ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி யாழ்.மாவட்டத்திலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாதம் ஒரு முறை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இம் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளு க்கு படிப்படியான தீர்வுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பொருத்து வீட்டுத்திட்டத்தினைமுன்னெடுப்பது குறித்து மக்களின் விருப்புக்களை அறிந்த பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, வடக்கின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தவு…
-
- 6 replies
- 844 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (13/06/2017)
-
- 0 replies
- 219 views
-
-
சங்குப்பிட்டியில் கோர விபத்து – இருவர் படுகாயம் : இருவர் கவலைக்கிடம் சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்தில் மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://uthayandaily.com/story/6462.html
-
- 1 reply
- 480 views
-
-
குருகுலராசா இராஜினாமா வடமாகாண சபையின் கல்வியமைச்சராக பதவிவகித்த குருகுலராசா, தனது இராஜினாமா கடிதத்தை, கட்சி தலைமையிடம் இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/குருகுலராசா-இராஜினாமா/175-198429
-
- 4 replies
- 1.3k views
-
-
மஹிந்தவின் சாரதி கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய கெப்டன் திஸ்ஸ பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால், இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான பண பரிமாற்றல் நடவடிக்கையை முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தவின்-சாரதி-கைது/175-198530
-
- 0 replies
- 204 views
-
-
விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வடமாகாணசபையின் செயற்பாட்டை முடக்கும் நோக்குடன் செயற்பட்டதாகவே கருதவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விசாரணைக்குழு அறிக்கை பற்றி கருத்து தெரிவித்தபோதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீது நடத்தபட்ட விசாரணை முறைமை தவறானது. அமைச்சர்கள் என்ற மதிப்புநிலை மீறப்பட்டு சாதாரணமானவர்களை விசாரிப்பது போல ஆதாரம் இன்றி தமது தனிநபர் நிலைப்பாடுகளை முன்வைத்து அறிக்கை தயாரித்துள்ளனர். ஏற்ற நீர்ப்பாசனத்திட்டம் என்பது தனியே விவசாய அமைச்சரால் முன்னெடுக்கப்பட்ட விடயம் அல்ல. மாகாணசபையில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட ஒரு…
-
- 1 reply
- 603 views
-
-
கைது உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனு? பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தமது சட்டத்தரணிகளின் ஊடாக ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஞானசார தேரர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் உத்தரவினை மீறியதாகவும் வேறும் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…
-
- 0 replies
- 209 views
-
-
இனவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் : இராஜாங்க அமைச்சர் கோரிக்கை நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் கொண்ட இலங்கை பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியாதுள்ளமை எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து இராஜாங்க அமைச…
-
- 0 replies
- 214 views
-
-
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வட மாகாண சபை உறுப்பினர் நிதியுதவி அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் வட மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான அகிலதாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த மக்கள் தொடர்பாடல் மனிதாபிமான ரயில் செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், இவர் ஒரு இலட்சம் ரூபா நிதிக்கான காசோலையை நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தார். http://www.virakesari.lk/article/20855
-
- 0 replies
- 161 views
-
-
ஞானசாரருக்கு பிடியாணை பிறப்பிக்க மறுப்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதியரசர்கள் குழாம், நேற்று (12) நிராகரித்தது. தேரருக்கு எதிரான வழக்கு, நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, தேவிகா தென்னகோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, தேரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த, சட்டத்தரணி திரந்த வலலியத்த, தனது சேவை பெறுநருக்கு (ஞானசார தேரருக்கு) உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, மன்றுக்கு அறிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்ன…
-
- 1 reply
- 446 views
-
-
மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசத்தால் வீடு முற்றாக சேதம் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருக்கமம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வளவிற்குள் புகுந்த யானை வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் உடைமைகள் அனைத்தும் சேதப்படுத்தப்படுள்ளன. சரியான முறையில் யானைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலி இல்லாத காரணத்தினால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதேபோன்று மற்றுமொரு சம்பவமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படாமல் பாதுகாக்குமாறு மக்கள் க…
-
- 0 replies
- 191 views
-
-
கேப்பாபுலவு மக்களின் போராட்டமும், ஆதரவும் IBC
-
- 0 replies
- 160 views
-
-
தன்னிலை விளக்கங்களை அமைச்சர்கள் வழங்கவில்லை விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் பதவிநீக்கப்பட வேண்டும் என்று விசாரணைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராசா இருவரும் தமது தன்னிலை விளக்கங்களை, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எழுத்துமூலம் வழங்கவில்லை என்று தெரியவருகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. கடந்த 7ஆம் திகதி வடக…
-
- 0 replies
- 211 views
-
-
வடமாகாண சபையின் மோசடியை விசாரிக்க சிறப்பு ஆணைக்குழு மைத்திரிக்கு அழுத்தம் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து சிறப்பு ஆணைக்குழு ஒன்றை அமைத்து முழுமையான விசாரணை நடத்துமாறு அரச தலைவர் மைத்திரிபாலவுக்கு அரச தரப்பில் இருந்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரியவருகின்றது. இந்த மோசடி தொடர்பில் வடக்கில் தற்போது ஒரு பரபரப்பான அரசியல் சூழல் எழுந்துள்ள நேரத்தில் மத்திய அரசு மட்டத்திலும் இது குறித்து அதிக அக்கறை காண்பிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நிதி மோசடிக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அமைத்த விசாரணைக்குழு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்…
