Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிவனொளிப்பாத மலை உச்சிக்கு சென்றுகொண்டிருந்த மூன்று யாத்திரிகள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(10) இரவு போயா தினத்தன்று இடம்பெற்றுள்ளது. தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 65 வயதுடை சிரியாவதி என்ற பெண்ணும், கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 64 வயதுடைய சந்திரசேன என்ற நபரும், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய கித்சிறி பெர்னாண்டோ என்ற நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் இதயம் செயலிழந்து குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. http://www.virakesari.lk/article/16574

    • 0 replies
    • 449 views
  2. தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைககள் நிறுவக மாணவர்கள் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று நண்பகல் வாய்களை கறுப்புத்துணியால் கட்டி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிறுவகத்தின் வகுப்புகளிலிருந்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் வீதியில் இறங்கி கல்லூரியின் நுழைவாயிலை மறித்து மௌனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எமக்கு நீதி தேவை.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். h…

    • 0 replies
    • 370 views
  3. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தற்சமயம் பிரசன்னம் ஆகியுள்ளார். எவன்காட் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியதாக தெரியவந்துள்ளது. http://www.virakesari.lk/article/16578

    • 0 replies
    • 342 views
  4. சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறும் அதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்;டுக்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு குறித்த 5 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்டப்;பட்டிருந்தத…

    • 0 replies
    • 492 views
  5. சந்திரிகா: மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத் சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர். சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணலின் குறித்த ஒரு பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் இந்த நாடானது தற்போது எந்த நிலையில் உள்ளது என ஊடகவியலாளர் உபல் விக்கிரமசிங்க, குமாரதுங்கவிடம் வினவியிருந்தார். ‘இது மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது’ என குமாரதுங்க பதிலளித்திருந்தார். ‘நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்க…

  6. உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார். 7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்க…

  7. என்ன பிழை நடந்தாலும் அது எங்கள் தலையில்தான் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்ந்த நிலத்தை வழங்க மறுப்பதால் இப்போராட்டம் தொடர்வதில் மிகுந்த நியாயப்பாடு உண்டு. யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுகிறது என்றால், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வது கட்டாயமானதாகும். இருந்தும் கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர முடியாமல் மிகுந்த கஷ்டங்களையும் அவலங்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மக்கள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ் விடத்தில் அந்த மக்களின் நியாயபூர்வமான போராட்டத்து…

  8. நல்லாட்சியின் நகர்வு நல்லதாகவே இல்லை! வியாழேந்திரன் எம்.பி. கடும் விசனம் மைத்திரி-ரணில் தலைமையிலான இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நகர்வுகள் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று நல்லதாக அமையவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வியாழேந்திரன், ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து தெருவோரத்திலே குளிரிலும் வெயிலிலும் வேதனையுடன் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவ…

  9. ஆரத்தழுவினார் ஹசன்; பின்னால் ஓடினார் ஹக்கீம் -அழகன் கனகராஜ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 27ஆவது மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பென்குவேட் ஹோலில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது. இதேவேளை, கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் சனிக்கிழமை இரவு, கட்டாய அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்துக்கு, பஷீர் சேகுதாவூத் சமூகமளிக்கவில்லை. எனினும், ஹசன் அலி சமுகமளித்திருந்தார். அன்று, மாலை 6:40க்கு ஆரம்பமான உயர்பீடம் இரவு 9:45 மணிவரையிலும் சென்றது. இதன்போது கருத்துரைத்த ஹசன் அலி, அதிகாரங்கள் இல்லாத செயலாளர் பதவியை தனக்கு தராவிடினும் பரவாயில்லை, வேறு எவருக்காவது வழ…

  10. கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் திகதி சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதென தகவல் வெளியானதை தொடர்ந்து ஜனாதிபதியால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று அந்த சந்தேகத்திற்…

  11. தமிழ் மக்களுக்கு கிடைக்கும் சமஸ்டியை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு என்ன தேவையென்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று மாலை தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், எழுக தமிழிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. கிழக்கில் எழுக தமிழ் நடைபெறுவதை தடுக்க பலர் மும்முரமாக இர…

    • 0 replies
    • 311 views
  12. பிளவுக்கு இடமில்லை: ஹக்கீம் சூளுரை ப. பிறின்சியா டிக்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுத்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த அரங்குக்கு வெளியே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போராளிகள் கவலையோடு இருக்கின்றனர். இந்த இயக்கத்துக்குப் பங்களித்த தாய்மார்கள், சகோதரிகள் யாருமே இங்கு கலந்துகொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள். இவ்வாறானதொரு நிலையில், இந்த இயக்கத்தைப் பிளவு -படுத்துவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என்று, காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “காங்கிரஸின் உயர்பீடத்துக்கான தெரிவு நடைபெற்ற போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த விவகாரம், பக்கத்தில் இருந்த எங்களுடைய முன்ன…

  13. யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம் யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். மேலும், கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர். தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே இன்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக தாம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது குடும்பங்களை இழந்து பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் கு…

  14. புதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு நேர்ந்த கதி புதிய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படும் ஒர் அரசியல் சாசனமாக புதிய அரசியல் சாசனம் அமைந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இனியொரு ஆயுதப் போராட்டம் நடத்தப்படாது எனவும் வன்முறைக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடையும் வரையில் அனைவரும் பொறுமை காக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். http://globalta…

    • 0 replies
    • 273 views
  15. சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதியம் 12 மணியளவில் அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது கணவருடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே இவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். http://onlineuthayan.com/news/23778

