ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
ஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன் திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது "ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம்" என்று வலி யுத்தியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள்…
-
- 1 reply
- 486 views
-
-
படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி: 19 பேர் மாயம் பேருவளை பயாகல கடலில், படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பலியானதுடன், இன்னும் 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புனித யாத்திரை சென்றிருந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/191778/படக-கவ-ழ-ந-தத-ல-ப-ர-பல-ப-ர-ம-யம-#sthash.4khPFbz4.dpuf
-
- 1 reply
- 539 views
-
-
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து மிகுந்த கவலையடைகிறோம் அரசாங்கம் வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றாமை தொடர்பில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாயினும், இது குறித்து மிகுந்த கவலையடைவதாக வட மாகாண சபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியமைக்கு அமைய, வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளை மீள வழங்கல், அரசியல் கைதிகளை விடுவித்தல், மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு வழங்குதல் போன்றன இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிவஞானம் இவற்றைக் கூறியுள்ளார். ht…
-
- 0 replies
- 238 views
-
-
பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் அதிரடி கைது பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 15 பேரும் விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்கு பகிடிவதை கொடுத்த சம்பவம் தொடர்பிலே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16847
-
- 0 replies
- 193 views
-
-
நாட்டில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நெயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 5 இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஐந்து இராணுவத்தினரிடமும் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளில் நாட்டில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதி…
-
- 0 replies
- 222 views
-
-
தமிழ் வழக்கறிஞர் மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை விமர்சிக்கிறார் மஹிந்த வழக்கறிஞர் ராமநாதன் கண்ணன் என்பவரை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததன் மூலம் நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்ற சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கிய ஒரு அரசியல் கட்சியை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் மட்டக்களப்பில் பணியாற்றிய வழக்கறிஞர் ராமநாதன் கண்ணனுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.…
-
- 1 reply
- 442 views
-
-
‘இதோ எமது வீடு’ -எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன் தமது வீடுகள் எப்படி இருக்கும் என கேப்பாப்புலவுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ஓவியங்களை வரைந்துள்ளனர். இவ்வோவியங்களில் முட்கம்பி வேலிகளுக்குள்ளும் இராணுவ முகாமுக்கு அருகிலும், தமது வீடுகள் இருப்பது போன்றே இச்சிறுவர்கள் தமது வீடுகளை வரைந்துள்ளனர். அவ்வோவியங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கேப்பாப்புலவுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், ஆசிரியர்களால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பி…
-
- 0 replies
- 460 views
-
-
கேப்பாபுலவில் இராணுவத்தின் எச்சரிக்கை பெயர்ப் பலகையில் மீண்டும் மாற்றம்! இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு விமான படையினர உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த கா…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை இராணுவம் தொடர்பில் தற்போது இருவேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இலங்கை இராணுவம் தொடர்பிலான செய்திகளும் இறுதி யுத்த கால காணொளிகளும் அதிக அளவில் வெளிப்படுத்தப்படுகின்றன. தென்னிலங்கை தரப்பு ஒரு சில ஊடகங்கள் யுத்த கால கட்டத்தில் இராணுவம் முகம் கொடுத்த இக்கட்டான சூழ்நிலைகளை தற்போது காணொளிகளாக வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று வன்னி ஊடாக இலங்கை இராணுவம் ஊடருத்துச் சென்ற விதமும், இராணுவத்திற்கு எவ்விதம் ஆயுதம், உணவு கொண்டு செல்லப்பட்டது, அவர்கள் போர் செய்த முறை போன்ற விபரங்கள் மீண்டும் காணொளியாக வெளிடப்பட்டுள்ளது. இதேவேளை 57 ஆவது படைப்பிரிவு ஆரம்பமாக்கப்பட்டு 11 மாதக்காலப்பகுதியில் 2000 ஆயிரத்திற்கும்…
