Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிபர் தூக்கிட்டு தற்கொலை யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் நேற்று தற்கொலை செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 58 வயதான பொ.அமிர்தலிங்கம் அவரது தாயார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயில் வசிக்கும் அவர் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீடுகளை உள் பக்கமாக பூட்டிய பின்பு மின்சார வயரின் உதவியுடன் வீட்டிற்குள்ளேயே தூக்கில் தொங்கியுள்ளார். காலையில் வீட்டில் இருந்து சென்ற குறித்த அதிபரைக் காணாது வீட்டார் பல இடத்திலும் தேடியுள்ளனர். இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட போது அளவெட…

  2. அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன் பெற்று தரம் ஆறுக்…

  3. சற்றுமுன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரை பார்த்து கழுதை என்றதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு) வில்பத்து விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களை பார்த்து அதிகாரி ஒருவர் கழுதை என்று தெரிவித்தமையால் ஊடகவியலாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வில்பத்து விவகாரம்“ தொடர்பில் தெளிவூட்டுவதற்காக தேசிய தொழில் சங்கம் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் ஊடகவியலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மேலும்,குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு மருதானை சனச சமூக நிலையத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  4.  அரசாங்கத்துக்கு காலக்கெடு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், நாளை (08) காலை 8 மணிவரை, அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, விமானப்படை முகாமுக்கு முன்னால் மேற்கொண்டு வருகின்ற போராட்டம், 8ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, இன்றைய தினம், அம்மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது அம்மக்கள், “8ஆவது நாளாக தொடரும் போராட்டத்துக்கு, அரசாங்கம் எவ்விதப்…

  5. புலனாய்வுப்பிரிவினர் என அடையாளப்படுத்தி கொள்ளை : மூவர் கைது வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கடந்த செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில் தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொல…

  6. கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய இராணுவம் இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை இராணுவம் வழங்கியுள்ளது. இலங்கை இராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் மற்றும் யுத்த காலத்தில் கால்களை இழந்த பொது மக்களுக்கும் செயற்கை கால்களை இராணுவம் வழங்கியுள்ளது. கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட முப்பது பேருக்கு இந்த செயற்கை கால்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. அமெரிக்க நிதியுதவியில் மாற்று கண்டி குண்டகசாலை வலுவுள்ளோருக்கான நிலையத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் இவ் உ…

  7. மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சை முற்­று­கை­யி­டுவோம் கூட்டு எதிர்க்­கட்சி அறி­விப்பு; மாத இறு­திக்குள் தேர்தல் அறி­விப்பு வேண்டும் என்­கி­றது (எம்.சி.நஜி­முதீன்) உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­து­வது தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்­தலை இம்­மாதம் முடி­வ­டை­வ­தற்கு முன்னர் விடுக்க வேண்டும். இல்­லா­விடின் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சை முற்­று­கை­யிட்டு போராட்டம் நடத்­த­வுள்ளோம் என அகில இலங்கை உள்­ளூ­ராட்சி மன்ற ஒன்­றி­யத்தின் தலைவர் உத­யனி அத்­து­கோ­ரல தெரி­வித்தார். மேலும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிப்­ப­வர்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன சார்பில் பே…

  8. சர்­வ­தேச விசா­ர­ணை­யினை மழுங்­க­டிக்க இட­ம­ளியோம் மார்ச்சில் ஜெனிவா சென்று மீண்டும் வலி­யு­றுத்­துவோம் என்­கி­றது கூட்­ட­மைப்பு (ஆர்.யசி ) இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர் பில் ஆராயும் கலப்பு நீதி­மன்ற முறை­மையில் இருந்து விடு­பட்டு தமக்கு சாத­க­மான நகர்வை முன்­னெ­டுக்க அர­சாங்கம் முயற்­சித்து வரு­வ­தாக தெரி­கின்­றது. சர்­வ­தேச விசா­ர­ணை­களை மழுங்­க­டிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மாயின் அதை மீண்டும் வலி­யு­றுத்த நாம் மார்ச் கூட்­டத்­தொ­டரின் போது ஜெனிவா பய­ணிக்க தயா­ராக உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எ.சுமந்­திரன் தெரி­வித்தார். …

