ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143374 topics in this forum
-
கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மட்டு.அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிப்பு (பட்டிருப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பகுதியில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி நிலையத்தை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கல்குடாவில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி சாலையை தடுத்து நிறுத்து என்ற வாசக மகுடத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசே எமது எதிர்கால சந்ததியினர…
-
- 0 replies
- 249 views
-
-
நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: இன்று தீர்ப்பு -எம்.றொசாந்த் நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பு, இன்று வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றார். இதன்போது, அச்சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன்…
-
- 6 replies
- 995 views
-
-
“காணிநிலம் வேண்டும் நாகேசா காணி நிலம் வேண்டும்” யாரொடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம் ஐயகோ… குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக காதோடு காதாக –அராலியூர் குமாரசாமி:- பார்த்தவுடன் சிரிப்பு வரும் இந்தக் காலத்து வடிவேல் போல அந்தக் காலம் நாகேஷ் பிரபலம். நாகேஷ் நடித்த படம் என்றால் எனது அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். படம் முடியும் மட்டும் கதிரையை விட்டு எழும்பமாட்டார். அப்பா பார்ப்பதால் என்னவோ எனக்கும் நாகேஷ் நடித்த படங்கள் பார்ப்பதில் ஒரு தனி விருப்பம். நகைச்சுவையில் பெயர் கொண்ட நாகேஷ் என்பதால் அவரின் பெயரை பல பேர் தமது பிள்ளைகளுக்கும் சூட்டியும் உள்ளனர். ஆனால் பெயரைச் சூட்டியதால் எல்லோரும் உலகப் பெயர் சொல்லும் படி திகழ்வார்கள் என்று எப்படி …
-
- 0 replies
- 1.3k views
-
-
5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: கடற்படை அதிகாரியான ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டரை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நேற்று மீளவும் உத்தரவிட்டார். அத்துடன் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், கடற்படை தலைமையகத்தில் தேடுதல் நடத்தி …
-
- 0 replies
- 330 views
-
-
யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள், மது பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மது வரி தொடர்பில் பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், தெற்காசியாவில் மது பாவனையில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாதவாறு யாழ்ப்பாணத்தில் மது பாவனை திடீரென அதிகரித்துள்ளது. இவ்வாறு மது பாவனை அதிகரித்தமையே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன. எனவே, வடக்கில் அதிகரித்துள்ள மது பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க…
-
- 4 replies
- 634 views
-
-
இலங்கை விவகாரம் தொடர்பில் மன்னிப்புச்சபையின் நிலைப்பாடு இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கமும் கால இழுத்தடிப்பை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானோர் பலிகொள்ளப்பட்டதுடன் பல ஆயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயினர். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இவ்வாறு உயிர்களையும் உடமைகளையும் இழந்த தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட…
-
- 0 replies
- 284 views
-
-
ஜெனிவா விவாதத்துக்கான நேர ஒதுக்கீட்டினால் பெரும் சர்ச்சை; சபை நடவடிக்கை ஒத்திவைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஜெனிவா தொடர்பில் கூட்டு எதிரணியினால் சபையில் முன்வைக்கப்படவிருந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமாவதற்கு முன்ன தாகவே நேர ஒதுக்கீடு தொடர்பில் ஆளும் தரப்பினருக் கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் எழுந்த கடும் வாக்குவாதத்தால் சபை நடவடிக்கைகள் இன்று மு.ப. 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை மு.ப. 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடி யது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தை தொட ர்ந்து நேரடியாக சபை ஒத்தி வைப்பு ஜெனிவா விவாதம் …
-
- 0 replies
- 275 views
-
-
அரசாங்கம் தயாரில்லை கூட்டு எதிரணி குற்றச்சாட்டு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் போதே தெளிவாக புரிந்துவிட்டது. எனவே அரசாங்கம் ஜெனிவா குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு தயாராக இருக்கவில்லை. எவ்வாறாயினும் இந்த பிரேரணையை மீளவும் கொண்டு வருவோம் என கூட்டு எதிரணி தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஒப்புக்அரசாங்கம்.... எனினும் அநுர குமார திஸாநாயக்க தனது எதிர்க்கட்சி பிரதம கொறடா…
-
- 0 replies
