Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல – ஜனாதிபதி நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லாட்சி கொள்கைகளிலிருந்து விலகியிருந்த சமூகமொன்றில் நல்லாட்சியை அமுல்படுத்துவது சிரமமானதே என குறிப்பிட்டுள்ள அவர் சிரமங்களுக்கு மத்தியிலும் முடிந்தளவு நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரியுள்ளார். நல்லாட்சி குறித்த பௌத்த மத முன்னுதாரணங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/13982

  2. ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் - ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல கடவைகளை இலங்கை அரசு கடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது. தற்போது நிகழ்ந்திருப்பது இதுபற்றிய ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஒரு சிபாரிசே தவிர, இறுதி முடிவு அல்ல. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு உரிய முடிவு இன்னமும் சுமார் நான்கு மாதங்களின் பின் அறிவிக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங்-லை-மார்க்…

  3. 27 பாடசாலைகளில் ஒரேயொரு ஆசிரியர் 2016ஆம் ம் ஆண்டிற்கான புள்ளி விபரங்களின்படி இலங்கையில் 27 பாடசாலைகள் ஒரேயொரு ஆசிரியருடன் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் 1500 பாடசாலைகள் 50க்கு குறைவான மாணவர்களுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. அமைச்சின் இந்த சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இலங்கையில் 2 ஆசிரியர்கள் கொண்ட 108 பாடசாலைகளும் , 3-5 வரையிலான ஆசிரியர்களுடன் 801 பாடசாலைகளும் இயங்கி வருவதாக அறியப்படுகின்றது. குறிப்பாக வவுனியா, பதுளை, கேகாலை, பிராந்தியங்களில் 1-15 வரையிலான மாணவர்களே இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள் . இன்றைய நிலையில் 250 பாடசாலைகள் 15 அல்லது அதற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்டுள்ளன. …

  4. பஸ்ஸில் இருந்து இறங்கிய மனைவி இதுவரை வீடு திரும்பவில்லை ; கை, கால் கட்டப்பட்ட நிலையில் கணவன் மீட்பு வவுனியா ஓமந்தையில் இன்று காலை கை, கால் கட்டப்பட்ட நிலையில் நபரொருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் ஓமந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை மீட்டு வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை திடீர் விபத்துப்பிரிவில் அனுமதித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த 30 ஆம் திகதி கணவன் மனைவி இருவரும் வவுனியா செட்டிக்குளத்தில் இறந்த உறவினர் ஒருவரின் இறுதிக்கிரியைக்கு சென்று கொண்டிருக்கும் போது வவுனியா தாண…

  5. "அரசியலில் இருந்து விலக போகிறேன்" : நிமால் சிறிபாலடி சில்வா தான் விரைவில் அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/15463

  6. நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு பிணை.! ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேரில் 10 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த 10 பேரை ரூபா 5 இலட்சம் கொண்ட 3 சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, ஏனைய 24 பேரை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவிலவில் இம்மாதம் 7 ஆம் திகதி இடம்பெ…

  7. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய பொங்கல் பண்டிகையில் வெளிநாட்டுப் பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பு (பாறுக் ஷிஹான், மயூரன்) யாழ். குடா­நாட்டில் தமிழர் திரு­நாளாம் தைப் பொங்கல் பண்­டிகை சிறப்­பாக கொண்­டா­டப்­பட்­டது. தைப்­பொங்கல் திரு­நாளை முன்­னிட்டு வர­லாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்­த­சு­வாமி ஆலயம் உட்­பட அனைத்துச் சைவ ஆல­யங்­க­ளிலும் அதி­காலை முதல் விசேட பூஜை வழி­பா­டுகள் இடம்­பெற்­றன. நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான பக்­தர்கள் கலந்து கொண்டு நல்லூர் முரு­கப் ­பெ­ரு­மானின் இஷ்ட சித்­தி­க…

