ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143394 topics in this forum
-
சீனா எப்போதுமே இலங்கையின் உண்மையான நண்பனாக இருக்கும் இலங்கையுடன் எப்போதும் உண்மையான நண்பனாக சீனா இருக்கும் என்று அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளி விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங் டாவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெ ளிவிவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட்…
-
- 0 replies
- 242 views
-
-
விமல் வீரவன்சவுக்கு நான் அடைக்கலம் கொடுப்பேன் விமல் வீரவன்ச தற்போது சுயாதீனமாக இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் தனித்தாலும் அவருக்கு அரசியலில் அடைக்கலம் கொடுப்பதற்கு நான் தயாரக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். தேசிய வளப்பாதுகாப்பு மத்திய நிலையம் நேற்று வியாழக்கிழமை நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அபயராம விகாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கண்காணிப்பதற்கும் அவ்வேலைத்திட்டங்களை முகா…
-
- 1 reply
- 364 views
-
-
மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான 31 வயதான நேசகுமார் விமல்ராஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. களுதாவளை கடற்கரை வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வெளியே அழைத்து அவர்மீது து…
-
- 6 replies
- 753 views
-
-
பிலவுக்குடியிருப்பு விவகாரத்துக்கு ‘பகிர்வு’ இன்றேல் ‘நட்டஈடு’ முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு விமானப் படை அமைந்துள்ள காணியில், பொதுமக்களுக்குச் சொந்தமான பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த படை முகாமில், 54 குடும்பங்களுக்குச் சொந்தமாகவுள்ள சுமார் 40 ஏக்கர் காணியினை, எதிர்வரும் சில நாட்களில் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சு சமிக்ஞை காட்டியுள்ளது. அவ்வாறில்லாவிடின், அந்தக் காணிகளுக்கான நட்டஈட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பாதுகாப்பு அமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட, நாடாளும…
-
- 0 replies
- 215 views
-
-
நியூஸிலாந்துக்கு பயணிக்கவிருந்த மேலும் 18 பேர் இன்று கைது சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு லெல்லாமா பகுதியில் வைத்து கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு பொலிஸார் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த எட்டு பேர் கடந்த 16 ஆம் திகதி இரவு நீர்கொழும்பு கதிரான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17002
-
- 0 replies
- 446 views
-
-
மஹிந்தவை சந்தித்தனர் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங்டாவோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 184 views
-
-
கொட்டாஞ்சேனை தமிழர் இருவரின் கடத்தல் விவகாரம்; கடற்படை லெப்டினன் கொமாண்டர் தயாநந்தவை கைது செய்வதை அநுர சேனநாயக்கவே தடுத்தார் கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோரின் விவகாரத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் தர அதிகாரியான தயாநந்தவைக் கைது செய்ய விடாமல் மேல் மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவே தடைகளை ஏற்படுத்தியதாக இக்கடத்தல் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த விசாரணை அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்க…
-
- 0 replies
- 119 views
-
-
முஸ்லிம் மீனவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில்: கந்தளாயில் பதற்றம் வீச்சுவலைகள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக கந்தளாயில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு முஸ்லிம் மீனவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து கந்தளாயிலிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றநிலை உருவாகியுள்ளது. வீச்சுவலைகளைப் பாவிப்பதை தடை செய்திருப்பதனால் 100க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. மேற்படி தடையை இரத்துச்செய்யக்கோரி முஸ்லிம் மீனவர்…
-
- 2 replies
- 287 views
-
-
இந்திய பிரதிநிதியை தொடர்ந்து சீனா பிரநிதியும் இலங்கையில் : பின்னணி என்ன? : அமெரிக்காவின் எச்சரிக்கை கடிதத்தின் தாக்கமா? இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சீன பிரதிநிதி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எஸ்.ஜெய்சங்கர் விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் இருந்து வந்த வெளிவிவகார பிரதி அமைச்சர் கொங் சான்யு, கடந்த 20 ஆம் திகதி வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை சந்தித்து இரு ந…
