ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
கைதடியில் சிங்கள மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டால் யாழில் போராட்டங்கள் வெடிக்கும் -சிவாஜிலிங்கம் எச்சரிக்கை வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் கைதடியில் அமைக்கப்பட்டுவரும் வீடுகள் எமது மாவட்ட மக்களைத்தவிர சிங்கள மக்களுக்கு கொடுக்கப்படுமேயானால் யாழில் போராட்டங்கள் வெடிக்கும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்கே. சிவாஜி லிங்கம் எச்சரிக்கை விடுத்தார். வீடமைப்பு அதிகாரசபையினால் நாவற்குழிப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 200 வீடுகள் கொண்ட மாதிரிக்கிராமத்தினை எமது மக்களுக்கு மட்டுமே பகிர்ந்தளிக்கவேண்டும். அதனைவிட்டுவிட்டு சிங்கள மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களை அங்கே குடியேற்றினால் இங்கே பலத்த போராட்டங்கள் அரசாங்கத்துக்…
-
- 0 replies
- 242 views
-
-
ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை பெறுவதற்கு மனித உரிமையும் சமத்துவமும் அவசியம் வலியுறுத்துகின்றார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க (ஆர்.யசி) மனித உரிமைகளை பலப்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் நாம் கடினமான பாதையில் பயணித்துக்கொண் டுள்ளோம். ஜி.எஸ்.பி. பிளஸ் உள்ளிட்ட சலுகைகளை தக்கவைக்க வேண்டுமாயின் மனித உரிமைகள் மற்றும் சமத்துவமான நகர்வு களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரம் அல்லாது தொடர்ச்சியாக நாம் அந்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். சர்வதேச உதவிகளையும் பொருளாதார நகர்வுக…
-
- 0 replies
- 436 views
-
-
ரவிராஜ் படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுவித்து கொழும்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு சட்டவாளர் சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டது. மேல் நீதிமன்றத்தில் வழக்கை, ஜூரிகள் இன்றி மீள்விசாரணை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தரப்ப…
-
- 11 replies
- 735 views
-
-
தமிழர் தம்மை தாமே ஆளும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்-சுமந்திரன் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகை யிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று(19) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர். பல்வேறு ஏக்கத்தின் மத்தியிலும் இந்த வருடமும் தீர்வுத்திட்டம் தவறிப் போய்விடுமா என்ற கவலையுடனேயே இந்த…
-
- 3 replies
- 550 views
-
-
தெற்கை ஆட்டிப்படைத்த கொலைக் கும்பல் சிக்கியது ஐவருக்கு விளக்கமறியல்; ஒருவர் தடுப்புக் காவலில் அண்மையில் தெற்கை உலுக்கும் விதமாக அம்பலாங்கொடை மற்றும் மீட்டியாகொட பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 6 பிரதான சந்தேகநபர்களை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய தீர்க்கப்படாத குற்றம் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் அடிப்படையிலேயே அப்பிரிவுக்கு உட்பட்ட அம்பலாங்கொடை பொலிஸ் குழுவினரால் இந்த திட்டமிட்ட கொலைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இவர்களைக் கைதுசெய்ததாகவும் அவர்களிட மிருந்து கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரீ 56 ரக துப்பாக்கி உள்ள…
-
- 0 replies
- 269 views
-
-
யாழ்.குடாநாட்டில் போஞ்சிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பனி காலத்திலேயே போஞ்சிச் செய்கைக்கு உகந்த காலமாகையால் டிசம்பர் மாதம் முதல் பங்குனி மாதம் வரை போஞ்சிச் செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்படுவது வழமையாகும். கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் போஞ்சிச் செய்கையை மேற்கொண்டவர்கள் தற்போது அதிலிருந்து விளைச்சலைப் பெற ஆரம்பித்துள்ளனர். இதனால், தற்போது யாழ்.குடாநாட்டின் திருநெல்வேலிச் சந்தை மற்றும் மருதனார்மடம், சுன்னாகம் உள்ளிட்ட பொதுச் சந்தைகளுக்கு போஞ்சி அதிகளவில் விவசாயிகளால் எடுத்து வரப்படுகிறது. மேலும், முன்னர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சி தற்போது 60 ர…
-
- 0 replies
- 473 views
-
-
நாட்டின் இறையாண்மையை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கோம் -அமைச்சர் விஜேதாச இலங்கையின் சட்ட மறுசீரமைப்புக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்து ள்ளார். பொருளாதார பிரதிபலன்களை எதிர்பார்த்து இலங்கையின் இறையாண்மையை அரசாங்கம் வெளிநாட்டவரிடம் காட்டி க்கொடுக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நீதித்துறைக்கு எப்போதும் சவால்கள் இருக்கின்றன. நாட்டில் தற்போது புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவது தொடர்பில் சர்ச்சையான விவாதங்கள் நடந்து வருகின்றன…
-
- 1 reply
- 332 views
-
-
யாழ் - கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று(19) மாலை 5.30 மணியளவில் இலங்கையின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டு, தீர்வுகளும் காணப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவுக்கான படகு போக்குவரத்தை ஆரம்பிக்கும் நிகழ்வுக்காக இன்றைய தினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் ஐங்கரநேசன், ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் நிறைவில் அமை…
