ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143386 topics in this forum
-
இலங்கைக்கு கால அவகாசம் வழங்க மற்றுமொரு பிரேரணை 34 ஆவது கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டுவர முயற்சி? (ரொபட் அன்டனி) மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கும் வகை யில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம்திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை நடைபெ…
-
- 0 replies
- 416 views
-
-
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் விரைவில் சுவிடன் வட்டமேசை கலந்துரையாடலில் அறிவித்தார் மங்கள (நமது விசேட நிருபர்) நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு அமைக்கப்பட்ட செயலணி தனது அறிக்கையை அரசாங்கத் திடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதுடன் அதற்கு அமைவாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நட்டஈடு வழங்கும் அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான முக்கிய வேலைத்திட்டங்கள் …
-
- 0 replies
- 414 views
-
-
சிறுபான்மையினருக்கு புதிய தேர்தல் முறையில் அநீதி இழைக்க இடமளியோம் திருத்தங்கள் இல்லையேல் பழைய முறைமையில் தேர்தல் என்கிறது ஐ.தே.க. (எம்.எம்.மின்ஹாஜ்) சிறுபான்மையினருக்கு அநீதியான தேர்தல் முறைமையை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். சிறுபான்மை இனத்தவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புதிய தேர்தல் முறைமையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இல்லையேல் பழைய முறைமையின் பிரகாரமே தேர்தல் நடத்த வேண்டி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவு…
-
- 0 replies
- 381 views
-
-
அரசியலமைப்பில் சகலரதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் செயிட் அல் ஹுசைனிடம் உத்தரவாதமளித்தார் பிரதமர் ரணில் (நமது விசேட நிருபர்) அனைத்து மக்களினதும் உரிமைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். மக்களின் உரிமைகள் தொடர்பில் அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான அத்தியாயம் தொடங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் உறுதியளித்திருக்கிறார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் சுவிட்ஸர்லாந்தின் டேவோஸ் நக…
-
- 0 replies
- 576 views
-
-
மகிந்த ராஜபக்சவை ஸ்ரீல.சு.க. அமைச்சர்கள் சந்திக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு பிரதான அமைச்சர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு ஒன்றை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்க இந்தச் சந்திப்பு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்துவதோடு, மகிந்த ராஜபக்ச மீண்டும் கட்சியில் இணையவேண்ட…
-
- 0 replies
- 130 views
-
-
மஹிந்தவும் கோத்தாவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் : சங்க சபை கூறுகின்றது Published on 2017-01-21 09:26:37 வரலாற்று காலத்திலிருந்து இலங்கை பெளத்தர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்புக்கள் 2500 வருடங்களுக்கு பின்னரான இன்றும் குறைவில்லை. இந்நிலையில் நாட்டினை பிளவு படுத்தி பிரிவினைவாதிகளுக்கு எழுதிக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என தேசிய சங்க சபை தெரிவிக்கின்றது. இதனை எதிர்க்கின்றமையினாலேயே விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டார். இதன் அடுத்த கட்டமாக விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் கைது செய்யப்படுவர் என தேசிய சங்க சபையின் தலைவர் மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 404 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மீண்டும் கொழும்பிற்கு மாற்றம் நீண்ட காலமாக சிறையில் தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமாகமை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கு எடுக்கப்பட்ட முனைப்புகள் கைவிடப்பட்டுள்ளது. வழக்குகளின் இடமாற்றம் குறித்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஆஜராகும் சட்டத்தரணிகள் எடுத்த முயற்சின் பிரகாரம் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பிலான மேலும் தெரியவருவதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருக…
-
- 0 replies
- 267 views
-
-
யாழ். குடா நாட்டில் இன்று முற்பகல் முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பொழிந்துள்ளது. முற்பகல் 11 மணியளவில் மிதமான மழை வீழ்ச்சியுடன் ஆரம்பித்த மழை இன்று பிற்பகல் சற்று அதிகமாகப் பொழிந்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதனால், மழையின்மையால் ஏக்கத்துடன் வாடிய யாழ். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். யாழ். குடா நாட்டில் வரட்சி காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வடக்கில் மழை பெய்யும் என வளிமண்டலத் திணைக்களம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/132545?ref=home
-
- 1 reply
- 406 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு 5003 பேர் கடந்த 13 ஆம் திகதி வரை தமது விருப்பங்களைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் இடப்பெயர்வின் பின்னரான மீள் குடியேற்றத்தின்போது குடியமர்ந்துள்ள குடும்பங்களில் இன்னமும் 16 ஆயிரத்து 119 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்தின் ஊடாக புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சின் பொருத்து வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை இணைத்துக் கொள்வதற்கு எமது மாவட்டத்திற்கு 11 ஆயிரம் விண்ணப்பப் படிவங்களை மீள் குடியேற்ற அமைச்சு வழங்கியுள்ள…