-
- 2 replies
- 417 views
-
-
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவித்தது இராணுவம்! Published on 2017-02-23 19:57:12 கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான காலந்துரையாடல் இன்று (23.02.2017) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இரவு பகலாக போரா…
-
- 1 reply
- 460 views
-
-
துரத்தி பிடிக்கப்பட்ட லொறிக்குள் வெட்டப்பட்ட 40 மாடுகளின் தலைகள் : வவுனியாவில் சம்பவம் வெட்டப்பட்ட 40 மாடுகளின் தலைகளுடன் இறச்சியையும் கொழும்பிற்கு கொண்டுச் செல்ல முற்பட்ட லொறி ஒன்று வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வைத்து துரத்தி பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி எஸ். லவன் தெரிவித்துள்ளார். வவுனியா சோயா வீதியிலுள்ள மாடுகள் வெட்டும் தொழுவத்தில் இன்று (23) பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமான மாடுகள் வெட்டப்படுவதை அறிந்து கொண்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்றுதுடன் வவுனியா மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரியின் உதவியும் பெறப்பட்டு வெட்டப்பட்ட மாடுகளை பரிசோதித்தபோது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உர…
-
- 0 replies
- 445 views
-
-
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனீவாவிற்கு சென்று புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு பணிகள் குறித்த அறிக்கையொன்றையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மன…
-
- 0 replies
- 348 views
-
-
சொந்த நிலத்தில் கால் பதிக்கும் நாளை எண்ணி வீதியிலே 24ஆவது நாளாக காத்து கிடக்கும் அவலம்! கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் (23,02) 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் உதவி பொருட்களை வழங்கும் விதமாகவும் போராட்டக்களத்துக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை சேர்ந்த மாணவர்களும் விரிவுரையாளர்களும் இன்றைய தினம் வருகைதந்திருந்ததோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர…
-
- 0 replies
- 371 views
-
-
அதிகாரப்பகிர்வுடன் கூடியதான அரசியல் தீர்வுத்திட்டத்தை விரைவில் வழங்குவோம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்; சம்பந்தன் சிறந்த பங்களிப்பு என்கிறார் பிரதமர் (ரொபட் அன்டனி) இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி விரைவில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளுடன் அனைத்து கட்சிகளும் இணைந்து விரைவில் இ…
-
- 0 replies
- 397 views
-
-
‘அன்றும் கள்வர் இருந்தனர்; இன்றும் கள்வர் உள்ளனர்’ களவெடுக்கும், தவறிழைக்கும் நபர்கள் கடந்த ஆட்சிக்காலத்திலும் இருந்தனர். இந்த ஆட்சிக்காலத்திலும் இருக்கின்றனர் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துத்தான், நான் செயற்படுகின்றேன். அந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கின்றவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து …
-
- 0 replies
- 301 views
-
-
‘இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் பெரும் ஆபத்து’ ஜே.ஏ.ஜோர்ஜ் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்ற துறைசார் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது நிறைவடைந்ததும், புதிய சட்டமூலம் நாடாளுமன்றதுக்கு சமர்ப்பிக்கப்படுமென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் விடுவது, பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அது, நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனால், நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில…
-
- 0 replies
- 361 views
-
-
தமிழ் மக்கள் ஏமாற்றம் கடந்த ஆட்சியிலிருந்த நிலைமையே தொடர்கிறது; சபையில் சம்பந்தன் விசனம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஆட்சி மாற்றத்தின் மீது எதிர்பார்ப்புக்களைக் கொண் டிருந்த தமிழ் மக்கள் ஏமாற்ற மடைந்திருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித்தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த ஆட் சிக்காலத்தில் இருந்த நிலைமைகளே தற் போதும் நீடிப்பதாகவும் சபையில் சுட்டிக் காட்டினார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு நிரந் தரமான முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தினார். தமிழர்களின் இனப்பிரச்ச…
-
- 1 reply
- 354 views
-
-
