ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
வடக்கு முதலமைச்சர் இல்லத்தில் முக்கிய கலந்துரையாடல் (காணொலி) வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே முதலமைச்சரின் இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. http://uthayandaily.com/story/6798.html
-
- 0 replies
- 256 views
-
-
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணை தொடர்பில் அவரது நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண சபையில் முதலமைச்சர் உரையாற்றிய போது தமிழரசுக் கட்சி வெளிநடப்பு செய்தது. ஆனால் எமது கட்சி மற்றும் ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை. ஊழல் விசாரணை தொடர்பில் முதலமைச்சர் எடுத்த தீர்மானம் சரியானது. விசாரணைக்கு குழு போடப்பட்டு நான் சாட்சியமளித்த நிலையில் …
-
- 1 reply
- 412 views
-
-
ஞானசார தேரருக்கு பிடியாணை பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இருவேறு வழக்குகளில் ஆஜராகாத ஞானசார தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, http://www.virakesari.lk/article/20901
-
- 0 replies
- 195 views
-
-
சி.விக்கு எதிரான நடவடிக்கைக்கு சங்கரி கண்டனம் “வட மாகாணசபையின் நிகழ்வுகளை பார்க்கும் போது, தமிழ் மக்கள் வெட்கி தலைகுனியுமளவுக்கு போய்விட்டது. நாடே நம்மை பார்த்து ஏளனமாக சிரிக்கின்றது. ஒரு காலத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், கல்வியறிவு என பல வகையிலும் சிறந்து விளங்கிய யாழ்ப்பாண சமூகத்தின் தலைவர்கள், இன்று தலை சாய்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் நீதியும், நேர்மையும், ஒழுக்கமும் எமது சமூகத்தைவிட்டு எங்கோ பறந்தோடிவிட்டது” என்று, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இதை நான் 2…
-
- 0 replies
- 265 views
-
-
வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்த சிறார்கள் மூவர் மீட்கப்பட்டனர் பாடசாலைக்குச் செல்லாதவாறு பாடசாலை செல்லவேண்டிய சிறார்கள் சுமார் சில வாரங்களாக வீட்டுக்குள் முடக்கப்பட்டி ருந்த நிலையில் நேற்றுப் பொலிஸாரும் தெல்லிப்பழை சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரும் இணைந்து மீட்டனர். அவர்கள் நீதிமன்றினூடாக இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள னர். காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறார்களின் பெற்றோர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மேலும் தெரியவர…
-
- 0 replies
- 179 views
-
-
மாவையின் தொலைபேசி எண் தெரியாத முதலமைச்சர் “நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவின் தொலைபேசி இலக்கம் தெரியாது. அதனால்தான் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அவரிடம் பேசவில்லை” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அலைபேசியில் பேசினார். இந்தப் பேச்சின்போது, வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் நான்கு பேரையும் நீக்குவது தொ…
-
- 5 replies
- 746 views
-
-
உளவுத்துறை முன்னாள் பிரதானி ஹெந்தவிதாரணவிடம் விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) வடக்கு, கிழக்கு நிறுவனங்களில் மில்லியன் கணக்கில் பணம் பெற்றமை தொடர்பில் குற்றச்சாட்டு தேசிய உளவுத் துறையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று சிறப்பு விசாரணைகளை நடத்தியது. வடக்கு கிழக்கில் இயங்கும் பிரதான கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிடமும் மேலும் பல நிறுவனங்களிடமிருந்தும் வங்கி ஊடாக 3.2 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை சட்ட விரோதமாக உழைத்ததாக கூறி கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பிலேயே அவர் நேற்று சுமார் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக …
-
- 0 replies
- 274 views
-
-
வடக்கு முதலமைச்சர் யார்..? ; இறுதி முடிவு இன்று மாலை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் தரப்பினரால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதினை அடுத்து வடக்கு மாகாண சபையின் இடைக்கால முதல்வர் இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வட மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் மொத்தமாக வட மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று நள்ளிரவு கையளிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற வடக்கு வடக்கு …
-
- 2 replies
- 364 views
-
-
சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க முயற்சி : ஒருபோதும் அச்சமடையமாட்டேன் என்மீது இருக்கும் அச்சம் காரணமாக சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் இவ்வாறான செயல்களுக்கு நான் ஒருபோதும் அச்சப்படப்போவதில்லை. இதன் காரணமாக நாங்கள் மேலும் வலுவடைவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் நான் பொது வேட்பாளராக களமிறங்கிய போதுதான் சுயாதீன தொலைக்காட்சி சேவை தனது சுயாதீனத்தன்மையை இழந்தது எனவும் குறிப்பிட்டார். சுயாதீன தொலைக்காட்சி ஊடக சேவையின் 38ஆவது வருட ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த 5 மாடி கட்டிட தொகு…
-
- 1 reply
- 219 views
-
-
‘ஸ்ரீலங்கனில் கோட்டாவின் ஆட்களே உள்ளனர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டவர்களே இன்றும் கடமையில் உள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெறும். இந்நிறுவனத்தின் பணிப்பாளர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளோம்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனைக் கூறினார். “ஸ்ரீலங்கன் எயார…
-
- 0 replies
- 249 views
-
-
‘ஞானசார தேரருக்கு மஹிந்தவின் சட்டத்தரணியே அடைக்கலம் கொடுத்துள்ளார்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் ஞானசார தேரர் உள்ளிட்டவர்களே தங்கள் இனவாதிகள் அல்ல என்று சொல்லவில்லை. ஞானசார தேரரை மறைத்து வைக்கவேண்டிய தேவையும் அமைச்சர்களுக்கு இல்லை. மஹிந்தவின் சட்டத்தரணியே அவரை மறைத்து வைத்துள்ளார்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார். கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன…
-
- 0 replies
- 272 views
-
-
யாழில் தொடரும் வாள்வெட்டு (சிசிரிவி வீடியோ) யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் வியாபார நிலையமொன்றின் மீது வாள்களை கொண்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த மூவரும் தாக்குதல் நடாத்திய சம்பவமானது அருகில் இருந்த மற்றுமொரு வியாபார நிலைய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது… நேற்று மாலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதான வீதியில் பூணாரிமரத்தடி சந்திக்கு அண்மையில் ஒரு பள்சர் மோட்டார் சைக்கிளில் மூவர் வந்துள்ளனர். இவர்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் ஸ்ரிக்கர் போன்ற ஒன்றால் மூடி மறைத்து ஒட்டப்பட்டு…
-
- 0 replies
- 226 views
-
-
காலம் மாறி விட்டது. கல்வியிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. நாமும் உரிய வேகத்துக்கு ஓடும் போதே தாக்குப் பிடிக்க முடியும். இல்லையேல் எம்மை விட்டுவிட்டு உலகம் முன்னே போய் விடும். முன்னர் ஒரு காலம் இருந்தது இலங்கையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்தால் அரச தொழிலொன்றை இலகுவில் பெற்றுக் கொள்ளலாம். போட்டி இல்லை. இன்று எதிலும் பலத்த போட்டி நிலவுவதுடன், அரசும் தொழில் வாய்ப்புக்களையும் வழங்க மறுத்து வருகிறது. இது பட்டதாரிகள் மத்தியில் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உரிய காலத்துக்குள் தொழில் கிடைக்காமை, தகுதிக்கு ஏற்ற தொழில் கிடைக்காமை என்பன பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகும். பலத்த போட்டி அடிப்படையில் க பொ த (உ/த) த்தில் சித்தி பெற்று பல்கலை…
-
- 0 replies
- 278 views
-
-
வடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு. https://globaltamilnews.net/archives/29756
-
- 1 reply
- 306 views
-
-
வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக 23 இலட்சம் செலவு. வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக வடமாகாண சபையினால் சுமார் 23 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை முன் வைத்து , விசாரணை குழு அமைத்து , குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிட்ட குற்றசாட்டு தொடர்பில் தன்னிலை விளக்கம் கொடுக்க என இதுவரை மாகாண சபையில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றுள்ளன. அதற்காக 20 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேவேளை குறித்த விசாரணை குழுவிற்காக 3 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது என தெரியவருகிறது. இந்த விசாரணைக்காக மாகாண சபை நிதி 23…
-
- 0 replies
- 237 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (14/06/2017)
-
- 0 replies
- 597 views
-
-
வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வு ஆரம்பம்! வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என்ற அவைத் தலைவரின் அறிவிப்புடன் சபை அமர்வு ஆரம்பித்துள்ளது. வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ்“கையூட்டு, நிதிமோசடி, ஊழல் புரிந்ததாகவோ, விசாரணை அறிக்கையில் ச…
-
- 19 replies
- 664 views
-
-