    • 0 replies
    • 355 views
  16. சட்ட விரோத ஆர்ப்பட்டங்கள் மற்றும் பேரணிகளை கலைக்க பொலிஸ் கலத்தடுப்புப் பிரிவுக்கு மேலதிகமாக பொலிஸ் குதிரைப்படைப் படை மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சுவீடன் மற்றும் ஸ்கொட்லன்ட்யார்ட் ஆகியவற்றின் கலத்தடுப்பு விஷேட நிபுணர்கள் பொலிஸ் மோப்ப நாய்களுக்கு அது தொடர்பிலான அடிப்படை பயிற்சிகளையும் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி பொலிஸ் மோப்ப நாய் தலைமையகத்தில் 30 மோப்ப நாய்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லட்யார்ட் பொலிஸார் செயற்படும் பிரதேசங்களிலும் சுவீடனிலும் சட்ட விரோத பேரணிகளை கலைப்பதில் குதிரைகளும் மோப்ப நாய்களும் வெற்றிகரமாக கலைக்கும் நடவடிக்கைகளை செய்துள்ளதாகவும் அதனை…

    • 0 replies
    • 253 views
  17. எமது மகனின் கொலையுடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, கடுமையான தண்டணை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என கட்டுகஸ்தோட்ட இளைஞனின் பெற்றோர், கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை, செனரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தக்க கெலும் அலுகொல்ல என்ற 32 வயது இளைஞன், இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். கைகள் கட்டப்பட்ட நிலையில், இளைஞனின் சடலம், கண்டி - கொழும்பு வீதி, பஸ்யாலையிலிருந்து கடந்த வௌ்ளிக்கிழமை (10) மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் இளைஞனின் பெற்றோர் தெரிவிக்கையில், “எங்களது மகன், எவருக்கும் எவ்வித இன்னல்களையும் கொடுத்ததில்லை. அவர் அமைதியானவர். தொழில் நிமித்தமே பஸ்யாலை பிரதேசத்துக்கு சென்றார். அவர் த…

    • 0 replies
    • 416 views
  18. சட்டத்தரணி ராமநாதன் கண்ணன் என்பவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நியமனத்தை வழங்குவதற்கு நீதித்துறைசார்ந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென, இலங்கை மனித உரிமை மையம் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கோரியுள்ளார். பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடமே, தெளிவுபடுத்துமாறு அவர் கோரியுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …

    • 0 replies
    • 372 views
  19. வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவ தாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 33 ஆயிரத்து 584 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளதென குறிப்பிட்ட அவர், மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமற்போனோர் விவகாரம் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி ன்றன.குறித்த விசாரணைகள் ந…

    • 0 replies
    • 257 views
  20. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்குவதாயின், ஐ.நா மேற்பார்வை அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 2015ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த காலஅவகாசம் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார். அதேவேளை, ஐ.நாவிடம் 18 மாத காலஅவகாசத்தைக் கோருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து அமெரிக்கா, இந்தியாவிடம் பேச்சு நடத்தவுள…

    • 0 replies
    • 384 views
  21. கில்லாடி என்று தமிழிலும் பயன்படுத்தப்படும் ஹிந்தி வார்த்தைக்கு போக்கிரி என்ற ஒரு அர்த்தமும் உள்ளது. போக்கிரி என்றால் அதில் நல்ல போக்கிரியும் இருக்கின்றார்கள். தீய போக்கிரிகளும் இருக்கின்றார்கள். போக்கிரி என்பதைவிட கில்லாடி என்றால் ஒரு கெட்டிக்காரன் என்ற அர்த்தமும் தமிழில் புரிந்துக்கொள்ளப்படுகிறது. கோபியரின் வெண்ணையை திருடி தின்னும் கிருஷ்ணனும் ஒரு கில்லாடிதான். அவன் பகவான் விஷ்ணுவின் அவதாரமான ஒரு நல்ல கில்லாடி. மகாபாரதத்திலே திரெளபதையிடம் தர்மசங்கடமான கேள்வியை எப்போதும் போல கேட்கும், நாரதரும் ஒரு கில்லாடிதான். அவரது கலகம் நன்மையில் முடியும் என்பதால் அவரும் ஒரு நல்ல கில்லாடிதான். கம்பன் கழக காப்பாளர் கம்பவாரிதியும் ஒரு கில்லாடிதான். ஒரு…

  22. தீர்வுத்திட்ட அரசியல் நிறைவுபெறும் தறுவாயில்-சுமந்திரன் எமது மக்களின் அபிலாசைகள் மற்றும் புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் உள்ளது. அது பலராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வாக அமையும் என்பது எல்லோரினதும் எதிர்ப்பார்ப்பாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் ரீதியான சட்டசபையின் உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாறிவரும் சமகாலத்தில் புதிய அரசியல் ரீதியான மாற்றத்திற்கு எதிர்கா லத்தின் வகிபாகம் எனும் கருப்பொருளில் சட்டத்தரணிகள், மற்றும் …

  23. இலங்கை கடற்பரப்பில் நடப்பதென்ன? : இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா : இருநாட்டு உறவை துண்டிப்பதற்கான சதியா? இலங்கையை மையமாக கொண்டு, இந்தியக் கடற்பரப்பில் தனது ஆக்கிரமிப்பை சீனா விரிவுப்படுத்தி வருவதாக அமெரிக்கா, இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கையில் சீனா தமது இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் சீனாவின் கடற்சார் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதை இந்தியாவிற்கு எச்சரிக்கும் வகையிலான கடிதம் ஒன்றை அமெரிக்காவின் வெளியுறவு துறை நிபுணரும், ஆசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் தலைவருமான ஜெப். எம். ஸ்மித் எழுதியுள்…

    • 2 replies
    • 595 views
  24. 1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன. பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது. அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் கல்வி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.