இடமாற்றத்தில் குளறுபடி “காதோடு காதாக” – அராலியூர் குமாரசாமி ‘யாழ்ப்பாணத்தின் முக்கிய செயலகத்தை அரசிடம் இருந்து தனியார் ஒருவர் சொந்தமாக வாங்கிவிட்டாரோ’ என்று அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் கேட்டேன். அவரோ சிரித்துவிட்டு ‘ஏன் அப்படிக் கேட்கிறாய்’ என்றார். நானோ ‘இல்லை பழைய ஆட்கள் நிறையப் பேர் வேலை செய்கிறார்களே இவர்களுக்கு இடமாற்றம் இல்லையா?’ என்றேன். ஓ..அப்படியா. உதுகளைப் பற்றியெல்லாம் கதைக்கக் கூடாது வந்த வேலையை மட்டும் பார்’ என்றான். ‘ஏன் கதைத்தால் பிரச்சினை வருமோ’ என்றேன். அவனோ ‘ பிரச்சினை வராது பதவியில் இருக்கின்றவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள் அதாவது தங்களோடு ஒத்தோடுபவர்களை இடமாற்றமாட்டார்கள். தங்க…
-
- 0 replies
- 234 views
-
-
காணியை விடுவிக்கக்கோரி வவுனியா செயலகத்திற்கு முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா இராசேந்திர குளம் விக்ஸ் காட்டின் பகுதியை சேர்ந்த 45 குடும்பத்தை சேர்ந்தோர் தாம் குடியிருக்கும் அரச காணியை விடுவித்து தமக்கு தரும்படி கோரியும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ளனர். இப்போராட்டமானது நேற்று ஆரம்பித்து இரவாகவும் தொடர்ந்து கொண்டிருப்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் குளிரின் மத்தியிலும் வீதியின் அருகில் அமர்ந்திருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் தமக்கு ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக…
-
- 0 replies
- 238 views
-
-
வடக்கில் 6124 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்க வேண்டும் சிறுபான்மை மக்கள் குறித்த ஐ.நா.நிபுணர் பரிந்துரை வட : கிழக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படல் வேண்டும் சமஷ்டி முறைமையில் அரசியல் அதிகாரங்களை பகிரலாம் மலையக மக்களுக்கு விசேட திட்டங்கள் அவசியம் சிறுபான்மையினருக்கு சுயாதீன ஆணைக்குழு அவசியம் (ரொபட் அன்டனி) வடக்கில் படையினர் வசம் காணப்படுகின்ற பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக முதன்மை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் கரையோரப் பிரதேசங்களில் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படுவதும் …
-
- 0 replies
- 499 views
-
-
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க உத்தரவிடுமாறு ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேன்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் முடிவில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என் விசேட ஜுரிகள் சபை தீர்ப்பளித்திருந்தது. எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்…
-
- 2 replies
- 300 views
-
-
ஸ்னோவ்டனுக்கு உதவிய நபர்கள் பற்றிய விபரங்களை இலங்கை அதிகாரிகள் திரட்டியுள்ளனர் அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஸ்னோவ்டனுக்கு உதவியவர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அதிகாரிகள் ஹொங்கொங்கிற்கு சென்றிருந்தனர் என தெரிவிக்கக்ப்படுகின்றது. சீன ஊடகமொன்று இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. ஹொங்கொங் காவல்துறையினர் குறித்த இலங்கையர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்கியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது http://globaltamilnews.net/archives/18724
-
- 0 replies
- 327 views
-
-
சீகிரியாவில் இருப்பது சிங்க பாதமல்ல 'புலி பாதம்' : தேரரின் புதுதகவல் சீகிரியா மலைக்குன்றிலுள்ள ராஜமாளிகைக்கு செல்வதற்கான குன்றின் அடிவாரத்திலுள்ள வாயிலில் இருக்கும் இரு பாத அடையாளங்களும் சிங்கத்தின் பாதங்கள் அல்ல எனவும், அவை புலியின் பாதங்கள் என்றும், தம்புளை - ரங்கிரி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தாமலுவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் மக்களை மட்டுமன்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஏமாற்றி, குன்றின் அடிவாரத்திலிருப்பது சிங்கத்தின் பாதமென்று நம்பவைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை உரிய திணைக்களம் சரிசெய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சீகிரியவில் இருப்பது சிங்கத்தின் பாதங்கள் அல…
-
- 1 reply
- 755 views
-
-
வடமாகாண சபையில் நிதியில் ஒரு சதம் கூட மீள திரும்புவதில்லையாம். வடமாகாண சபையின் எந்த ஒரு நிதியும் இதுவரை திரும்பி செல்லவில்லை என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார் . வடமாகாண சபையின் 85 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண சபை நிதி திரும்புவதில்லை. வடமாகாண சபையின் எந்த நி…
-
- 3 replies
- 381 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
-
- 0 replies
- 273 views
-