-
- 0 replies
- 364 views
-
-
மைத்திரிபால மரணிப்பது நிச்சயம் : நடக்காவிட்டால் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் : மீண்டும் அடித்து கூறும் ஜோதிடர் (காணொளி இணைப்பு) Weiterempfehlen எனது ஜோதிடத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பது நிச்சயமாகும். எனினும் அவ்வாறு நடக்காவிட்டால் நான் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் என ஜோதிடர் றோஹன விஜயமுனி மீண்டும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் ஜனவரி 26 ஆம் திகதி உயிரிழந்து விடுவார் என றோஹன விஜயமுனி என்ற ஜோதிடர் கடந்த வருடம் ஆரூடம் கூறியிருந்தார். இவரின் கருத்து கடந்த வருட…
-
- 4 replies
- 467 views
-
-
அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இரா. சம்பந்தன் அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை தமி…
-
- 3 replies
- 398 views
-
-
மக்கள் பெருமைப்படும் அளவுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் அப்படியானால் தான் இது எங்களுடைய அரசியல் யாப்பு என்ற எண்ணம் மக்களுக்கு வரும் என்கிறார் சம்பந்தன் (திருகோணமலை நகர்) இது எங்களுடைய அரசியல் சாசனம். இதை உருவாக்கியவர்கள் நாங்கள் என மக்கள் பெருமைப்படும் அளவுக்கு இனங்கள் மற்றும் சமூகங்களுக்கான அதிகாரங்கள் இறைமையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையாயின் அச்சாசனம் வெறும் முதல்தரச் சட்டமாகவே காணப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை வலயக் கல்விப் பணி மனையின் ஏற்பாட்டில் விக்னேஸ்வரா மகா வித்தியா…
-
- 1 reply
- 245 views
-
-
கிளிநொச்சியில் பல அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் இன்று கையளித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் கிளிநொச்சி அக்கராயன் பகுதியிலுள்ள 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதியை மக்கள் பாவனைக்காக இன்று கையளித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைவாக நிலையான யுகத்தின் மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்ச…
-
- 0 replies
- 216 views
-
-
திருகோணமலை துறைமுக அபிவிருத்தி பணிகளை இந்தியாவிடம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை அடைந்திருப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சம அளவிலான உறவைப் பேணும் வகையில் இத்துறைமுகத்தை இலங்கை பயன்படுத்தி வந்தது. அதேவேளை சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு சிறிய இலாபத்தை கூட பெற்றுத் தரவில்லை, இதனால் நாட்டிற்கு பாரிய கடன்சுமையே ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே அந்த…
-
- 1 reply
- 366 views
-
-
வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான செயற்திட்டங்கள் தொடர்பில் கனேடிய சர்வதேச முகவர் அமைப்புடன் (சீடா) வடக்கு சுகாதார அமைச்சர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி தொடர்பான சர்வதேச கருந்தரங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு கனடா சென்றுள்ள அமைச்சர் சத்தியலிங்கம் தலைமையிலான குழு நேற்று (18) கனேடிய சர்வதேச முகவர் அமைப்பினரை சந்தித்துள்ளனர். மேலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் குளோறியா விஸ்மன் தலைமையிலான பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திறன்விருத்…
-
- 0 replies
- 356 views
-
-
வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது. அதனை விட மற்றைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை நாளைய(20) வெள்ளோட்டம் விடப்படவுள்ள நிலையில் அந்த நிகழ்வு நடைபெற்வுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக யாழ் சென்றிருந்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த…
-
- 2 replies
- 411 views
-
-
கொள்ளுப்பிட்டியில் மல்லுக்கட்டு... பல்கலைக்கழக மாணவர்களால் கொள்ளுப்பிட்டியில், இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு பொலிஸார் கலைப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ) - See more at: http://www.tamilmirror.lk/190016/க-ள-ள-ப-ப-ட-ட-ய-ல-மல-ல-க-கட-ட-#sthash.L5UzYHOs.dpuf
-
- 2 replies
- 419 views
-
-
'அரசாங்கத்துக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை' -எம்.றொசாந்த் “யாழில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிடம் கோரிக்கை விடுத்த போதும், நல்லாட்சி அரசு அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிடம் கோரிக…
-
- 0 replies
- 317 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியை சூட்சுமமான முறையில் லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த வழக்கை 25ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், சந்தேகநபர்களின் பிணைமனு குறித்து 25ஆம் திகதி அறிவிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி ஒன்றை நாரஹேன்பிட்டியிலுள்ள விரைவு அஞ்சல் (கொரியர்) நிறுவனத்தினூடாக லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவர் சார்பிலும், பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிணை மனு தொடர்பிலான நிலைப்பாட்டை இம்மாதம் 25ஆம் திகதி அறிவிக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு …
-
- 0 replies
- 265 views
-
-
'அதிகாரிகளுக்கு நல்லிணக்கம் இல்லை' -செல்வநாயகம் கபிலன் “கீரிமலையில் பகுதியில் மீள்குடியேற்றம் செய்துவைக்கப்பட்ட நல்லிணக்கபுரம் பகுதி மக்களுக்கு இதுவரை காணி உறுதிகள் வழங்கி வைக்கப்படவில்லை” என மீள்குடியேறிய மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன், இராணுவத்தின் மனிதவலுவுடனும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் காணப்பட்ட அரச காணியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் 100 குடும்பங்களுக்கு காணியுடன் வீடு வழங்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி, கடந்த வருடம் விஜயம் செய்த போது வீடுகளை பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார். ஆனால், மீள்குடியேற்றம் செய்து…
-
- 0 replies
- 220 views
-
-
சிலர் யுத்தம் செய்தபோது பலர் இங்கிருந்து படுகொலை செய்தனர் - இதுவே உண்மை நிலையாகும் என்கிறது அரசாங்கம் இறுதிக்கட்டப் போரில் இராணுவம் படுகொலைகளில் ஈடுபட்டிருந்தால் அதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். படுகொலைகளை நியாயப்படுத்தவோ ஆள்கடத்தல்களை அங்கீகரிப்பதோ நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையில்லை. சிலர் போர் செய்யும் போது பலர் இங்கிருந்து படுகொலை செய்தனர். இதுவே உண்மை நிலையாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாட்டை பிளவுப்படுத்தும் நிபந்தனைகளுக்கு அடிப்பணிந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வில்லை. பிரிவினைவா…
-
- 0 replies
- 367 views
-
-
யாழ் தேவி ரயில் மீது கல்வீச்சு -செல்வநாயகம் கபிலன் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ் தேவி ரயில் மீது, கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மல்லாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இத் தாக்குதல் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் ரயிலின் முன்கண்ணாடி சேதமைந்துள்ளதுடன் ரயில் சாரதியான டி.எம்.தர்மசேன (வயது 47) காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் கூறினர். - See more at: http://www.tamilmirror.lk/189981/ய-ழ-த-வ-ரய-ல-ம-த-…
-
- 0 replies
- 432 views
-
-
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இந்தக் குழு இயங்கவுள்ளது. வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டு திட்டமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளதாகவும் இது குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி குழுவினை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவினால் பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளது.இந்த செயற் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் எவற்றை அமுல்படுத்த முடியும், எவற்றை அ…
-
- 1 reply
- 377 views
-
-
சமஷ்டி என்ற பேச்சிற்கே இடமில்லை- சுதந்திரக்கட்சி மீளவும் தெரிவிப்பு சமஸ்டி மூலமாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற அழுத்தத்தை பிரயோகித்து அல்லது சர்வதேச தூண்டுதலை ஏற்படுத்தி அதனூடாக எவரேனும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அந்த பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் இணங்கப்போவதி ல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசவும் வேண்டாம் என்று குறிப்பிட்ட விசேட வேலைத்திட்ட அமைச்சரும், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, சர்வசன வாக்கெடுப்பு இல்லாது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றி தீர்வுக்கான பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் கூறினார். …
-
- 0 replies
- 255 views
-
-
யாழ் - வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவர் வல்வை ந. அனந்தராஜ் எழுதிய 'வல்வையின் முதுசொம்' தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (20) பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் த. ஜெயசீலன் தலைமையில் நடைபெற்வுள்ளது. இந்த நூலை பிரதேச செயலர் த.ஜெயசீலன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை உபஅதிபர் கலைப்பரிதி சிவா.கிருஷ்ணா மூர்த்தி பெற்றுக் கொள்ளவுள்ளார். அத்துடன், நூல் வெளியீட்டுரையை எழுத்தாளர் ந. சீவரத்தினமும், நூலின் நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர…
-
- 0 replies
- 387 views
-
-
புதிதாக அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது – ஆனந்தசங்கரி:- புதிதாக அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை ஒரு போதும் அழைக்கவில்லை எனவும், அவரை சந்திக்க கிடைத்த போது புதிய அரசியல் சாசனம் அவசியமில்லை என தாம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது எனக் குறிப்பிட்டுள்ள அவர், பிரச்சினைகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்…
-
- 0 replies
- 269 views
-