-
- 0 replies
- 633 views
-
-
பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரைசேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில், யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பகல் 3 மணியளவில் பருத்தித்துறை வீதி, குஞ்சர் கடைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும், இளைஞர் வந்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த விபத்துக்கு அதி வேகமே கரணம் என்றும், உழவு இயந்திர சாரதி படு காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைய…
-
- 2 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது. அத்தோடு அருகில் இருந்த துவிச்சக்கர வண்டி உதிரிப்பாக கடை ஒன்றும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீப்பரவல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தீயை ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு பரவாது வர்த்தகர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த உணவகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட எதிர்மறை மின் உராய்வு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இருந்தும் தீப்பரவல் தொடர்பான விசாரணைகள் நிறைவுற்றதும் உண்மையான காரணம் தெரிய…
-
- 0 replies
- 334 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல்! – 4 பேர் காயம் – 6 பேர் கைது யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் சிலர், பல்கலைக்கழகத்திற்கு வெளியில் தங்கி இருந்து, தமது கல்வியை தொடர்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வெளியில் தங்கியுள்ள மாணவர்களை தாம் தங்கியுள்ள விடுதிக்கு வந்து தங்குமாறு ஏனைய மாணவர்கள் அழைத்துள்ளனர். எனினும் அந்த மாணவர்கள் செல்லாத காரணத்தால் நே…
-
- 0 replies
- 376 views
-
-
பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு சொந்த காணிகள் இல்லை மீள் குடியேற்ற அமைச்சால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு சொந்த காணிகள் இல்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்ட போது விண்ணப்பித்தவர்களுக்கு சொந்தமாக காணி உள்ளதா ? என்பது தொடர்பில் கேட்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தி விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக பலர் விண்ணப்பித்த போதும் அவர்களுக்கு சொந்தமாக காணி உண்டா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதேவ…
-
- 0 replies
- 275 views
-
-
‘த.தே.கூ, சந்தர்ப்பவாத அரசியல் செய்யவில்லை’ வடிவேல் சக்திவேல் “ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் ஐயா தெரிவித்து வரும் கருத்தைப் பலர் விமர்சிப்பது தற்காலத்துக்குப் பொருத்தமற்றது. மாறாகத் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப சம்மந்தன் ஐயாவுக்குப் பொருத்தமான கருத்துக்களையும் நடவடிக்கைகளையும்தான் மேற்கொண்டு வருகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.கூவின் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியிலுள்…
-
- 0 replies
- 335 views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம் இலங்கை தமிழரசு கட்சி துணைத் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில் ஜனநாயக வழிகளில் அரசுப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் சொந்த நிலங்களை மீட்கவும் அந்த நிலங்களில் மீளக்குடியேறி வாழ்வதற்குமான உரிமை மறுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இனவிடுதலைப் போராட்ட காலங்களில் துன்பமான துயரமான இழப்புக்களையும் அனுபவித்த மக்கள் திடசங்கற்பம் கொண்டு நடாத்தும் போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம். …
-
- 2 replies
- 348 views
-
-
இரண்டு பிரதான கட்சிகளி்ன் இழுபறியால் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் ஸ்தம்பிதம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக புதிய அரசியலமைப்பு அமைக்கும் முயற்சி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தில் ஐக்கிய தேசி யக் கட்சி விடாப்பிடியாக உள்ளது.. இருப்பினும், ஸ்ரீ ல.சு.க. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், அரசியலமைப்பு முழுவதையும் மாற்றத்துக்குள்ளாக்காமல் சர்வஜன வாக்கெட…
-
- 0 replies
- 216 views
-
-