உயர்தர மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் இன்று பகல் 2.00 மணியளவில் டயகம நகரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். டயகம இல. 02 தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று காலை 7.00 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது அதே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளா…
-
- 0 replies
- 375 views
-
-
மக்களே அவதானம் : டெங்கு காய்ச்சலால் 155 பேர் பலி..! (ஆர்.யசி) இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிகமான நோயாளர்களை கொண்டதாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான 6 மாத காலத்தில் 61 ஆயிரத்து 844 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் டெங்கு காய்ச்சலினால் 155 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் இருந்த போதிலும் கொழும்பு, களுத்துறை, கம்…
-
- 0 replies
- 253 views
-
-
ஜனாதிபதி முன்னிலையில் சீறிப்பாய்ந்த பெளத்த பிக்கு சிறைக் கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார். இதன்போது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பெளத்த மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்காமையின் காரணமாக மண்டபத்தில் அமர்ந்திருந்த பிக்கு ஒருவர் ஆக்ரோஷத்துடன் எழுந்து ஜனாதிபதி முன்னிலையில் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றுவதற்காக மேடைக்கு வந்திருந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கீழே சென்று பூரண மத அனுஷ்டா…
-
- 2 replies
- 361 views
-
-
‘தமிழ் வகுப்பு நடத்தினேன்’ “நான் ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையில், தமிழ் வகுப்புகளை நடத்தினேன். அதனூடாக அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியை அதிகளவில் கற்றுக்கொண்டனர்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலி, மாபலகம எனுமிடத்தில், திங்கட்கிழமை (12) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “காவியுடையை அணிந்துகொண்டு, இனவாத கருத்துகளை பரப்புகின்றவர்களை, பௌத்த தேரர்கள் எனக் கூறமுடியாது. பொறுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு, தாங்கிக…
-
- 1 reply
- 300 views
-
-
கிரிக்கட் அணிக்குள் தமிழ், முஸ்லிம் வீரர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்! – மனோ! வடக்கு, கிழக்கு, மத்திய மலைநாடு மற்றும் மேற்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும் இலங்கை கிரிக்கட் அணிக்குள் உள்வாங்கப்படவேண்டுமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே தான் இதனை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இத்தகைய விளையாட்டு அணியில் திறமைதான் ஒரே அடிப்படை. இதனை தொழில்வாய்ப்புக்களைப் போன்று இனக் கோட்டா முறையில் செய்யமுடியாது.அத்துடன் தகுதிவாய்ந்த வீரர்களை இன அடிப்படையை வைத்துப் புறக்கணிக்கவும்முடியாது. …
-
- 2 replies
- 323 views
-
-
ஜனாதிபதிக்கு சூனியம் செய்து வைத்த தகடுகள் மீட்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூனியம் செய்ததாக கூறப்படும் செப்புத் தகடுகள், இரண்டு இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளன. அநுராதபுரம் - பதவிய - கெப்பதிகொல்லாவ பிரதான வீதிக்கு அருகில் உள்ள உஸ்கல்ல மயானத்தில் இருந்தே இந்த செப்புத் தகடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதில், ஜனாதிபதியின் பெயருடன், அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் மூன்று சகோதரர்களின் பெயர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் பெயர்களுடன் மேலும் ஒருவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதிக்கு-சூனியம்-செய்து-வைத்த-தகட…
-
- 1 reply
- 427 views
-
-
பாகிஸ்தான் கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு…! உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மத் ஸகாவுல்லாஹ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். யுத்த காலத்திலும் சமாதான காலப்பகுதியிலும் இலங்கையுடனான பாகிஸ்தானின் நெருங்கிய தொடர்புகளுக்கு ஜனாதிபதி இச்சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தமைக்காகவும் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவரும் நெருங்கிய அரசியல் மற்ற…
-
- 0 replies
- 164 views
-
-
இலங்கை ரூபாயின் பெறுமதி திடீர் உயர்வு இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும். இதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று அறிக்கைக்கு அமைய, டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி 152.80 - 85 ரூபாய் என பதிவாகியுள்ளது. ரூபாய் முறையாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் வெளிநாட்டு இருப்புக…
-
- 0 replies
- 507 views
-