ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
‘விக்கியின் பேச்சு விக்குகிறது’ வி.நிரோஷினி “வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பேச்சுக்கு இந்த அரசாங்கம் மறுபேச்சு, பேசுவதில்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும், சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவே, அரசாங்கம் அரசியலமைப்பில் சமஷ்டியை கொண்டுவர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியலமைப்பில் திருத்தங்கள் சி…
-
- 0 replies
- 351 views
-
-
சிவராத்திரியை முன்னிட்டு யாழில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணி மனை யின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் நான்கு இடங்களில் இரு ந்து எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. என சைவமகா சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிம னையின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை கா…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வலுவான சான்றுகள் உள்ள 11 கடற்படை அதிகாரிகளைக் கைது செய்யும் முயற்சியிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இறங்கியுள்ளனர். எனினும், எந்தவொரு கடற்படை அதிகாரியையும் கைது செய்யக் கூடாது என்று அரசியல் உயர்மட்டத்தில் இருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உறுதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூ…
-
- 1 reply
- 440 views
-
-
கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா்; ஹி டுங்லாய் மர்கியு சிறப்பு அதிதீதியாக கலந்துகொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவின் மருதநகா் கிராமத்தில் இரண்டு வீட்டுத்திட்ட பயனாளிகளின் வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தாா். கிளிநொச்சி மாவட்டத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் 860 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆறு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வீட்டுத்திட்டத…
-
- 0 replies
- 320 views
-
-
நான் திடீரென செல்வந்தன் ஆனவன் அல்ல : சொத்து விபரம் தேவையாயின் பாராளுமன்றில் பெற்றுக்கொள்ள முடியும் - ரவி நான் திடீரென செல்வந்தனானவன் அல்ல. ஆரம்பத்திலிருந்தே என்னுடைய உழைப்பினால் செல்வந்தன் ஆனவன். ஆகவே, உங்களுக்கு எனது சொத்துடைமைபற்றிய விபரம் தேவையாயின் பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தினால் ரவிகருநாணயக்கவின் சொத்துடைமை பற்றிய விபரம் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு நீங்கள் என்ன பதிலளிக்கப்போகின்றீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு 24 வருட அரசியல் வரலாறு இருக்கின்றது. நான் திடீரென செல்வந்தனானவன் அல்ல. ஆரம்பத்திலிருந்தே…
-
- 0 replies
- 276 views
-
-
திருகோணமலை நகரிலிருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு திருகோணமலை நகரின் மடத்தடி சந்திப்பகுதியில் உள்ள ஆலயமொன்றிலிருந்து உயிர்ப்புள்ள 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கைக்குண்டுகள் ஆலயத்தின் பாவனைக்குதவாத பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கைக்குண்டுகள் எவ்வாறு ஆலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதென்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.virakesari.lk/article/16723
-
- 0 replies
- 182 views
-
-
புகைப்படம் எடுக்கும் இராணுவம் ; 17 ஆவது நாளாகவும் துணிவோடு போராடும் கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க்கவேண்டுமென கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களையும் செய்தி சேகரித்துவரும் ஊடகவியலாளர்களையும் ஆதரவு தெரிவித்து வரும் சிவில் அமைப்புகள் மற்றும் மக்களையும் எதிரே உள்ள விமானப்படை முகாமில் உள்ள விமானப்படையினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் தொடர்சியாக புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகள் என்பனவற்றை எடுத்து அச்சுறுத்தி வருகின்றனர். …
-
- 0 replies
- 302 views
-
-
நேற்று மலை 6 மணியளவில் குறித்த பிரதேசத்தில் இருந்து நெல்லியடி சந்திக்கு அருகாமையில், இலக்கத்தகடுகள் இன்றி மோட்டார் சைக்கிளில் வாள்கள், பொல்லுகளுடன் ரவுடிகள் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகின்றது. மேலும் குறித்த ரவுடிகள் பொதுமக்களை நோக்கிவந்து , வாள்களை காட்டி மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதும் குறித்த ரவுடிகள் உடனேயே தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதும் பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/135739
-
- 3 replies
- 456 views
-
-
அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதில் உடன்பாடில்லாத போதும் குறுகிய காலம் மற்றும் அதிகளவான மேற்பார்வை அவசியமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வின் போது,பொறுப்புக்கூறல் விடயத்திற்காக அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசம் கேட்கப் போவதாக கூறியுள்ள நிலையில், அந்த கால அவகாசம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கருத்தினை ஊடகவியலாளர்கள் கேட்டிருந்தனர். 2 வருட கால அவகாசம் கொடுத்தால் ஐ.நாவின் கண்காணிப்புடன் கொடுக்கப்பட வேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் இதுவரையில் ஐ.நாவின் கண்காணிப்பு இருக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி…
