Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிலத்தை மீட்கும் வரை போராட்டம் ஓயாது..! எமது நியாயமான போராட்டத்தை இராணுவமும், பொலிஸாரும் இணைந்து கலைக்க முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நாம் ஓயப்போவதில்லை பல்வேறு வடிவங்களில் நிலம் மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தாம் பூர்வீகமாக வாழ்ந்த கேப்பாபுலவு கிராமத்தையும் சொந்த நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், நிலத்தைவிட்டு வெளியேறவேண்டுமென கோரி முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயிலுக்கு அண்மையில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 15ஆவது நாளாக தொடர்கின்றது. போராட்டம் இடையூறு மிக்கதென த…

  2. யாழிலிருந்து கொழும்பிற்கு வந்த பஸ்ஸில் கஞ்சா மீட்பு யாழில் இருந்து கொழும்பிற்கு பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பஸ்ஸில் கொண்டுச் செல்லப்பட்ட சுமார் இரண்டுகிலோ கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிளிநொச்சிப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இரண்டு சந்தேக நபர்களையும் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடி…

  3. கோதபாய ஜனாதிபதியாகவும், மஹிந்த பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் – தயான் ஜயதிலக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ நாட்டின் ஜனாதிபதியாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கு மிகவும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய இருவரும் இவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலத்தை செலுமையாக்க வேண்டுமாயின் கோதபாய ஜனாதிபதியாகவும், மஹிந்த பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதில்லை எனவும், சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய அனுமதிக்காது எனவும் குறிப…

    • 2 replies
    • 347 views
  4. அவுஸ்திரேலியா சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த யுத்த காலத்தின் போது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த 24 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவிப்பதோடு, அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களிடம் தற்போது விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்க…

  5. கைதுசெய்யப்பட்ட 77 இந்திய மீனவர்கள் மற்றும் 12 இலங்கை மீனவர்கள் விடுதலை (படங்கள்) இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்கள் விடுவிக்கபட்டுள்ளதுடன், இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த விடுவிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்பகுதியிலுள்ள இரு நாடுகளினதும் எல்லைப் பகுதியில் கைமாற்றப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிவித்து, இந்திய அரசியல்வாதிகள் குற்றச்சாட்டியிருந்ததனர். அதுமாத்திரமின்றி கடந்த வாரத்த…

  6. 31 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்..! உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சுமார் 31 வருடங்கள் கடந்த நிலையில் தென்கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார். இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கிடையிலான பரஸ்பர உறவின் 40 வருட பூர்த்தியை நினைவு கூறும் விதமாக, தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியூங்-சே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். மேலும் இலங்கை வந்தடைந்த யுன் பியூங்-சே, இன்று இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மற்றும் பிரதமஉள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார். கடந்த 1986 ஆம் ஆண்டு தென்கொரிய வௌிவிவகார அமைச்சர் ஒருவர் கடைசியாக இலங்கை வந்திருந்தார். அதன் பிறகு 31 வருட…

  7. கடத்­தப்­பட்­டோரை துண்டு துண்­டாக்கி களனி கங்­கை­யில் வீசி­யது கடற்­படை : குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் நீதி­மன்­றில் அதிர்ச்சி அறிக்கை கடத்­தப்­பட்­ட­வர்­க­ளைக் கடற்­ப­டை­யி­னர் கொலை செய்து துண்டு துண்­டாக வெட்­டிக் களனி கங்­கை­யில் வீசி­யதா ­கவும், திரு­கோ­ண­ம­லை­யில் அமைந்­தி­ருந்த நிலத்­தடி முகா­மில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் சட­லங்­களை பொலித்­தீ­னில் சுற்றி கெப் வண்­டி­யில் முகா­முக்கு வெளியே எடுத்­துச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் நீதி­மன்­றில் அறிக்­கை­யிட்­டுள்­ள­னர். மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் தலை­ந­கர் கொழும்பு மற்­றும…

  8. பிரேரணையில் திருத்தம் வராது (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இலங்கை தொடர்­பான புதிய பிரே ரணை குறித்த திருத்­தங்­களை உறுப்­பு­ நா­டுகள் எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை முன்­வைக்க முடியும். அவ்­வாறு திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்டு அவை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­மாயின் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் திருத்தம் இடம்­பெ­றலாம். விசே­ட­மாக இந்தப் பிரே­ர­ணையில் இலங்கை அர­சாங்கம் திருத்­தத்தை முன்­வைக்­குமா என்ற எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. எனினும் அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் இலங்­கை­யுடன் கலந்­து­ரை­யாடி இந்தப் பிரே­ரணை வரைபை மேற்­கொண்­டுள்­ளதால் இலங்கை அர­சாங்கம் திருத்­தங்­களை …

  9. 2015 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்த இலங்கை இணக்கம் inShare 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா – இலங்கை ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நல்லாட்சி, சட்டவாச்சி மற்றும் மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுக்குழுவின் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட ஒன்றிணைந்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ச…