- 172 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்க அரசு ஏற்பாடு செய்து விட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கப்போகும் பிரதான நபர்களில் மூன்றாம் இடத்தில் அர்ஜுன் அலோசியஸ் இருக்கின்றார். அவரே அதனை வாங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாட்டில் கொள்ளையிட்டு நாட்டையே வாங்கும் நடைமுறை தொடர்கின்றது. மைத்திரிக்கு உதவி செய்த காரணத்தால் அவர் ரணிலுக்கு உதவி செய்கின்றார். அர்ஜுன் அலோசியஸ் திருட ரணில் உதவி செய்த காரணத்தினால் அர்ஜுன் ர…
-
- 0 replies
- 410 views
-
-
நான் அமைச்சரல்ல; போராளி காரைதீவில் பட்டதாரிகளிடம் அமைச்சர் மனோ கணேசன் (காரைதீவு நிருபர்) நான் வெறுமனே வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போகவரவில்லை. சுற்றுலாவந்துபோகவும் வரவில்லை. நான்மனோகணேசன்நான்அமைச்சரல்ல. ஒருபோராளி. அமைச்சரவையிலும்சரிபாராளுமன்றத்திலும்சரிபோராடித்தான்காரியம்சாதிப்பேன். எனவே உங்களதுபிரச்சினைகளையும் உரியநேரத்தில் உரியவர்களுடன்பேசிதொழில்பெற்றுத்தருவேன் என்று தேசியசகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இவ்வாறுகாரைதீவில் 36வதுநா…
-
- 14 replies
- 1.1k views
-
-
காணிகளில் இராணுவம்-அகதிகளாக மக்கள்: ஐ.நாவிடம் சி.வி தெரிவிப்பு 'மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடமாகாணத்தில் அகதி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை' என, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயப் பணிப்பாளர் டெய்ஜி டெல், யாழ். மாவட்டததுக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது செயலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை (07) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ…
-
- 0 replies
- 206 views
-
-
வலி வடக்கில் சுமார் 28.8 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் காணியை இன்று இராணுவத்தினர் பொதுமக்களிடம் கையளித்துள்ளனர். கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்த குறித்த பகுதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் மற்றும் உண்ணாவிரதங்களை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் இன்று 28.8 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியானது கட்டிடங்கள் எதுவுமற்று தரைமட்டமாக காணப்படுவதனால் மக்கள் தமது காணிகளை அடையாளம் காண்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படு…
-
- 0 replies
- 489 views
-
-
“இந்திய - இலங்கை மீனவர்களின் உயர் மட்டப் பேச்சு ; கோரிக்கைக்கு உடன்படாவிட்டால் கச்சதீவை முற்றுகையிடுவோம்“ இரு நாட்டுமீனவர்களின் நெடுநாளைய பிரச்சனைகளுக்கு தீர்வு குறித்து இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் நீரியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் இலங்கை வசமுள்ள 134 இந்திய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் பாரம்பரிய கடல்பகுதியில் பிரச்சனையின்றி மீன்பிடிக்கவும் 1974 ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தவும் உறுதிசெய்யப்பட வேண்டும் இல்லையேல் தமிழக மீனவர்கள் மாணவர்கள் பொது அமைப்புகள் மற்றும் திரையுலகத்துறையி…
-
- 0 replies
- 173 views
-
-
வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் திட்டமிட்டு கையகப்படுத்தப்படுகின்றன ; ஐரோப்பிய தூதுக்குழுவிடம் கிழக்கு முதலமைச்சர் (எம்.ஆர்.எம்.வஸீம்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகளை படையினரும் வன பாதுகாப்பு திணைக்களமும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் திட்டமிட்டவகையில் இடம்பெற்றுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 346 views
-
-
இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார் கனகாம்பிகை அம்மன் இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடக தனது முதல் பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தார் கனகாம்பிக்கை அம்மன். வருடாந்த திரு ஊர்வலத்திற்காக கடந்த 27-3-2017 அன்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கனகாம்பிக்கை அம்மன் கிளிநொச்சியின் கிழக்கு பகுதியின் பல கிராமங்களை தரிசித்தவாறு இரணைமடு நீர்த்தேக்கத்தை ஆசிரிவதித்து மீண்டும் இன்று வியாழக்கிழமை ஆலயத்தை வந்தடைந்துள்ளார் இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று முதல் பயணமாக கனகாம்பிகை அம்மன் பயணத்தை மேற்கொண்டு ஆலயத்…
-
- 3 replies
- 731 views
-
-
குற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது.! விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இன்று கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். குறித்த சம்பவத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமையால், இந்த குற்றச்சாட்டு சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை என அங்கிரு…
-
- 0 replies
- 192 views
-
-
