
- 361 views
-
-
தற்போதைய அரசாங்கத்திற்கு அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தற்போதைய அரசாங்கத்திற்கு கண்டி அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் கல்வி, கலாச்சாரம் ஆகியனவற்றை இல்லாமல் செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் இதற்கு எதிராக மாநாயக்கர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அஸ்கிரி பீடத்தின் உப பீடாதிபதி வெடருவே உபாலி தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பில் மாநாயக்க தேரர்களினால் மட்டுமே தீர்மானம் எடுக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கலகொடத்தே ஞானசார தேரரின் பிரச்சினை மட்டும் பிரச்சினை கிடையாது எனவும் கலை, கலாச்…
-
- 0 replies
- 279 views
-
-
மைத்திரி கூறிய யோசனையை நிராகரித்தார் ராணுவத் தளபதி கூட்டுப்படைகளின் தளபதி பதவியை ஏற்குமாறு இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவிடம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை அவர் நிராகரித்துள்ளார் எனப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த எயார்சீப் மார்ஷல் கோலித குணதிலக்க ஜுன் மாதம் 15ஆம் திகதி ஓய்வு பெற்றுள்ளார். அந்தப் பதவி இன்னும் வெற்றிடமாக உள்ளமைக்கு இராணுவத் தளபதியின் நிராகரிப்பே காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால் கூட்டுப் படைகளின் தளபதி அலுவலகத்தை மூடி விடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி…
-
- 0 replies
- 150 views
-
-
தாமதிக்காது காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குங்கள் : சர்வதேசம் வலியுறுத்தல் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஏகமனதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தை பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்திருந்தார். காணாமல் போனோர் பற்றிய உண்மைகளைக் கண்டறிவது மற்றும் தேவை ப்பட்டால் காணாமல் போனோருக்கான சான்றிதழ்களை வழங்குவது உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் சட்ட தேவைகளை பூர்த்தி செய்வது பணியகத்தின் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 283 views
-
-
13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வு நோக்கி பயணிப்போம் – கர்தினால் பேராயர் மல்கம் இனப்பிரச்சினை தீர்வாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச் சிங்கள சட்டம் இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். இல்லாததைப் பற்றி பேசுவதை விட இருக்கின்ற …
-
- 2 replies
- 434 views
-
-
உலக பணக்காரர் பட்டியலில் கொழும்பில் 170 பேர்! உலக பணக்காரர் பட்டியல் குறித்து பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம் நடத்தியுள்ளது. அதில், கொழும்பு நகரில் 170 கோடீஸ்வரர்கள் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கை முழுவதும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கூறும் பணக்காரர்கள் 5000 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.60secondsnow.com/ta/srilanka/in-the-list-the-world-richest-170-people-colombo-495800.html
-
- 2 replies
- 1k views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (23/06/2017)
-
- 0 replies
- 266 views
-
-
சம்பந்தன் காலத்தில் முடியாவிடின் ஒருபோதும் தீர்வைக் காண முடியாது (ரொபட் அன்டனி) இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் புரிந்துணர்வைக் கண்டு வியந்து பாராட்டுகின்றேன். எனவே சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற காலப்பகுதிக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டுவிடவேண்டும். அவ்வாறு சம்பந்தன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற காலப்பகுதியில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாவிடின் எமது வரலாற்றில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமலேயே போய்விடும் என்று அமைச்சரவையின…
-
- 3 replies
- 514 views
-
-
வட - கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியப்படாது சமஷ்டியும் கிடையாது என்கிறார் மனோ கணேசன் இலங்கை மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சமஷ்டி அரசியலமைப்பாக வரவேண்டும் என்பது சரி. இந்த விடயங்கள் நடக்காது. அதுவே உண்மையும் கூட. இந்த யதார்த்தத்தின் பங்காளியாகவே கூட்டமைப்பும் இருந்து கொண்டிருக்கிறதென அமைச்சர் மனோ கணேசன் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலை பலவீனமாக இருக்கின்றது. எனவே இருப்பதனை வாங்கிக் கொண்டு ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண் டும் என அவர் மேலும் தெரிவிக்கையில், முழுப் பாராளுமன்றமுமே இப்…
-
- 7 replies
- 869 views
- 1 follower
-
-
உலக பணக்காரர் பட்டியலில் கொழும்பில் 170 பேர்! உலக பணக்காரர் பட்டியல் குறித்து பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம் நடத்தியுள்ளது. அதில், கொழும்பு நகரில் 170 கோடீஸ்வரர்கள் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கை முழுவதும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கூறும் பணக்காரர்கள் 5000 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.60secondsnow.com/ta/srilanka/in-the-list-the-world-richest-170-people-colombo-495800.html
