ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம் Published by RasmilaD on 2017-06-19 12:33:29 வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, திடீரென அப்பகுதிக்குச் சென்ற முதலமைச்சரி…
-
- 4 replies
- 746 views
-
-
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம் -நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம். இருந்தாலும் முதலமைச்சரின் அமைச்சு உட்பட ஐந்து அமைச்ச்சுக்கள் மீதும், அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஊடக பேச்சாளர் கே. சயந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்ப…
-
- 1 reply
- 292 views
-
-
அவைத் தலைவர் விவகாரத்தில் சர்ச்சை உருவாகக்கூடுமென அச்சம்! கடந்த ஒரு வாரகாலமாக வடமாகாணத்தில் நிலவிவந்த அரசியல் குழப்பம் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தாலும் அவைத் தலைவர் விவகாரம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாணசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடி விவகாரம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் இரண்டு அமைச்சர்களுக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டு தமிழரசுக் கட்சி சார்ந்த சில உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தனர். இந்நிலையில், குறித்த அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்புவதை முதலமைச்சர் விலக்கிக்கொள்ளவதாக அறிவித்த பின்னர் அவர் மீதான நம்பிக்கையில்…
-
- 3 replies
- 408 views
- 1 follower
-
-
நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீள பெறுவோம். – மாவை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண ஆளுனரிடம் எங்களது உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீள பெறுவது தொடர்பில் ஆளுனருடன் பேச இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஏற்பட்டு உள்ள சமரசம் ஏற்பட்டு உள்ளது அ…
-
- 1 reply
- 241 views
-
-
கொழும்புதுறைமுகத்தில் இரு பிரான்ஸ் நாட்டுக் கப்பல்கள் பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளன. மிஸ்ரல் மற்றும் கேர்பெட் ஆகிய இரு கப்பல்களே இவ்வாறு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. குறித்த இரு கப்பல்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுடன் இலங்கை கடற்படையினர், பிரான்ஸ் கடற்படையினருடன் இணைந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் விளையாட்டு மற்றும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். Tags http://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 156 views
-
-
வட மாகாண சபை சபையின் புதிய அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரன்மற்றும் கந்தையா சிவனேசன்ஆகியோர் பதவியேற்கவுள்ளனர் என இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சராக யாழ் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மற்றும் சுற்றாடல் அமைச்சராக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசனும் பதவியேற்கவுள்ளனர். அத்துடன் அவைத்தலைவர் மாற்றங்களும் அடுத்த அமர்வில் இடம்பெற்றுள்ளது என எமது செய்திச்சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது. http://www.quicknewstamil.com/2017/06/20/வடக்கு-மாகாண-சபைக்கு-புத/
-
- 0 replies
- 621 views
-
-
ஐ.தே.க. - சு.க. புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் : எரான் விக்ரமரட்ன திட்டவட்டம் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார். அத்துடன் மஹிந்த ராஜபக் ஷவின் தேவைக்கேற்ப எம்மால் தேர்தலை நடத்த முடியாது. எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். இதன்படி விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்…
-
- 0 replies
- 183 views
-
-
நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில்... நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றபோது, ஹட்டன் குப்பை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், அமைச்சர் திகாரம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அமைச்சர் ப.திகாம்பரத்துக்கும் மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இ.தொ.காவின் உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கூட்டம் முறையற்றவகையில் இடம்பெறுவதாகக் கூறி, இ.தொ.காவின் மூன்று உறுப்பினர்க…
-
- 0 replies
- 166 views
-
-
சி.வீ.கே. பிரேரணையை கையளித்தது சட்டத்திற்கு புறம்பானது.- சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண அவைத்தலைவர், நம்பிக்கையில்லா பிரேரணையை , வடமாகாண ஆளுனரிடம் கையளித்தது சட்டத்திற்கு புறம்பான செயல் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அவைத்தலைவரின் பங்கு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெளிவில்லாமல் இருக்கின்றது. அவையில் ஒரு அமைச்சருக்கு எதிராகவோ முதலமைச்சர…
-
- 0 replies
- 386 views
-
-
முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பான ஆராய்வு வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பில் இன்று நாம் ஆராய்கின்றோம். 38 உறுப்பினர்களை கொண்ட வடமாகாண சபையில் 30 உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாவர். மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் மேற்கொண்ட சில தீர்மானங்கள் காரணமாக மாகாண சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையே வெளிப்படையாக பிளவு ஏற்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 537 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (19/06/2017)
-
- 0 replies
- 433 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 19-06-2017
-
- 0 replies
- 239 views
-
-
கனேடியவாழ் இலங்கை முஸ்லிம்கள் அந்நாட்டுப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கனேடிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் அந்நாட்டு பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியனுப்பி வைத்துள்ளனர். இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தலையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான தாக்குதல்களை நடத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு கன…
-
- 1 reply
- 464 views
-
-
http://uthayandaily.com/story/7348.html http://uthayandaily.com/story/7348.html
-
- 0 replies
- 350 views
-
-