  10. 4 வயது சிறுவனை அடித்துக் கொன்ற கொடூரம் : வளர்ப்புத் தாய் கைது : மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம் (படங்கள்) மட்டக்களப்பு நாவற்குடா மாதர் வீதியில் 4 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தின்த பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக குறித்த சிறுவனின் வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலை தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து. http://www.virakesari.lk/article/17807

  11. இலங்கையின் ஆடம்பர சிறைச்சாலை திறக்கப்படவில்லை : காரணம் வெளியாகியது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பர சிறைச்சாலை குறிப்பிட்டபடி நாளை திறக்கப்படவில்லை எனவும், திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியாக்கப்படாத காரணத்தினாலும், முழு பூர்த்தியுடனான கட்டிடங்களை திறப்பதற்கு உத்தேசித்துள்ளதாலும், குறித்த சிறைச்சாலையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுமார் 58 ஏக்கர் காணியில் சுமார் 5 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட…

  12. காத்தான்குடி மதக் குழுக்களுக்கு இடையிலான மோதல் : ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பகிரங்க ஆதரவு.! Published by RasmilaD on 2017-03-15 10:15:23 (எம்.எப்.எம்.பஸீர்) காத்­தான்­கு­டியில் கடந்த வெள்­ளி­யன்று இடம்­பெற்ற இரு முஸ்லிம் குழுக்­க­ளுக்கு இடை­யி­லான மோதல் சம்­ப­வத்தின் போது, சர்­வ­தேச தீவி­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு ஆத­ர­வாக ஒரு குழு கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக தேசிய உளவுத் துறைக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன. இந்­நி­லையில் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் தீவி­ர­வா­தி­க­ளுக்கு சார்­பாக செயற்­ப­டுவோர், குறித்து இலங்­கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்­பாடு தொடர்பில் ஏற்­க­னவே விசா­ர­ணை­களை செய்து வந்த சிறப்பு உள…

  13. கேப்பாபுலவு போராட்டத்தை கலைக்க இராணுவம் சதி.:! Published by RasmilaD on 2017-03-15 10:29:00 கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் இன்று 15ஆவது நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப இராணுவம் சதி திட்டம் தீட்டிக்கொண்டு அவர்களின் அமைதிக்கு இடையூறு என கூறி பொலிஸாரையும் இணைத்துக்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவு இராணுவ படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி தொடக்கம் இன்று 15 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேற்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் சந்தித்த…

  14. எத்தியோப்பியாவுக்கான இலங்கையின் முதலாவது வதிவிடத் தூதுவர் பதவியேற்பு எத்தியோப்பியாவுக்கான இலங்கையின் முதலாவது வதிவிடத் தூதுவராக சுமித் தசநாயக்க தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர், ஆப்பிரிக்க யூனியனுக்கான இலங்கைப் பிரதிநிதியுமாவார். எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் அந்நாட்டு ஜனாதிபதி முலட்டு தெஷோமியைச் சந்தித்து தனது நியமனக் கடிதத்தைக் கையளித்தார் சுமித் தசநாயக்க. இதன்போது, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களின் வாழ்த்துக்களையும் அவர் பரிமாறினார். இவரது பதவியேற்பு நிகழ்வு அந்நாட்டின் தேசிய மாளிகையில் ஒரு சிறு விழாவாக நடத்தப்பட்டது. இதன்போது சுமித் தசநாயக்கவுக்கு இராணுவ மரிய…

  15. இரண்டே வாரங்களில் விமான நிலையம் தயார்; ஆனால் மக்களுக்குப் பயனில்லை! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்த வேலைகள் மற்றும் விமான ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் பூர்த்தியாகும் எனத் தெரியவருகிறது. இது பற்றித் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரியொருவர், இன்னும் இரண்டு வாரங்களில் விமான நிலையத்தை முழுமையாகத் திறந்துவிட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், எனினும், இதனால் பயணிகளுக்கு எந்தவித நன்மையும் உடனடியாகக் கிடைத்துவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார். விமான நிலையத் திருத்தப் பணிகள் நிறைவுற்றாலும் சர்வதேச விமான சேவைகள் உடனடியாகத் தமது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் ச…

  16. சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் அதிர்ச்சி சம்பவம் (எம்.எப்.எம்.பஸீர்) பாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான…

  17. திருநெல்வேலியில் பட்டப்பகலில் வாள்வெட்டு திருநெல்வேலி ஆடியபாதம்வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கு பணியாற்றிய பெண்ணொருவரை வாளால் வெட்டிய சம்பவமொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்ந பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.onlineuthayan.com/news/24841

  18. இந்தியத் தூதுவரிடம் சிறிலங்கா கடற்படையை நியாயப்படுத்திய சிறிலங்கா பிரதமர் பாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம் கருத்து வெளியிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் 6ஆம் நாள் இரவு கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, உடனடியாக இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். …