  8. 2009 க்கு பின்னர் பல மாவீரர் நாள்கள், பெரிய நினைவஞ்சலிகள் இறந்தவர்களுக்காக வைக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த முன்னாள்போராளிகளுக்கு குறிப்பாக பாதி உடற் திறனை இழந்தவர்களுக்கு காத்திரமான உதவிகள் வழங்கப்படவில்லை,வடமாகாண சபையால் முள்ளந்தண்டு பாதிக்கப்படோருக்கு என்று தொடங்கப்பட்ட இல்லம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.ஒத்துக்கப்பட்ட அரச நிதிகளை வடமாகாணசபை ஊழல்வாதிகள் முற்றாக விழுங்கியதை தவிர எந்தவித உருப்படியான காரியமும் நடைபெறவில்லை.வெளிநாட்டிலிலுள்ள புலம்பெயர்ந்தோர் தங்கள் விடுமுறை வருகையில், குடும்ப விழாக்கள் நடத்தும்போதும் தெளிக்கும் சில பேனை கொப்பி சைக்கிள் கோழிக்கூடு கோழிக்குஞ்சுகள் தவிர இதுவரை எவரும் குறித்த நலிவுக்குழுவின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பியதாக தெரியவில்லை.த…

    • 1 reply
    • 658 views
  9. மஹிந்த ராஜபக் ஷவை ஏன் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்பதை ஜனாதிபதி உணரவேண்டும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே மக்கள் ஆணை என்கிறது ஜே.வி.பி. (ப.பன்­னீர்­செல்வம்) நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மக்கள் ஆணையை வழங்­கி­னார்கள் எனத் தெரி­விக்கும் ஜே.வி.பி., நிறை­வேற்று அதி­கா­ரத்தை தொடர முயற்­சித்­ததன் கார­ண­மா­கவே மஹிந்த ராஜபக் ஷவை மக்கள் வீட்­டுக்கு அனுப்பி வைத்­தனர் என்­பதை இன்­றைய ஜனா­தி­பதி உணர வேண்­டு­மென்றும் தெரி­வித்­தது. இது தொடர்­பாக ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்டர் நளின் த ஜெய­திஸ்ஸ மேலும் தெரி­விக்­கையில்; இலங்­கையின் 62 இலட்சம் மக்கள் தமது ஆத­ரவை வழங்­கியே…

  10. மீண்டும் இலங்கை வருகிறார் பெக்கர் உலகின் முதல் தர கெசினோ வர்த்தகரான கிரவ்ன் கெசினோ நிறுவன பிரதானி அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர் மீள இலங்கைக்கு வரவுள்ளார். அனைத்து உல்லாசங்களுடனும் கூடிய கிரவ்ன் ஹோட்டல் எனும் பெயரில் 457 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுடன் அவர் இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக அறிய முடிகிறது. இதற்கு முன்னர் ஜேம்ஸ் பெக்கர் இந்த முதலீட்டு திட்டத்துடன் இலங்கைக்குள் வர முயன்றபோதும் மக்களின் எதிர்ப்பு காரணமாக கசினோவுடன் கூடிய அந்த முதலீட்டுத் திட்டத்துக்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இந் நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்டத்தவர்கள் பலருடன் பெக்கர் இது தொடர்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அதன் பிரகாரமே அவர் மீள இலங்கையில…

  11. வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் எழுத்துப்பிழை வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென நிகழ்விற்கு வருகைதந்திருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து நிலையத்தில் உள்ளுர் (ளூ) சேவை என பொறிக்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தின் வேலைகள் யாவும் பூர்த்தியாகி முடிந்தும் இதுவரை க…

  12. கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்:- கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரை இடமாற்றுவதற்கு எதிராக, மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பாடசாலை பிரதான வாயிலை மூடி, வகுப்புகளை பகிஷ்கரித்து இன்று (திங்கட்கிழமை) காலை இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த பாடசாலையின் பல ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று சென்றுள்ள போதிலும், அவர்களுக்கு மாற்றீடான ஆசிரியர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், அதிபரையும் இடமாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிரா…