-
- 0 replies
- 224 views
-
-
பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். கேகாலை, நாபே ஸ்ரீ போதியக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அவற்றை எழுத்துடன் மட்டுப்படுத்தாமல் பௌத்த மதத்தை போதிக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை மேலும் செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் விஜயத்தின் நினைவாக சந்தன மரமொன்று குறித்த விகாரையில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/po…
-
- 0 replies
- 413 views
-
-
நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நீதிமன்ற துறையில் நியமனங்களை மேற்கொள்ளும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது தனிப்பட்ட தேவைக்கு நியமனங்கள் மேற்கொண்டதில்லை. அண்மையில் ஊடகங்களில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் நியமனம் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நியமனம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றதுறைசார் நிறுவனங்களின் அனுமதியும் இந்த நியமனத்திற்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற விவகாரங்கள் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள…
-
- 0 replies
- 202 views
-
-
கிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை வழங்கி உயிர்களைக் காக்க உதவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித…
-
- 0 replies
- 355 views
-
-
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கடலோரப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தாராபுரம் கடலோரப்பகுதியில் மன்னார் பிரதேச சபையின் அனுமதியின்றி சுற்றுலா விடுதி அமைக்கும் வகையில் கட்டடம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில், மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் குறித்த கட்டடத்திற்கான நிர்மானப்பணிகளை இடைநிறுத்தும் வகையில் மன்னார் பிரதேச சபையினால் அறிவித்தலொன்று ஒட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு நேற்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பாராளுமன…
-
- 0 replies
- 283 views
-
-
யுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்நோக்க நேரிடலாம் யுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்நோக்க நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தினராலும், தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களினாலும் பாலியல் சித்திரவதைகளை கணவரை இழந்தப் பெண்கள் எதிர்நோக்கி வருவதாகவும் யுத்தம் காரணமாக பெண்கள் இவ்வாறு கணவரை இழந்துள்ளதாகவும் இவ்வாறான பெண்கள் சித்திரவதைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பெண்கள் அதிகாரிகளினால் தொடர்ந்தும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் அதிகாரிகளும், சிங்கள இராணுவத்தினரும் இவ்வாறு ப…
-
- 3 replies
- 485 views
-
-
ஒரு தனி மனித செயற்பாடு ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பெரும் இழுக்கினை ஏற்படுத்தும் என்பது உண்மையான கூற்று. இலங்கையில் இப்போது பௌத்தம் அழிந்து கொண்டு வருகின்றது என்று பல வகையான போராட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பௌத்த துறவி தனக்கு பல வகையான நோய் இருப்பதாக கூறி பணம் சேர்ப்பதும், பின்னர் சிகரட் புகைப்பதும் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஆசைகளை துறப்பவரே துறவி அப்படியான ஒருவர் இவ்வாறான ஓர் செயலில் ஈடுபடுவது அனைத்து மதங்களிடையேயும் பலவாறான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. புனித பௌத்த மதத்தில் வாழ்ந்து வரும் இவ்வாறான போலிக் காவி அணிந்த ஏமாற்றுப் பேர்வழிகள், ஏமாற்றிப் பிழைக்கும் …
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை அதிகரிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் வாக்குறுதியளித்துள்ளன. வடக்கிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைப்பாளர் ஹூனா மெக்கோலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுலாய் மார்க் ஆகியோர் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது அதிகமாக பேசப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டிய தேவை மற்றும் வடக்கு மாகாண சபைக்கு கிடைத்த அதிகாரங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்…
-
- 0 replies
- 312 views
-
-
மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர் ( எம்.மின்ஹாஜ்) இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார். அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி சட்டவிரோத முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மன்னித்து விட்டோம்.ஆகவே முகாம்களில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் மேலும் காணாமல் போனோர் குறித்து இனங்காண்பதற்கு கா…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
கேப்பாப்புலவு காணிகள்; 2 வாரங்களில் விடுவிப்பு? ப. பிறின்சியா டிக்சி முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா ஆகியோர், இன்னும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி, முடிவு எட்டப்பட்ட பின்னர், அந்தக் காணிகள் வி…
-
- 1 reply
