ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் தொடர்பில் முற்றிலும் மாறுபட்ட தரவு வெளியிடும் நல்லிணக்க செயலணி அனு 4 hours ago தமிழீழம் 3 Views வட பகுதியில் மட்டும் இன்னமும் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் படையினர் குந்தியிருக்கும் நிலையில் தற்போது வெறும் 27 ஆயிரத்து 230 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே வடபகுதியில் படையினர் நிலை கொண்டுள்ளதான தகவலை வேண்டுமென்றே கசிய விட்டு சர்வதேசத்தையும் சமூக ஆர்வலர்களையும் திசைதிருப்ப முயற்சிக்கின்றதா தேசிய நல்லிணக்க செயலணியின் அலுவலகம் .என்ற மிகப் பெரும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் முப்படையினரின் வசம் தற்சமயம் 27 ஆயிரத்து 230 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகள் உள்ளதாகவே குறித்த தேசி…
-
- 0 replies
- 236 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 600 கோடி ரூபா உதவி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 600 கோடி ரூபா உதவியை வழங்க உள்ளது. நல்லிணக்கத்தை பலப்படுத்தல் மற்றும் விவசாய துறையை நவீனமயப்படுத்தல் ஆகிய திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 42 மில்லியன் யூரோக்களை வழங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக இலங்கையின் விவசாயத்துறை மேம்படுத்தப்பட உள்ள நிலையில் விவசாயத்துறை மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 30 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளது. http://globaltamilnews.net/archives/23932
-
- 0 replies
- 260 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு ரூ.7.6 மில். நட்டம் ஜனனி ஞானசேகரன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட ஆறு மாத காலப்பகுதியில், 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திரட்டிக்கொண்ட கறுப்புப் பணத்தை, ஏதாவதொரு இலாபம் தரக்கூடிய வியாபாரத்தில் முதலிடுவது போலவே, இந்த கட்டுநாயக்க விமான நிலைய…
-
- 0 replies
- 441 views
-
-
என் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்! - ஆனந்தசங்கரி [Monday 2017-04-10 06:00] தனது அறிவுரையைக் கேட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்- முன்னைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் போதியளவு வசதிகள் காணப்பட்டது. சேவையை நோக்கமாக கொண்டு பாராளுமன்றக்கு வந்தனர். ஆனால் இன்று பாராளுமன்ற தொழில் ஒரு வியாபாரமாக போய்விட்டது. அதிலும் எமது மக்கள் பிரதிநிதிகளால் நாங்கள் அழிக்கப்…
-
- 4 replies
- 577 views
-
-
வவுனியாவில் ரயில் கடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : பொலிஸார் கடமையில்! பண்டிகைக் கால முற்கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ரயில் கடவை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். எனினும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் கடவை ஊழியர்கள் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18964
-
- 0 replies
- 274 views
-
-
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் 50 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 50 தினங்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமக்கான நியமனங்களை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் பட்டதாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். மத்திய அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் எங்களை ஏமாற்றாமல் நியாயமான தமது கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது பட்டதாரிகள் வலியுறுத்தினர். இதன்போது 'வெற்றிடங்கள் ஏராளம், பட்டதாரிகள் வீதியோரம், எதிர்க்கட்சி ஆளும் கட்சிக்கா எமக்கா?, தட்டித்திறக்கவில்லையாயின் முட்டித்திறப்போம், பட்டதா…
-
- 0 replies
- 264 views
-
-
புகையிரதக் கடவை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் : மக்கள் ஆபத்தில் மட்டக்களப்பில் புகையிரத கடவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் விதமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகின்றது. தங்களது சம்பள கோரிக்கையை முன்வைத்து இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதக் கடவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 8 மணி நேரம் வேலை செய்தல் 250 ரூபா சம்பளம் தருவதாகவும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்றே இந்த பணி பகிஷ்கரிப்பில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் மிகுந்த அச்சத்துடன் புகையிரதக் கடவை வழியாக பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளமை குறிப்…
-
- 0 replies
- 156 views
-
-
ஒரு மாறுபட்ட அடக்குமுறை ஈழ நாட்டில் வேரூன்ற தொடங்கியுள்ளது. இதனை அடக்கு முறை என்பதை விடவும் அழிப்பு முறை என்று சொல்வதே பொருத்தம். இருந்த நிலை மாற்றப்பட்டு வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு, அங்கு ஓர் செயற்கையான கலாச்சாரம் ஏற்படுத்துவதனையும், உட்புகுத்துவதனையும் புதுவித ஆக்ரமிப்பு படலமாக மட்டுமே நோக்க முடியும். அப்படிப் பார்க்கும் போது இதனையும் கூட ஒரு வகையில் இன அழிப்பு பட்டியலுக்கும் அடக்கிவிட முடியும். அதற்கான ஓர் அடித்தளமாகவே பலவந்தமான ஓர் கலாச்சாரத் திணிப்பு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது இப்படியே தொடருமானால் “தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்ல சாவார்கள்” என்ற பதம் மட்டும் உண்மையாகி விடக்கூடிய சூழலில் இலங…
-
- 0 replies
- 565 views
-
-