  13. மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி : வெளிநாட்டவரின் செயலால் பிரதேசத்தில் பரபரப்பு வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதையை வெளிநாட்டவர் ஒருவர் இரவோடு இரவாக மாயம் செய்த சம்பவத்தை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை வட்டவானில் உள்ள குறித்த வெளிநாட்டவரின் விடுதிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட பொதுமக்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் பிரதான வீதியை ஊடறுத்துச்செல்லும் காணிக்கு அருகில் உள்ள வாகரை பிரதேச சபைக்கான வீதியை குறித்த வெளிநாட்டவர் சேதப்படுத்தி அதனை வேலியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவர…

  14. புதிய இந்திய தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பார்.! இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரான டரன்ஜித் சிங் சந்து இவ்வாரம் இறுதியில் கொழும்பில் கடமைகள பொறுப்பேற்க உள்ளார். இந்திய குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அதற்கு முன்னர் இலங்கைக்கான இந்திய இராஜதந்திர சேவைகளை ஆரம்பிக்க உள்ளார். வொஷிங்டனில் இந்தியாவிற்கான துணை தூதுவராக கடமையை முன்னெடுத்து வந்த டரன்ஜித் சிங் சந்து 2000 தொடக்கம் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் இலங்கையில் இந்திய தூதரகத்தின் அரசியல் துறை செயலராக பதவி வகித்தார். இலங்கையின் அரசியல் மற்றும் தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பூரண தெளிவை கொண்ட அவர் மீண்டும் இலங்கையில் இந்தி…

  15. வடக்கு,கிழக்கில் புத்தர் சிலை­களை சிதைக்கும் நட­வ­டிக்­கையில் தென் பகுதியைச் சேர்ந்த குழு - உளவுத்துறையின் உத­வி­யுடன் சிறப்பு விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) வடக்கு மற்றும் கிழக்கில் புத்தர் சிலை­களை சிதைத்து, அது தொடர்பில் சமூக இணை­யத்­தளம் உள்­ளிட்­ட­வற்றின் ஊடாக அவற்றை பிர­பல்யம் செய்யும் நட­வ­டிக்­கையின் பின்­ன­ணியில் தெற்கின் இன­வாத கும்­ப­லொன்று தொடர்­பு­பட்­டுள்­ள­மையை தேசிய உளவுத்துறை­யினர் கண்­ட­றிந்­துள்­ளனர். தேசிய உளவுத்துறை­யி­ன­ருக்கு கிடைத்­துள்ள சில தக­வல்­க­ளுக்கு அமை­வாக புத் தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரங்கள் குறித்து விசா­ரணை செய்யும் சிறப்பு பொலிஸ் குழு­வி­னரின் விசா­ர­ணை­களின் போதும் குறித்த கும்பல் தொடர்­பி­லான பல…

  16. ஜெனிவா கூட்டத்தொடரில் அரசாங்கம் அழுத்தங்களை சந்திக்க வேண்டிவரும் நல்லிணக்க செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவிப்பு (ஆர்.யசி ) நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நகர்வில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்றும் வேலைத்­திட்­டத்தில் அர­சாங்கம் பின்­னிற்கும் நிலையில் எதிர்வரும் ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் அர­சாங்கம் அழுத்­தங்­களை சந்­திக்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம். சர்­வ­தேச மனித உரிமை குழுக்­களும் புலம்­பெயர் அமைப்­பு­களும் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்றன என்று மாற்­றுக்­கொள்­கைக்­கான நிலை­யத்தின் பணிப்­பா­ளரும் நல்­லி­ணக்க செய­ல­ணியின் தலை­வ­ரு­மான பாக்­கி­ய­சோதி …

  17. அடுத்த தைப்பொங்கலுக்குமுன் அனைத்துபிரச்சினைகளுக்கும் தீர்வு-ராஜித நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேலியகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தைப்பொங்கல் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையினை விட அடுத்த வருடம் மிகவும் விமர்சையாக கொண்டாட முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார். அந்த நிகழ்வானது கொண்டாடப்படும் பொழுது நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கு…