-
- 0 replies
- 225 views
-
-
மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.…
-
- 35 replies
- 1.8k views
-
-
மாகாண சபை உறுப்பினருக்கு அரசியல் ரீதியில் அச்சுறுத்தல் அமைச்சர் மீதான விசாரணையில் சாட்சியமளித்தது தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட் டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் முன்பாகச் சாட்சியமளித்த மாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்ணம் அச்சுறுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக் கிழமை மாகாண சபை உறுப்பினர் அரியரட்ணத்தின் வீட்டுக் கேற் உடைக்கப்பட்டது. வீட்டு வளவின் உள்ளே நுழைவதற்கு இனந்தெரியாத சிலர் நுழைய முனைந்துள்ளனர். வீட்டுக்காரர்கள் விழித்துக் கொண்டதால் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவரை இலக்கு வைத்து ம…
-
- 0 replies
- 292 views
-
-
தங்கத்துடன் விமானப்படை வீரர் கைது 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வௌியில் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் விமானப்படை வீரர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் விமான நிலையத்தில் கடமையாற்றும் வீரர் என, விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். வௌிநாட்டிலிருந்து வந்த நபருடன் சந்தேகப்படும் விதத்தில் குறித்த வீரர் நடந்துகொள்வதை சீ.சீ.டிவி கமராவில், சுங்க அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அதனையடுத்து, சந்தேகநபரை சோதனையிட்டு கைதுசெய்துள்ளனர். தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வ…
-
- 0 replies
- 179 views
-
-
அல் ஹுசைன் இலங்கையர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் ஐக்கிய நாடுகளை சபை மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையின் சுயாதீனத்தன்மை மீது தலையீடு செய்கின்றார். எனவே அவரின் அநாவசிய தலையீடுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடத்தில் முறைப்பாடு செய்யவுள்ளோம். அல் ஹுசைன் இலங்கையரிடத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப் போவதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். தேசிய அமைப்புக்களுக்கான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…
-
- 0 replies
- 230 views
-
-
தமிழ் அரசுக் கட்சியுடன் முதல்வர் பேசவில்லை 4 அமைச்சர்களையும் நீக்கும் யோசனை நான்கு அமைச்சர்களையும் மாற்றுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பங்காளிக் கட்சிகளின் 3 தலைவர்களுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் பேச்சு நடத்தினார் என்று தெரியவருகின்றது. எனினும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவரிடம், முதலமைச்சர் நேற்று இரவு வரையில் இது தொடர்பில் பேசவில்லை என்றும் அறிய முடிகின்றது. அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில், கல்வி அமைச்சர் த.குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டி…
-
- 0 replies
- 207 views
-
-
4 அமைச்சர்களையும் ஒரேடியாக நீக்க தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை தற்போது மாற்றுவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. “விசாரணை அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பொருத்தமற்ற செயல்” இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு அமைச்சர்கள் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ள நிலை…
-
- 0 replies
- 210 views
-
-
"ஞானசார தேரரின் தொடர்பு குறித்து தகவல்கள் உள்ளதால் உடனடியாக விசாரணை செய்யவும்" சிங்கள,முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸ் மா அதிபரை சந்தித்து வலியுறுத்தல் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த சம்பவங்களுடன் கலகொட அத்தே ஞானசார தேரரின் தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிவில் சமூக பிரதி நிதிகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை அறிவுறுத்தியுள்ளனர். தாரிக் மஹ்மூத் தலைமையிலான ஏழு பேர் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளும் கலாநிதி சரத் விஜேசூரிய, காமினி வெயங் கொட, தம்பர அமில தேரர் உள்ளிட்ட 7 சிங்கள சிவில் சமூக பிரதி நிதிகளும் ஒன்றாக கலந்துரையாடிய பின்னர் நேற்ற…
-
- 0 replies
- 161 views
-
-
வித்தியா படுகொலை வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகளுக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அண்மையில் நியமிக்கப்பட்டது. சட்ட மாஅதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தின்…
-
- 4 replies
- 702 views
-
-
கிளிநொச்சி சந்தையில் புதிய கட்டடத் தொகுதிகள் வடக்கு முதல்வரால் திறப்பு கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் நெல்சீப் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொதுச் சந்தையானது கடந்த 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு கனகபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தொடர்ந்து குறித்த சந்தை 2013 ஆம் ஆண்டு ஏற்கனவே சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் இயங்க ஆரம்பித்தது. இந்த நிலையில் கடந்த வருடம் தீ விபத்தினால் அழிவடைந்த கடைகளுக்குப் பதிலாக தற்போது நெல்சிப் திட்டத்தின் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக…
-
- 0 replies
- 224 views
-
-
தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்தது சுங்கப் பிரிவு! இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் மீளளிக்கப்பட்டுள்ளது. பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்துள்ளது சுங்கப் பிரிவு. இலங்கைத் தீவில் நடந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பான வராற்றையே இந்த நூல் பேசுவதாகவும் இதனை மீளளிப்பதில் சிக்கல் ஏதும் இல்லை என்று சுங்கப் பிரிவு …
-
- 1 reply
- 415 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (12/06/2017)
-
- 0 replies
- 189 views
-