-
- 0 replies
- 230 views
-
-
கேதீஸ்வரன்: 6 வருடங்களாக மறுக்கப்படும் நீதி நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனை செயலணி வெளியிட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 2 பரிந்துரைகளே மேலே காணப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை அளிக்கப்பட்ட, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காகப் பிரேரிக்கப்பட்ட பொறிமுறைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி பிற்பகுதியில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த 11 பேரை உள்ளடக்கிய கலந்தாலோசனைக்கான செயலணி இலங்கை பிரதமரால் நியமிக்கப்பட்டது. இந்தச் செயலணியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை 2017 ஜனவரி 3ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்த…
-
- 0 replies
- 283 views
-
-
வடமாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன், குடிநீருக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்நதும் கருத்து …
-
- 0 replies
- 262 views
-
-
மெதமுலனவில் அமைந்துள்ள மஹிந்தவின் தந்தை “டி.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியகம்” மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரச மதிப்பீட்டு அதிகாரிகள் இணைந்து நேற்று காலை குறித்த பகுதியை சோதனையிட்டுள்ளனர். இறுதி மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த தேடுதலை முன்னெடுத்திருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். “வீரகெட்டிய திட்டம்” என்ற பெயரில் திட்டமொன்றை ஆரம்பித்து தமது தாய் தந்தையரான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதிகளின் கல்லறைகளைப் புனரமைத்தல் மற்றும் அருங்காட்சியகமொன்றை நிர்மாணிப்பதற்காக 9 கோடி ரூபா செலவிடப்பட்டதாக கடந்த காலத்தல் தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 428 views
-
-
கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவாகிய டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் குறித்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/132492?…
-
- 1 reply
- 324 views
-
-
கிழக்கு எழுக தமிழ் பேரணி பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டுவெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுக தமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி மாதம் முழுநிலவு நாளாகிய 10 ம்திகதி, வெள்ளிக்கிழமைக்கு (10/02/2017) பிற்போடப்பட்டிருக்கின்றது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம். அரசாங்கமானது கபடத்தனமான அரசியல் முன்னெடுப்புகள் மூலம் எமது அரசியல் விருப்புகளை புறந்தள்ளிய ஒருபோலியான அர…
-
- 0 replies
- 240 views
-
-
மாகாண சபைகளை பிராந்திய அரசாங்கங்கள் என அழைக்கவேண்டும்-சுமந்திரன் மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது அதைவிட பிராந்திய அரசா ங்கம் என்று சொல்லப்படவேண்டிய காலம் விரைவில் வரவேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். இன்றையதினம் நெடுந்தாரகை படகுச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் இந்த நெடுந்தாரகை படகினை தந்து உதவிய அனைவருக்கும் வடபகுதி மக்கள் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கி றேன்.நெடுந்தீவிற்கு போய் வருவதென்றால் உயிரை கைய…
-
- 2 replies
- 422 views
-
-
இன்று முதல் நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை ஆரம்பம் குறிகட்டுவான் முதல் நெடுந்தீவு வரையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தின் மூலம் நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த படகை தயரிப்பதற்கு சுமார் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் படகு சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வில் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா, இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்ச்சன் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் என்போர் பங்குபற்ற உள்ளனர். http://www.virakesari.lk/
-
- 2 replies
- 565 views
-
-
இலங்கையின் பிரதமராக பதவியேற்பாராம் சஜித் பிரேமதாஸ இலங்கையின் பிரதமராக சமகால அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி சஜித் பிரேமதாஸ உரிய முறையில் இலங்கையின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆஸ்தான சோதிடர் சுமணதாஸ அபே குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படும் கிரக மாற்றம், இலங்கை அரசியலை தலைகீழாக மாற்றும் அளவிற்கு காணப்படும். பிர தமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்படும் அமைச்சர்கள் பலர் அரசியலில் இருந…
-
- 1 reply
- 281 views
-
-
