Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீட்பு பணி­யா­ளர்­க­ளுக்கு அரு­கி­லேயே அங்­க­லாய்ப்­புடன் இருக்கும் மக்கள் வேனொன்றில் பலர் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது புதை­யுண்­டி­ருக்­க­லா­மென அச்சம் (எம்.எப்.எம்.பஸீர்) வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மீதொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்தமையினால் ஏற்­பட்ட அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணி க்கை 32 ஆக உயர்ந்­துள்­ளது. 17 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் உள்­ளிட்ட 32 பேரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன தெரி­வித்தார். இந் நிலையில் மேலும் 8 பேர் காணாமல் போயுள்­ள­தாக கரு­தப்­பட்டு மீட்புப் படை­யி­னரால் தேடப்­பட்டு வரு­வ­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் …

  2. நாடுபூராகவும் மீண்டும் கடுமையான வரட்சி, இலட்ச கணக்கான மக்கள் பாதிப்பு : எப்போது மழை பெய்யும் : வளிமண்டலவியல் தகவல் எம்.எம்.மின்ஹாஜ் நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நாடுபூராகவும் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.…

  3. அவதானம் : குப்பைமேடு எந்நேரத்திலும் வெடிக்கலாம், நெருப்பு பற்றும் வாய்ப்பு அதிகம் : பெக்கோ, சிகரட் பாவிப்பதை தடுக்கவும் : நேரில் சென்று ஆராய்ந்த ஜப்பான் குழு தகவல் (ந.ஜெகதீஸ்) மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மெதேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. எனவே அதன் தாக்கத்தினால் எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மீதொட்டமுல்லை குப்பை மேட்டினை ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்தது. மேலும் மீதொட்டமுல்ல பகுதியில் சிறிய அளவிலேனும் நெருப்பு பற்றக்கூடிய எந்த வொரு பொருளையும் பாவிப்பதானது மிக அவதானமானது எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் …

  4. அரச அதிபர் தலைமையிலும் கேரதீவு உப்பள விவகாரம் தோல்வியில் முடிவு தென்மராட்சி தெற்கு கேரதீவு கடலேரியில் உப்பளம் அமைக்க யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலும் தோல்வியில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தென்மராட்சி பிரதேச செயலர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது கேரதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் அப் பகுதி கமக்கார அமைப்புகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள் போன்றவையின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று யாழ் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் கேரதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பான கலந்…

  5. முப்பதாயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த வருடம் 30 ஆயிரம் கிலோ வெல்லங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ். துரைசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பனை வெல்லங்களை மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்துவருகின்றனர். கடந்த வருடம் அதிகூடிய வெல்லங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளோம். தற்போது மக்கள் மத்தியில் நீரிழிவு என்கின்ற நோய் அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் அந்த…

  6. ஒருவாரமாக குப்பை அகற்றப்படாமையினால் வீதிகளில் துர்நாற்றம் ; மக்கள் கடும் விசனம் எம்.எம்.மின்ஹாஜ் மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை அகற்றல் நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன்காரணமாக நகர வீதியோரங்களில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயமும் தோன்றியுள்ளன. கொழும்பு நகரின் குப்பைகள் பிலியந்தல கரதியான பகுதியில் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அப்பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக குறித்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. கொழும்பு நகர குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளமையினால் மக்கள் கடுமையான விசனங்களை தெரி…

  7. காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது இராணுவத்தினரும் காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுகிறதாக தெரிகிறது.ஆகவே இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் நாங்கள் முன்நகரலாம் எனவும் படிப்படியாகவேனும் காணிகள் விடுவிக்கப்படும் என்று தென்படுகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை வி…

  8. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார்; அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் ஆரம்பமான பல்வேறு ஊடகங்களினது உயரதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த வாக்குறுதிகளில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், அவை அனைத்தும் கூறியபடியே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். இதனிடையே, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரச நிறுவனங்கள் சிலவற்றின் …

  9. சிறிலங்காவில் 95 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த நேர்காணல் ஆரம்பம் சிறிலங்காவில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, ‘புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு 95 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பித்த அரசியல் கட்சிகளைத் தனித்தனியாக அழைத்து நேர்காணல் செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. நேற்றுத் தொடக்கம் இந்த நேர்காணல் இடம்பெற்று வருகிறது. நாளை வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும். பின்னர், மீண்டும் ஏப்ரல் 26ஆம் நாள் தொடக்க…