- 338 views
-
-
‘தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கலப்பில்லை’ எஸ்.நிதர்ஸன் “தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கட்சிகளும் இணைந்திருப்பதால், அரசியல் கட்சிகள் அதிலிருந்து அரசியல் இலாபங்களைப் பெறலாமென நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கலப்பற்ற மக்கள் இயக்கமாகவே செயற்பட்டு வருகிறது” என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் மேலும் கூறியதாவது, “பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு, அரசியல் ரீதியான முன்னோக்குகள் மற்றும் தேவைகள் இருக்கக்கூடும். ஆனால், தமிழ் மக்கள் பேரவையைப் பொறுத்தவரையில், இப்போதும் மக்களுட…
-
- 1 reply
- 458 views
-
-
மனித புதைகுழி விவகாரம்: றேடியோ காபன் பரிசோதனைக்கு பரிந்துரை எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதைகுழி தொடர்பில், எதிர்வரும் மார்ச் மாதமளவில் உதவி செய்வதாக, வெளிநாட்டு தடயவியல் நிபுணர் குழுவினர், மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், இம்மனித புதைகுழி தொடர்பிலான “றேடியோ காபன்” பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த புதைகுழியின் வயது, மரணம் மற்றும் சம்பவத்தை அளவிடுவதற்கு, குறித்த பரிசோதனை உடனடித் தேவையாக அமையாதென்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளதாக, மன்றில் தெரிவிக்கப்பட்டது. மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்க…
-
- 1 reply
- 319 views
-
-
நம்மவர்கள் ஆறு பேருக்கு டுபாயில் சிறைத்தண்டனை கொள்ளைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இலங்கையர் அறுவருக்கு, டுபாய் நீதிமன்றம் தலா 5வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், டுபாயில் அதிசொகுசு ஆடம்பர வீடுகளில் தங்க நகைகள் உள்ளிட் பெறுமதியான பொருட்களை திருடினார் என்ற இந்த அறுவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்று டுபாய் கஜிலி டைம்ஸ் பத்திரிகை நேற்று (15) செய்தி வெளியிட்டிருந்தது. நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை காலம் நிறைவடைந்ததன் பின்னர், குற்றவாளிகளான அந்த அறுவரையும் நாடுகடத்துமாறும் அந்த நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 312 views
-
-
யாழிலிருந்து தமிழ்-பௌத்தர் வேட்பு மனு “எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்களை கோராமல் விட நாம் தீர்மானித்துள்ளோம். எனினும், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்-பௌத்தரினால் வேட்பாளருக்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என, ஜாதிக ஹெல உறுமயவின் உள்ளூராட்சி குழுவின் தலைவர் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ், ஜாதிக ஹெல உறுமய போட்டியிடும் என்றும் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார். அதனடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களை தவிர, ஏனைய 1…
-
- 0 replies
- 319 views
-
-
இலங்கைக்காக ரூ. 97 மில்லியன் தேவைப்படுகிறது மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனின் அலுவலகத்தின் கருத்துப்படி, இலங்கை தொடர்பான அதன் பணிகளுக்கு, 648,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 97.58 மில்லியன் ரூபாய்) தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலுமுள்ள அனைத்து மக்களுக்குமான சேவைகளைப் புரிவதற்கு, தமக்குத் தேவைப்படும் செலவை ஈடுசெய்வதற்குரிய அன்பளிப்புகளை மேற்கொள்ளுமாறு, நாடுகளுக்கும் தனியார் கொடையாளர்களுக்கும், அவ்வலுவலகம் கோரியுள்ளது. “எங்களுடைய உலகம், அளவுக்கரிய நிலையற்ற தன்மைக்குள் சென்றுள்ளது.பல நாடுகளில், சட்டங்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. வெளிநாட்டவர் மீதான வெறுப்பு, இன, சம பாகுபாடு…
-
- 0 replies
- 324 views
-
-
ஸ்ரீ லங்கன், மிஹின் லங்காவை பேர்ப்பேச்சுவல் வாங்குகிறது? ஸ்ரீ லங்கன், மிஹின் லங்கா எயார்லைன்ஸ்கள் போன்ற அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் பிரைவெட் லிமிட்டெட் வாங்குகின்ற சதித்திட்டமொன்று காணப்படுவதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்தது. பெரியளவில் இயங்குகின்ற சில அரச நிறுவனங்களை, பேர்ப்பெச்சுவல் நிறுவனம் வாங்க முயலுகின்றது என்பது, நம்புவதற்கு போதுமான காரணங்கள் காணப்படுவதாகவும், அவ்வெதிரணியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், தொடர்ந்து உரையாற்றிய அவர், “வாங்குபவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, இன்னொரு நிறுவனத்தினைப…
-
- 0 replies
- 365 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம்: சீனா புதுக் குழப்பம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான முதலீட்டைத் தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவிவரும் அரசியல் சூழலே சீனாவின் இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனா இடையிலான கடல்வழி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முகமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த டிசம்பர் மாதம் சீனா கையெழுத்திட்டது. இது தவிர, அம்பாந்தோட்டையில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டை ஒன்றை அமைக்கவும் சீனா எண்ணியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த ஜனவரி 7ஆம் திகதி…
-
- 0 replies
- 265 views
-