ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
கேப்பாபுலவு – இன்னொரு மெனிக்பாம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நான்கு வருடங்களின் முன்பு ஒரு ஜனவரி மாத்தில் கேப்பாபுலவுக்குச் சென்ற குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் தீபச்செல்வன் எழுதிய பத்தி. நான்கு ஆண்டுகளாக மட்டுமல்ல அதற்கு முன்னரும் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து இந்த மக்கள் தங்கள் நிலத்திற்காக பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளை அண்மின்ற இக் காலத்தில், இலங்கையில் ஆட்சி மாற்றம் மாற்றம் ஒன்று ஏற்பட்ட பின்னர், மீண்டும் இரவு பகலாக கேப்பாபுலவு மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துகிறது. கால முக்கியத்துவம் கருதி நான்கு ஆண்டு…
-
- 2 replies
- 398 views
-
-
கோதபாய கைது செய்யப்படுவாரா? முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சர்ச்சைக்குரிய மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த மிக் கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விசாரணைகள் தொடர்பில் கோதபாயவை கைது செய்வதற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச் செயல் குறித்து கோதபாய ராஜபக்ஸவிடம் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டி…
-
- 0 replies
- 432 views
-
-
விஜயகலா ஹெலியில் பாராளுமன்றம் வருவது அரசாங்கத்துக்கு தெரியவில்லையா.? (க.கமலநாதன்) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை வாகன துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தினருக்கு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஹெலிகொப்டரில் பாராளுமன்றம் வருவது தெரியவில்லையா என தேசிய சங்க சபை கேள்வி எழுப்பியது. சிறு தவறுக்காக விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்படுவதை விடவும் மத்திய வங்கி விவகாரத்தில் நேரடித் தொடர்புடைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமே ஒரே சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தேசிய …
-
- 0 replies
- 405 views
-
-
இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்பு; இந்திய வர்த்தகர்கள் வேண்டுகோள் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு தமிழக தொழில்முனைவோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ‘யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி’யில் கலந்துகொண்டபோதே அவர்கள் இவ்வேண்டுகோளை விடுத்தனர். கடந்த 27ஆம் திகதி யாழ் நகரசபை மைதானத்தில் ஆரம்பித்த இந்தக் கண்காட்சி 29ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில், 65 சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. இதில் பேசிய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை-இந்திய வர்த்தக உறவுக்கு தரைவழித் தொடர்பு மிக முக்கியம் எனக் கருத்துத் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 285 views
-
-
அரசியல் பட்டப்படிப்புடன் கோத்தாவின் அரசியல் பிரவேசம் : எதிர்க்கும் முன்னாள் ஜனாதிபதி சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும். இருப்பினும் அவரது அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரர் விரும்பவில்லையென முன்னாள் வெளியுறவு தூதுவராக இருந்த கலாநிதி தயான் ஜெயதிலக கருத்து பகிர்ந்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 364 views
-
-
தமிழர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம். – சி.வி. இந் நாட்டில் இடம் பெற்ற நீண்ட கால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கணணி, நூலக வகுப்பறை கட்டட திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 353 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் – டக்ளஸ் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள், கைதுகள் தொடர்பில் அஞ்ச தேவையில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் ஊடாக வெளியிட்டு உள்ள காணொளி பதிவிலையே அவ்வாறு தெரிவித்து உள்ளார். அதில் மேலும் கருத்து தெரிவிக்கையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டு உள்ளது என தெரிவித்து விடுதலைப் புலி…
-
- 2 replies
- 386 views
-
-
சம்பந்தனுக்கு தகுதி இல்லை – டிலான் பெரேரா மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தகுதி இல்லை என இராஜாங்க அமைச்சரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வா தெரிவித்துள்ளார். நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்களிலும் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுவருகிறது. ஆனால், அவற்றுடன் தொடர்புடைய எவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, மேசடியில் ஈடுபட்ட ஒ…
-
- 2 replies
