ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார். இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்த வேளையே கடத்தப் பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மோட்டார் ஊர்திகளில் வந்தவர்கள் அனைவரும் தம் முகங்களுக்கு துணி கட்டியிருந்ததால் அடையாளம் காணப்படவில்லை. இவரின் குடும்பத்தினர் தர்மபுரம் காவல் நிலையம் சென்று முறையிட்ட போதும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபரம் தெரிந்தால் அழைக…
-
- 0 replies
- 263 views
-
-
துன்னாலையில் குழுக்களுக்கிடையே மோதல்; பன்னிருவர் காயம் துன்னாலை கிழக்கு வேம்படிப் பகுதியில் நேற்று (21) மாலை கோஷ்டி மோதல் இடம்பெற்றுள்ளது. இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இந்த மோதலில் 12 பேர் காயமடைந்தனர். மோதல் குறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து உடனடியாக நெல்லியடிப் பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். அவர்களின் முயற்சியையடுத்து, அங்கு ஏற்பட்டிருந்த பதற்றம் சகஜ நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. மோதலில் காயமுற்ற பன்னிரண்டு பேரும் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். http://www.virakesari.lk/article/19276
-
- 0 replies
- 381 views
-
-
யாழில் அளவுக்கதிக வரி அறவீடு – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி மக்களிடம் வரி அறவிடுவதால் நாடு பொருளாதார மட்டத்தில் உயர்வு கண்டு அபிவிருத்தியை அடைவதற்கு ஆகும் என்பது எல்லோருக்கம் தெரியும். அபிவிருத்தி அடைந்த நாடுகள் மக்களிடம் வரியை அறவிடுவதோடு நிற்பதில்லை. அந்த வரியின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய வகையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு வரியைப் பயன்படுத்துகிறது. அதனால் தான் அபிவிருத்தி அடைந்த நாடுகளை இன்றும் சிறந்த நாடுகள் என்று போற்றுகிறோம். இலங்கையைப் பொறுத்தமட்டில் மக்களிடம் இருந்து வரியை அறவிடுவதுடன் அவர்களின் வேலை முடிந்து விடுகிறது. அந்த வரி மூலம் பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்ள எவரும் முயல்வதில்லை இதனால் தான் இன்று இலங்…
-
- 0 replies
- 321 views
-
-
மஹிந்த செய்த பாவத்தின் கடனையும் நாமே செலுத்தி வருகின்றோம் : அமைச்சர் அர்ஜுன ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களை கேட்டு விலகிச் சென்றுவிட்டால் சீனாவுடன் ஒப்பந்தம் செய்து துறைமுகத்தினை விற்பனை செய்துவிடுவார்கள். அவ்வாறின்றி நாட்டின் வளங்களை பாதுகாப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக மஹிந்த செய்த பாவத்தின் கடனையும் நாம் செலுத்த வேண்டியுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கத்தை ஒற்றுமையாக முன்நகர்த்திச் செல்கின்றார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சி விலகிச் செல்ல மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 221 views
-
-
'டெங்குவால் வைத்தியசாலையில் இருந்த நான் சம்பவத்தை அறிந்து வீட்டில் இருந்த கணவருக்கு கோல் பண்ணினேன்.." : மீதொட்டமுல்ல சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்களின் உள்ள குமறல்கள் (எம்.சி.நஜிமுதீன்) 'டெங்குவால் உயிர் தப்பினேன்" டெங்கு நோயால் பிடிக்கப்பட்டு அண்மைக்காலமாக நான் அவதிப்பட்டேன். வைத்தியசாலையில் தங்கிருந்து சிகிச்சைபெறுவதற்கு விருப்பமில்லாத என்னை எனது கணவர் வற்புறுத்தி வைத்தியசாலையில் அனுமதித்தார். எனினும் அவரின் வற்புறுத்தல் தன்னை மரணத்திலிருந்து தப்பிக்கவைத்ததாக குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் எற்பட்ட அனர்த்தத்தில் வீடு சேதமடைந்து டெரன்ஸ் வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் கயணி என்பவர் தெரிவித்தார். அவர் மேலும் க…
-
- 0 replies
- 165 views
-
-
தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது (ஆர்.யசி) புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சகல மக்களின் பிரதிநிதித்துவமும் பலமடையும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும். தமிழர் தரப்பை தொடர்ந்தும் நிராகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயற்பட வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்தது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் விடு…
-
- 0 replies
- 245 views
-
-
படையினருக்கு அதிக காணிகள் தேவையில்லை: ரெஜினோல்ட் குரே -எஸ்.றொசேரியன் லெம்பேட் “ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார். மக்களின் சொந்தக்காணிகள் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று. அதற்கமைவாக முள்ளிக்குளம் மக்களின் நிலங்கள் மீண்டும் மக்களிடமே மீள ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை மாலை, முள்ளிக்குளம் சென்று நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் கிராம மக்களை சந்தித்த பின் அங்கு உரையாற்றுகையிலேயே வடமாகாண ஆ…
-
- 0 replies
- 260 views
-
-
இப்படியே சென்றால் ராணுவப் புரட்சிதான் - அரசுக்கு டியூ எச்சரிக்கை கூட்டரசு இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சி ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த கூட்டரசு உருவானது. மகிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வாக இருக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. எதுவும் நடக்கவில்லை. இருக்கின்ற…