-
- 0 replies
- 592 views
-
-
கசப்பான யதார்த்தம் இலங்கையில் என்னதான் நல்லிணக்கம் பேசினாலும் சிங்கள, பௌத்த இனவாதத்தில் ஊறிப்போயிருக்கும் அதன் தன்மையை அவ்வளவு இலகுவில் மாற்றிவிடமுடி யாது. தாம் ஊறியிருப்பது சிங்கள, பௌத்த இனவாதத் திற்குள்தான் என்பதை உணர முடியாதவர்களாகவே பலர் அதற்குள் ஊறித் திளைத்திருக்கிறார்கள் என்பதுதான் மிகக் கொடுமை. இதற்கு மிகச் சிறந்த பிந்திய உதாரணம் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்திருக்கும் கருத்து. சிங்கள அரச இயந்திரத்தின் அச்சாணி எது என்பதை அச்சொட்டாக வெளிப்ப டுத்து…
-
- 0 replies
- 363 views
-
-
மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழு விசாரணையை எதிர்கொள்வதற்குத் தயார் அமைச்சர் டெனீஸ்வரன் உறுதி “சுயாதீனமான – – சட்டவலுவுள்ள -– மாகாண சபை உறுப் பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழு விசாரணைக்கே முகம் கொடுக்கத் தயாராகவுள்ளேன். இதனை உள்ளடக்கி விசாரணைக் குழு அமைக்கப்பட்டதும் எனது விடுப்புக் கடிதத்தை, தேவை ஏற்படின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பதவி விலகல் கடிதத்தைக்கூட கொடுப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்” இவ்வாறு வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர்…
-
- 1 reply
- 307 views
-
-
முழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை கிளிநொச்சி முழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நாள்தோறும் நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலையில் கிளிநொச்சியில் இருந்து முழங்காவிலுக்கு இடையில் சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து பஸ்களும் மருத்துவமனை வரை வந்து செல்லக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளரிடம் மன மூலமும் நேரடியாகவும் இப்பகுதி பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, நாச்சிக்குடா, கரியாலைநாகபடுவான், இரணைமாதாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் முழங்காவ…
-
- 0 replies
- 203 views
-
-
இனத்துக்காகப் போராடி 100 நாள் உயிர் வாழ்ந்தால் போதும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கேசரிக்கு பேட்டி நேர்காணல்: லியோ நிரோஷதர்ஷன் மனோ கணேசன் சிறந்த மனிதர். அவர் தொடர்பாக எனக்கு தவாறான நிலைப்பாடே காணப்பட்டது. நல்லிணக்க அமைச்சின் பொறுப்புக்களை அவரால் முன்னெடுக்க முடியும் என நான் நம்புகின்றேன். நாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 30 ஆண்டு காலம் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டோம். அவ்வாறானதொரு நிலைமை இன்றோ நாளையோ அல்லது இன்னும் ஐந்து வருடத்திலோ ஏற்படலாம். அதனை தடுக்கும் நோக்கிலேயே பொதுபல சேனா செயற்பட்டுள்ளது. எனக்கு உயிரச்சுறுத்தல் உள்ளது. அது குறித்த தகவல்களை சம்…
-
- 1 reply
- 443 views
-
-
வருட இறுதிக்குள் அரசியலமைப்பு வரைபு வெளியிடப்படவேண்டும் இல்லாவிடின் அரசில் இணைந்திருப்பதில் அர்த்தம் இல்லை என்கிறது சு.க. (ரொபட் அன்டனி) தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது.எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாவிடின் அரசாங்கத்தில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் இதுவரையான காலப்பகுதியில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இடம்பெற்றுள்ள நகர்வுகள் எமக்கு திருப்தி தருகின்றன…
-
- 0 replies
- 126 views
-
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பயங்கரவாதிகளாக செயற்படுகின்றனர் பிறந்த குழந்தையை குளிப்பாட்டிவிட்டு வீசுமாறு கோரியே போராட்டம் என்கிறார் அமைச்சர் ராஜித (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எக்காரணம் கொண்டும் இலவசக் கல்வி யைச் சீரழிக்கமாட்டோம் என சபையில் உறுதி படத்தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சைட்டம் குறித்த விசேட அமைச் சரவைப் பத்திரத்தை அடுத்தவாரம் சமர்ப்பிக் கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது முழுநாட்டிற்கும் அரச வைத்தியர் கள் சங்கத்தினர் பயங்கரவாதிகளாக மாறியுள்ள தாக சாடிய அமைச்சர் ராஜித, பிறந்த குழந்தையை குளிப்பாட்டி விட்டு வீசுமாறு கோரியே போராட்டங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள…
-
- 0 replies
- 164 views
-
-
அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு சேவைகள் இரண்டாவது நாளாகவும் ஸ்தம்பிதம் நோயாளர்கள் அவதி; வேலைநிறுத்தமும் தொடருமாம் (க.கமலநாதன்) மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை தடைசெய்யக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நடத் திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இரண்டாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள் ளானார்கள். நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி வேலை நிறுத்தப் போராட்டமானது நேற்று இரண்டாவது நாளாகவும் அவ்வண்ணமே …
-
- 0 replies
- 313 views
-
-
பொது மயானப் பாதுகாப்பு!எம் மக்களை நோக்கி எம் மக்களுக்காக!