- 416 views
-
-
வட்டுக்கோட்டை கொலை தொடர்பான விசாரணை ஆரம்பம். வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி மைதானத்தில் வைத்து ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.முதல் நாள் சாட்சி பதிவுகள் இன்றைய தி…
-
- 3 replies
- 565 views
-
-
சுதந்திரதினத்தன்று மாவட்ட செயலகம் முன்பாக அமைதி போராட்டம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் , அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து சுதந்திர தினத்தன்று போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சுதந்திர தினத்தன்று யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம். வலிந்து கா…
-
- 0 replies
- 243 views
-
-
சமரச முயற்சிகள் தோல்வி, சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு ஓரிருமாதகால அவகாசத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு விமானப்படை தளபதியும் கோரிய போதிலும் அத்தோடு மக்கள் பிரதிநிதிகள் பலரும் சமரச முயற்சிகளிலில் ஈடுபட்ட போதிலும் அதை எவற்றையும் ஏற்றுக்கொள்ளாத கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை முகாமின் இரண்டாவது பிரதான வாயில் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். தமது காணிகளை தம்மிடம் மீள வழங்குமாற…
-
- 3 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவா்கள் கைது கிளிநொச்சியில் பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவா்களும் அவா்களது உழவு இயந்திரங்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவா்களும் அவா்களது உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டது. ஒன்பது உழவு இயங்திரங்களும், ஒரு ரிப்பா் வாகனமும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னா் தற்போது வரை சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடா்ந்துகொண்டே இருக்கின்றது என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனா் http://globaltamilnews.net/ar…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அரசாங்கம் அமைக்க திட்டமிட்டு இருக்கும் பொருத்து வீடுகள் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உங்கள் கருத்துகளை தெரிவிப்பதுடன், கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவினையும் (வாக்கினையும்) செலுத்தவும். உங்களது தெரிவை / எதற்கு வாக்களித்தீர்கள் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு இக் கருத்து கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி யாழிணையம்
-
- 167 replies
- 30.5k views
- 1 follower
-
-
பத்திரிகை கண்ணோட்டம்
-
- 0 replies
- 725 views
-
-
கிளிநொச்சியில் முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக அதிக பாதுகாப்பு இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டடம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக அதிகரித்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சருக்கு இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்குமாறு அறிவித்தல் கிடைத்துள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா். இன்ற…
-
- 0 replies
- 351 views
-
-
“எமக்கு அஞ்சியே அரசாங்கம் காலத்தை கடத்துகின்றது” : மஹிந்த (ஆர்.யசி ) எமக்கு அஞ்சியே அரசாங்கம் தேர்தலை நடத்தாது காலத்தை கடத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வடக்கில் நடக்கும் சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. வடக்கில் மிகவும் மோசமான வகையில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. ஆகவே தேசிய பாதுகாப்பு இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த நிலைமை தொடருமாயின் குறுகிய காலத்தில் மீண்டும் நாட்டின் குழப்பங்கள் ஏற்படும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நொச்சியாகம பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு க…
-
- 0 replies
- 258 views
-
-
அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டி யாழில் கையெழுத்து வேட்டை இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கையெழுத்து வேட்டையொன்று முன்னெடுக்கப்படட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பெண்களின் பங்கு அரசியலில் அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நாடாளாவிய ரீதியில் பொது மக்கள் மத்தியில் வழிப்புணர்வு நடவடிக்கைகளும் கையெழுத்துப் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் இன்றையதினம் பொது மக்களின் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 414 views
-
-
சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர கிளைமோர் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறி, சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது எதிரிகள் சார்பில் மன்றில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எ…
-
- 0 replies
- 584 views
-
-
இலங்கைளில் புற்றுநோய் காரணமாக தினம் 4 தொடக்கம் 9 பேர் இறக்கின்றனர்.! பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜயசுந்தர தகவல் "என்னால்முடியும், நம்மால் முடியும்" என்ற தொனிப்பொருளில் இம்முறை புற்றுநோய் தவிர்ப்பு தினம் தொற்றா நோய் வரிசையில் மிக முக்கியமான இடத்தை புற்றுநோயானது பிடித்துள்ளது. இலங்கைளில் புற்று நோய் காரணமாக ஒரு நாளுக்கு நான்கு தொடக்கம் ஒன்பது பேர் வரை இறக்கின்றனர் என்று பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். பெப்ரவரி 04 ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சு…
-
- 0 replies
- 444 views
-
-
வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையினர் கவனயீர்ப்பு போராட்டம் வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கைப் போககுவரத்துச் சபையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கு இலங்கை போக்குவரத்து சபையினரை இடம்மாற்றுவதனை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியு இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடமாகாணத்தில் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் எவையும் சேவையில் ஈடுபடாததால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இருந்த போத…
-
- 0 replies
- 344 views
-
-
குடியுரிமை பெற்றார் குமார் குணரட்னம் முன்னிலை சேஷலிசக் கட்சியின் இணைப்புச் செயலாளர் குமார் குமார் குணரட்னத்திற்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குமார் குணரட்னம் இம் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளார். முன்னிலை சோஷலிச கட்சியின் குமார் குணரட்னம் உரிய முறையில் விண்ணப்பித்துருந்தால் குடியுரிமை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யமுடியும் என அண்மையில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்த நிலையில் அவருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலி…
-
- 0 replies
- 182 views
-
-
சுமந்திரனின் உயிர் அச்சுறுத்தலுக்கு அவரே பொறுப்பு : மஹிந்த (ஆர்.யசி ) சுமந்திரனின் உயிர் அச்சுறுத்தலுக்கு அவரே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிகளை விடுதலை செய்யகோரி அன்று குரல் எழுப்பியவர்கள் இன்று எம்மை குறை கூறுகின்றனர். விடுதலைப் புலிகளை விடுதலை செய்தமை தவறில்லை. அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனமாக கையாளுகின்றமையே தவறாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி நேற்று அனுராதபுரம் ஸ்ரீமா போதி விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.l…
-
- 1 reply
- 434 views
-
-
சுமந்திரன் மீது படுகொலை முயற்சி -நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீது, கடந்த ஜனவரி 13ஆம் நாள் படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறி வித்துள்ளனர். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் நேற்றுமுன்தினம் அறிக்கை ஒன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது. முன்னதாக, கிளிநொச்சி நீத…
-
- 0 replies
- 203 views
-
-
யாழ்.கஸ்தூரியார் வீதியிலும் வாள்வெட்டுகுழு அட்டகாசம் யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன்றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது 2மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாளினால் வெட்ட முயன்ற போது குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடுஒன்றுக்குள் தஞ்சம் புகுந்து தப்பியுள்ளனர். நேற்றைய தினம் மாலை 6.40 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடொன்றுக்குமுன் 4 இளைஞர்கள் நின்றுள்ளனர். அப்போது அப்பகுதியால் 2 பல்சர் மோட்டார்சைக்கிளில் வாள்களுடன் வந்த குழு ஒன்று குறித்த இளைஞர்கள் மீது வாளினால் வெட்டமுயன்றுள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞர்கள் அருகில் உள்ள வீடொன்றுக்குள் தஞ…
-
- 0 replies
- 263 views
-
-
சகலரும் ஏற்கும் தீர்வே அவசியம் ஜனாதிபதி முன்னிலையில் சம்பந்தன் வலியுறுத்து (காங்கேயனோடை,பழுகாமம் நிருபர்கள்) நாங்கள் காணப்போகும் அரசியல் தீர்வு எல்லா மக்களும் ஏற் றுக்கொள்ளக் கூடிய தீர்வாக இருக்க வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வாக இருக்க வேண்டும். அது நிச்சயமாக பிரிக் கப்படாத – பிரிக்கமுடியாத நிரந்தரமான ஒன்றாக இருக்கின்ற ஒரு நாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை நான் கூறி வைக்க விரும் புகின்றேன் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹ…
-
- 0 replies
- 424 views
-