-
- 2 replies
- 458 views
-
-
மாயக்கல்லில் மீண்டும் விகாரை அம்பாறை இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலையை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சி நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் ஸ்லத்திற்கு விரைந்த இறக்காமம் பிரதேச மக்கள் மேற்படி விகாரை அமைக்கும் முயற்சி நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் பொலிஸாரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதன்போது இப்பிரதேசத்தில் பதற்ற நிலை குடி கொண்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் தலையீடு செய்து விகாரை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். …
-
- 4 replies
- 629 views
-
-
யாழ். மாநகரில் பொலித்தீனுக்குத் தடா : பூமி தினமான நாளை முதல் நடைமுறைக்கு பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு அமையவும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சூழல்நேய நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கவும் இந்த நடவடிக்கையில் சகலரும் இணைந்து கொள்ளவேண்டும். நாளாந்த பாவனையி…
-
- 4 replies
- 918 views
-
-
'காணிகள் விடுவிக்கப்படுமென மைத்திரி வாக்குறுதியளித்திருந்தார்' எஸ்.ஜெகநாதன் "ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இருந்த போது, தனியார்க் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படுமென்று எழுத்து மூலமான வாக்குறுதியளித்திருந்தார். இதனாலேயே நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட்டோம்" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில், முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில், இன்று (21) இடம்பெற்றது. கூ…
-
- 2 replies
- 341 views
-
-
-
- 0 replies
- 324 views
-
-
மீட்பு பணியாளர்களுக்கு அருகிலேயே அங்கலாய்ப்புடன் இருக்கும் மக்கள் வேனொன்றில் பலர் பயணித்துக்கொண்டிருந்த போது புதையுண்டிருக்கலாமென அச்சம் (எம்.எப்.எம்.பஸீர்) வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணி க்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 17 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் உள்ளிட்ட 32 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். இந் நிலையில் மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளதாக கருதப்பட்டு மீட்புப் படையினரால் தேடப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் …
-
- 1 reply
- 217 views
-
-
நாடுபூராகவும் மீண்டும் கடுமையான வரட்சி, இலட்ச கணக்கான மக்கள் பாதிப்பு : எப்போது மழை பெய்யும் : வளிமண்டலவியல் தகவல் எம்.எம்.மின்ஹாஜ் நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நாடுபூராகவும் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.…
-
- 0 replies
- 207 views
-
-
அவதானம் : குப்பைமேடு எந்நேரத்திலும் வெடிக்கலாம், நெருப்பு பற்றும் வாய்ப்பு அதிகம் : பெக்கோ, சிகரட் பாவிப்பதை தடுக்கவும் : நேரில் சென்று ஆராய்ந்த ஜப்பான் குழு தகவல் (ந.ஜெகதீஸ்) மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மெதேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. எனவே அதன் தாக்கத்தினால் எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மீதொட்டமுல்லை குப்பை மேட்டினை ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்தது. மேலும் மீதொட்டமுல்ல பகுதியில் சிறிய அளவிலேனும் நெருப்பு பற்றக்கூடிய எந்த வொரு பொருளையும் பாவிப்பதானது மிக அவதானமானது எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் …
-
- 0 replies
- 294 views
-
-
அரச அதிபர் தலைமையிலும் கேரதீவு உப்பள விவகாரம் தோல்வியில் முடிவு தென்மராட்சி தெற்கு கேரதீவு கடலேரியில் உப்பளம் அமைக்க யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலும் தோல்வியில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தென்மராட்சி பிரதேச செயலர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது கேரதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் அப் பகுதி கமக்கார அமைப்புகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள் போன்றவையின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று யாழ் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் கேரதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பான கலந்…
-
- 0 replies
- 488 views
-
-
முப்பதாயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த வருடம் 30 ஆயிரம் கிலோ வெல்லங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ். துரைசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பனை வெல்லங்களை மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்துவருகின்றனர். கடந்த வருடம் அதிகூடிய வெல்லங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளோம். தற்போது மக்கள் மத்தியில் நீரிழிவு என்கின்ற நோய் அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் அந்த…
-
- 0 replies
- 258 views
-
-
