Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதான செய்தி தாங்கிய புறாக்கள் எஸ்.என். நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. கிளிநொச்சி புகையிரத நிலைய முன்றலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. குறித்த புறாக்கள், சுமார் நான்கு மணித்தியாலயங்களில் கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சிறிய துண்டு ஒன்றில் தகவல்கள் எழுதப்பட்டு புறாக்களின் காலில் …

  2. அமைச்சர் தயாசிறியின் கருத்துக்கு வட மாகாண முதலமைச்சர் பதில் யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை எப்போது அறிவது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை ஒன்றிணைப்பதற்கு சிறந்த முறை சமஷ்டி என உலகிலுள்ள அனைவரும் கூறுகின்றனர். எனினும், அது நாட்டைப் பிளவுபடுத்துகின்றது என தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் மாத்திரம் கூறுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தயாசிறி தன்னை விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராயவில்லை எனின், ஆட்களை வரவழைத்து அவர்களிடம் என்ன நேர்ந்தது என நாம் ஆராய வேண்டும் என தாம் கூறியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையே தாம்; இனவாதத்தை ஏற்படுத்துவதா…

  3.  சுதந்திர தின ஒத்திகை: கடற்படை அதிகாரி படுகாயம் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஒத்திகையின் போது, கடற்படை அதிகாரியொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகொப்டரில் இருந்து குதித்த பராசூட் வீரரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/190935/ச-தந-த-ர-த-ன-ஒத-த-க-கடற-பட-அத-க-ர-பட-க-யம-#sthash.ZCrGyIG3.dpuf

  4. ‘5 - 10 வருடங்களில் போராட்டம் வெடிக்கும்?’ எஸ்.நிதர்ஸன் ‘யுத்தத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 12,000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது குடும்ப சிந்தனையுடன், வாழ்க்கையைக் கொண்டுநத்த கஷ்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், அவர்களை மீண்டும் கைது செய்து பிரச்சினை ஏற்படுத்தினால், இன்னும் 5 அல்லது 10 வருடங்களுக்குள், மற்றுமொரு போராட்டம் வெடிக்க வேண்டிய நிலமை ஏற்படும்” என்று, வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “தமி…

  5. போர்க்குற்ற விசாரணை தேவையற்றது-சந்திரிக்கா போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளி தழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ‘நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடு. இப்போது அவசியமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதும், காணாமல் போனோருக்கான பணியகமும் தான். இவை நடைமுறைக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களுக்கு தேவை இருக்காது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற ச…

  6. கர்ப்பிணி பெண் கொலைக்கும் சந்தேகநபர்களுக்கும் தொடர்பில்லை – சட்டத்தரணி விண்ணப்பம் ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் படுகொலை செய்யபப்ட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு உள்ள இரு சந்தேக நபர்களும் சம்பவம் நடந்த தினத்தன்று சம்பவ இடத்தில் இருக்கவில்லை என சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்து உள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தன் ஊடாக குறித்த வழக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றார். …

  7. ஆபத்தான நிலையில் ஒருவர் ; 4 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனியிலும் இரவிரவாக இன்று நான்காவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில் ஒருவர் மயக்கமுற்று ஆபத்தான நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடிய…

    • 3 replies
    • 506 views
  8. அரசியல் அந்தஸ்துடன் வாழ வேண்டுமானால் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமாகின்றது சிறுபான்மை சமூகங்கள் அடுத்த ஆண்டு நாட்டின் 70 ஆவது சுதந்திரத் தினத்தை அரசியல் தீர்வைப் பெற்று சகல சமூகங்களும் நிம்மதியுடனும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழ்நிலையில் கொண்டாட வேண்டும். இன்றைய தினம் (04.02.2017) அரசியல் தீர்வொன்றை எதிர்பார்த்தவர்களாக சிறுபான்மையினத்தவர்களான நாம் 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம், சிறுபான்மையினத்தவர்களின் ஒரே அபிலாஷை சுதந்திர இலங்கையில் நிம்மதியாகவும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம் என்ற உணர்வுடனும் தமது தாய்த் திருநாட்டில் வாழ வேண்டும் என்பதே ஆகும், எனவே சிறுபான்மை ம…