மகிந்தவின் அரசியல் மீள் பிரவேசம் கூர்ந்து அவதானிக்கிறது இந்தியா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்திருப்பதன் மூலம், இலங்கையின் அரசியலில் நிகழ்கின்ற மாற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசித்திருப்பதன் ஊடாக அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன், பல பிளவுகளும் ஏற்படலாம் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்களை கருத்திற் கொண்டு ஆராயும் போது இந்த விடயம் தௌிவாகின்றது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 270 views
-
-
'முக்கிய பிரமுகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து வீசிவிட்டுச் சென்றனர்' : கீத் நொயார் வழக்கில் தகவல் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்திருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, சார்ஜன்ட் துமிந்த வீரரத்ன, சார…
-
- 0 replies
- 410 views
-
-
அரசியலமைப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு எஸ்.கே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கக்கூடிய விதம் தொடர்பான ஆலோசனைகள் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். புதிய அரசியலமைப்பு தொடர்பில் தீர்க்கமான கருத்தாகவுள்ள மத்திய மற் றும் மாகாணங்களுக்கிடையில் அதிகாரங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக இந்த ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியுமென்…
-
- 0 replies
- 257 views
-
-
ஆறு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை இ.சதீஸ் குவைத்தில் ஆறு இலங்கையர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் நந்தீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறுபேரும் போதைப்பொருள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் கள், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு சம்மதித்தால் மரணதண்டனையிலிருந்து விடுபட முடியும். ஆனால் போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வாறு மரண தண்…
-
- 0 replies
- 230 views
-
-
இந்திய வெளியுறவு செயலர் இலங்கை வந்தடைந்தார் மைத்திரி, ரணில், சம்பந்தன் ஆகியோரை நாளை சந்திப்பார் லியோ நிரோஷ தர்ஷன் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயமானது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலானதும், முக்கியமானதுமானதாக கருதப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை இந்திய வெளியுறவு செயலர் நாளை திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பிராந் திய முன்னேற்றங்களில் இந்தியாவு…
-
- 0 replies
- 218 views
-
-
எமது நிலத்தை மீட்கும் போராட்டம் எமக்கு மற்றுமொரு முள்ளிவாய்க்கால் கேப்பாப்புலவு மக்கள் தெரிவிப்பு கேப்பாப்புலவிலிருந்து ரி.விரூஷன் எமது நிலத்தை மீட்பதற்கான இப்போராட்டமானது எமக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் போன்றுள்ளது எனவும் அவ் இறுதிக்கட்ட யுத்தத் தில் அனுபவித்த வேதனைகளை இப்போராட் டத்திலும் அனுபவிப்பதாகவும் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்தும் எமது நிலமானது விடுவிக்கப்படாது விட்டால் இறுதியாக எமது இவ் விடத்திலேயே எமது உயிரை மாய்த்துக்கொள்வோம் எனவும் அம் மக்கள் தெரிவித்தனர் . அத்துடன் தமது போராட்டம் தொடர்பாக வ…
-
- 0 replies
- 146 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி 'கோபு' மர்மமான முறையில் மரணம் வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 'கோபு' என அழைக்கப்படும் முன்னாள் போராளியான 28 வயதுடைய இலங்கராசா இளங்கோவன் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/16828
-
- 0 replies
- 348 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள், திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்பன குறித்து கூடிய கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. https://globaltamilnews.net/archives/18193
-
- 1 reply
- 350 views
-
-
முல்லைத்தீவு - கேப்பாபுலவு மக்கள் தங்களது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காக கடந்த 31 திகதியில் இருந்து தொடர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டத்திற்கான உரிய தீர்வு கிடைப்பதற்காக கேப்பாபுலவு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று 18 நாளாக தொடர்ச்சியான சிவலிங்க பூஜை நடைபெற்றுள்ளது. கேப்பாபுலவு மக்கள் தங்களது சொந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய தினத்தன்று ஆலய மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிவலிங்கம் பூஜை இன்று வரை ஆலய பெரியவர் ஒருவரால் நடைபெற்று வருகின்றது. அத்துடன், சிவலிங்கத்தின் மேற்பகுதியில் மண்பானை கட்டி, நீரூற்றி அந்நீரின் துளிகள் சிவலிங்கத்தின் மேல் விழும் வகையில் துவாரமிட்டு அவர் …
-
- 1 reply
- 222 views
-