ஒருவாரமாக குப்பை அகற்றப்படாமையினால் வீதிகளில் துர்நாற்றம் ; மக்கள் கடும் விசனம் எம்.எம்.மின்ஹாஜ் மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் நடந்த பின்னர் ஒருவாரமாக கொழும்பு நகரிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பை அகற்றல் நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன்காரணமாக நகர வீதியோரங்களில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயமும் தோன்றியுள்ளன. கொழும்பு நகரின் குப்பைகள் பிலியந்தல கரதியான பகுதியில் கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அப்பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக குறித்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. கொழும்பு நகர குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளமையினால் மக்கள் கடுமையான விசனங்களை தெரி…
-
- 5 replies
- 665 views
-
-
காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது இராணுவத்தினரும் காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுகிறதாக தெரிகிறது.ஆகவே இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் நாங்கள் முன்நகரலாம் எனவும் படிப்படியாகவேனும் காணிகள் விடுவிக்கப்படும் என்று தென்படுகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை வி…
-
- 2 replies
- 378 views
-
-
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார்; அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் ஆரம்பமான பல்வேறு ஊடகங்களினது உயரதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த வாக்குறுதிகளில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், அவை அனைத்தும் கூறியபடியே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். இதனிடையே, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரச நிறுவனங்கள் சிலவற்றின் …
-
- 3 replies
- 515 views
-
-
சிறிலங்காவில் 95 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த நேர்காணல் ஆரம்பம் சிறிலங்காவில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, ‘புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு 95 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பித்த அரசியல் கட்சிகளைத் தனித்தனியாக அழைத்து நேர்காணல் செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. நேற்றுத் தொடக்கம் இந்த நேர்காணல் இடம்பெற்று வருகிறது. நாளை வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும். பின்னர், மீண்டும் ஏப்ரல் 26ஆம் நாள் தொடக்க…
-
- 0 replies
- 290 views
-
-
காவி உடை, நீண்ட தாடியுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் முருகன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனப்படும், சிறீதரன் காவி உடை தரித்த நிலையில் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். வேலூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முருகனிடம் இருந்து, கைபேசிகள், சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர் நேற்று வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கடுமையான பாதுகாப்புடன் காலை 11.30 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த முருகன், நீண்ட தாடி வளர்த்து, தலையில் குடுமி வைததிருந்ததுடன் காவி உடையும் அணிந்திருந்தார். விசாரணைகள…
-
- 0 replies
- 563 views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் – சிறிலங்கா அதிபர் எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள உடன்பாடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னமும் இந்த உடன்பாடுகள் குறித்து இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இன்னமும் உடன்பாடுகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் நான் கையெழுத்திடமாட்டேன். …
-
- 0 replies
- 234 views
-
-
எமது மே தினக் கூட்டம் வரலாற்றில் இடம்பிடிக்கும்- மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்க் கட்சி காலி முகத்திடலில் நடாத்த எதிர்பார்த்துள்ள மே தினக் கூட்டத்தில், பாரிய மக்கள் சக்தியொன்றைத் திரட்டி, அரசாங்கத்துக்கு தங்களது பலத்தை எடுத்துக் காட்டவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் கூட்டு எதிர்க் கட்சிக்குக் கிடைத்தமை ஒரு சந்தோஷமான விடயம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். காலி முகத்திடல் மே தினம் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு கூட்டமாக இருக்கும் என்பதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாகவும் அக்கூட்டம் அமையவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்…
-
- 0 replies
- 275 views
-
-
இலங்கையில் அத்தியாவசிய சேவையாக மாறும் கழிவுகள் அகற்றும் பணி இலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி அத்தியாவசிய சேவையாக இருக்கும்மென அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரகடனம் செய்துள்ளார். Image captionகொழும்பு வீதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு கெஸட் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 17வது சரத்தின் கீழ் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளினால் முன்னெடுக்கப்படும் வீதிக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் அல்ல…
-
- 0 replies
- 441 views
-