அதிகாரங்களை தொடர்ந்து பயன்படுத்தாவிடின் ஜனாதிபதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்போம் (ஆர்.யசி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி அதிகாரத்தை அதியுச்சமாக கையாண்டு மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கான அதிகாரங்களை பயன்படுத்தாது மக்களினால் விமர்சிக்கப்படுகின்றார். அவர் உரிய சந்தர்ப்பத்திலேனும் தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர எவராலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் அக்கட்சி தெரிவித்தது. …
-
- 0 replies
- 294 views
-
-
பிணையில் விடுதலையானார் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச..! பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18827
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கை மீனவர்கள் 7 பேருக்கும் இந்தியாவில் விளக்கமறியல் இந்திய கடலோர பாதுகாப்புக் குழுவினரால் கைதுசெய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்புக் குழுவினரால் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களும் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே குறித்த மீனவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சென்னை புழல் சிறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18826
-
- 0 replies
- 181 views
-
-
'குள்ளமாய் இருப்பதாலா புறக்கணிப்பு' -ஜே.ஏ.ஜோர்ஜ் "எனக்கு மட்டும், பெரும் அசாதாரணம் இடம்பெறுகிறது. நான், குள்ளமாக இருப்பதனாலும், பின்வரிசையில் இருப்பதனாலுமா, எனக்கு ஒலிவாங்கியை தருவதில்லை" என, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான, உதய பிரபத் கம்பன்பில கேள்வியெழுப்பினார். நேரம், ஒதுக்கிக்கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சபையில் நேற்று ஏற்பட்டிருந்த குழப்பகரமான சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "நான், குள்ளமாக இருப்பதும் பின்வரிசையில் இருப்பதும் எனக்குப் பிரச்சினையில்லை. நானும் மக்கள் பிரதிநிதிதான். எனக்கு ஒலிவாங்கி வழங்கப்படவேண்டும். நான், கேட்டால் மட்டும் நீங…
-
- 0 replies
- 312 views
-
-
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க சிறிலங்கா முடிவு திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, இந்த எண்ணெய்க் குதங்களை இநதியாவுக்கு வழங்கி கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு முடிவு…
-
- 0 replies
- 170 views
-
-
எட்கா குறித்து முடிவெடுக்க இந்தியா செல்கிறார் ரணில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்காகவே சிறிலங்கா பிரதமர் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை அடுத்து, இந்தியாவுக்கான பயணத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள…
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் 42 மில்லியன் யூரோ நிதியுதவி இலங்கைக்கு 42 மில்லியன் யூரோக்களை - இலங்கை மதிப்பில் சுமார் ஏழு பில்லியன் ரூபா - நிதியுதவியாக அளிக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது. இலங்கையின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காகவும், நல்லிணக்கச் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரியவருகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சார்பில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க கையெழுத்திட்டார். ஐரோப்பிய யூனியன் சார்பில், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய யூனியனின் தூதுவர் எச்.ஈ.துங் லாய் மார்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இத்திட்டத்திற்கு …
-
- 0 replies
- 170 views
-
-
விடுவிக்கப்பட்ட காணியில் பிலக்குடியிருப்பு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கின்றார்களா? நீண்டகால காத்திருப்பு, தொடர் போராட்டங்களின் பின்னர் தமது நீண்ட நாள் கனவு நிறைவேற, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி சொந்த நிலத்தில் காற்தடம் பதித்தனர் முல்லைத்தீவு – பிலக்குடியிருப்பு மக்கள். யுத்தத்தால் அனைத்தையும் இழந்து நிர்க்கதியானவர்கள், விடுவிக்கப்பட்ட தமது காணியில் இன்று அவல நிலையில் வாழ்கின்றனர். தற்காலிகக்கூடாரங்கள் கூட அமைத்துத் தரப்படாத நிலையில், சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைச் சக்கரம் தரப்பால் கொட்டகைகளில் சுழல்கின்றது. தமது காணியில் வாழ்வதற்கு ஏதுவாக உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாற…
-
- 0 replies
- 192 views
-
-
கிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு வரட்சிக்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி செயலகத்தினால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட நீர்தாங்கி உழவு இயந்திரங்கள் நான்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த நான்கு உழவு இயந்திரங்களும் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச செயலகங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நான்கு பிரதேச செயலாளர்களிடம் கையளித்துள்ளார்.…
-
- 0 replies
- 290 views
-