ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
2017-06-18 10:50:02 இராமாயணத்தில் தசரதரும் அவர் மகன் இராமனும் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கதைத்ததான பதிவுகள் இல்லை எனலாம். அந்தளவுக்கு தந்தையும் மகனும் உயர் மரியாதை கொண்டிருந்தனர். இராமன் மீது தசரதன் தன் உயிரையே வைத்திருந்தார். இராமனோ தன் தந்தை மீது அளவற்ற மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தார். இத்துணை பற்றும் பாசமும் கொண்டிருந் தும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கதைத்து உரையாடியதான பதிவுகள் மிகச் சொற்பம். இராமனுக்கு முடிசூட்டும் செய்தி கூட தசரதனால் மகனுக்குக் கூறப்பட்டதல்ல. இதே போன்று திருதராட்டினனும் பிதாமகர் வீஷ்மரும் ஒருவரை ஒருவர் அளவளாவிக…
-
- 0 replies
- 457 views
-
-
சமரச முயற்சியில் யாழ்.ஆயர் (ஆர்.ராம்) வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை யாழ். ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மேற்கொண்டுள்ளார். வடமாகாண சபையில் அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடி, நிர் வாகச் சீர்கேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து அதனை விசாரணை செய்த மூவர் கொண்ட குழவின் அறிக்கையின் பிரகாரம் இரு அமைச்சர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டனர். அவர்களை பதவியிலிருந்து நீங்குமாறு கோரிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஏனைய இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக…
-
- 2 replies
- 404 views
-
-
ஊழலை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் மதத் தலைவர்களிடம் நேற்று தமிழ் அரசுக் கட்சியினர் உறுதி ஊழலை ஒருபோதும் ஆத ரிக்கமாட்டோம் என்று மதத் தலைவர்களிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் நேற்று உறுதி வழங்கியுள்ளனர். வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம் இன்னமும் தீரவில்லை. இந்த நிலையில் மதத் தலைவர்களை, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளித்த வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணியினர் நேற்றுச் சென்று சந்தித்தனர். யாழ்ப்பாண ஆயரையும், நல்லை ஆதீன குரு முதல்வரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியல…
-
- 2 replies
- 316 views
-
-
தொடரும் இழுபறி நிலை வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்களால் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இருதரப்பிற்குமிடையில் சமரச முயற்சிகள் தொடர்கின்ற போதிலும் இருதரப்பினருமே உரிய விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதில் பின்னடிப்பதனால் இத்தகைய நிலை தொடர்ந்து வருகின்றது. வடமாகாண சபை அமைச்சர்கள் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டமையினால் அது குறித்து விசாரிக்க முதல்வர் விக்கினேஸ்வரன…
-
- 0 replies
- 308 views
-
-
இன, மத முரண்பாடுகளை தூண்டும் நடவடிக்கை தொடர்பில் 14 பேர் கைது அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் பொதுபல சேனா என்கிறார் பொலிஸ் பேச்சாளர் (எம்.எப்.எம்.பஸீர்) இன, மத முரண்பாடுகளை தூண்டும் விதமாக அண்மைய நாட்களில் பதிவான அனை த்து சம்பவங்களின் பின்னணியிலும் பொது பலசேனா அமைப்பு இருப்பது இதுவரை செய்யப்பட்டுள்ள விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது. அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர், பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். அத்துடன் இதுவரை சந்தேக நபர்கள் கை…
-
- 0 replies
- 314 views
-
-
ஆதரவளிப்பது குறித்து விக்கியுடன் டக்ளஸ் வௌ்ளியன்று பேச்சு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுடன், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அலைபேசியூடாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். முதலமைச்சருக்குத் தமது கட்சி ஆதரவு வழங்குவதாக அவர் கூறியுள்ளார் என்றும் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபையில் குழப்பகரமான நிலமை தோன்றியுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அணியினர் மு…
-
- 0 replies
- 253 views
-
-
சம்பந்தன் அனுப்பிய பதில் கடிதத்தை சாதகமாக பரிசீலிக்க சி.வி. சமிக்ஞை பங்காளிக்கட்சி தலைவர்கள் மீண்டும் சந்திப்பு : இறுதி முடிவு இல்லை (ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்) எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அனுப்பிய பதில் கடிதத்தை சாதகமாக பரிசீலிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தபோதே மேற்படி சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் அந்த பதில் கடிதத்திற்கு எவ்வாறாக தனது நிலைப்பாட்ட…