  9. போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் கொடும்பாவி எரிப்பு (படங்கள் இணைப்பு) வவுனியாவில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள இ.போ.ச. சாலை ஊழியர்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் கொடும்பாவிக்கு இறுதிக்கிரியை நிகழ்வுகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்டனர். இதற்கு முன்னதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலகா, ஆகியோர் இ.போ.ச. சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்து கலந்தரையாடியதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டேனிஸ்வரனுடனும் கலந்துரையாடி ஒரு சாதகமான முடிவினை பெற்றுத்தருவத…

  10. புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தை தடுப்பதற்கு பல சக்திகள் முயற்சி அனைத்து சவால்களிலும் வெற்றிபெறுவோம் என்கிறார் சம்பந்தன் (திரு­கோ­ண­ம­லை­நகர், மூதூர் நிரு­பர்கள்) புதி­ய ­அ­ர­சியல் சாச­னத்­தை­ உ­ரு­வாக்கும் முயற்­சி­யை ­த­டுப்­ப­தற்­கு ­ப­ல­ சக்­திகள் கடு­மை­யா­ன ­மு­யற்­சி­க­ளை­ மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றன. அனைத்­து­ ச­வால்­க­ளையும் தடை­க­ளையும் வெற்­றி­கொள்வோம் என்று எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை உவர்­மலை விவே­கா­னந்தா கல்­லூ­ரியின் தொழில்­நுட்ப பிரி­விற்­கான அடிக்கல் நாட்­டு­வை­பவம் நேற்­றை­ய­தினம் அதிபர் எஸ். ஆனந்­த­சிவம் தலை­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் அடிக்­கல்லை நாட்டி உரை­யாற்ற…

  11. அதிரடிப்படையினரை கண்டு ஓடியவர்களிடமிருந்து வாள்கள் மீட்பு உரும்பிராய் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடமையிலிருந்த, விசேட அதிரடிப்படையினரை கண்டு தப்பித்து ஓடிய நபர்களிடம் இருந்து வாள்கள் மிட்கப்பட்டுள்ளன. யhழ் - உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்த சமயம் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் அவ்வீதியில் விசேட அதிரடிப்படையினரை கண்டதும் தமது மோட்டார் வண்டியை திருப்பி தப்பிச் செல்ல முயன்றனர். இச் செயற்பாட்டால் சந்தேகமுற்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞர்களை பின்தொடர்ந்து சென்றபோது இடையில் குறித்த இ…

  12.  ‘பேய் பிடித்த முதலமைச்சர்’ கவிதா சுப்ரமணியம் “நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள சமுதாயத்துக்கு இடையில், இனவாதத்தையும் விரோதத்தையும் தூண்டிவிடும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தொடர்ந்துரைத்த அவர், “நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள, சி.வி.யின் இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களுக்காக, வடக்கிலுள்ள தமிழ் மக்கள், அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே, அவர்களால் முன்னேற முட…

  13. கேப்பாபுலவு – இன்னொரு மெனிக்பாம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நான்கு வருடங்களின் முன்பு ஒரு ஜனவரி மாத்தில் கேப்பாபுலவுக்குச் சென்ற குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் தீபச்செல்வன் எழுதிய பத்தி. நான்கு ஆண்டுகளாக மட்டுமல்ல அதற்கு முன்னரும் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து இந்த மக்கள் தங்கள் நிலத்திற்காக பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளை அண்மின்ற இக் காலத்தில், இலங்கையில் ஆட்சி மாற்றம் மாற்றம் ஒன்று ஏற்பட்ட பின்னர், மீண்டும் இரவு பகலாக கேப்பாபுலவு மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துகிறது. கால முக்கியத்துவம் கருதி நான்கு ஆண்டு…

    • 2 replies
    • 399 views
  14. கோதபாய கைது செய்யப்படுவாரா? முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சர்ச்சைக்குரிய மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த மிக் கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விசாரணைகள் தொடர்பில் கோதபாயவை கைது செய்வதற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச் செயல் குறித்து கோதபாய ராஜபக்ஸவிடம் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டி…