    • 0 replies
    • 289 views
  10. காவி உடை, நீண்ட தாடியுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் முருகன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனப்படும், சிறீதரன் காவி உடை தரித்த நிலையில் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். வேலூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முருகனிடம் இருந்து, கைபேசிகள், சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர் நேற்று வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கடுமையான பாதுகாப்புடன் காலை 11.30 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த முருகன், நீண்ட தாடி வளர்த்து, தலையில் குடுமி வைததிருந்ததுடன் காவி உடையும் அணிந்திருந்தார். விசாரணைகள…

    • 0 replies
    • 562 views
  11. சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் – சிறிலங்கா அதிபர் எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள உடன்பாடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னமும் இந்த உடன்பாடுகள் குறித்து இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இன்னமும் உடன்பாடுகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் நான் கையெழுத்திடமாட்டேன். …

    • 0 replies
    • 233 views
  12. எமது மே தினக் கூட்டம் வரலாற்றில் இடம்பிடிக்கும்- மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்க் கட்சி காலி முகத்திடலில் நடாத்த எதிர்பார்த்துள்ள மே தினக் கூட்டத்தில், பாரிய மக்கள் சக்தியொன்றைத் திரட்டி, அரசாங்கத்துக்கு தங்களது பலத்தை எடுத்துக் காட்டவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் கூட்டு எதிர்க் கட்சிக்குக் கிடைத்தமை ஒரு சந்தோஷமான விடயம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். காலி முகத்திடல் மே தினம் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு கூட்டமாக இருக்கும் என்பதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாகவும் அக்கூட்டம் அமையவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்…

    • 0 replies
    • 274 views
  13. இலங்கையில் அத்தியாவசிய சேவையாக மாறும் கழிவுகள் அகற்றும் பணி இலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி அத்தியாவசிய சேவையாக இருக்கும்மென அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரகடனம் செய்துள்ளார். Image captionகொழும்பு வீதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு கெஸட் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 17வது சரத்தின் கீழ் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளினால் முன்னெடுக்கப்படும் வீதிக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் அல்ல…

  14. இராணுவத்திடம் என் தென்னைகள் நான் தண்ணீரிலேயே கறி சமைக்கின்றேன் - தன் அவல நிலையை எடுத்து விளக்குகிறார் கேப்பாபிலவு மூதாட்டி எனது தோட்டத்தில் தேங்காய் குவியலாகக் கிடப்பதாக நேற்று முன்தினம் கிராமத் துக்குள் சென்று வந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இங்கு தண்ணீரில் கறி வைத்தே நானும் கணவரும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறோம் எனக் கேப்பாபிலவில் இராணுவத்திடம் தனது 3 ஏக்கர் தென்னம் காணியைப் பறி கொடுத்த 72 வயதுடைய கணபதிப்பிள்ளை மனோன்மணி கவலையுடன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, போர்க் காலத்தில் எனது மூன்று பிள்ளைகளையும் இழந்து இன்று நானும் கணவரும் தனியாக வாழ்ந்து வருகின்றோம். 20 பேர்ச் காணியில் ஒன்றுமே செய்ய முடியாது. தினமும் செ…

  15. 5,000 ஏக்கர் தனியார் காணிகள் குடாநாட்டில் படையினர் வசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும், முப்படையினர் வசம் 5 ஆயிரம் ஏக்கர் தனியார் காணி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்து 640 ஏக்கரும், பொலிஸார் வசம் 25 ஏக்கரும், கடற்படையினர் வசம் 800 ஏக்கரும், வான் படையினரின் கட்டுப்பாட்டில் 540 ஏக்கரும் உள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. நெடுந்தீவுப் பிரதேச செ…

  16. யாழ். பண்ணையிலுள்ள 2 முகாம்களை நகர்த்த இராணுவம் தீர்மானம் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள 2 இராணுவ முகாம்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக அந்த இடங்களிலிருந்து இராணுவம் நகர்த்தவுள்ளதாக அறியமுடிகிறது. போர்க் காலத்தில் யாழ்ப்பாண மாநகரில் பல்வேறு இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. போரின் பின்னர் படிப்படியாக இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன.எனினும் சில முகாம்கள் இன்றுவரை அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றன. 2 இராணுவ முகாங்களும் வேறு இடத்துக்கு நகர்த்தப்படவுள்ளன.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியும் அவற்றில் அடங்குகின்றது. அதனை சிறுவர் வைத்தியசாலையை அமைக்க மீளளிக…