  18. புதிய அரசியலமைப்பில் மலையக தமிழர்களுக்கும் உரிய இடம் பெற்றுக்கொடுப்போம் என்கிறார் அமைச்சர் மனோ (மஸ்­கெ­லியா, நுவ­ரெ­லியா நிரு­பர்கள் ) புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் மலை­யக தமிழ் மக்­க­ளுக்கு உரிய இடம்பெற்றுக் கொடுக்­கப்­படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய மொழிகள் சமூக மேம்­பாட்டு சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். நுவ­ரெ­லி­யாவில் நேற்று இடம்­பெற்ற தேசிய தைப்­பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசு­கையில், 2016 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்­பெற்ற தைப்­பொங்கல் விழா இந்த ஆண்­டு மலை­ய­கத்தில் இடம்­பெ­று­வது போல, அடுத்த ஆண்டில் கிழக்கு ம…

  19. மலையக அபிவிருத்திக்கு தொடர்ந்தும் நடவடிக்கை தேசிய பொங்கல் விழாவில் ரணில் : சமூக கலாசார ரீதியாகவும் மக்களை முன்னேற்றுவது குறித்து சிந்திக்கின்றோம் (நுவ­ரெ­லியா,மஸ்கெலியா நிருபர்கள்) நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக உழைத்த பெருந்­தோட்ட வர்க்கம், கடந்த காலங்­களில் ஒரு துண்டு காணி இல்­லாமல் உரிமை இல்­லாமல் இருந்த ஒரு சமூ­க­மாக வாழ்ந்ததை நாம் மறந்­து­விட முடி­யாது. ஆனால் நாம் இன்று அந்த மக்­க­ளுக்கு ஏழு பேச்சஸ் காணி வழங்கி அவர்­க­ளுக்கு வீட்டு உரி­மையை பெற்றுக் கொடுத்­துள்ளோம். எனவே எதிர்­கா­லத்தில் இந்த மக்­களின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக அவர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்கின்றவர்களுக்கு அமைச்சு பதவிகளையும் வழங்கியுள்ளோம் என்று பிர…

  20. யாழில் கோமாதா ஊர்வலம் யாழ்.நகரில் - சத்திரத்திரச்சந்தி ஞானவைரவர் கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று பட்டிப்பொங்கலை முன்னிட்டு கோமாதா ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாய, கால்நடை அமைச்சரும், பொறுப்பு முதலமைச்சருமான பொ.ஐங்கரநேசன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் http://onlineuthayan.co…

  21. கொட்டாஞ்சேனையில் தமிழர்கள் கடத்தல்; வெலிசறை கடற்படை தளத்தின் லெப்டினன் கொமாண்டர் கைது கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனையில் கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட இருவரது கடத்தல் தொடர்பிலேயே இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21795#sthash.rXtcN8sF.dpuf

  22. அரச அதிகாரிகள் சரியாகச்செயற்பட்டால் நாம் மக்களிடம் செல்ல வேண்டிய தேவையில்லை : செல்வம் எம்.பி. அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை, பொறுப்புக்களை சரியாக மேற்கொண்டால் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் செல்லவேண்டிய தேவை ஏற்படாதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகத்தினரை தெரிவு மேற்கொள்ளுமாறு தெரிவித்து அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நபரொருவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினரிடம் அரச அதிகாரிகளிடம் சேவை பெறச்…

  23. ஜனாதிபதி மைதிரியினால் பிரதமர் ரணிலுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.? அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரங்களை சமர்பிக்கும் போது, குறித்த அபிவிருத்தி சார்ந்துள்ள அமைச்சின் ஊடாக சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது. அண்மைக்காலமாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் இருக்கும் போது, அவ்வமைச்சு சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை பிரதமரும் அவரின் கீழ் இருந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சரவை உப குழுவும் அமைச்சரவைக்கு சமர்பித்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே ஜனாதிபதி பிரதமருக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல…

  24. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணந்து ‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு’ என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial Collegeஇல் 2017 ஜனவரி மாதம் 15ம் 16ம், 17ம் தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது. இம் மூன்று நாட்களும், தமிழர் தாயகத்தின் பொருளாதார, க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.