  9. காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள்- கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி வருகின்றனர். யாழ்.காரைநகர் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். நீர்கொழும்பு , புத்தளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் இழுவை படகுகளில் காரைநகர் பகுதிக்கு வந்து மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைநகர் கடற்பிரதேசம் சிறுகடல் பகுதியாக இருக்கின்ற நிலையில் அப்பகுதிக்குள் இழுவை படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் அப்பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கபட்டு உ…

  10. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 இலங்கை மீனவர்கள் கைது Published by Priyatharshan on 2017-02-07 11:50:40 மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உரிய உரிமப் பத்திரமில்லாது மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற காரணங்களாலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது 7 டிங்கி படகுகள், 7 சட்டவிரோத மீன்பிடி வலைகள் (சுருக்கு வலை ), 3 சோடி துடுப்பு மட்டைகள் மற்றும் 12 கடல் பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யத மீனவர்களை மேலதிக விசா…

  11. உயிரை மாய்த்தேனும் காணிகளைப் பெறுவோம் இன்­று ­ப­தில்­ கி­டைக்­கா­வி­டின் ­போ­ராட்­ட­ வ­டி­வம் ­மா­றும்;­ ­கேப்­பா­பு­ல­வு­ மக்கள் அதிரடி (கே.குமணன்) முல்­லைத்­தீவு கேப்­பா­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் தமது காணி­களை மீள வழங்­கக்­கோரி தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் உரிய பதில் கிடைக்­கா­விட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் என எச்­ச­ரித்­துள்­ளனர். அத்­துடன் தங்­களில் ஒருவர் தற்­கொலை செய்து உயிரை மாய்த்­தேனும் சொந்த நிலங்­களை மீட்­ப­தற்­கான வழியை மேற்­கொள்­வோ­மெ­னவும் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­வர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். முல்­லைத்­தீவு கேப்பா புலவு பிலக்­கு­டி­ய…

  12. வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக் கூடாது மஹிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் என்கிறார் கம்மன்பில (க.கம­ல­நாதன்) தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இலங்­கைக்குள் மீண்டும் தலை­தூக்­கு­கின்­றனர். இவர்­களால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷ­வுக்கு உயி­ரா­பத்து ஏற்­படும். எனவே அவ­ருக்கு உரிய பாது­காப்பை வழங்­ கு­மாறு நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் வேண்­டுகோள் விடுப்­ப­தாக தூய்­மை­யான ஹெல உறு­ம­யவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார். தூய்­மை­யான ஹெல உறுமய அமைப் பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­க…

  13. நெடியவனை இன்டர்போலிடம் ஒப்படைக்க முடியாது – நோர்வே! விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெடியவன் தலைமையிலான குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவரை ஒப்படைக்குமாறு எழுந்த கோரிக்கைகளை நோர்வே மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் குற்…

  14. நாடுகளை கைப்பற்றவும், வல்லரசுகளாக உருவாகவும் நாடுகளிடையே அன்றாடம் போட்டித்தன்மை நிலவிக்கொண்டே இருக்கின்றது. இலங்கையை பொறுத்த மட்டில் இன்று நேற்றல்ல, இலங்கையின் வரலாறு ஆரம்பித்த காலப்பகுதியிலே இலங்கையை கைப்பற்றுவதற்கான போட்டித்தன்மை உருவாகி விட்டது. ஆனாலும் இலங்கைத்தமிழர்களை பொறுத்தமட்டில் தொடர்ச்சியாக இந்நாட்டிலேயே வாழ்ந்தவர்கள் என்றில்லாமல் வாழ்வாதாரத்திற்காக பிற நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டதாகவே வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் எமக்கெல்லாம் தெரிந்திடாத முக்கியமான ஒரு விடயத்தினையே இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதாவது இலங்கைத்தமிழரின் வரலாறு எங்கு, எப்போது ஆரம்பமானது என்று எமக்கு தெரியுமா? இலங்கைத்தமிழரின் பிறப்பி…

  15. நாளை உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து உயிரை மாய்ப்போம் : கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை நாளை (07,02,2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது கடந்த 31.01.2017 தொடக்கம் முன்னெடுத்துள்ள …

