Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் ஆறாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்) கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (25) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உ றவினர்கள் தெரிவித்துவருகின்ற…

  2. தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர், சிறுபான்மையினர்களுடைய பகுதிகள் தொடர்ந்தும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. நான் வெளிப்படையாக உங்களிடம் சொல்கிறேன். தமிழ் மக்களின் நிலப்பகுதிகள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலைமைக்கு ஒரு முடிவு வேண்டும். அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி இத…

    • 1 reply
    • 416 views
  3. ஜெனிவாவில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு ஐ.நா. குழுவின் முன்னால், இலங்கை அரசாங்கம் கடுமையான விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்ற அரச சார்பற்ற அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவர், இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பல தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இறுதிக்கட்ட போரின் போது பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வடக்கில் இராணுவத்தினர் நீக்கப்படவில்லை எனவும், ஐ.நா குழு பிரதிநிதிகள் இலங்கை குழுவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். போர்க்குற்றச்சாட்டு விசாரணை இடம்பெற வேண்டிய ஹைபிரிட் நீதிமன்றம் தொடர்பிலும் கேள்…

  4. மன்னார் மாவட்டத்தின் அருள் மிகு திருக்கேதீச்சர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஸ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஸ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரியை இதிகாசங்கள் கூறுகின்றனர். சிவராத்திரிய…

  5. “மஹிந்­தவின் பொறியில் சிக்­கி­யுள்ள சம்பந்தன்“ புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பைக் கோரும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்பந்தன் சர்­வ­ஜன வாக்­கெடுப்பின் பின்னர் பிர­தமர் பத­வியில் மஹிந்­தவா ரணிலா அம­ர­வேண்டும் என்­ப­த­னையும் தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். காரணம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தினால் நிச்­சயம் அர­சாங்கம் ஆட்­டம்­காணும். மஹிந்­தவின் அர­சாங்க கவிழ்ப்பு முயற்­சியும் சாத்­தி­ய­மாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அர­சாங்­கத்தை 2017 ஆம் ஆண்டில் கவிழ்க்­க­வேண்டும்…

  6. சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யதில் தவ­றில்லை அவற்றை நடை­மு­றைப்ப­டுத்­தினால் நாட்டின் எதிர்­காலம் சூன்­ய­மாகி விடும் என்­கிறார் கெஹெ­லிய (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா தீர்­மா­னத்­திற்கு அமை­வான உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­மாறு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வதில் தவ­றில்லை. ஆனால் அந்த உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­பட்டால் தேசிய பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாகி நாட்டின் எதிர்­காலம் சூன்­ய­மாகி விடும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெலிய ரம்­புக்­வெல்ல எச்­ச­ரித்­துள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் இரா­ணு­வத்­திற்கு எதி­ரான பாலியல் குற்­றச்­சாட்­டுக்க…

  7. பிழையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடிநீர் மாசு தொடர்பான ஆய்வுக்குழு-தவராசா குற்றச்சாட்டு யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு பிழையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றையதினம்(24) விசாரணை குழுவால் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன். இந்த விசாரணை களின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஆய்வுக் குழுவின் அறிக்கை பிழையான அறிக்கை என்பதுடன் வடமாகாண…

    • 2 replies
    • 291 views
  8. ""கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் வாய்ப்பு'' (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கால அவகாசம் வழங்கினாலும் குறுகிய காலத்தினுள் அரசாங்க மானது அனைத்து தீர்மானங்களையும் நிறைேவற்றுவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கால அவகாசத்திலும் காலத்தை கடத்தும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட் டினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீதான விவகாரத்தில் கால அவகாசம் வழங்கப்படும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக்…

  9. கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு சிங்கள இளைஞர்,யுவதிகளும் ஆதரவு நேரில் சென்று வெளிப்படுத்தினர் (ம .குமணன்) முல்­லைத்­தீவு, கேப்­பாப்­பு­லவு, பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் தமது சொந்த நிலங் ­களை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள விமா­னப்­ப­டை­யினர் அதனை விடு­விக்­க­வேண்­டு­மெ­னக்­கோரி நேற்று 25 ஆவது நாளாக தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். வீதி­யோ­ரத்தில் வெயில், கொட்டும் பனி மற்றும் இன்­னோ­ரன்ன இன்­னல்­க­ளை­யெல்லாம் தாண்டி சொந்­த­மண்ணில் கால்­ப­திக்க வேண்டும் என்ற பேரா­சை­யுடன் இவர்­க­ளது அற­வழிப் போராட்டம் தொடர்­கின்­ற­போ­திலும் இது­வரை தீர்வு எதுவும் கிடைக்­க­வில்லை. தென்­ப­கு­தியை சேர்ந்த சிங…