அடிப்படை வசதிகளின்றி மருதங்கேணி வைத்தியசாலை தாதியரின் பணிகளையும் வைத்தியர் பார்க்கும் அவலம் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மிக மோசமான அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருவதாக நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை குடாரப்பு முதல் சுண்டிக்குளம் வரை பதினொரு கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்குரிய வைத்தியசாலையாக காணப்படுகிறது. ஆனால் அதற்குரிய போதுமான அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுப்படவில்லை, பிராந்திய சுகாதார திணைக்களம், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவு…
-
- 0 replies
- 352 views
-
-
‘தஹம்’ பரீட்சைக்கு 39 கைதிகள் தோற்றினர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 39 பேர், தஹம் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தஹம் பாடசாலை இறுதி சான்றிழதழ்ப் பரீட்சை 2016-2017, மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. இந்தப் பரீட்சைக்கு தோற்றிய கைதிகள், சிறை செல்வதற்கு முன்னர் ஒருநாளேனும், பாடசாலைக்குச் சென்றதில்லை என்றும் அறியமுடிகிறது. தஹம் பாடசாலை இறுதி சான்றிதழ் பரீட்சையில் இவர்கள் சித்தியெய்தி…
-
- 0 replies
- 235 views
-
-
வடக்கு, கிழக்கு கடவைகளில் ‘நில்’ 11-04-2017 09:53 AM Comments - 0 Views - 30 கனகராசா சரவணன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் ரயில்க் கடவை காப்பாளர்கள், நேற்று (10) முதல் காலவரையறையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால், கடவைகளை கடக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானதுடன் கடக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். புதுவருடம் மற்றும் ஏனைய பண்டிகை காலங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்,சிற்றூழிர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவேண்டும் அல்லது வீதி அதிகார சபையில் வீதி பரமரிப்பாளர்களாக இருக்கும் வெற்றிடத்துக்குத் தங்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்…
-
- 0 replies
- 400 views
-
-
‘வழிமறித்தவரை விட்டு விடுங்கள்’ தன்னுடைய உத்தியோகபூர்வ வாகனத்துக்கு, அவருடைய காரின் மூலமாக வெட்டுப்போட்டுவிட்டு, வழிமறித்து ஓட்டிச்சென்ற சாரதியிடம், இனிமேல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு ‘வெட்டுப் போட்டு’ காரை ஓட்டியவர், சீனாவில் வைத்திய பீடத்தில் கல்விபயிலும் இலங்கை மாணவன் என்றும் அவர் தவறான முறையில், காரை செலுத்தவில்லை என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 6ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திலிருந்து சுதந்திர சதுக்கத்துக்கு தன்னுடைய உத்தியோகபூர்வ காரில் பயணித்து…
-
- 0 replies
- 286 views
-
-
மருத்துவ பீடத்துக்கு அனுமதி பெற உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு அவசியம் அரச மருத்துவ பல்கலைக்கழகம் அல்லது தனியார் மருத்துவ கல்லூரி என்பவற்றுக்கு ஒரு மாணவன் பிரவேசிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விஞ்ஞான துறையில் 2 ஏ, சித்திகளையும், 1 பீ. சித்தியையும் பெற்றிருக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது. மருத்துவ பீடமொன்று பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகள் அடங்கிய அறிக்கையில் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளது. வைத்திய பீடமொன்றுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய இந்த குறைந்தபட்ச தகைமை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நிபந்தனையிடப்பட்டிருந்ததாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இம்முறையும் இந்த சட்…
-
- 0 replies
- 158 views
-
-
20 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்படும் ! வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படாவிட்டால் 15 ஆயிரம் முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்தியும் தமது பிரச்சினைகளை ஜனாதிபதி கவனத்தில்கொ ள்ளாவிட்டால், நாடு முழுவதும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலால் முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிக்கும…
-
- 0 replies
- 244 views
-
-
வன்னி யுத்தத்தில் ஈடுபட்ட படை அதிகாரிகளை வெளிநாடுகளில் கைது செய்யத் திட்டம்? வன்னி யுத்தத்தில் ஈடுபட்ட படை உயர் அதிகாரிகளை வெளிநாடுகளில் வைத்து கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வன்னி யுத்தத்தில் முக்கிய பங்களிப்பு வழங்கிய 25 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டால் அந்த நாடுகளில் வைத்து அவர்களை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஒஸ்ட்ரியா, ஸ்பெய்ன் உள்ளிட்ட அகிலப் பிரகடனம் அமுல்படுத்தப்படும் பத்து நாடுகளில் இவ்வாறு முயற்சிக்கப்பட்டு …
-
- 0 replies
- 189 views
-
-
பந்தடித்து பரிசுபெறும் நிகழ்வா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத் தமிழ் இனம் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் என்பது பந்தடித்து விளையாடி பரிசு பெறும் நிகழ்வா? திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் இருப்பது யார்? முள்ளிவாய்க்காலை கொச்சைப்படுத்தும் இச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாளின்போது உதைபந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதற்கு எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இந்த உதைபந்தப் போட்டியின்போது பணப் பரிசுகளும…
-
- 0 replies