  16. கிளிநொச்சியில் வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை தாக்கி ஆயுதங்களை பறித்து செல்ல புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வந்த திட்டம் ஒன்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல முறை இந்த தாக்குதலை நடத்த முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. புலிகளை மீளுருவாக்க முயற்சித்து வரும் இந்த நபர்கள் விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் புதைத்துள்ள ஆயுதங்களை தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப பிரிவினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இதில் தொடர்பு பட்டுள்ளதாகவும் அவர்கள் இரவு நேரத்தில் எவ்வித தடைகளும் இன்றி ஆயு…

  17. இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதம் -எம்.றொசாந்த் யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை இனந்தெரியாதோரால் ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/191089/இந-த-ய-த-ண-த-த-தரகத-த-ன-ப-யர-ப-பலக-ச-தம-#sthash.iSblkMFV.dpuf

  18. எமது பவனி “எழுக தமிழர்” என்று பெயரிடப்படவில்லை. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலை நிறுத்தவே எமது பவனியானது “எழுக தமிழ்” என்று பெயர்பெற்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எழுக தமிழானது மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழ் பேசும் சகல மக்களையும் “எழுக தமிழ்” நடைபவனியில் பங்குபற்ற அழைக்கின்றேன். எம்மக்கள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அண்டையில் இருந்து நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடலுக்கு இம் மாதம் 10 ஆம் திகதி காலை பவனி வரக் காத்திருக்கின்ற…

  19. யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதி இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதி நிலப்பரப்புக்கு மேலதிகமாக இன்றும் மற்றுமொரு பகுதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த தை மாதம் 14ம் திகதி ஊறணி பகுதியில் கரையோரமாக 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும் தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களுடைய கோரிக்கைக்கு இணங்க தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தது. மேற்படி ஊறணி பகுதியில் கடந்த வருடம் இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை செய்வ…

  20. பத்திரிகை கண்ணோட்டம் 06 -02 -2017

  21.  'கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் நாம் முடிவெடுக்க முடியாது' ஜே.ஏ.ஜோர்ஜ் “முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்பாக போராட்டம் நடாத்தும் மக்களுக்கான தீர்வு குறித்து விமானப்படையினர் தீர்மானிக்க முடியாது” என, விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரவித்தார். விமானப்படை முகாம் அமைந்துள்ள காணியானது, வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானது. உரிய அனுமதியுடனேயே அந்தப் பகுதியில் முகாம் இயங்கி வருகின்றது. வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் அனுமதிப் பெற்று வந்தால் குறித்த காணி திருப்பி வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம். …

    • 4 replies
    • 412 views
  22. சைட்டம் நிறைவேற்று அதிகாரியின் வாகனத்துக்கு சூடு தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்னவின் வாகனத்துக்கு துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்டுள்ளது. முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த இருவரால், சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் வைத்தே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதில், அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/191107/ச-ட-டம-ந-ற-வ-ற-ற-அத-க-ர-ய-ன-வ-கனத-த-க-க-ச-ட-#sthash.vB1jRVC1.dpuf

  23. திருமணம் முடித்து 6 நாள் ; விபத்தில் கணவன் பலி, மனைவி படுகாயம் - யாழில் சம்பவம் (வீடியோ இணைப்பு) யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் திருமணம் முடித்து 6 நாட்களான இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இச் சம்பமானது இன்று காலை 11 மணியளவில் வேலணை அராலி சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள…

  24. சுமந்திரன் படுகொலை முயற்சி திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரா ன்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களே சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தனர் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இந்த திட்டத்தை இலங்கை புலனாய்வு அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்தச் சதித் திட்டம் கண்டறியப்பட்டதையடுத்து, நான்கு முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர…

  25. காணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சி காணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சித்து வருகின்றனர். காணாமல் போன தங்களது உறவுகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கான ஓர் கருவியாக தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என மட்டக்களப்பு பெண்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர். பல்வேறு ஆணைக்குழுக்களின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதுடன், பல்வேறு மகஜர்களும் காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தருமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என காணாமல் போனவர்களின் உறவினர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.