  15. விஜ­ய­கலா ஹெலியில் பாரா­ளு­மன்றம் வரு­வது அர­சாங்­கத்­துக்கு தெரி­ய­வில்­லையா.? (க.கம­ல­நாதன்) பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை வாகன துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­துள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­ன­ருக்கு யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஹெலி­கொப்­டரில் பாரா­ளு­மன்றம் வரு­வது தெரி­ய­வில்­லையா என தேசிய சங்க சபை கேள்வி எழுப்­பி­யது. சிறு தவ­றுக்­காக விமல் வீர­வன்ச சிறையில் அடைக்­கப்­ப­டுவதை விடவும் மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் நேரடித் தொடர்­பு­டைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் முன்னாள் மத்­திய வங்கி ஆளு­ந­ருமே ஒரே சிறையில் அடைக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் என்றும் தேசிய …

  16. இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்பு; இந்திய வர்த்தகர்கள் வேண்டுகோள் இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு தமிழக தொழில்முனைவோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ‘யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி’யில் கலந்துகொண்டபோதே அவர்கள் இவ்வேண்டுகோளை விடுத்தனர். கடந்த 27ஆம் திகதி யாழ் நகரசபை மைதானத்தில் ஆரம்பித்த இந்தக் கண்காட்சி 29ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில், 65 சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. இதில் பேசிய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை-இந்திய வர்த்தக உறவுக்கு தரைவழித் தொடர்பு மிக முக்கியம் எனக் கருத்துத் தெரிவித்தனர். …

  17. அரசியல் பட்டப்படிப்புடன் கோத்தாவின் அரசியல் பிரவேசம் : எதிர்க்கும் முன்னாள் ஜனாதிபதி சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும். இருப்பினும் அவரது அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரர் விரும்பவில்லையென முன்னாள் வெளியுறவு தூதுவராக இருந்த கலாநிதி தயான் ஜெயதிலக கருத்து பகிர்ந்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளத…

    • 2 replies
    • 365 views
  18. தமிழர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம். – சி.வி. இந் நாட்டில் இடம் பெற்ற நீண்ட கால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கணணி, நூலக வகுப்பறை கட்டட திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். …

  19. முன்னாள் போராளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் – டக்ளஸ் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள், கைதுகள் தொடர்பில் அஞ்ச தேவையில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் ஊடாக வெளியிட்டு உள்ள காணொளி பதிவிலையே அவ்வாறு தெரிவித்து உள்ளார். அதில் மேலும் கருத்து தெரிவிக்கையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டு உள்ளது என தெரிவித்து விடுதலைப் புலி…

  20. சம்பந்தனுக்கு தகுதி இல்லை – டிலான் பெரேரா மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தகுதி இல்லை என இராஜாங்க அமைச்சரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வா தெரிவித்துள்ளார். நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்களிலும் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுவருகிறது. ஆனால், அவற்றுடன் தொடர்புடைய எவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, மேசடியில் ஈடுபட்ட ஒ…

    • 2 replies
    • 417 views
  21. வட்டுக்கோட்டை கொலை தொடர்பான விசாரணை ஆரம்பம். வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி மைதானத்தில் வைத்து ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.முதல் நாள் சாட்சி பதிவுகள் இன்றைய தி…

  22. சுதந்திரதினத்தன்று மாவட்ட செயலகம் முன்பாக அமைதி போராட்டம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் , அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து சுதந்திர தினத்தன்று போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சுதந்திர தினத்தன்று யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம். வலிந்து கா…

  23. சமரச முயற்சிகள் தோல்வி, சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு ஓரிருமாதகால அவகாசத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு விமானப்படை தளபதியும் கோரிய போதிலும் அத்தோடு மக்கள் பிரதிநிதிகள் பலரும் சமரச முயற்சிகளிலில் ஈடுபட்ட போதிலும் அதை எவற்றையும் ஏற்றுக்கொள்ளாத கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை முகாமின் இரண்டாவது பிரதான வாயில் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். தமது காணிகளை தம்மிடம் மீள வழங்குமாற…

    • 3 replies
    • 1.4k views
  24. கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவா்கள் கைது கிளிநொச்சியில் பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவா்களும் அவா்களது உழவு இயந்திரங்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவா்களும் அவா்களது உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டது. ஒன்பது உழவு இயங்திரங்களும், ஒரு ரிப்பா் வாகனமும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னா் தற்போது வரை சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடா்ந்துகொண்டே இருக்கின்றது என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனா் http://globaltamilnews.net/ar…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.