-
- 0 replies
- 374 views
-
-
சம்பந்தனுக்கு விக்கி இன்று பதில் கடிதம் மதத் தலைவர்களுடன் சந்தித்த பின்னர் மதத் தலைவர்களை இன்றைய தினம் சந்தித்த பின்னரே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பவுள்ளார் எனத் தெரியவருகின்றது. புளொட், ஈபிஆர்எல்எவ் மற்றும் ரெலோ கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சருடன் நேற்றும் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டதாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் முறுகல் – முரண்பாடு தோன்றியிருந்தது. இதனைத் தீர்ப்பதற…
-
- 0 replies
- 226 views
-
-
பங்காளிகளுடன் உடன் பேச்சு நடத்த நீதிக்கான அணி முடிவு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரே ரணை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட உள்ளது. இந்தப் பேச்சுக்கள் விரைவில் நடைபெறும் என்று, வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணியின் ஊடகப் பேச்சாளரும் மாகாணசபை உறுப்பினருமான கேசவன் சயந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நீதிக்கான அணியின் உறுப்பினர்களான, கே.சயந்தன், வ.கம லேஸ்வரன், அ.அஸ்மின், சு.பசுபதிப்பிள்ளை, இ.ஆனோல்ட், ச.சுகிர்தன் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று இரவு சந்…
-
- 0 replies
- 258 views
-
-
‘மீளப்பெறும் பேச்சு வெற்றிபெற வேண்டும்’ வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், “வடமாகாண ஆளுநருடனான சந்திப்பின் போது, வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆளுநர் விசாரித்தார். அத்துடன், அமைச்சர்கள் சிலரும், தங்கள் கருத்துகளை ஆளுந…
-
- 0 replies
- 145 views
-
-
அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் வழங்கியுள்ளார். இரா.சம்பந்தன் அனுப்பிய கடிதம் வருமாறு, கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அ…
-
- 3 replies
- 684 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று, அலரிமாளிகையில், இன்று திங்கட்கிழமை (19) நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமை தாங்குவர். அத்துடன் இந்தக் கூட்டத்தில், இரு கட்சிகளினதும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வர் என்று,அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். “குறித்த கூட்டம், திங்கட்கிழமை இடம்பெறும் என்பது ஏற்கெனவே முடிவாகியிருந்த போதிலும், அதில் ஜனாதிபதி பங்கேற்பார் என்பது, சனிக்கிழமை (17) அன்றே உறுதியானது. ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமையால், சு.கவின்…
-
- 0 replies
- 294 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள, மலையக அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்கவுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கண்டி, தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்ஆகியோர் அடங்கிய குழுவினர், சனிக்கிழமை சந்தித்ததுடன், கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர். இதனை…
-
- 0 replies
- 289 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி திரும்பப் பெறாவிட்டால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகத் தெரியவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தமிழரசுக் கட்சியானது, முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையான நம்பிக்கையில்லாத் தீ…
-
- 0 replies
- 202 views
-
-
“ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள இரு அமைச்சர்கள் தொடர்பில், என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி, இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். “எனினும், சட்டரீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என்று, குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன். ஆகவே, தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகளை, தாமதியாது எடுங்கள்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்…
-
- 0 replies
- 242 views
-
-
‘எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றியளிக்காது’ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில், தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), …
-
- 0 replies
- 318 views
-
-