- 218 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானியப் பிரதமருடன் இன்று சந்திப்பு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜப்பானுக்கு ஏழு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு ஜப்பான் சென்றடைந்தார். அவருடன், அவரது பாரியார் மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்களாகிய மலிக் சமரவிக்கிரம, சரத் அமுனுக உட்பட பத்துப் பேர் ஜப்பான் சென்றுள்ளனர். இலங்கை-ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை இன்று சந்தித்துப…
-
- 0 replies
- 162 views
-
-
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியலமைப்பு அவசியம்உ - சுமந்திரன் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள் ளார்.பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித் துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் தமது உரிமை களை வென்றெடுப்பதற்கு நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை நல்லது என்ற கருத்து சரியானது அல்ல. தேர்தல்களின் போது சிறுபான்மையினரின் ஆதரவு தேவைப்பட்டாலும் கூட ஜனாதிபதியாகத் தெரிவு செ…
-
- 0 replies
- 127 views
-
-
24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்த 24ஆயிரம் பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த மாதம் 28ஆம் திகதி இன்னும் 1,500 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என, அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த அரசாங்கத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக 2015ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அதிகளவிலான விண்ணப்பப்பத்திரங்கள் தேங்கியிருந்ததாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 225 views
-
-
யாழில் மரக்கறிகள் நெருப்பு விலை குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக உள்ளூர் மரக்கறிகளின் உற்பத்தி குறைவடைந்து வருவதால், யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன என்று, சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் மலிந்த நிலையில் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள், இந்த வாரத்தில் மூன்று, நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளன. முன்னர் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளி தற்போது 160 ரூபாயாகவும் 30 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் தற்போது 140 ரூபாயாகவும் காணப்படுகிறது. …
-
- 0 replies
- 172 views
-
-
தீவிரமைடைந்து வரும் இன்புலுவென்சா நோய் : அவதானமாக இருக்க கோருகிறது சுகாதார அமைச்சு.! (க.கமலநாதன்) நாடளாவிள ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதா சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடுமல் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் பிரகாரம் இந்த நோய் தொற்று உள்ளதாக அறிந்துக்கொண்டவர்கள் அதிக சன நடமாட்டம் உள்ள பகுதியில் ச…
-
- 0 replies
- 133 views
-
-
இன ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு ஆன்மீகத் தலைவர்களே முக்கிய கருவிகள்” - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன “இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் ஊக்குவிப்பதற்கு ஆன்மீகத் தலைவர்களே சிறந்த கருவிகளாவர். திரிபிடகம், பைபிள், குர்ஆன், பகவத் கீதை என அனைத்துச் சமயங்களினது புனித நூல்களிலும் ஒற்றுமைக்கான வழிகாட்டல்கள் செறிந்திருக்கின்றன. எனவே, புத்த பிக்குகளும் ஏனைய ஆன்மீகத் தலைவர்களும் அந்நூலின் தத்துவங்களை மக்கள் கடைப்பிடிக்க வழி செய்ய வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன, மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தங்கொட்டுவை, சிங்கக்குளியவில் நடைபெற்ற ‘எரபுது வசந்தம்’ என்ற விழாவில் பேசும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார…
-
- 0 replies
- 103 views
-
-
வடக்கு - தெற்கு அந்நியோன்ய உறவுகள் அரசியலமைப்பு விவகாரத்தினால் பாதிக்கப்பட்டால் நிலையான அமைதி கெடும் - சமல் ராஜபக்ஷ (லியோ நிரோஷ தர்ஷன்) அரசியலமைப்பு விவகாரத்தினால் வடக்கு , கிழக்கு மற்றும் தென்னிலங்கையின் அந்நியோன்ய உறவுகள் பாதிக்கப்பட கூடாது. தேசிய சமாதானத்தை கலங்கப்படுத்திக் கொண்டு பொருளாதார இலக்குகளை அடைவதோ நிலையான அமைதியை தக்கவைத்துக் கொள்வதோ சாத்தியமற்றதாகும் என முன்னாள் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குறுகிய நோக்கங்களுக்காகவும் குறிப்பிட்ட தரப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் செயற்படாது , நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்…
-
- 0 replies
- 126 views
-
-
தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து திரைமறைவில் செயற்படுகிறது அரசு புதிய அரசியலமைப்பு தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறான உடன்பாடு எதுவும் எட்டப்பட்டதாக எமக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து திரைமறைவில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது என்று பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். உத்தேச அரசியலமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 123 views
-
-
கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழ கிராம அலுவலராக கடமையாற்றியிருந்தார் என்றும் அவ்வப்போது சில சர்ச்சனைகள் எழுந்தபோதும் 2009 காலப்பகுதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் பிரத்தியேக கடமையாற்றிவந்தவேளை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக்கு உள்வாங்கப்பட்டு அதன் கொள்கைபரப்பு செயலராக கடமையாற்றி வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினரிடம் …
-
- 5 replies
- 1k views
-