-
- 0 replies
- 151 views
-
-
அதிகாரங்களைப் பயன்படுத்த தவறிவருகிறது வடக்கு அரசு நவசமசமாஜக்கட்சி குற்றச்சாட்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தாமல் தேவையற்ற செயற்பாடுகளிலேயே ஈடுபடுவதாக நவ சமசமாஜக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. வடக்கு மாகாண சபையின் இந்தச் செயற்பாடு தொடர்பில் கவலை தெரிவித்த அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பத்தி விக்ரமரட்ண, தென் மாகாண சபையும் இதுபோன்ற செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார். கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட…
-
- 0 replies
- 146 views
-
-
பொறுமையை சோதிக்க வேண்டாம் (ஆர்.யசி) பெளத்த சிங்கள கொள்கையை அவமதித்து நாட்டில் பெளத்தர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது. எமது பொறுமையின் உச்சத்தில் நாம் உள்ளோம் என்பதை அரசாங்கம் மறந்துவிட வேண்டாம் என ராமஞ்ஞ நிகாயவின் உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். குற்றவாளிகளை காப்பற்றிகொண்டு குற்றத்தை சுட்டிக்காட்டும் நபர்களை அரசாங்கம் தண்டிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பெளத்த மதத்தின் பிரதான பீடங்களின் ஒன்றான ராமஞ்ஞ நிகாயவினரின் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்ப…
-
- 0 replies
- 196 views
-
-
மௌனம் பயங்கரம் ராமஞ்ஞ நிகாய பெளத்தபீடம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை (ஆர்.யசி) நாட்டில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் இன மோதல் வெடிக்கும் தறுவாயில் உள்ளது என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. ஏற்படவுள்ள மோதலை உடனடியாக தடுக்க வேண்டும். எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காப்பது மிகவும் பயங்கரமான விடயமாகும் என்று நான்கு பிரதான பௌத்த பீடங்களில் ஒன்றாகிய ராமஞ்ஞ நிகாய பீடம் எச்சரித்துள்ளது. அரசாங்கம் சரியாக செயற்படாவிடின் பிரதான நான்கு பீடங்களும் இணைந்து நேரடியாக தலையிடவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அரசாங்கத்தை அந்த பீடம் வலியுறுத்தியுள்ளது. ராமஞ்ஞ நிகாய பெளத்த தேரர்கள…
-
- 0 replies
- 232 views
-
-
தனியார் கல்வி நிலைய மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் : இரு மாணவர்கள் படுகாயம் வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் இரு குழுவாக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில் மாணவர்கள் குழுவினராகப்பிரிந்து வகுப்பறையில் மோதிக்கொண்டனர். இதையடுத்து நேற்றிரவு 7.30மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்றிணைந்த மாணவ குழுவினர் அதே பாட…
-
- 0 replies
- 258 views
-
-
அடுத்த முறையும் விக்கி சி.எம்மாக ஈ.பி.ஆர்.எல்.எப் எதிர்ப்பு வடக்கு மாகாண சபைக்கு அடுத்த முறை, முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தினால் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனே மேற்படி கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபை விவகாரம் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில…
-
- 3 replies
- 529 views
-