மக்கள் தொடர்பாடல் அலுவலகம் அமைக்கிறார் முதல்வர் விக்கி! தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குள் தற்துணிவாக முடிவெடுக்குமாறு கூறி மக்கள் தன்பின்னால் அணிதிரண்டிருக்கும் நிலையில் அம்மக்களின் கருத்துக்களை உடன் பெற்றுக்கொள்ளும் வசதியாக மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றினை ஒருசில நாட்களுக்குள் உடனடியாக அமைக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதன் மூலம் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தான் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என்றும் இது மக்களுனனான தனது நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 20 பேர்கொண்ட வடக்கு மாகாண மருத்துவர்கள் இன்று நண்பகல் முதலமைச்சரைச் சந்தித்துள்ளனர். அதன்போது முதலமைச்சருக்கு தம…
-
- 0 replies
- 355 views
-
-
நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது. – கூட்டமைப்பின் பங்காளிகள் நம்பிக்கை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபை குழப்பம் தொடர்பில் தீர்வுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று இரவு முதலமைச்சரை கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களான புளெட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் , ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார…
-
- 0 replies
- 266 views
-
-
’விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்’ -எஸ்.நிதர்ஷன் இறுதி யுத்தம் மற்றும் இதுவரை காலமும், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடப்போவதாகத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்று …
-
- 6 replies
- 723 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (18/06/2017)
-
- 0 replies
- 300 views
-
-
முரட்டுத்தனமான பிடிவாதங்களும் தமிழர் அரசியலின் சாபக்கேடும் – ராஜா பரமேஸ்வரி புலிகளிடம் இருந்து கருணாவை பிளந்தனர் – ஆயுதப் போராட்டம் அழிந்தது.. அகிம்சைப் போரும் அழிந்து போகுமா? சரி பிழைகள் ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பால் 3 தசாப்;த ஆயுதப் போராட்டமும், அதன் வழி பெற்றப்பட்ட பேரம் பேசும் பலமும் புலிகளின் அழிவின் பின் அழிந்து போனது. இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுக்காலத்தில், சமாந்தரமாக புலிகளை பிளவுபடுத்துவதில் பேரினவாத சக்;திகள் முழுமூச்சுடன் ஈடுபட்டன. அதற்காக புலிகளின் பலம்பொருந்திய தளபதியாகவும், கிழக்கை கட்டுப்பாட்டுள் வைத்திருந்தவருமான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரனை புலிகளின் தலமையுடன் முரண்…
-
- 1 reply
- 439 views
-
-
போகம்பர சிறைசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டணியினர் பார்வையிட்டுள்ளனர். கண்டி தும்பர போகம்பர சிறைசாலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைதலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன்¸ தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அடங்கிய குழு சந்தித்து அவர்களின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். கிட்டதட்ட 200 தமிழ் அரசியல் கைதிகள் முன்னர் அங்கு இருந்ததாகவும் இவர்களில் புனர்வாழ்வு விடுதலைக்கு பின்னர் தற்போது 112 கைதிகள் இருப்ப…
-
- 0 replies
- 173 views
-
-
வடமாகாண சபை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – சம்பந்தன் நம்பிக்கை! வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை அல்ல. தீர்வு காண்பது என்பது சிறிய விடயம். இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அவர் கூறியு…
-
- 1 reply
- 317 views
-
-
ஐ.தே.க – சு.க. இடையே புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தீர்மானம்மிக்க கூட்டம் எம்.நேசமணி புதிய உத்தேச அரசியலமைப்பு திருத் தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான தீர்மானம்மிக்க விசேட கூட்டமொன்று நாளை இரவு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விரு கட்சிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யினால் புதிய அரசியலமைப்பு திருத் தம் தொடர்பான செயற்பாடுகளுக்காக அமைக்கப்பட்ட குழு தனியாக கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாக வும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்ப…
-
- 0 replies
- 581 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவைக் கைவிட்டாலே தாம் அவருக்கெதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார இதழொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, முதலமைச்சரிடமிருந்து இதுவரை சாதகமான பதிலெதுவும் கிடைக்கப்பெறவில்லை. இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவை அவர் கைவிட்டாலே நாம் அவருடன் சமரசத்திற்குப் போகமுடியும். நேற்று மாலைவரை…
-
- 0 replies
- 329 views
-