  19. பிரேரணையை கிழித்தெறிந்ததால் வடக்கு மாகாண சபையில் குழப்பம் வடக்கு மாகாண சபையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிறப்பு அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் பிரேரணையை கிழித்தெறிந்ததன் காரணமாக, வடக்கு மாகாண சபை அமர்வின் ஆரம்பத்திலேயே குழப்பநிலை ஏற்பட்டடுள்ளது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தால், ஐ.நா தீர்மானத்தை நடை முறைப்படுத்துமாறு கொண்டுவந்த பிரேரணை மீதான விவாதத்தின்போதே இந்த குழப்பநிலை உருவானது. இதன்போது, ஆரம்பத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்மானமும் தற்பொழுது அவையில் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான அறிக்கையும் மாற்றமாக உள்ளது எனவே இதனை…

  20. சமஷ்­டி­ மு­றை­மையில் 9 மாநிலங்­க­ளாக பிரிக்­கப்­பட்ட இலங்­கையே எஞ்சப்போகிறது புதிய அர­சி­ய­ல­மைப்பு வந்தால் இதுவே நிலை என்கிறார் மஹிந்த (லியோ நிரோஷ தர்ஷன்) போரை வெற்றிகொண்­ட­தற்­காக இரா­ணு ­வத்தை தண்­டிப்­பது, மத்­திய அரசாங்கம் மற் றும் ஒற்­றை­யாட்சி இல்­லாமல் போகும் அள­வுக்கு அதி­கா­ரத்தைப் பகிர்­வது உள்­ளிட்ட பிரி­ வி­னை­வா­தி­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் வகை யில் சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்புத் திட்­டத்தின் நோக்­க­மாகும். இந்த திட்டம் வெற்­றி­ய­ளித்தால் சமஷ்டி முறை­மையில் 9 மாநி­லங்­க­ளாகப் பிரிக்­கப்­பட்ட இலங்­கையே இறு­தி­யாக எஞ்சும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள…

  21. செல்­வ­பு­ரத்தில் இரா­ணு­வத்தின் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட இளம்­ப­ரிதி, அவ­ரது மனைவி, மூன்று பிள்­ளைகள் எங்கே? பேரப்பிள்­ளைகள் ஏக்­கத்­துடன் பார்த்­ததை மறக்­க­மு­டி­ய­வில்லை என பெண் கதறல் (கரைச்சி நிருபர்) மரு­ம­கனை பார்ப்­ப­தற்­காக நான்கு இலட் சம் கொடுத்தேன். ஆனால் இன்­று­வரை பார்க்­க­வே­யில்லை, பணம் வேண்­டி­யவர்­களும் காட்­ட­வு­மில்லை. அவர்­களும் இங்­கு தான் இருக்­கின்­றார்கள் என யாழ்.மாவட்ட புலி­களின் அர­சியல் துறைப்­பொ­றுப் ­பா­ள­ராக இருந்த இளம்­ப­ரிதி அல்­லது ஆஞ்சி என்­ப­வரின் மாமி­யா­ரான தங்­கவேல் சத்­தி­ய­தேவி (வயது 69) தெரி­வித்­துள்ளார். கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்­றலில் 22 நாளாக தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத…

  22. வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புறநகர்ப் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச்செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரும் கொலை செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு தெரி­விக்­கின்­றது. கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச்செய்­யப்பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள கொமாண்டர் சுமித் ரண­சிங்க மற்றும் இவ்­வி­வ­கா­ரத்தி…

  23. இலங்கை குறித்த புதிய பிரே­ரணை ஜெனி­வாவில் சமர்ப்­பிப்பு அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நான்கு நாடுகள் தாக்கல் 2019 வரை கால அவ­காசம் 2015 பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டியது அவசியம் நான்கு பரிந்­து­ரைகள் உள்­ள­டக்கம் ஐ.நா.வின் மதிப்­பீட்­டுக்கு வலி­யு­றுத்தல் (ரொபட் அன்­டனி) ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்தும் புதிய பிரே­ரணை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அமெ­ரிக்கா, பிரிட்டன், மொடெனெக்ரோ, மெஸ­டோ­னியா ஆகிய நான்கு நாடு­க­ளினால் தாக்க…

  24. போர் குற்றம் புரிந்தவர்கள் ஐ.நாவில் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சி : 200 பக்கங்களில் அறிக்கை சமர்ப்பிக்க தயாராகும் கோத்தா குழுவினர்..! முன்னாள் போர் குற்றவாளிகள் ஐநாவில் நல்லவர்களாக காட்டி, மனித உரிமை செயற்பாட்டாளர்களாக தம்மை அறிமுகப்படுத்தி வருவதாகவும், உண்மையில் போர் குற்றம் புரிந்தவர்களை தவிர்த்து எஞ்சியவர்கள் மீதே, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை, என்பதை சுட்டிக்காட்டும் 200 பக்கங்கள் நிறைந்த அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் எதிர்வரும் 17ஆம் திகதி சமர்பிக்கவுள்ளமை தொடர்பில் கொழும்பில் நேற்…

  25. இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை : அத்துமீறினால் கைது நிச்சயம்.! இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்வதை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. அத்துடன் கைப்பற்றப்படும் படகுகள் மற்றும் உபகரணங்கள் அரசுடமையாக்குவதை தொடர்ந்து மேற்கொள்வோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/17768

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.