வலியுறுத்த மாட்டேன் : சம்பந்தனுக்கு சி.வி. விக்கினேஸ்வரன் கடிதம் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டாய விடுமுறையை வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்து ஒரு மாதகால கட்டாய விடுமுறையையே தான் வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்வதாக, வடமாகாண முதல…
-
- 1 reply
- 394 views
-
-
கொழும்பிலிருந்து சென்ற புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் விபத்து – ஒன்றரைமணி நேர தாமதத்தின்பின் பயணம் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் இன்று திங்கள் கிழமை அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ் நோக்கிப் புறப்பட்ட கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் வந்துகொண்டிருந்த பொழுது மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது இதன்பொழுது குறித்த மாடு இறந்துள்ளதுடன் புகையிரதத்தின் முன்பகுதியில் (டீபவர் ) பகுதியில் சேதம் ஏற்ப்பட்டமையால் புகையிரத்ததை நகர்த்துவதில் சிரமம் ஏற்ப்பட்டிருந்தது அதனை பின்னர் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் புகை…
-
- 1 reply
- 202 views
-
-
ரவிராஜ் கொலை தொடர்பான மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்றையதினம் நீதமன்றம் தீர்மானித்துள்ளது. தனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மேன்முறையீட்டினை தாக்கல் செய்திருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்…
-
- 0 replies
- 235 views
-
-
விசாரணைக் குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன். – பொ.ஐங்கரநேசன் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளேன் என்று தெரிவித்தார் வட மாகாண சபை உறுப்பினரும், வட மாகாண முன்னாள் உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன். இலஞ்ச , ஊழல் , நிதிக்குற்றச்சாட்டில் ஈடுப்பட்டேன் என யாரேனும் கூறினால் அவர்களுக்கு எதிராகவும் நீதிமன்றம் செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விசாரணை குழு பக்க சார்பான முறையில் நடந்துகொண்டுள்ளது. …
-
- 1 reply
- 339 views
-
-
ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா? உணர்ச்சிக் கோசங்களின் முன்பாக உண் மைகள் ஊமையாகித்தான்போகும். விடயங்கள் சூடாறிய பின்னர், அதை அலசி ஆராய்ந்தால் அமுங்கிப் போன உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். இப்படித்தான் வடக்கு மாகாண சபை விவகாரத்தை யும் நோக்க வேண்டியுள்ளது. ஐங்கரநேசனுக்காக வாதாடினார் விக்கி வடக்கு மாகாண சபையில் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு அமைச்சர் ஐங்கரநேசன் மீதுதான் சுமத்தப்பட்டது. இவர் மீது விசாரணை நடத்த வேண் டும் என்ற பிரேரணையும் மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணை மீதான அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையின் இடைநடுவி…
-
- 5 replies
- 725 views
-
-
ஏறாவூரில் பிளாஸ்டிக் முட்டை : சந்தையில் பரபரப்பு ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் ஓரிரு பிளாஸ்டிக் முட்டை காணப்பட்டுள்ளது. பரவலாக முட்டை வாங்கிய செங்கலடி கிராமங்கள், ஆறுமுகத்தான்குடியிருப்பு மக்கள் எல்லோருக்கும் இந்த பிளாஸ்டிக் முட்டை கிடைத்துள்ளது. Tags http://www.virakesari.lk/article/21032
-
- 0 replies
- 249 views
-
-
என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது – சீ.வீ. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் ‘என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சித் திட்டம் கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது’ என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை அவரது ஆதரவாளர்கள் சிலர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்தே தம்மை பதவி கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளார்கள் என்பது பற்றி தமக்குத் தெரியும் எனவும் அதனை அம்பலப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 257 views
-
-
ஞானசார தேரர் விவகாரம் ` மனநிலை சரியில்லாத அரசியல்வாதியின் கூற்றுக்கு நான் பதிலளிக்க வேண்டியதில்லை (ரொபட் அன்டனி) அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ சாடல் பொதுபலசேனாவின் ஞானசார தேரரை நான் ஒளித்து வைத்திருப்பதாக கூறும் முஸ்லிம் அரசியல்வாதிக்கு மனநிலை சரியில்லை. அவ்வாறு மனநிலை சரியில்லாத அரசியல்வாதிகள் கூறும் கூற்றுக்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார். ஞானசார தேரரை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ மறைத்து வைத்திருப்பதாக கடந்த சில நாட்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை தொடர்பாக வினவியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட் டார். …
-
- 0 replies
- 182 views
-
-
எமக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் உங்களையே நம்பியிருக்கின்றோம் - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சி.வி.யிடம் உருக்கம் (எம்.நியூட்டன், ரி.விரூஷன்) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று மாலை வடமாகாண முதலமைச்சருக்கு தமது ஆதரவை தெரிவித்து அவருடன் கலந்துரையாடியதுடன் எமது உறவுகளைத் தேடித்தரும் பொறுப்பு உங்களுடையது என மன்றாட்டமாக கோரியுள்ளனர். வடக்குமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையிலாலத் தீர்மானம் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வடமாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அதன் எதிரொலியாக முதலமைச்சருக்கு ஆதரவுதெரிவித்து கவனயீர்ப்புப் போராட்…
-
- 0 replies
- 289 views
-
-
விடுப்பில் செல்லச் சொன்ன அன்றே முக்கிய கோவைகளை சத்தியலிங்கம் எடுத்துச்சென்றுவிட்டார்! தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு நான் பணித்த அன்றே சுகாதார அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று முக்கிய கோவைகளை எடுத்துச் சென்றுவிட்டார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையிலேயே தொடரும் விசாரணைகளை குழப்பியடிக்கமாட்டோமென்ற உத்தரவாதத்தினை ஏற்காவிட்டால் விசாரணையை நீதியான முறையில் முன்னெடுத்துச் செல்லமுடியாது. ஆகவே விசாரணையை குழப்பியடிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு இரா.சம…
-
- 1 reply
- 354 views
-
-
முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை வினாவிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்சும் பேசியுள்ளோம். சம்பந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன். சம்பந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர…
-
- 9 replies
- 679 views
-