  10. நான்கு விவா­தங்கள்; மூன்று அறிக்­கைகள்; பிரிட்­டனின் இலங்கை குறித்த பிரே­ரணை திங்­கட்­கி­ழ­மை ­ஆ­ரம்­ப­மா­கின்­ற­து ­ஜெ­னி­வா ­சமர் மார்ச் 2, 15, 22,ஆம் திக­தி­களில் இலங்கை குறித்த விவா­தங்கள் 23 ஆம் திகதி இலங்கை குறித்த பிரே­ரணை மீது வாக்­கெ­டுப்பு (ரொபட் அன்­டனி) இலங்கை தொடர்­பாக நான்கு நாட்கள் விவா­தங்கள் மூன்று அறிக்­கைகள் விசேட பிரே­ரணை ஆகி­ய­வற்­றுடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­கின்­றது. எதிர்­வரும் மார்ச் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வ…

  11. புதிய அர­சியல் சாசனம் வருட இறு­திக்குள் வேண்டும் அர­சுக்கு அழுத்­த­ம­ளிக்­கு­மாறு அமெ.குழு­விடம் கூட்டமைப்பு கோரிக்கை (ஆர்.ராம்) புதிய அர­சியல் சாசனத்தில் அதிகா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டுவது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என அமெ­ரிக்க சபை நீதித்­துறை காங்­கிரஸ் குழு­வி­னரை கேட்டுக்­கொண்ட எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இந்த வருட இறு­திக்குள் புதிய அர­சியல் சாசனம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு அழுத்­த­ம­ளிக்­கு­மாறும் கோரிக்கை விடுத்­துள்ளார். இலங்­கைக்கு விஜயம் செய்த அமெரிக்க சபை நீதித்­துறை தலைவர் பொப் குட்லட் தலை­மை­யி­லான எண்மர் கொண்ட அமெ­ரி…

  12. 'காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூறு' :2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் வவுனியாவில் நேற்று (24) காலை 11.30 மணியளவில் ஆரம்பமான காணாமல் போனோரின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடருகின்றது. கடந்த மாதம் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு 4ஆவது நாளுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தமது தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/17055

  13. கருணாவைக் கொல்ல முயன்றவர் கைது ...? மஹிந்தவின் அரசில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் எனவும், மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுக்கு கருணா கடந்த மாதம் சென்றிருந்த நிலையில், பலவந்தமாக அவர் மீது மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  14. கடலில் மிதந்து வந்த 11 விசித்திர சிலைகள் மீட்பு காலி கடல் பகுதியில் சாக்கு ஒன்றினுள் கட்டப்பட்ட நிலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த 11 விசித்திரமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அஹுன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கே இந்த சிலைகள் கிடைத்துள்ளன. குறித்த மீனவர் அந்த சிலைகளை அஹுன்கல்ல விகாரையில் சேவையாற்றும் தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த சிலைகள் மத்திய மற்றும் சிறிய அளவில் காணப்படுகின்றது. இந்த அனைத்து சிலைகளும் மரத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளாதாகவும் அனைத்து சிலைகளும் வானத்தை பார்த்த நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/17040

  15. சிவராத்திரி – உறங்காத இராத்திரிகளுக்கு முடியட்டும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றிரவு தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர்களும் வெள்ளை உடையணிந்த இராணுவத்தினரும் அருகில் உள்ள இராணுவ முகாமிலிருந்து கிளிநொச்சியில் இப்போது இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை நோக்கிச் சென்றார்கள். எங்கள் மக்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அவர்கள் மேளதாளங்களுடன் நடனங்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். எங்கள் உறவுகளை காணாமல் போகச் செய்தவர்கள், எங்…

  16. கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட காணி நிலங்களை மீட்பதற்காக தொடர்ச்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள முல்லைத்தீவு -கேப்பாப்புலவு மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்திற்கு கரம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டிற்கான முற்போக்கு பேரவை, காத்தான்குடி அரசியல் களம் என்பன இணைந்து காத்தான்குடி-05 ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயல் முன்பாக ஏற்பாடு செய்த மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் உட்பட இளைஞ…

  17. வடக்கு கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது : 2016 இல் இருந்து இன்று வரை 700 கிலோ கேரள கஞ்சா மீட்பு வடக்கு கடற்பரப்பில் வைத்து கேரள கஞ்சா கடத்தலிலீடுபட்ட 5 சந்தேகநபர்களை தாம் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று 24 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு வரை 700 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வடக்கு கடற்பரப்பில் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. வடக்கு கடற்பரப்பிலுள்ள காங்கேசன்துறைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 154.6 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை படகு மூலம் கடத்தவிருந்த நிலையில் கஞ்சாவுடன் 3 பேரை கைதுசெ…