நெடுந்தாரகை கப்பலின் கன்னிப் பயணம் – வடமாகாண சபையின் செயற்பாடுகளில் முக்கியமான ஒரு நிகழ்வு நெடுந்தாரகை கப்பலின் கன்னிப் பயணம் குறிக்கட்டுவான் – நெடுந்தீவு 20.01.2016 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………………………… கௌரவ ஆளுநர் அவர்களே, அமைச்சர் கௌரவ பை(க)சர் முஸ்தபா அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய Bryce Hutchesson அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான முதன்மைச் செயலாளர் அவர்களே, உலக வங்கியின் உயர் அதிகாரிகளே, மற்றும் வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அவர்களே, மற்றைய உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே! இன்றைய நாள் வடமாகாண சபையின் செயற்பாடுகளில் மு…
-
- 0 replies
- 622 views
-
-
விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி விபத்து, போதகர் ஒருவர் படுகாயம்! முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் A9 பிரதான வீதியில் இன்று மாலை விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதியத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் படுகாயம் அடைந்து மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு திரும்ப முடப்பட்ட போதகரை எதிரில் அதிகவேகமாக வந்த விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஐந்து மீற்றர் தூரம்வரை இழுத்துச்சென்றதில் 17 ஆம் கட்டை ஒட்டுசுட்டானை சேர்ந்த 60 வயதுடைய போதகர் யாகோ அவர்களே படுகாயமடைந்துள்…
-
- 0 replies
- 326 views
-
-
வரட்சியினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதன்பிரகாரம் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 407 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 95 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. அதேபோன்று களுத்துறை மாவட்டத்திலும் 1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக பொது மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமான அளவிற்கு நீர் இன்மையினால் தவித்து வருகின்றனர். குறிப்பாக வடக்கு,கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மாகாணங்களில் பல பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங…
-
- 1 reply
- 388 views
-
-
சோபித்த தேரரின் கார் எங்கே.? காலம் சென்ற மாதுலுவாவே சோபித்த தேரர் பயன்படுத்திய சுமார் 2 கோடி பெறுமதியான சொகுசு மோட்டார் வாகனம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, மிரிஹான பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோட்டே நாக விகாரையின் உடதளகந்தே ஆரியரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் குறித்த மோட்டார் வாகனம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்க தூதரக அலுவலகத்தின் கீழ் காணப்படுகின்ற இரணவில பூமியை மீண்டும் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மனித்துள்ளது. இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புத்தளம் மாவட்டத்தில், இரணவில பிரதேசத்தில் அமைந்துள்ள 166.038 ஹெக்டேயர் இடப்பகுதியை, Voice of America thndhyp வானொலி ஒலிபரப்பு நிலையத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்காக வேண்டி 1991ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரக அலுவலகத்திற்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்த குத்தகை ஒப்பந்தத்தின் காலம் முடிவடைவதற்கு முன்னர் குறித்த ஒலிபரப்பு நிலையத்தை மூடிவிட்டு குறித்த இடம் மற்றும் சொத்துக்கள…
-
- 3 replies
- 362 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடு வழங்க இடமளிக்கமாட்டோம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கட்டும் அல்லது ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கட்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கட்டும் அனைவரும் கட்சியை வளர்ப்பதற்காகவே செயற்படுகிறார்கள் என ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியை வளர்ப்பதற்காகவா, பொருத்து வீட்டுத்திட்டத்தினை வடக்கு வாழ் மக்களிடத்தில் திணிக்கின்றீர்கள் என வட…
-
- 0 replies
- 313 views
-
-
ராஜபக்ஸ அருங்காட்சியக பகுதி சோதனை மெதமுலனவில் அமைந்துள்ள டி.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியகம் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளை பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர். இறுதி மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரச மதிப்பீட்டு அதிகாரிகள் இணைந்து, நேற்று காலை குறித்த பகுதியை சோதனையிட்டனர். வீரகெட்டிய திட்டம் என்ற பெயரில் திட்டமொன்றை ஆரம்பித்து, டி.ஏ. ராஜபக்ஸ தம்பதிகளின் கல்லறைகளைப் புனரமைத்தல் மற்றும் அருங்காட்சியகமொன்றை நிர்மாணிப்பதற்காக 9 கோடி ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்…
-
- 0 replies
- 281 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட 61 பயனாளிகளுக்கு சுயதொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது புனர்வாழ்வளிக்கப்பட்ட 61 பயனாளிகளுக்கு சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(20) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில்நந்தனன் தலைமையில் இடம்பெற்றது. கடற்றொழில், மாடு வளர்ப்பு, கணனி , மின்னியல், தையல், தச்சு வேலை போன்ற துறைகளில் சுயதொழில் புரியவுள்ள காரைநகர் பிரதேச செயலக பிரிவினைச்சேர்ந்த 17 பேர் தெல்லிப்பளை பிரிவினைச்சேர்ந்த 6 பேர் சங்கானை பிரிவினைச்சேர்ந்த 6 பேர் பருத்தித்துறை பிரிவினைச்சேர்ந்த 6பேர் ஊர்காவற்றுறை பிரிவினைச்சேர்ந்த 7பேர் நல்லூர் பிரிவினைச்சேர்ந்த 7பேர் சண்டிலிப்பாய் பிரிவினைச்சேர்ந்த 6 பேர் கோப்பாய் பி…
-
- 0 replies
- 266 views
-