  17. பண்டாரவன்னியனின் சிலை திறப்பு... -சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன் வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை, வியாழக்கிழமை (20) முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைய, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களால் பயன்படுத்தப்ப…

  18. 26 வயது யுவதி செய்த காரியம் : கைதுசெய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார் (எம்.எப்.எம்.பஸீர்) பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கையடக்கத் தொலைபேசிகளை மொத்தமாக கொள்வனவுச் செய்து, அதற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலைகளை விலையாக செலுத்திய இளம் பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இலக்கம் 141, பண்டாரநாயக்க புர. மல்கடுவாவ குருணாகல் மற்றும் 2 ? ஏ 12, பிக்சிட்டி பில்வத்த யடியன ஆகிய முகவரிகளைக் கொண்ட 26 வயதான மு{ஹது கமகே மாரம்பகே லக்மாலி பிரியதர்ஷனி எனும் யுவதியையே இவ்வாறு தேடப்படுவதாகவும் அவர் தொடர்பில் தகவல் வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மினுவாங்கொட பிரதேசத்தில் இவ்வாறு மறுக்கப்பட்ட காசோலைகளை வழங்கி 32 இலட்சத…

  19. பயங்கரவாத செயற்பாடுகளால் இழந்த காணிகளை மீளப்பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது A பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக தமது காணிகளை இழந்த மக்கள், அவற்றை சட்டரீதியாக மீள பெற்றுக்கொள்வதற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, காணிகளை இழந்தவர்கள் அதனை மீளப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு தீர்வு வழங்கும் வகையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி…

  20. 195 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட வவுனியா பஸ் நிலையம் தொடர்ந்தும் பயனற்ற நிலையில் பல மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாவனையின்றி காணப்படுகின்றது. மக்களின் பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுகிறமை கவலைக்குரியதே. வவுனியா நகரில் இருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் யாழ். வீதியில் 195 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம…

  21. போராட்டத்தைப் பலவீனப்படுத்த ரணில் சதி! - கேப்பாப்பிலவு மக்கள் விசனம் [Thursday 2017-04-20 17:00] பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரத்துக்கு நாங்கள் பலிக்கடாவாக மாட்டோம் என, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி, படை முகாமுக்கு முன்பாக கேப்பாப்பிலவு மக்கள் நடத்தி வரும் போராட்டம் 51 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்படுமெனவும் தகவல் வெளியானது. எனினும், “எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது. கோரிக்கை. அவ்…

    • 0 replies
    • 331 views
  22. கிளிநொச்சி காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவம் உறுதி! - சுமந்திரன் [Thursday 2017-04-20 17:00] தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக, இன்றைய சந்திப்பின் போது தமக்கு தெரிவிக்கப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும். தனியார் காணிகளை விடுவிப்பதே தமது முதலாவது நோக்க…

    • 0 replies
    • 357 views
  23. தொம்பே பகுதியில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு : 15 பேர் கைது கொழும்பில் இருந்து கொண்டுச் செல்லப்படும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட வேண்டாம் என கூறி தொம்பே பிரதேச மக்கள் டயர்களை எரித்து பாதைகளை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலகம் அடக்கும் பொலிஸார் 15 பேரை கைது செய்துள்ளனர். இதேவேளை குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் மையம் ஒன்று தென்கொரியாவால் தொம்பே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதோடு தற்போது காணப்படும் குப்பைகளின் அளவை விட 50 டொன் குப்பைகளை இங்கு சேகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதேச மக்கள் இங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவ…

  24.  யாழ்தேவியில் மோதி ஒருவர் பலி நடராசா கிருஸ்ணகுமார் வவுனியா பொலிஸ் நிலையப்பிரிவில் உள்ள நொச்சி மோட்டைப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பண்டாரிக்குளம் வீதியைக் கடக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர், ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், இன்று வியாழக்கிழமை (20) மதியம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயிலுடன் மோதி, வவுனியா நகரசபை விடுதியில் வசிக்கும் நவலிங்கம் ஜீவராஜ் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.