  18. காலம் கடந்த பின்பு ஞானம் பிறந்தது : இந்தியாவிலிருந்து பயிற்சியும், சீனாவிலிருந்து ஆயுதமும் கிடைத்தது : முன்னாள் பாதுகாப்பு செயலாளர் போரை வெற்றிகொள்வதற்கு இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் கிடைக்கப்பெற்றன. என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய, சீனாவிடையே எழுந்துள்ள இலங்கை மீதான முதலீட்டு போட்டிகளுக்கிடையே, தற்போது கோத்தபாய ராஜபக்ஷ உள்ளூர் ஊடகமொன்றிக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆயுதம் தாங்கிய யுத்தத்திற்கு, இந்திய அரசானது மிகவும் கடுமையான பயிற்சியை, இலங்கை இராணுவத…

  19. மார்ச் 15 இல் ரீட்டா ஐசாக்கின் அறிக்கை தொடர்­பான விவாதம் (ரொபட் அன்­டனி) சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடி­யாவின் இலங்கை தொடர்­பான அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையின் சுருக்­கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேர­வையில் முன்­மொ­ழிவார். அதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்­பான ரீட்டா ஐசாக்கின் அறிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் உரை­யாற்­ற­வுள்­ளனர். இ…

  20. மட்டு. காணி ஆணையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 5 குழுக்கள் விசாரணை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு (எம்.எப்.எம்.பஸீர்) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேச குமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப் பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான விசார ணைகளுக்கு 5 பொலிஸ் குழுக்கள் கடமை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஐந்து பொலிஸ் குழுக்களும் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அதன்படி நேற்று மாலை வரை இந்த சிறப்பு விசாரணைக…

  21. தமிழ் மக்­களின் காணிகள் விரைவில் கைய­ளிக்­கப்­படும் சபையில் உறுதியளித்தார் காணி அமைச்சர் ஜோன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இரா­ணுவ கட்­டுப்­பாட்­டி­லுள்ள பொதுமக்­களின் காணி­களை மீள கைய­ளிப்­பது குறித்து கோரிக்கை முன்வைக்­கப்­பட்டு வரு­கி­றது. இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள பெரும் ­பா­லான காணிகள் மீள வழங்­கப்­பட்­டுள்­ளன.எஞ்­சிய காணி­க­ளையும் கால தாமதம் இன்றி வழங்­க­வி­ருக்­கிறோம் என்று காணி அமைச்சர் ஜோன் அம­ர­துங்க நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை காணி எடுத்தல் சட்­டத்தின் கீழான ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரிப்­பது குறித்த சட்­ட­மூல விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்­றும்­போ…

  22. ‘தமிழர்கள் என்பதனாலா பாராமுகம்’ -ஜே.ஏ.ஜோர்ஜ் முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பிரதேசத்தில் கடந்த 24 நாட்களாகப் பொதுமக்கள், தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “தமிழ் மக்கள் என்பதன் காரணமாகவா அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கெடுக்க, அரசாங்கம் முன்வரவில்லை. இதே, தெற்கில் உள்ள சிங்கள மக்கள் போராடியிருந்தால், அரசாங்கம் இவ்வாறு பாராமுகமாக இருக்குமா?” என்று கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்…

  23.  ‘சந்திரிகாவின் தகுதியை உரசி பார்க்கவேண்டும்’ “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு, பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. அவருக்கு, தற்போதைய முப்படைகளின் தற்போதைய தளபதியான ஜனாதிபதியே பதிலளிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, “அவருடைய தகுதியை அரசாங்கமே உரசிப்பார்க்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். சந்திரிகா பண்டாரநாயக்க, சர்வதேசத்தின் முன்னிலையில் தங்களுடைய இராணுவத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார் என்ற தலைப்பிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடாக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …

  24. சீனா எப்­போ­துமே இலங்­கையின் உண்­மை­யான நண்­ப­னாக இருக்கும் இலங்­கை­யுடன் எப்­போதும் உண்­மை­யான நண்­ப­னாக சீனா இருக்கும் என்று அந்­நாட்டின் கம்­யூனிஸ்ட் கட்­சியின் வெளி வி­வ­கா­ரங்­க­ளுக்­கான திணைக்­க­ளத்தின் தலைவர் சோங் டாவோ ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் தெரி­வித்­துள்ளார். இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் வெ ளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான திணைக்­க­ளத்தின் தலைவர் சோங் டாவோ தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளனர். இதன்­போது சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் சீன கம்­யூனிஸ்ட்…

  25. விமல் வீர­வன்­ச­வுக்கு நான் அடைக்­கலம் கொடுப்பேன் விமல் வீர­வன்ச தற்­போது சுயா­தீ­ன­மாக இயங்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளார். அவர் தனித்­தாலும் அவ­ருக்கு அர­சி­யலில் அடைக்­கலம் கொடுப்­ப­தற்கு நான் தயா­ரக உள்ளேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். தேசிய வளப்­பா­து­காப்பு மத்­திய நிலையம் நேற்று வியா­ழக்­கி­ழமை நாரஹேன்பிட்­டி­யவில் அமைந்­துள்ள அப­ய­ராம விகா­ரையில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களை கண்­கா­ணிப்­ப­தற்கும் அவ்­வே­லைத்­திட்­டங்­களை முகா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.